search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வருசநாடு அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பலி
    X

    கோப்பு படம்.

    வருசநாடு அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

    • தெருவில் மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த போது. மின் வயர் அறுந்து தொங்கிக்கொண்டிருந்தது.
    • இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சிறுவன் படுகாயம் அடைந்தான்

    வருசநாடு:

    வருசநாடு அருகே அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் சகில்ராஜா மகன் லோகிதன் (வயது7). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். தெருவில் மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது பரமன் என்பவர் வீட்டில் மின் வயர் அறுந்து தொங்கிக்கொண்டிருந்தது.

    அந்த வயரை எதிர்பாராத விதமாக லோகிதன் பிடித்தான். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சிறுவன் படுகாயம் அடைந்தான். அக்கம் பக்கத்தினர் வருசநாடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் வழியிலேயே லோகிதன் இறந்து விட்டதாக பரிசோதனை செய்த டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×