என் மலர்tooltip icon

    தேனி

    • சுருளி அருவி பகுதிக்கு செல்ல விதிக்கப்பட்ட தடை தொடர்வதால் தோட்ட வேலைக்கு செல்பவர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர்.
    • சண்முகா நதி அணை பகுதியில் முகாமிட்டுள்ள யானை மேகமலை நோக்கி செல்கிறது.

    உத்தமபாளையம்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் சுற்றித்திரிந்த அரிசிக்கொம்பன் யானை கடந்த மாதம் அந்த மாநில வனத்துறையினரால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு தமிழகத்தை ஒட்டிய வனப்பகுதியில் விடப்பட்டது. அதன்பிறகு ஹை வேவிஸ் மலைகிராமங்களில் சுற்றித்திரிந்த அந்த யானை கடந்த மாதம் 27-ந்தேதி கம்பம் நகருக்குள் நுழைந்து சாலையோரம் இருந்த வாகனங்களை சேதப்படுத்தியது.

    அதனை பிடிக்க தமிழக வனத்துறையினர் கண்காணிப்பு சோதனைச்சாவடி அமைத்து மயக்கஊசி செலுத்த முயன்று வருகின்றனர். ராயப்பன்பட்டி அருகில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் சண்முகாநதி அணைப்பகுதியில் கடந்த சில நாட்களாக அந்த யானை உலாவி வருகிறது.

    இதனால் காமய கவுண்டன்பட்டி, ராயப்பன்பட்டி, கே.கே.பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியை ஒட்டியுள்ள தோட்டங்களுக்கு தொழிலாளர்கள் யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதனால் அரிசிக்கொம்பன் யானை அங்குள்ள வாழைத்தோட்டங்களை சேதப்படுத்தி உண்டு வருகிறது. தினந்தோறும் சாரல் மழை பெய்து வருவதால் அது வசிப்பதற்கு ஏற்ற இடமாக மாறியுள்ளது. இரவு நேரங்களில் அணைப்பகுதியில் உள்ள தண்ணீரை குடித்துவிட்டு மீண்டும் சென்று விடுகிறது.

    சுருளி அருவி பகுதிக்கு செல்ல விதிக்கப்பட்ட தடை தொடர்வதால் தோட்ட வேலைக்கு செல்பவர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர். மேலும் தோட்டப்பயிர்களையும் சேதப்படுத்தி வருவதால் அதன் உரிமையாளர்கள் கவலையடைந்துள்ளனர். மேலும் சுற்றுலா பயணிகளும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    அரிசி கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க 4 டாக்டர்கள் 2 குழுவாக பிரிந்து 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். ராயப்பன்பட்டி அருகே அடர்ந்த வனப்பகுதியில் உள்ள சண்முகநாதன் கோவில் பகுதிக்கு அரிசி கொம்பன் யானை சென்றது. அங்கு சில நாட்களுக்கு முன்பு சமையலறை சுவற்றை சேதப்படுத்தியது. இந்த நிலையில் நேற்று கோவில் கேட்டையும் சேதப்படுத்தி அங்கிருந்த அரிசியை சாப்பிட்டு சென்றது.

    இதனால் கோவில் வளாகத்தில் தங்கி இருந்த சரஸ்வதியம்மாளை வனத்துறையினர் ஏற்கனவே அங்கிருந்து வெளியேற்றினர். தற்போது அவரது மகன் அங்கு பூஜை செய்து வருகிறார். சில நாட்களுக்கு கோவிலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    மூணாறு சின்னக்கானல் பகுதியில் அரிசி கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்த குழுவில் இருந்த கேரள டாக்டர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி அரிசி கொம்பன் யானையை பிடிக்க முடிவு செய்துள்ளனர்.

    சண்முகா நதி அணை பகுதியில் முகாமிட்டுள்ள யானை மேகமலை நோக்கி செல்கிறது. இதனை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    சுருளிப்பட்டி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் கம்பம் பிளாண்டேசன் ரேஞ்சர் கலையரசன் வெளியாட்களை அப்பகுதிக்குள் அழைத்துச் சென்றுள்ளார். இது குறித்து புகார்கள் எழுந்தது. இதனைத் தொடர்ந்து மண்டல வன அலுவலர் பத்மாவதி, ரேஞ்சர் கலையரசனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    மேலும் அனைத்து வனத்துறையினரையும் கண்காணித்து வருகின்றனர். இதனால் செய்தியாளர்களுக்கு முறையான தகவல்கள் கிடைப்பதில்லை. அரிசி கொம்பன் யானை ஒரே இடத்தில் சுற்றித் திரிவதற்கு வாய்ப்பு இல்லை. மேலும் துதிக்கையில் அடிபட்டு யானை சோர்ந்து காணப்பட்டது. குடியிருப்பு பகுதியில் இருந்து 2 கி.மீ தொலைவில் முகாமிட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். இதனால் கடந்த 1 வாரத்துக்கும் மேலாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

    தடை உத்தரவு எப்போது நீங்கும்? இயல்பு நிலை திரும்புமா? என அவர்கள் விரக்தியில் உள்ளனர். எனவே வனத்துறையினர் அரிசி கொம்பன் யானை குறித்து தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • பொதுவாகவே யானைகளை அதன் போக்கிலேயே வாழ அனுமதிக்க வேண்டும் என்பார்கள். அதற்கு ஏற்பாடு செய்து விட்டாலே பிரச்சினை தீர்ந்து விடும்.
    • கொஞ்சம் அரிசி கொடுத்தால் அரிசி கொம்பன் நிச்சயம் குழந்தையாக மாறி விடுவான்.

