என் மலர்
தேனி
- மகரஜோதி வரை வழிபாட்டுக்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த முன்னேற்பாடு ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது.
- பக்தர்களின் வசதி மற்றும் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
தேனி:
சபரிமலை அய்யப்பன் கோவில் கார்த்திகை முதல்நாள் முதல் மகரஜோதி வரை வழிபாட்டுக்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த முன்னேற்பாடு ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் தேக்கடியில் தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா மற்றும் இடுக்கி மாவட்ட கலெக்டர் ஷீபா ஜார்ஜ், தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கார்த்திகை முதல் நாள் முதல் மகரஜோதி வரை அய்யப்பன் கோவில் வழிபாட்டிற்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும் என்பதால் பக்தர்களின் வசதி மற்றும் பாதுகா ப்பிற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
வெளியூர் மற்றும் வெளிமாநிலத்திலிருந்து வரும் வாகனங்கள் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் நிறுத்தப்பட வேண்டும். மேலும் வாகனங்களில் முன்புறம் மற்றும் பின்புறம் உள்ள வாகன எண் பலகைகளை மறைக்காத வண்ணம் புகைப்படங்கள் மற்றும் மாலைகளை அணி வித்திருக்க வேண்டும்.
தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து அனுமதி பெற்றிருக்க வேண்டும். வாடகை வாகனங்களில் அதிக அளவில் பக்தர்களை ஏற்றி செல்லக் கூடாது. பக்தர்கள் சாலை விதிகளை பின்பற்றி, குறிப்பிட்டுள்ள இடங்களில் மாற்று பாதைகளில் செல்ல வேண்டும்.
மாவட்ட மற்றும் மாநில எல்லைகளில் பசுமை சோதனை சாவடிகள் அமைக்கப்பட வேண்டும். பக்த ர்கள் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு செல்ல அனு மதிக்க கூடாது. அவ்வாறு பக்தர்களால் கொண்டு வரப்படும் தடைசெய்ய ப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.
வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றக் கூடிய பொரு ட்கள், மது, புகையிலை போன்ற பொ ருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க உரிய இடங்களில் விழிப்பு ணர்வு பதாகைகளை வைக்கப்பட வேண்டும். பக்தர்களின் பாதுகாப்பி ற்காக போதிய போலீசார் சுழற்சி முறையில் பணி நியமனம் செய்ய வேண்டும்.
குறுவனூத்து மற்றும் எரச்சல் பாலம் அருகில் உள்ள நீர்த்தேக்கத்தில் பக்தர்களை குளிக்க அனுமதிக்க கூடாது. மேலும் பாலத்தின் இருபுறமும் எச்சரிக்கை பலகை வைக்கப்பட வேண்டும்.
கம்பம் மற்றும் கூடலூர் நகராட்சி சார்பாக பக்தர்களுக்கு குடிநீர் வசதி, நடமாடும் கழிவறைகள் ஆகியன அமைக்கப்பட வேண்டும். தமிழக எல்லையில் சுகாதாரப் பணியாளர்கள் மூலம் சுண்ணாம்பு, பீனாயில் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி தக்க சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும். பக்தர்களால் உபயோகப்படுத்தப்பட்டு வீசப்படும் குப்பைகளை உடனுக்குடன் சுத்தம் செய்வதற்கு சுழற்சி முறையில் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
அவசர நிகழ்வுகளுக்காக சுகாதாரத்துறையின் மூலம் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவ குழுவினருடன் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பயிற்சி பெற்ற மீட்பு குழுவினர் தயார் நிலையில் பணியமர்த்தப்பட வேண்டும்.
தமிழ்நாடு மற்றும் கேரளா வருவாய்த்துறை, போக்குவரத்துத்துறை போலீசார் ஆகியோர் இணைந்து உரிய களப்பணி கள் மேற்கொண்டு முன்னே ற்பாடு பணிகளை ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.
இதில் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீண் உமேஷ் டோங்கரே, துணை காவல் கண்காணி ப்பாளர் மதுகுமாரி, இடுக்கி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு குரியாகோஷ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
+2
- கடந்த 2 நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் இடைவிடாது பெய்த மழையினால் அணையின் நீர்மட்டம் 70 அடியை கடந்தது.
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53 அடி. வரத்து 280 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 395.37 மி.கன அடி.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் உள்ள வைகை அணை உள்ளது. இந்த அணையில் திறந்து விடப்படும் தண்ணீர் தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு முக்கிய நீராதாரமாக உள்ளது.
