தேனி மாவட்டத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 21 வழக்குகளுக்கு தீர்வு

சடப்பணிகள் ஆணையக்குழு சார்பில் சிறப்பு மக்கள் நீதிமன்ற முகாம் நடைபெற்றது. 2 குடும்ப நல வழக்குகள், ஒரு சிவில் வழக்கு, 18 மோட்டார் வாகன விபத்து வழக்கு என 21 வழக்குகளுக்கு தீர்வு காண ப்பட்டது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

தேனி:

தேனி, உத்தமபாளையம் கோர்ட்டில் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகள் மீது தீர்வு காண மாவட்ட சடப்பணிகள் ஆணையக்குழு சார்பில் சிறப்பு மக்கள் நீதிமன்ற முகாம் நடைபெற்றது.

தேனி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற முகாமிற்கு மாவட்ட முதன்ைம நீதிபதி அறிெவாளி தலைமை தாங்கினார்.

மாவட்ட சட்ட ப்பணிகள் ஆணையர் குழு செயலர் சுரேஷ் முன்னிலை வகித்தார். சிறப்பு மக்கள் நீதிமன்ற நீதிபதி சுந்தரி, சார்பு நீதிபதி மாரியப்பன் ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர். இேதபோல் உத்தமபாளையத்தில் சார்பு நீதிபதி சிவாஜி செல்லையா தலைமையில் சிறப்பு மக்கள் நீதிமன்ற முகாம் நடைபெற்றது. மாவட்ட உரிமையியல் நீதிபதி சரவண செந்தில்குமார், நீதித்துறை நடுவர்கள் ரமேஷ், ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் நீதிமன்ற ங்களில் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த 2 குடும்ப நல வழக்குகள், ஒரு சிவில் வழக்கு, 18 மோட்டார் வாகன விபத்து வழக்கு என 21 வழக்குகளுக்கு தீர்வு காண ப்பட்டது. மேலும் வழக்கு தொடர்ந்தவர்களுக்கு ரூ.5.53 கோடி இழப்பீடு தொகை வழங்க உத்தரவிட ப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com