    மன அழுத்தம் மனிதர்களுக்கு மட்டும் அல்ல. யானைகளுக்கும் உண்டு. அரிசி கொம்பன் யானை தொடர்பான சர்ச்சைகள் இதைத்தான் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன.

    அரிசி கொம்பன் என்ற பெயரை கேட்டதும் அதன் உருவத்தை பார்த்ததும் அந்த யானை படுபயங்கரமான யானையாக இருக்குமோ என்ற எண்ணம்தான் 99 சதவீதம் பேருக்கு ஏற்படுகிறது. ஆனால் மூணாறு பகுதி மக்கள் அரிசி கொம்பன் யானை ரொம்ப ரொம்ப சாதுவானது. அன்பாக பழகக்கூடியது என்றெல்லாம் கண்ணீர் மல்க சொல்கிறார்கள்.

    பொதுவாக யானைகள் சுமார் 70 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை. ஆண் யானையான அரிசி கொம்பனுக்கு தற்போது 36 வயதுதான் ஆகிறது. இன்னும் 50 சதவீத வாழ்க்கையை அந்த யானை வாழ வேண்டி உள்ளது. ஆனால் அந்த யானையை சுற்றி ஏற்பட்டுள்ள சர்ச்சைகளும், பரபரப்புகளும் அந்த யானையை நிம்மதியாக வாழ வைக்குமா? என்ற ஏக்கம் வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் நிலவுகிறது.

    அரிசி கொம்பன் யானை இதுவரை 9 பேரை கொன்று விட்டதாகவும், 100-க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து தள்ளி விட்டதாகவும் ஒருசாரார் புகார் வாசிக்கிறார்கள். ஆனால் உணவுக்காகத்தான் அது குடியிருப்புகளை தேடி வருகிறது என்று மற்றொரு சாரார் சொல்கிறார்கள். இதில் உண்மை தெரிய வேண்டுமானால் அரிசி கொம்பன் பற்றி முழுமையாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

    இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழக-கேரள எல்லை பகுதியில்தான் அதிக யானைகள் வசிக்கின்றன. இந்த யானைகள் காட்டுக்குள் தனித்தனி குழுக்களாக பிரிந்து கொண்டு வாழ்ந்து வருகின்றன. ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு குறிப்பிட்ட இடம் உண்டு. அப்படி ஒரு குழுவில்தான் அரிசி கொம்பன் யானை 1987-ம் ஆண்டு பிறந்தது.

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிதான் அதன் பூர்வீகம். இதனால் அந்த மாவட்டத்தில் உள்ள மூணாறு பகுதி மக்களுக்கு அரிசி கொம்பன் யானை பற்றி சின்ன வயதில் இருந்தே தெரியும். முதலில் அந்த யானையை சின்ன கொம்பன் என்றுதான் மூணாறு பகுதி மக்கள் செல்லமாக அழைத்தார்கள்.

    பொதுவாகவே நமது வீட்டில் உள்ள சிறுவர்-சிறுமிகளை நாம் அம்மு குட்டி, செல்ல குட்டி என்றெல்லாம் கொஞ்சுவது உண்டு. அதுபோல் தான் கேரளாவில் பாசமாக வளரும் யானை குட்டிகளை கொம்பன் என்று கொஞ்சுவார்கள். கொம்பன் வகை யானைகளுக்கு மக்கள் மத்தியில் தனி செல்வாக்கு உண்டு.

    ஏனெனில் கொம்பன் யானையை வீட்டு முற்றத்தில் கட்டி வைத்தால் செல்வம் சேரும் என்பது ஐதீகம். கொம்பன் யானைகள் காதை ஆட்டிக் கொண்டே இருந்தால் அந்த வீட்டுக்கு நல்லது என்று பேசப்படுவது உண்டு. அரிசி கொம்பன் யானையையும் அந்த ரகத்தில்தான் வைத்திருந்தனர்.

    ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதானே. இந்த கொம்பன் யானைக்கு ஒரு கட்டத்தில் அரிசியை உணவாக கொடுத்தனர். அரிசியை சாப்பிட்ட யானைக்கு அது தேவஅமிர்தமாக இருந்தது. இதனால் மற்ற வழக்கமான உணவுகளை அந்த கொம்பன் யானை சாப்பிட மறுத்தது. இதனால் மூணாறு பகுதி மக்கள் அந்த யானையை சின்ன கொம்பன் என்று அழைத்து வந்ததற்கு பதில் அரிசி கொம்பன் என்று அழைக்க தொடங்கினார்கள். பிறகு அதுவே அந்த யானையின் பெயராக நிலைத்துப் போனது.

    2010-ம் ஆண்டுகளில் அதாவது அரிசி கொம்பனுக்கு 23 வயது இருக்கும்போது அது அரிசி மட்டுமே சாப்பிடுவேன் என்று பிடிவாதம் பிடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் வனப்பகுதியில் தங்காமல் குடியிருப்பு பகுதிகளுக்குள் உலாவ ஆரம்பித்தது. அரிசி எங்கிருக்கும் என்று தேடிப்பிடித்து சாப்பிட்டு வந்தது.