தென்மேற்கு பருவமழை ஏமாற்றியதால் வைகை அணையின் நீர்மட்டம் உயரவில்லை. இதனால் அணையில் இருந்து முதல் மற்றும் 2-ம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இருந்தபோதும் வடகிழக்கு பருவமழை கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தேனி மாவட்டத்தில் வெளுத்து வாங்கியது. இதனால் வைகை அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது. கடந்த 4-ந்தேதி அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியபோது கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
அதன்பின்னர் 8-ந்தேதி அணையின் நீர்மட்டம் 68.50 அடியாக உயர்ந்தது. இதனையடுத்து 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் தேனி, திண்டுக்கல் உள்பட 5 மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
கடந்த 2 நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் இடைவிடாது பெய்த மழையினால் அணையின் நீர்மட்டம் 70 அடியை கடந்தது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 70.31 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2596 கன அடி தண்ணீர் வருகிறது. நீர் இருப்பு 5908 மி.கன அடியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர்கள் வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டனர். அதன்படி இன்று காலை முல்லைப்பெரியாறு பிரதான கால்வாய் பாசன பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசன நிலங்களுக்கு விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து 45 நாட்களுக்கு 900 கன அடி வீதமும் அதன்பின்பு 75 நாட்களுக்கு முறை வைத்தும் மொத்தம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும். இந்த அணை நீர் மூலம் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 45041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
அணையில் இருந்து தண்ணீரை அமைச்சர்கள் இ.பெரியசாமி, மூர்த்தி ஆகியோர் திறந்து வைத்தனர். மேலும் தண்ணீர் வெளியேறிய இடத்தில் விவசாயிகள் மலர்களைத்தூவி வழிபட்டனர். நிகழ்ச்சியில் கலெக்டர்கள் ஷஜீவனா (தேனி), சங்கீதா (மதுரை), பூங்கொடி (திண்டுக்கல்), எம்.எல்.ஏ.க்கள் மகாராஜன், வெங்கடேஷ், சரவணக்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.10 அடியாக உள்ளது. வரத்து 1859 கன அடி. திறப்பு 105 கன அடி. இருப்பு 4504 மி.கன அடியாக உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53 அடி. வரத்து 280 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 395.37 மி.கன அடி.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.73 அடி. அணைக்கு வரும் 400 கன அடி முழுவதும் வெளியேற்றப்பட்டு வருவதால் வராகநதிக்கரையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர் இருப்பு 100 மி.கன அடியாக உள்ளது.
பெரியாறு 2, தேக்கடி 3.8, கூடலூர் 2.4, உத்தமபாளையம் 3.6, சண்முகாநதி அணை 2, போடி 72, வைகை அணை 32, மஞ்சளாறு 14, சோத்துப்பாறை 3, பெரியகுளம் 6, வீரபாண்டி 6.4, அரண்மனைபுதூர் 15.2, ஆண்டிபட்டி 23.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
தேனி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக கும்பக்கரை, சுருளி, அணைப்பிள்ளையார் அருவிகளில் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பு கருதி அங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- கள்ளக்காதலை கண்டித்ததால் வாலிபரை குத்தி கொன்றவர் கைது செய்யப்பட்டார்.
- எஸ்.பி பிரிந்துரையின் பேரில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் டொம்பு சேரி கிழக்குதெருவை சேர்ந்தவர் ராஜா(33). இவர் கோவையில் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார். இவரது அண்ணன் மருத முத்துவின் மனைவிக்கும், டொம்புசேரியை சேர்ந்த பிரவீன்(24) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.
இதனை ராஜா கண்டித்து வந்துள்ளார். இருந்தபோதும் அவர்களது கள்ளத்தொடர்பு தொடர்ந்தது. இதனால் கடந்த 26.8.23-ந்தேதி ராஜாவுக்கும், பிரவீனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பிரவீன் கத்தியால் ராஜாவை குத்தி கொன்றார்.
