search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வர இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்
    X

    இந்து எழுச்சி முன்னணி பொதுக்குழு கூட்டம்.


    தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வர இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்

    • கூட்டத்தில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும்
    • தேனி-மதுரை ரோட்டில் நடந்து வரும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன.
    தேனி:

    தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமையில் நடைபெற்றது. நிறுவன தலைவர் பொன்.ரவி, மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் கம்பம் மாய.லோகநாதன், மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் ராமமூர்த்தி, சோலைராஜன், தேனி நகர தலைவர் செல்வ பாண்டி யன், நகர பொருளாளர் ராஜேஷ்குமார், நகர அமைப்பாளர் அரண்மனை முத்துராஜ் உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய பொறு ப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும். தேனி-மதுரை ரோட்டில் நடந்து வரும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன.

    Next Story
    ×