    இதனால் மூணாறு பகுதி மக்களோடு மக்களாக அந்த யானை இரண்டற கலந்துபோனது. அந்த யானைக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. பூப்பாறை என்ற இடத்தில் அரிசி கொம்பன் பிரண்ட்ஸ் என்ற பெயரில் டீக்கடை தொடங்கி நடத்தினார்கள். அந்த அளவுக்கு அரிசி கொம்பன் செல்லப்பிள்ளையாக இருந்தது.

    முதலில் அரிசி கொம்பனின் சிறு சிறு விளையாட்டுகளை வனப்பகுதி மக்கள் சாதாரணமாக எடுத்துக் கொண்டனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அரிசிக்காக அந்த யானை சற்று உக்கிரத்தை காட்டியது. அதில்தான் பிரச்சினை தொடங்கியது. சாதாரண குடிசை போட்டு வாழும் வனப்பகுதி மக்களுக்கு அது தொல்லை தருவதாக இருந்தது.

    ஆனால் ஒருபோதும் அரிசி கொம்பன் அரிசிக்காக மக்களை பந்தாடியது கிடையாது. அரிசிக்கும், நல்ல தண்ணீருக்கும் மட்டுமே அது ஆசைப்பட்டது. அதில் குறுக்கீடு வந்தபோதுதான் அந்த யானை தாறுமாறாக நடந்து கொண்டது. அதை எதிர்கொண்ட சிலர் பலியாக நேரிட்டது. இப்படியே 10 ஆண்டுகள் ஓடிப்போனது.

    கடந்த 3 ஆண்டுகளில் அரிசி கொம்பனால் அதிக பிரச்சனை ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. வனப்பகுதி மக்கள் சொல்லாத நிலையில் வனத்தையொட்டி உள்ள தனியார் நிலப்பகுதி மக்கள்தான் இந்த புகாரை அதிகம் தெரிவித்தனர். இதையடுத்து கடந்த மார்ச் மாதம் கேரள வனத்துறை அரிசி கொம்பன் யானையை மயக்க ஊசி போட்டு பிடிக்க முடிவு செய்தது.

    அதற்கு கேரள யானைகள் பாதுகாப்பு அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அரிசி கொம்பனை தொந்தரவு செய்யக் கூடாது என்று கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர். இதையடுத்து அரிசி கொம்பனை பிடித்து பெரியாறு புலிகள் காப்பகத்தில் விடும்படி கோர்ட்டு அறிவுறுத்தியது. அதன்படி 5 மயக்க ஊசிகள் போட்டு அரிசி கொம்பனை பிடித்தனர்.

    மூணாறு வனப்பகுதியில் இருந்து அதை லாரியில் ஏற்றி தேக்கடி பகுதிக்கு கொண்டு சென்றனர். அந்த சமயத்தில் அரிசி கொம்பனை பிரிகிறோமே என்று மூணாறு பகுதி மக்கள் கண்ணீர் விட்டனர். இந்த காட்சிகள் தொலைக்காட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஏப்ரல் மாதம் இறுதியில் தேக்கடியில் இருந்து அந்த யானை வேறு வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தது.

    கடந்த மாதம் தமிழக பகுதியான மேகமலைக்குள் அது ஊடுருவியது. அந்த வனப்பகுதியில் சுமார் 20, 25 நாட்கள் உலாவி கொண்டே இருந்தது. யாரையும் அது துன்புறுத்தவில்லை. ஒரே ஒரு தடவை மட்டும் ரேஷன் கடையை உடைத்து அரிசி இருக்கிறதா? என்று தேடியது. அரிசி கிடைக்கவில்லை என்றதும் மீண்டும் தேக்கடிக்கே சென்று விட்டது.

    என்றாலும் அரிசி மீது உள்ள ஆசையால் கடந்த 27-ந்தேதி மேகமலையில் இருந்து கம்பம் பகுதிக்குள் வந்து விட்டது. இதனால் கம்பம் நகரமே அல்லோகலப்பட்டது. ஆனால் அப்போதும் கூட அது மக்களை தாக்கவில்லை. அரிசியை தேடித்தான் அலைந்தது. நல்ல தண்ணீர் கிடைக்குமா? என்று தவித்தது.

    அந்த யானையை சற்று அருகில் இருந்து பார்த்த கம்பம் பகுதி மக்கள் பரிதாபப்படுகிறார்கள். அரிசி கொம்பனுக்கு உடல் முழுக்க ரத்த காயம் இருக்கிறது. அந்த யானையால் நடக்க கூட முடியவில்லை என்று கவலையோடு சொல்கிறார்கள். அரிசி கொம்பன் யானையை உரிய வகையில் பக்குவப்படுத்தினால் அது நல்ல பாசமாக இருக்கும் என்பதுதான் வன விலங்கு ஆர்வலர்களின் கருத்து ஆகும்.

    பொதுவாகவே யானைகளை அதன் போக்கிலேயே வாழ அனுமதிக்க வேண்டும் என்பார்கள். அதற்கு ஏற்பாடு செய்து விட்டாலே பிரச்சினை தீர்ந்து விடும். கொஞ்சம் அரிசி கொடுத்தால் அரிசி கொம்பன் நிச்சயம் குழந்தையாக மாறி விடுவான்.

