search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆண்டிபட்டியில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
    X

    எம்.சுப்புலாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ-மாணவிகளிடம் கலெக்டர் ஷஜீவனா கலந்துரையாடினார்.

    ஆண்டிபட்டியில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

    • ஊராட்சி பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ள ப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட ப்பணிகளை கலெக்டர் ஷஜீவனா ஆய்வு மேற்கொண்டார்.
    • வளர்ச்சித்திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலருக்கு அறிவுறுத்தினார்.

    தேனி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மரிக்குண்டு, ஒக்கரைப்பட்டி, மொட்டனூத்து மற்றும் பிச்சம்பட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ள ப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட ப்பணிகளை கலெக்டர் ஷஜீவனா ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது, ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தி ற்குட்பட்ட மரிக்குண்டு ஊராட்சி ப்பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிட மும் முடிவுற்ற பணியினை யும், வீருசின்னம்மாள்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளியில் ரூ.7.43 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சமையல் அறை கட்டுமான பணியினையும், ஒக்கரைப்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9.77 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நியாய விலைக்கடை கட்டுமான பணியினையும், மொட்ட னூத்து ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்தி ட்டத்தின் கீழ் ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை முடிவுற்ற பணியினையும்,

    ராமச்சந்திராபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.7.43 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் சமையல் அறை கட்டுமான பணியினையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் குளம் புனர மைத்தல் பணியினையும், நீரார்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட த்தின் கீழ் ரூ.7.43 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சமையல் அறை கட்டுமான பணியினையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.05 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் மாணவியர்கள் கழிப்பறை கட்டுமானப் பணிகளையும்,

    கொப்பையம்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.3.15 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைக்கும் பணியினையும், பிச்சம்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட த்தின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் வரத்துக் கால்வாய் மற்றும் நீர் செறிவூட்டு குழி அமைக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் எம்.சுப்புலாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பாள்ளி யில் மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடினார். வளர்ச்சித்திட்ட ப்பணி களை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலருக்கு அறிவுறுத்தி னார்.

    Next Story
    ×