search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாளை ெதாடங்கி 8 நாட்கள் நடக்கிறது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
    X

    கோப்பு படம்.

    நாளை ெதாடங்கி 8 நாட்கள் நடக்கிறது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

    • ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
    • மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் தொடர்பான கோரிக்கை குறித்து பதிவு செய்யப்படுகிறது.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நாளை முதல் 20ந் தேதி வரை 8 நாட்களுக்கு பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது.

    11-ந் தேதி தேனி பி.சி.கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி , 12-ந் தேதி ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, 13-ந் தேதி போடிநாயக்கனூர் ஜ.கா.நி.மேல்நிலைப் பள்ளி, 17-ந் தேதி சின்னமனூர் நகராட்சி உயர்நிலைப்பள்ளி (காலனி) மற்றும் உத்தமபாளையம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, 18-ந் தேதி கம்பம் அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி (உத்தமபுரம்), 19-ந் தேதி பெரியகுளம் எட்வர்ட் நினைவு நடுநிலைப் பள்ளி, 20-ந் தேதி மயிலாடும்பாறை ஜி.ஆர்.வி.மேல்நிலைப் பள்ளி என மொத்தம் 8 நாட்கள் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

    இந்த சிறப்பு மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்று வழங்குதல்,தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறுவதற்கு பதிவு செய்தல், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீடுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், உதவி உபகரணங்கள் மற்றும் பிற உதவிகள் பெறுவதற்கு ஆலோசனை வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் தொடர்பான கோரிக்கை குறித்து பதிவு செய்யப்படுகிறது.

    மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொருவரும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் - 6, குடும்ப அட்டை நகல் , ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×