    • பஸ்சுக்காக காத்திருந்தபோது அவ்வழியாக வந்தவர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500 மற்றும் செல்போனை பறித்துச்சென்றார்.
    • இதுகுறித்து தென்கரை போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    பெரியகுளம்:

    கோவை சூளுர்பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார்(28). இவர் தனது நண்பரை பார்ப்பதற்காக பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டிக்கு வந்துள்ளார். பின்னர் பஸ்நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தபோது அவ்வழியாக வந்த ரூபன்(21) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500 மற்றும் செல்போனை பறித்துச்சென்றார். இதுகுறித்து தென்கரை போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து ரூபனை கைது செய்தனர்.

    இதேபோல் கூடலூர் அருகே புலிக்குத்தியை சேர்ந்தவர் முருகன்(52). கவரிங் நகை விற்பனை செய்யும் தொழில் செய்துவருகிறார். அண்ணாநகர் பொதுக்கழிப்பிடம் அருகே நடந்து சென்றபோது அருண்(21), சிராஜ்(24), பிரபாகரன் ஆகியோர் அவரை மிரட்டி பணத்தை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் கூடலூர் வடக்கு போலீசார் வழக்குபதிவு செய்து அருண், சிராஜை கைது செய்தனர். தப்பிஓடிய பிரபாகரனை தேடி வருகின்றனர்.

    • எரணம்பட்டி ரேசன் கடையில் போடி பொது வினியோக திட்ட சார்பதிவாளர் மற்றும் சங்கத்தின் கள அலுவலர் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • பொருட்களின் இருப்பு குறைவு உள்ளிட்ட முறைகேடுகள் கண்டறி யப்பட்டன.

    தேனி:

    தேனி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை ப்பதிவாளர் ஆரோக்கிய சுகுமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது, உத்தமபாளையம் அருகே ராமகிருஷ்ணாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டுப்பாட்டில் இயங்கும் எரணம்பட்டி ரேசன் கடையில் போடி பொது வினியோக திட்ட சார்பதிவாளர் முனிராஜா மற்றும் சங்கத்தின் கள அலுவலர் பிரித்விராஜ் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது பொருட்களின் இருப்பு குறைவு உள்ளிட்ட முறைகேடுகள் கண்டறி யப்பட்டன. இதனை தொடர்ந்து ரேசன்கடை விற்பனையாளர் ஈஸ்வரன் சஸ்பெண்டு செய்யப்பட்டு அவர் மீது ஒழுங்கு நட வடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது. மேலும் உத்தம பாளையம் குடிமை ப்பொருள் வழங்கள் குற்றப்புலனாய்வுத்துறை ஆய்வாளரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரேசன் கடைகளில் முறை கேடுகளில் ஈடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் ஒரு குவாட்டர் பாட்டிலுக்கு ரூ.30 முதல் ரூ.40 வரை விலை அதிகம் வைத்து விற்பனை செய்யப்பட்டது.
    • மதுபாட்டில்கள் தரம் மற்றும் அரசு நிர்ணயித்த நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் மது விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தினர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் நகர் பகுதியில் இயங்கி வந்த அனைத்து டாஸ்மாக் கடைகளும் பல்வேறு பிரச்சினைகளால் மூடப்பட்டது. இதேபோல் வடுகபட்டியில் இருந்த டாஸ்மாக் கடையும் பொதுமக்கள் போராட்டம் காரணமாக மூடப்பட்டது.

    இதனால் பெரியகுளம் பகுதி குடிமகன்கள் தேவ தானப்பட்டி, ஜெயமங்கலம், தேனி பகுதி டாஸ்மாக் கடைகளுக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

    பெரியகுளத்தில் வைகை அணை சாலையில் ஒரு பார், தேனி சாலையில் 2 பார் என மொத்தம் 3 தனியார் மது பானக்கடைகள் இயங்கி வருகிறது. சுற்று வட்டார பகுதிகளில் மது வாங்க நீண்ட தூரம் செல்ல வேண்டும் என்பதால் குடிமகன்கள் இந்த 3 கடைகளிலேயே மது வாங்கி செல்கின்றனர். இதனால் 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படு வதாக குற்ற ச்சாட்டு எழுந்தது. மேலும் ஒரு குவாட்டர் பாட்டிலுக்கு ரூ.30 முதல் ரூ.40 வரை விலை அதிகம் வைத்து விற்பனை செய்யப்பட்டது.

