search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கம்பத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம்
    X

    கம்பத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

    • திருவிழாவின் ஒரு பகுதியாக இன்று 64-வது ஆண்டு இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
    • மாட்டு வண்டிகள் பந்தய எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடின.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பத்தில் பகவதியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் ஒரு பகுதியாக இன்று 64-வது ஆண்டு இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தயத்தில் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், நெல்லை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

    இந்த மாட்டு வண்டிகள் பந்தய எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடின. மாடுகளையும், மாட்டு வண்டியை ஓட்டிச்சென்ற சாரதிகளையும் உற்சாகப்படுத்தும் வகையில் சாலையின் இருபுறமும் ஏராளமானோர் நின்று கைதட்டி ஆராவாரம் செய்தனர்.

    இந்த பந்தயத்தில் தேன்சிட்டு, பூஞ்சிட்டு, நடுமாடு, கரிச்சான்மாடு, பெரியமாடு என 5 வகையான பிரிவுகளில் 70-க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. போட்டியில் வெற்றி பெற்ற ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. கம்பத்தில் இருந்து கம்பம்மெட்டு சாலையில் 8 கி.மீ தூரம் இந்த பந்தயம் நடைபெற்றது.

    Next Story
    ×