இதனையடுத்து பழனி செட்டிபட்டி போலீசார் பிரவீனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பிரவீன் மீது குண்டர்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையை கலெக்டர் ஏற்றுக்கொ ண்டதை தொடர்ந்து பிர வீன் குண்டர் தடுப்பு சட்ட த்தின்கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
- கரையோரத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் பொதுப்பணித்துறையினர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- வேலப்பர் கோவிலை அடுத்துள்ள கூட்டாற்று பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டத்தில் கடந்த 1 வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. தேனி மாவட்டத்துக்கு தற்போது மேலும் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் இடைவிடாது மழை கொட்டியதால் இன்று தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக வராக நதியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெயமங்கலம், மேல்மங்கலம், வடுகபட்டி, குள்ளப்புரம் உள்ளிட்ட வராகநதிக்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கரையோரத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் பொதுப்பணித்துறையினர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆண்டிபட்டி அருகே உள்ள தெப்பம்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 55). விவசாயி. இவர் தனது தோட்டத்தில் நிலக்கடலை விவசாயம் செய்துள்ளார். நேற்று இரவு தனது தோட்டத்துக்கு காவலுக்கு சென்றார். அப்போது வேலப்பர் கோவிலை அடுத்துள்ள கூட்டாற்று பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதில் முருகன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்க முயன்றும் முடியவில்லை. இது குறித்து ராஜதானி போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இரவு நேரமானதால் முருகனை மீட்க முடியவில்லை. இன்று காலை தடுப்பணையில் முருகன் உடல் சடலமாக மீட்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ராஜதானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- போடி மெட்டு மலைச்சாலையில் புலியூத்து அருவிக்கு கீழ் 7,8 வது கொண்டை ஊசி வளைவுகளுக்கு இடையே காட்டாற்று வெள்ளம் பாய்ந்தது.
- ஒரு மணிநேரத்திற்கு பிறகு தண்ணீர் வரத்து குறைந்ததால் மீண்டும் அந்த சாலை வழியாக வாகனங்கள் கடந்து சென்றன.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி மற்றும் சுற்றுப்புற பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பிள்ளையார்கோவில் அருகில் உள்ள தடுப்பணையில் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.
கொட்டக்குடி ஆற்றை கடந்து விவசாய நிலங்களுக்கு செல்வதை விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர். மேலும் சிலர் மாற்றுப்பாதையில் சென்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை போடிமெட்டு மலைச்சாலையை ஒட்டிய பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் மலைச்சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து அருவிபோல கொட்டியது.
இந்த சாலையில் புலியூத்து அருவிக்கு கீழ் 7,8 வது கொண்டை ஊசி வளைவுகளுக்கு இடையே காட்டாற்று வெள்ளம் பாய்ந்தது. இதனால் இப்பகுதியில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. காட்டாற்று வெள்ளம் பாய்ந்த பகுதியை கடக்க முடியாமல் வாகன ஓட்டுனர்கள் ஆங்காங்கே தங்கள் வாகனங்களை நிறுத்தி இருந்தனர்.
போடி முந்தல் சோதனைச்சாவடியில் வாகனங்களை நிறுத்துமாறு அவர்களை போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். ஒரு மணிநேரத்திற்கு பிறகு தண்ணீர் வரத்து குறைந்ததால் மீண்டும் அந்த சாலை வழியாக வாகனங்கள் கடந்து சென்றன.
இதேபோல் கொடைக்கானலிலும் கடந்த 5 நாட்களுக்கு மேலாக பகல், இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கொடைக்கானல் ஏரியில் படகுசவாரி முற்றிலும் நிறுத்தப்பட்டது. சுற்றுலா தலங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. கொடைக்கானல், செண்பகனூர், அப்சர்வேட்டரி, வில்பட்டி, பிரகாசபுரம் உள்ளிட்ட இடங்களில் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.
இதனால் வியாபாரிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். இரவு நேரங்களில் பெரும்பாலான வீதிகளில் மக்களின் கூட்டம் அடியோடு குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது.
- கண்காணிப்புக்குழு உத்தரவின்பேரில் பெங்களூரு நேசனல் இன்ஸ்டியூட் ஆப் ராக் மெக்கானிக்ஸ் குழுவினர் பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர்.
- இந்த ஆய்விற்கு தமிழக விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கூடலூர்:
முல்லைபெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க 3 பேர் கொண்ட கண்காணிப்பு குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. இதனைதொடர்ந்து இருமாநில தொழில்நுட்ப வல்லுநர்களையும் சேர்க்க அறிவுறுத்தியது. தற்போது இந்த ஐவர் குழுவின் தலைவராக மத்திய நீர்வளஆணைய தலைமை பொறியாளர் விஜயசரண் உள்ளார்.