    சில நேரங்களில் மேலும் கூடுதலாக பணம் வசூலிக்க ப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் தனலட்சுமி ெபரியகுளம் பகுதியில் உள்ள 3 தனியார் மது பானக்கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டார். மதுபாட்டில்கள் தரம் மற்றும் அரசு நிர்ணயித்த நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் மது விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தினர். அப்போது பெரியகுளம் வட்டாட்சியர் காதர்ஷரிப், தென்கரை இன்ஸ்பெக்டர் ஜெயச்ச ந்திரன் மற்றும் வருவா ய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • இரவு நேரங்களில் ரோந்து பணிகளில் ஈடுபடாத காரணத்தினால் மணல் திருட்டு சுதந்திரமான முறையில் நடைபெற்று வருகிறது.
    • தற்போது போலீஸ் நிலையத்திற்கு அருகிலேயே நடைபெற தொடங்கியுள்ளது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் வருசநாடு கிராமத்தில் போதிய அளவில் மழை இல்லாத காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது வைகை ஆற்றில் நீர்வரத்து மிக குறைந்த அளவிலேயே காணப்படுகிறது. இதனை பயன்படுத்தி மர்ம நபர்கள் சிலர் வருசநாடு வைகை ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

    வருசநாடு போலீசார் மணல் திருட்டு தொடர்பாக போதிய அளவில் ரோந்து பணிகளில் ஈடுபடுவது இல்லை. குறிப்பாக இரவு நேரங்களில் ரோந்து பணிகளில் ஈடுபடாத காரணத்தினால் மணல் திருட்டு சுதந்திரமான முறையில் நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்க ளுக்கு முன்பு வருசநாடு போலீஸ் நிலையத்தில் இருந்து 100 மீட்டருக்கும் குறைவான தொலைவில் உள்ள தடுப்பணை அருகே ஆற்றில் சிலர் டிராக்டர் மூலம் மணல் திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

    ஆனால் தற்போது வரை மணல் திருட்டில் ஈடுபட்ட வர்களை போலீசாரால் கைது செய்யப்படவில்லை. இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் சாக்கு மூட்டைகளில் மணல் திருடியவர்களை போலீசார் கைது செய்து தீவிர நடவடிக்கைக்கு உட்படுத்தி வருகின்றனர். ஆனால் வருசநாடு போலீசார் மணல் திருட்டு தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பதில்லை.

    எனவே பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் போலீ சார் ரோந்து செல்லாத பகுதிகளில் நடைபெற்று வந்த மணல் திருட்டு தற்போது போலீஸ் நிலைய த்திற்கு அருகிலேயே நடை பெற தொடங்கியுள்ளது. எனவே போலீசார் துணையோடு மணல் கடத்தல் நடைபெறுகிறதா? என பொதுமக்களிடையே கேள்வி எழுந்துள்ளது.

    இந்த நிலை நீடித்தால் மணல் திருட்டு அதிகளவில் நடைபெற்று வருசநாடு பகுதியில் நிலத்தடி நீர்ம ட்டம் குறைந்து கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் விவசாயம் பாதிப்படையும் நிலை உருவாகியுள்ளது. மாவட்ட போலீஸ் அதிகாரி கள் உரிய நடவடிக்கை எடுத்து மணல் திருட்டில் ஈடுபடுபவர்களை கைது செய்ய வேண்டும். மேலும் இரவு நேரங்களில் ஆற்று பகுதியில் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என தெரிவித்தனர்.

    • அரிசி கொம்பனை பிடிக்க வரவழைக்கப்பட்ட 3 கும்கிகளும் கம்பம் வனச்சரக அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
    • கம்பம், சின்னமனூர், சரகங்களைச் சேர்ந்த வனத்துறையினர் மட்டும் அரிசி கொம்பனை கண்காணித்து வருகின்றனர்.

    உத்தமபாளையம்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் சுற்றி வந்த அரிசி கொம்பன் காட்டு யானை கடந்த மாதம் மயக்க ஊசி செலுத்தி கேரள வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு தேக்கடி வனப்பகுதியில் விடப்பட்டது.

    அதன் பின்பு அங்கேயே சுற்றித்திரிந்த அரிசி கொம்பன் கடந்த மாதம் 27-ந் தேதி தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள் அதிரடியாக புகுந்தது. இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    அங்கிருந்து சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் புகுந்த அரிசி கொம்பன் சண்முகா நதி அணைப்பகுதியில் தஞ்சமடைந்தது. கடந்த 5 நாட்களாக அதே பகுதியில் உள்ள அரிசி கொம்பன் யானைக்கு பார்வை குறைபாடு மற்றும் உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது.

    அதற்கு தேவையான உணவை வனத்துறையினர் வைத்து விட்டு வந்து விடுகின்றனர். குறிப்பாக அரிசி, பலாப்பழங்கள் ஆகியவற்றை வைப்பதால் அதனை உண்டு வருகிறது. மேலும் தொடர் சாரல் மழை பெய்து வருவதால் அதற்கு இதமான சூழல் ஏற்பட்டுள்ளது.

    சாந்தமாக இருந்தாலும் மக்கள் நடமாட்டம் இருப்பது தெரிய வந்தால் சத்தம் போட்டவாறே நகர்ந்து வருகிறது. இதனால் அதன் செய்கையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மதுரை மண்டல தலைமை வனப்பாதுகாவலர் பத்மாவதி தலைமையில் நூற்றுக்கும் அதிகமான வனத்துறையினர் தற்காலிக சோதனைச்சாவடி அமைத்து முகாமிட்டுள்ளனர்.

    அரிசி கொம்பனை பிடிக்க வரவழைக்கப்பட்ட 3 கும்கிகளும் கம்பம் வனச்சரக அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. யானையை பிடிக்க வரவழைக்கப்பட்ட தெப்பாக்காடு மற்றும் குரங்கணி பகுதியைச் சேர்ந்த பழங்குடி இன மக்கள் 22 பேரும் கடந்த 3 நாட்களாக ஓவுலாபுரம் வனப்பகுதியில் தங்கியுள்ளனர்.

