search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி அருகே பள்ளி மாணவி உள்பட 3 பேர் மாயம்
    X

    கோப்பு படம்

    தேனி அருகே பள்ளி மாணவி உள்பட 3 பேர் மாயம்

    • தேனியில் வெவ்வேறு பிரச்சினைகளில் மாணவி உள்பட 3 பேர் மாயமாகினர்.
    • புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே கடமலை க்குண்டு தர்மராஜபுரத்தை சேர்ந்தவர் அன்பழகன் மகள் அனுசியா(17). இவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். சரியாக படிக்கா ததால் அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.

    இதனால் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளி யேறிசென்றவர் வீடு திரும்பவில்லை.அக்கம்ப க்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் கடமலைக்குண்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    கூடலூரை சேர்ந்தவர் குமணன் மனைவி பிரியா(23). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கருத்துவேறுபாடு காரண மாக இவர்களுக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் கோபித்துகொண்டு சென்ற பிரியா இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளிக்கப்பட்டது. எஸ்.பி உத்தரவின்பேரில் கூடலூர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து பிரியாவை தேடி வருகின்றனர்.

    உத்தமபாளையம் அருகே ஓடைப்பட்டியை சேர்ந்தவர் வனராஜ் மகன் முத்துச்செல்வம்(16). இவர் ராயப்பன்பட்டி பகுதியில் உள்ள பள்ளிவிடுதியில் தங்கி 11-ம் வகுப்பு படித்து வருகிறார். விடுமுறைக்காக வீட்டுக்கு சென்ற அவர் அதன்பிறகு கல்லூரிக்கு வரவில்லை.

    பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் விடுதி கண்காணிப்பாளர் எபினேசர் ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாணவனை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×