தமிழக பிரதிநிதிகளாக நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப்சக்சேனா, காவிரிதொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியம், கேரளநீர்பாசனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் வேணு, நீர்பாசனத்துறை நிர்வாக தலைமை பொறி யாளர் அலெக்ஸ் வர்கீஸ் ஆகியோர் இந்த குழுவில் உள்ளனர்.
இவர்கள் கடந்த மார்ச் மாதம் 27-ந்தேதி பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொண்டனர். கண்காணிப்புக்குழு உத்தரவின்பேரில் பெங்களூரு நேசனல் இன்ஸ்டியூட் ஆப் ராக் மெக்கானிக்ஸ் குழுவினர் தலைமை விஞ்ஞானி டாக்டர் ஸ்ரீபட்நாயக், விஞ்ஞானி பிரவீனாதாஸ், ஜெனிபர் ஆகியோர் தலைமையில் ஆய்வு செய்தனர்.
நிலநடுக்க கருவி, அதிர்வு கருவிகள் ஆகியவற்றின் இயக்கம், கேலரி பகுதியில் கசிவுநீரை கண்காணிக்க வைக்கப்பட்டுள்ள வீநெட்ஜ் கருவிகளையும் ஆய்வு செய்தனர். மேலும் வானிலை கருவிகள் பயன்பாடுகள், மழைமானி அளவீட்டு கருவிகள் ஆகியவற்றையும் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது பெரியாறு சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் சாம்இர்வின் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.
இந்த ஆய்விற்கு தமிழக விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில், மத்திய நீர்வளஆணையம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவை முல்லைபெரியாறு அணை பாதுகாப்பாகவும், திருப்திகரமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் பெங்களூரை சேர்ந்த மத்திய சுரங்கத்துறை கீழ் வரும் தன்னாச்சிபெற்ற அமைப்பு இங்கு ஆய்வு நடத்தியது கண்டனத்துக்குரியதாகும். கோலார் தங்கவயலில் தங்கம் ேதாண்டி எடுக்கும் போது அதற்காக நிறுவப்பட்டது இந்த அமைப்பு. நாடு முழுவதும் சுரங்கம், நீர்மின்திட்டங்கள், அணுமின்திட்டங்கள், எரிவாயு சார்ந்த திட்டங்களுக்கு ஆலோசனையை வழங்கி வருகிறது.
இவர்கள் திடீரென அணைப்பகுதிக்கு ஆய்வுக்கு வந்திருப்பதன் உள்நோக்கம் தெரியவில்லை. ஒவ்ெவாரு முறையும் அணையின் நீர்மட்டம் உயரும் போது இதுபோன்ற செயல்கள் அரங்கேறி வருகிறது. கேரள அரசு தொடர்ந்து நீர்மட்டத்தை உயர விடாமல் சதிதிட்டம் செய்கிறதோ என சந்தேகம் எழுகிறது.
எனவே இதற்கு அதிகாரிகள் விளக்கம் அளிக்கவேண்டும். என்றார்.
- தீபாவளி நேரத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவி வருவதால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர்.
- மின்ஊழியர்கள் மின்வெட்டை சீரமைத்து தரவேண்டும் என வணிகர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சின்னமனூர்:
சின்னமனூர் நகர்பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான வணிகர்கள், தையல் தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள், சிறுதொழில் செய்பவர்கள் என ஏராளமானோர் உள்ளனர். தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பொதுமக்கள் பொருட்கள் வாங்க கடைவீதிக்கு வருகின்றனர். இதனால் வியாபாரம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவி வருவதால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக வணிகர்கள் தங்கள் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். மேலும் வீடுகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொசுக்கடியால் தூக்கத்தை இழந்து அவதியடைந்து வருகின்றனர்.
தினசரி 4 மணிநேரத்திற்கும் மேலாக மின்வெட்டு உள்ளது. இதுகுறித்து முறையான பதில் கிடைக்கவில்லை. எனவே மின்ஊழியர்கள் மின்வெட்டை சீரமைத்து தரவேண்டும் என வணிகர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அகமலை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 225 பயனாளிகளுக்கு ரூ.7.21 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
- தொடர் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தொற்று ஏதும் ஏற்பட்டிருப்பின் சுகாதார நிலையத்தினை அணுகி உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என பேசினார்.