    அங்குள்ள பெருமாள் கோவிலை அரிசி கொம்பன் சுற்றி வருகிறது. கம்பம், சின்னமனூர், சரகங்களைச் சேர்ந்த வனத்துறையினர் மட்டும் அதனை கண்காணித்து வருகின்றனர்.

    ஏற்கனவே அரிசி கொம்பனுக்கு மயக்க ஊசி செலுத்திய கேரள டாக்டர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. பொதுவாக மரங்கள் மற்றும் பாறைகளின் மேல் நின்று மயக்க ஊசி செலுத்த வேண்டும். ஆனால் அரிசி கொம்பனை அவ்வாறு செய்ய முடியாது. ஏதாவது வாகனங்களின் மீது அமர்ந்து 10 அல்லது 15 அடி தூரத்தில் இருந்து மயக்க ஊசியை செலுத்த வேண்டும். அந்த சமயத்தில் அது எதிர்தாக்குதல் நடத்த வாய்ப்பு உண்டு.

    அப்போது வாகனங்களை பயன்படுத்த வேண்டும். பொதுவாக யானைகளை விரட்ட பட்டாசு கொளுத்தினால் அது மிரண்டு ஓடும். ஆனால் அரிசி கொம்பன் பட்டாசு கொளுத்திய திசையை நோக்கி ஓடி வரும் என்பதால் அது போன்ற செய்கையில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

    இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியில் அதிக நாட்கள் சுற்றி வந்த அரிசி கொம்பன் தற்போது உடல் நலம் குன்றி காணப்படுவதாக அறிந்த செய்தி கேட்டு அப்பகுதி மக்கள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர். இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், அரிசி கொம்பன் பார்ப்பதற்கு மற்ற யானைகளைக் காட்டிலும் பிரம்மிப்பான தோற்றத்தில் இருக்கும். அதற்கு தேவையான இரை கிடைத்து விட்டால் யாரையும் தொந்தரவு செய்யாது. யானைகள் நடமாட்டம் உள்ள வனப்பகுதியில் குடியிருப்புகள் இருப்பதால் அதனை நோக்கி நகர்ந்து வருகிறது.

    பெரும்பாலும் அரிசி கொம்பன் கூரை வேயப்பட்ட வீடுகளையே குறி வைத்து சேதப்படுத்தும். ஏனெனில் அங்குதான் அரிசி இருக்கும் என்பதை அது நன்றாக உணர்ந்துள்ளது. கடந்த மாதம் ஹைவேவிஸ் தொழிலாளர்கள் குடியிருப்பில் 10 நாட்கள் சுற்றி வந்த போதும் யாரையும் எதுவும் செய்யவில்லை.

    ரேசன் கடை ஜன்னலை மட்டும் உணவுக்காக சேதப்படுத்தியது. தற்போது அதன் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் வனத்துறையினர் உரிய சிகிச்சை அளிக்க முன் வர வேண்டும் என்றனர். அரிசி கொம்பன் யானைக்கு மூணாறு பகுதியில் ரசிகர் மன்றம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அங்குள்ள ஜீப் டிரைவர்கள் சார்பில் அரிசி கொம்பன் தேனீர் கடை தொடங்கப்பட்டது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் யானை உள்ளிட்ட வன விலங்குகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.

    • பால் கறக்கச் செல்லும் தொழிலாளர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்து வருசநாடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
    • வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் அதே பகுதுயைச் சேர்ந்த சொக்கர் என்பவரை தேடி வருகின்றனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கண்டமனூர் அருகே உள்ள பொன்னம்மாள்பட்டியைச் சேர்ந்த பெருமாள் மனைவி சமுத்திரக்கனி (வயது 48). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.

    பெருமாள் கடந்த 14 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மகனும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு விபத்தில் இறந்தார். இதனையடுத்து தனது மூத்த மகளை பொன்னம்மாள் பட்டியிலும், 2-வது மகளை வருசநாடு அருகே உள்ள காந்திபுரம் பகுதியிலும் திருமணம் செய்து கொடுத்தார்.

    2-வது மகளை திருமணம் செய்து கொடுத்த காந்திபுரம் பகுதியிலேயே வீடு எடுத்து சமுத்திரக்கனி தங்கி இருந்தார். பெட்டிக்கடை வைத்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார். இன்று அதிகாலை அவரது வீட்டு முன்பு சமுத்திரக்கனி ரத்தக்காயங்களுடன் கிடந்துள்ளார்.

    அந்த பகுதிக்கு பால் கறக்கச் செல்லும் தொழிலாளர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்து வருசநாடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்த போது கை, கால், மார்பு என பல இடங்களில் அரிவாளால் வெட்டி கொடூரமான நிலையில் சமுத்திரக்கனி கிடந்தார்.

    அவரை சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் அதே பகுதுயைச் சேர்ந்த சொக்கர் என்பவரை தேடி வருகின்றனர். கள்ளக்காதல் பிரச்சினையில் இந்தக் கொலை நடந்ததா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இசம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
    • இதுகுறித்து க.விலக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே பிராதுகாரன்பட்டியை சேர்ந்தவர் சிவா (31). இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். நேற்று தனது தோட்டத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து க.விலக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    வைகை அணை அருகே ரெங்கசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயபாண்டி (44). டிரைவர் வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் அவரது மனைவி பிரிந்து சென்றார். இந்த நிலையில் வீட்டில் தவறி விழுந்த அவர் மயக்கமடைந்தார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வைகை அணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • அரிசி கொம்பன் உணவு சாப்பிடும் போது மயக்க ஊசி செலுத்தி பிடிக்க திட்டமிட்டு இருந்தனர்.
    • யானை முகாமிட்டுள்ள பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அதனை பிடிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

    உத்தமபாளையம்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள சின்னக்கானல், சாந்தம்பாறை பகுதியில் சுற்றித் திரிந்து 11 உயிர்களை பலி வாங்கிய அரிசி கொம்பன் யானையை கேரள வனத்துறையினர் கடந்த மாதம் பிடித்து தேக்கடி வனப்பகுதியில் விட்டனர்.

    அங்கிருந்து வெளியேறிய அரிசி கொம்பன் மேகமலை வனப்பகுதியில் சுற்றித் திரிந்தது. கடந்த 27-ந் தேதி கம்பம் நகருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்திய அரிசி கொம்பன் அதன் பிறகு சுருளிப்பட்டி வழியாக கூத்தநாச்சியம்மன் கோவில் பகுதிக்கு வந்தது.

    நாராயணத்தேவன் பட்டி, காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தோட்டங்களில் இருந்த பயிர்களை சேதப்படுத்தி அங்கிருந்த வேலிகளை சேதப்படுத்தியதில் அதன் துதிக்கையில் காயம் ஏற்பட்டது.

    மேலும் தற்போது வலது கண்ணில் பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. அதற்கு விரும்பிய உணவு கிடைக்கச் செய்யும் வகையில் வனத்துறையினர் அது சுற்றித் திரியும் இடங்களில் பலாப்பழம், அரிசி, கரும்பு ஆகியவற்றை வைத்து வருகின்றனர்.

    தற்போது அது முகாமிட்டுள்ள இடம் வாழை, தென்னை, கொய்யா, கரும்பு, திராட்சை தோட்டங்கள் சூழ்ந்த பகுதியாகும். இந்த வாசனை யானைகளுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அரிசி கொம்பன் கடந்த 4 நாட்களாக அங்கேயே உள்ளது.

    யானையை பிடிக்க ஊட்டி தெப்பக்காட்டில் இருந்து பயிற்சி பெற்ற 20க்கும் மேற்பட்டோர் கம்பம் வந்துள்ளனர். அரிசி கொம்பன் உணவு சாப்பிடும் போது மயக்க ஊசி செலுத்தி பிடிக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் வனத்துறையினருக்கு சவால் விடும் வகையில் சிறிது நேரம் உணவு சாப்பிட்டு விட்டு அது மின்னல் வேகத்தில் மறைந்து விடுகிறது.

    சண்முகா நதி அணையை ஒட்டி அமைந்துள்ள ஒரு தொழிலதிபரின் வாழைத் தோட்டத்தில் புகுந்து 50க்கும் மேற்பட்ட செவ்வாழைத்தார்களை சாப்பிட்டது. பின்னர் சின்ன ஓவுலாபுரம் மலைப்பகுதியில் உள்ள பெருமாள் கோவில் அருகே நின்றது. இன்று காலை வரை அதே இடத்தில் இருப்பதால் யானையின் நகர்வினை கம்பம் வனச்சரக அலுவலகத்தில் உள்ள ரேடியோ காலர் ரிசவர் மூலம் உறுதி செய்து வருகின்றனர். கம்பம் வனச்சரக அலுவலகத்தில் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு சென்னை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அலுவலகம், மதுரை மண்டல தலைமை வனப்பாதுகாவலர் அலுவலகங்களுடன் இணைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

    யானை முகாமிட்டுள்ள பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அதனை பிடிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. யானை ஒரே இடத்தில் இருப்பதால் சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, சுருளி அருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தோட்ட தொழிலாளர்களையும் வேலைக்கு செல்ல வேண்டாம் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

    தேனி மாவட்டம் அரசரடி, சோலைத்தேவன்பட்டி, முந்தல் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்கள் காட்டு யானையைப்பற்றி நன்கு அறிந்தவர்கள். இவர்கள் யானையின் போக்கு மற்றும் நடமாட்டத்தை அறிந்து அதனை விரட்டும் தன்மை கொண்டவர்கள். மேலும் ஓரிரு நாட்களில் யானையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வல்லமை படைத்தவர்கள். அது போன்ற பழங்குடி இன மக்கள் மற்றும் முதுமலைப்பகுதியில் இருந்து வரழைக்கப்பட்ட மக்களை யானை முகாமிட்டுள்ள பகுதிக்கு வரவழைத்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    குறிப்பிட்ட இடத்துக்கு வந்தவுடன் மயக்க ஊசி செலுத்தி வனப்பகுதிக்குள் விரட்டவும் மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். இயற்கை காரணிகள் பாதகமாக இருப்பதால் மயக்க ஊசி செலுத்தும் முயற்சி தொடர்ந்து தோல்வியடைந்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • முல்லைபெரியாறு அணை தேனி, மதுரை மாவட்ட குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
    • 2-ம் கட்டமாக மற்ற 2 இடங்களில் கருவி பொருத்துவதற்கு மீண்டும் விஞ்ஞானி விஜயராகவன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டு பொருத்தும் பணி நடைபெற்றது.