தேனி:
தேனி மாவட்டம், போடிஅருகே அகமலை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 225 பயனாளிகளுக்கு ரூ.7.21 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி முன்னிலையில் வழங்கினார்.
முகாமில் கலெக்டர் பேசியதாவது,
அனைத்துத் துறை அலுவலர்களும் நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அதற்கு தீர்வுகாணும் வகையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் நடத்தப்படுகின்றது.
பெற்றோர்கள் அனைவரும் தங்களது குழந்தைகள் ஆரம்ப கல்வி, உயர்கல்வி, மேல்நிலை கல்வி பயில்வதில் உறுதியாக இருக்க வேண்டும். 3 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைவரும் ஆரம்ப கல்வி முறையினை கற்பதற்கும், சத்தான உணவு வகைகளை எடுத்துக் கொள்வதற்காகவும் அங்கன்வாடி மையத்தில் சேர்க்க வேண்டும்.
குழந்தை திருமணங்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். சிறுவயதில் கர்ப்பம் அடைதல், குறைவான எடையில் குழந்தை பெற்றெடுத்தல் ஆகியவற்றை தவிர்க்க குறிப்பிட்டுள்ள 18 வயது பூர்த்தி அடைந்த பின்னர், பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் உறுதி கொள்ள வேண்டும்.
பல்வேறு தொழில் கடன், வேலைவாய்ப்பு கடன், சுயதொழில் கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான கடன்களை வங்கிகளின் மூலம் பெற்றவர்கள் அதனை முறையாக குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தினால் வட்டி தள்ளுபடி செய்யப்படும்.
மழைக்காலங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் நீர் நிலைகளை ஆக்கிரமித்து சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது. முடிந்தவரை பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தற்பொழுது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டும். தொடர் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தொற்று ஏதும் ஏற்பட்டிருப்பின் சுகாதார நிலையத்தினை அணுகி உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என பேசினார்.
- அணையில் இருந்து மதுரை குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 5787 மி.கன அடியாக உள்ளது.
- முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 128.40 அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணைக்கு கடந்த 1 வாரத்துக்கும் மேலாக பெய்த கன மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்த வண்ணம் இருந்தது. அணையின் நீர் மட்டம் 67 அடியை எட்டியதும் முதல் எச்சரிக்கையும், 68 அடியை எட்டியதும் 2-ம் எச்சரிக்கையும் விடப்பட்ட நிலையில் நேற்று 69 அடியை நெருங்கியதும் 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
வழக்கமாக அணையின் நீர் மட்டம் 69 அடியை எட்டியதும், அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே திறந்து விடப்படும். ஆனால் மதுரை மாவட்டம் மேலூர், பேரணை, கள்ளந்திரி பகுதி பாசனத்துக்காக நாளை (10-ந்தேதி) முதல் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது.
இதன் காரணமாக உபரி நீரை வெளியேற்றாமல் நீர் மட்டத்தை அதிகரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 69.85 அடியாக உள்ளது. வரத்து 2705 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து மதுரை குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 5787 மி.கன அடியாக உள்ளது.
அணையின் நீர் மட்டம் 70 அடியை எட்டியுள்ளதால் இன்று எப்போது வேண்டுமானாலும் தண்ணீர் திறக்க அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர். அணைக்கு வரும் உபரி நீர் முழுவதும் 7 மதகுகள் வழியாக வெளியேற்றப்படும். ஏற்கனவே வைகை கரையோரமுள்ள தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கரையோரம் உள்ள பாதுகாப்பை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 128.40 அடியாக உள்ளது. வரத்து 2230 கன அடி. திறப்பு 105 கன அடி. இருப்பு 4352 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 52.20 அடி, வரத்து 232 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 379 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 127 அடி. அணைக்கு வரும் 243 கன அடி முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100 மி.கனஅடியாக உள்ளது.
பெரியாறு 7, தேக்கடி 14.2, கூடலூர் 8.4, உத்தமபாளையம் 7.8, சண்முகாநதி அணை 21.6, போடி 22, வைகை அணை 25.6, மஞ்சளாறு 32, சோத்துப்பாறை 32, பெரியகுளம் 21, வீரபாண்டி 42.5, அரண்மனைப்புதூர் 23.2, ஆண்டிபட்டி 76.4 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
- கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு வருகின்றன.
- போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து வீட்டில் ஏதேனும் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்று சோதனை நடத்தினர்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை தாராளமாக நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வரப்பட்டு தேனி மாவட்டத்தில் விற்பனை செய்யப்படுவதுடன் அண்டை மாநிலமான கேரளாவுக்கும் கடத்திச்செல்லப்படுகிறது.
இதனைதடுக்க மாவட்ட எஸ்.பி பிரவீன்உமேஷ் டோங்கரே தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கஞ்சா வியாபாரிகளிடமிருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் அவர்களின் சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
மேலும் கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் கஞ்சா விற்பனை அதிகளவில் நடைபெற்று வருகிறது. நேற்றிரவு எஸ்.பி தனிப்படை போலீசார் அறிவுறுத்தலின் பேரில் ஆண்டிபட்டி சப்-இன்ஸ்பெக்டர் சவரியம்மாள்தேவி தலைமையிலான போலீசார் மறவபட்டி செல்லும் மெயின்ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது மணியகாரன்பட்டி கிழக்குதெருவை சேர்ந்த முருகன்(54), அதே ஊரை சேர்ந்த செல்லபாண்டி(35), அவரது மனைவி கார்த்திகா ஆகியோர் ஒரு ஆட்டோவில் ஆந்திராவில் இருந்து வாங்கி வந்த 4.200 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக கடத்திச்செல்ல முயன்றது தெரியவந்தது. போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து வீட்டில் ஏதேனும் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்று சோதனை நடத்தினர்.
அப்போது வீட்டிற்குள் 12 மோட்டார் சைக்கிள்கள், 2 ஆட்டோக்கள், 31 ஆன்ட்ராய்டு செல்போன்கள், 2 சாதா வகை செல்போன்கள், 2 டேப்லட் செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கஞ்சா விற்பனையில் வைத்திருந்த ரூ.42 ஆயிரம் பணத்தையும் போலீசார் கைப்பற்றினர்.
இந்த வாகனங்களை கஞ்சா வியாபாரிகள் அடகில் வாங்கி வைத்திருந்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர். ஆனால் இந்த வாகனங்கள் அனைத்தும் கஞ்சா விற்பனைக்காக பயன்படுத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. கைப்பற்றப்பட்ட வாகனங்கள் அனைத்தையும் ஒரு லாரியில் ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
கைதான 3 பேரையும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் தயார் படுத்தி வருகின்றனர்.
- தூய்மை பணியாளர்கள் சம்பளம் வழங்கினால் மட்டுமே பணிகளை மேற்கொள்வோம் என திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- இதனால் பெரியகுளம் நகராட்சியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
பெரியகுளம்:
பெரியகுளம் நகராட்சியில் தனியார் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்தபணியாளர்களாக 60 பேர் நியமனம் செய்யப்பட்டு பெரியகுளம் நகர் பகுதியில் தூய்மை பணி மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக இவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வில்லை. இது குறித்து பலமுறை அவர்கள் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க ப்படவில்லை. இதனால் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். சம்பளம் வழங்கினால் மட்டுமே தூய்மை பணிகளை மேற்கொள்வோம் என அவர்கள் கோஷமிட்டனர்.
இதனால் அங்கு பரபர ப்பான சூழல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நகராட்சி தலைவர் சுமிதா சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்ததால் தூய்மை பணி யாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- திருவிழாவின் ஒரு பகுதியாக இன்று 64-வது ஆண்டு இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
- மாட்டு வண்டிகள் பந்தய எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடின.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பத்தில் பகவதியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் ஒரு பகுதியாக இன்று 64-வது ஆண்டு இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தயத்தில் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், நெல்லை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாட்டு வண்டிகள் பங்கேற்றன.
இந்த மாட்டு வண்டிகள் பந்தய எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடின. மாடுகளையும், மாட்டு வண்டியை ஓட்டிச்சென்ற சாரதிகளையும் உற்சாகப்படுத்தும் வகையில் சாலையின் இருபுறமும் ஏராளமானோர் நின்று கைதட்டி ஆராவாரம் செய்தனர்.
இந்த பந்தயத்தில் தேன்சிட்டு, பூஞ்சிட்டு, நடுமாடு, கரிச்சான்மாடு, பெரியமாடு என 5 வகையான பிரிவுகளில் 70-க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. போட்டியில் வெற்றி பெற்ற ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. கம்பத்தில் இருந்து கம்பம்மெட்டு சாலையில் 8 கி.மீ தூரம் இந்த பந்தயம் நடைபெற்றது.