    கூடலூர்:

    கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் சுமார் 14707 ஏக்கர் விவசாய நிலங்களில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் தேனி, மதுரை மாவட்ட குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. 152 அடி உயரம் கொண்ட முல்லை பெரியாறு அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது.

    இதன் உறுதிதன்மை குறித்து பலமுறை நிருபிக்கப்பட்ட பின்னரும் கேரள அரசு நிலநடுக்க ஆபத்து இருப்பதாக புகார் கூறி வந்தது. இதனை தொடர்ந்து அணையை ஆய்வு செய்ய மத்திய கண்காணிப்பு குழுவினர் வந்தனர். அப்போது இதுகுறித்து அவர்களிடம் கேரள அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அணைப்பகுதியில் நில அதிர்வு மானிகள் பொருத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த பிப்ரவரி 23-ந்தேதி தேசிய புவியியல் ஆய்வு மைய முதுநிலை முதன்மை விஞ்ஞானி விஜயராகவன் தலைமையில் முல்லைபெரியாறு அணை மேல்பகுதியில் நிலஅதிர்வு கணக்கிடும் கருவி பொருத்தப்பட்டது.

    இதில் பதிவாகும் அதிர்வலைகள் செயற்கைகோள் மூலமாக ஐதராபாத்தில் உள்ள தேசிய புவியியல் ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து வரைபடமாக கிடைக்கிறது. இந்த நிலையில் 2-ம் கட்டமாக மற்ற 2 இடங்களில் கருவி பொருத்துவதற்கு மீண்டும் விஞ்ஞானி விஜயராகவன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டு பொருத்தும் பணி நடைபெற்றது.

    அப்போது பெரியாறு அணை செயற்பொறியாளர் சாம்இர்வின், உதவிசெயற்பொறியாளர் குமார், உதவி பொறியாளர்கள் ராஜகோபால், நவீன்குமார், முரளிதரன் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக அதிகாரிகள் தேக்கடியில் இருந்து தமிழக பொதுப்பணித்துறை கண்ணகி படகில் அணைக்கு சென்றனர். முல்லை பெரியாறு அணையில் நிலஅதிர்வு கருவிகள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் நிலநடுக்க ஆபத்து குறைவாகவே உள்ளது. எனவே அணை பாதுகாப்பாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    விஞ்ஞானி விஜயராகவன் தலைமையில் முல்லைபெரியாறு அணை மேல்பகுதியில் நிலஅதிர்வு கணக்கிடும் கருவி பொருத்தப்பட்டது.

    • தேனி மாவட்டம் கம்பம் ரிஷி யோகா அறக்கட்டளையின் சார்பில் பங்கேற்ற மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
    • மேலும் கடந்த முறை மலேசியாவில் நடைபெற்ற யோகா போட்டியிலும் வெற்றி பெற்று சாதனை படைத்தவர்கள். எனவே அவர்களுக்கு சர்வதேச போட்டி என்பது புதிது அல்ல இருப்பினும் தீவிர பயிற்சி அளித்து வருகின்றோம் என்றார்.

    கம்பம்:

    இலங்கையில் உள்ள கொழும்பு நகரில் வருகின்ற ஜூன் மாதம் 25-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை சர்வதேச யோகா போட்டிகள் நடைபெற உள்ளது. இதற்கான மாணவர்களை தேர்வு செய்யும் தகுதி போட்டிகள் பழனியில் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில யோகாசன சங்கத் தலைவர் யோகி ராமலிங்கம் பங்கேற்று மாணவ- மாணவிகளை தேர்வு செய்தார்.

    பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவ -மாணவிகள் பங்கேற்றனர். இதில் தேனி மாவட்டம் கம்பம் ரிஷி யோகா அறக்கட்டளையின் சார்பில் பங்கேற்ற மாண வர்கள் தேர்வு செய்ய ப்பட்டனர். அவர்கள் தீவிர யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். யோகா ஆசிரியர்கள் துரை ராஜேந்திரன் மற்றும் ரவி ராம் ஆகியோர் பயிற்சி அளித்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட யோகா சங்க தலைவர் துரை ராஜேந்திரன் கூறியதாவது, சர்வதேச யோகா போட்டிகள் கொழும்பில் நடைபெறுகின்றது.

    இதில் பங்கேற்கும் 14 மாணவ-மாணவிகளுக்கு தீவிர பயிற்சி அளித்து வருகின்றோம். அந்த மாணவர்கள் ஏற்கனவே பலமுறை மாநில மற்றும் தேசிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள். மேலும் கடந்த முறை மலேசியாவில் நடைபெற்ற யோகா போட்டியிலும் வெற்றி பெற்று சாதனை படைத்தவர்கள். எனவே அவர்களுக்கு சர்வதேச போட்டி என்பது புதிது அல்ல இருப்பினும் தீவிர பயிற்சி அளித்து வருகின்றோம் என்றார்.

    ×