என் மலர்
தேனி
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44.30 அடியாக உள்ளது.
- பேபி அணை, மெயின் அணை, ஷட்டர்கள் கேலரி பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டது.
கூடலூர்:
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து அணையின் நீர்மட்டம் உயரும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் போதிய அளவு மழைப்பொழிவு இல்லாததால் அணையின் நீர்மட்டம் உயராமலேயே உள்ளது. நாற்றங்கால் அமைத்து விவசாய பணிகளை தொடங்கியுள்ள விவசாயிகள் மழை இல்லாததால் கவலையில் உள்ளனர்.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 117.90 அடியாக உள்ளது. அணைக்கு 67 கன அடி நீர் வருகிறது. பாசனம் மற்றும் குடிநீருக்காக 250 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 51.91 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44.30 அடியாக உள்ளது. 29 கன அடி நீர் வருகிறது. 10 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 85.73 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
பருவமழை தொடங்கியதையடுத்து முல்லைப்பெரியாறு அணையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மதுரை நீர் வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் மலர்விழி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
பேபி அணை, மெயின் அணை, ஷட்டர்கள் கேலரி பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது பெரியாறு அணை செயற்பொறியாளர் ஷாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் ராஜகோபால் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- தேனி மாவட்டத்தில் உயர் விகித பிறப்பு 36 சதவீதமாக அதிகரித்துள்ளது.
- அரசு ஆஸ்பத்திரிகளில் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை தினந்தோறும் மேற்கொள்ளப்படுகிறது.
தேனி:
இந்தியாவில் மக்கள் தொகை உலகிலேயே முதலிடம் பிடித்து சீனாவை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.
குடும்ப நலத்துறை அதிகாரிகள் 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களை ஆய்வு செய்து அவர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்து வருகின்றனர். ஆனால் கொரோனா காலகட்டத்தில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.
அதன் விளைவாக ஒருபெண்ணுக்கு 3 மற்றும் அதற்கு மேல் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உயர் விகித பிறப்பு எனப்படும் இதனை கண்டறிந்து 2 குழந்தைகளுக்கு மேல் மகப்பேறு அடையும் பெண்களுக்கு குடும்ப நல அறுவை சிகிச்சை செய்ய பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட குடும்பநலத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், தேனி மாவட்டத்தில் உயர் விகித பிறப்பு 36 சதவீதமாக அதிகரித்துள்ளது. தமிழகத்திேலயே இது முதலிடம் ஆகும். இதனை குறைக்க குடும்ப நலத்துறை இலக்கு நிர்ணயித்து லேப்ராஸ்கோப்பி குடும்ப நல அறுவை சிகிச்சை நடத்தி வருகிறோம். கம்பம், பெரியகுளம், அரசு ஆஸ்பத்திரிகளில் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை தினந்தோறும் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த முறையில் அறுவை சிகிச்சை செய்தால் ஆஸ்பத்திரியில் தங்காமல் ஒரே நாளில் வீட்டுக்கு சென்று விடலாம். தொற்று, வலி இருக்காது என்றார். குறிப்பாக மாவட்டத்தில் மலை கிராமங்களில் உள்ள மக்களிடம் அதிக குழந்தை பேறினால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி குடும்ப கட்டுப்பாடு செய்வதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
- நீர் நிலைகளுக்கு வரும் யானைகள், மான்கள், காட்டெருமை கூட்டங்கள் மற்றும் பல்வேறு வகையான பறவை இனங்களையும் காணலாம்.
- யானைகள் கூட்டம் கூட்டமாக வந்த காட்சியை பார்த்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி யடைந்தனர்.
கூடலூர்:
சர்வதேச சுற்றுலா தலமான கேரள மாநிலம் தேக்கடிக்கு இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர்.
தேக்கடியில் யானை சவாரி, டைகர் வியூ, மூங்கில் படகு சவாரி என பல பொழுது போக்கு அம்ச ங்கள் உள்ளன. படகு சவாரியின் போது நீர் நிலைகளுக்கு வரும் யானைகள், மான்கள், காட்டெருமை கூட்டங்கள் மற்றும் பல்வேறு வகையான பறவை இனங்களையும் காணலாம்.
இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் விருப்பத்தில் படகு சவாரி முதலிடம் வகிக்கிறது. இங்கு படகு சவாரிக்கு டிக்கெட் கட்டணம் ரூ.385. நுழைவு கட்டணம் ரூ.70 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போது பெரியாறு அணையின் நீர் மட்டம் 118.25 அடியாக குறைந்துள்ளதால் தேக்கடி ஏரியில் தண்ணீர் குறைந்து காணப்படுகிறது. இதனால் வனப்பகுதியில் இருந்து யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் தண்ணீர் குடிக்க ஏரியின் கரைப்பகுதிக்கு வருகின்றன.
இந்நிலையில் நேற்று தேக்கடி ஏரி படகுத்துறை பகுதியில் குட்டியுடன் கூடிய யானைக் கூட்டம் தண்ணீர் குடிக்க ஏரிக்கரை பகுதிக்கு வந்தது. யானைகள் கூட்டம் கூட்டமாக வந்த காட்சியை பார்த்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி யடைந்தனர்.
மேலும் இது போன்ற வன விலங்குகள் மற்றும் பறவைக் கூட்டங்களை படகு சவாரியின் போது காண்பது கண்களுக்கு விருந்தாக அமைந்தது என அவர்கள் தெரிவித்தனர்.
- தென்னை நாரினால் செய்யப்பட்ட கயிறு வலைகளை கொண்டு மூடப்பட்டதன் மூலம் ஏற்படும் நன்மைகள் மற்றும் அதன் செயல்பாடுகளை கலெக்டர் ஷஜீவனா நேரில் சென்று பார்வையிட்டார்.
- கரையோர மண்ணரிப்பு கட்டுப்பாடு ஆகியவற்றில் பயன்படுத்த ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது .
தேவதானப்பட்டி:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மஞ்சளாறு அணை கரை பகுதியில் மண்ணரிப்பை தடுப்பதற்காக சோதனை முயற்சியாக இந்தியாவி லேயே முதன் முறையாக நமது சூழலுக்கு உகந்த தென்னை நாரினால் செய்யப்பட்ட கயிறு வலைகளை கொண்டு மூடப்பட்டதன் மூலம் ஏற்படும் நன்மைகள் மற்றும் அதன் செயல்பாடுகளை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா ஊரக வளர்ச்சி த்துறை அலுவலர்களுடன் நேரில் சென்று பார்வை யிட்டார்.
மஞ்சளாறு அணை கரை பகுதியில் மண்ணரிப்பை தடுப்பதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக சோதனை முயற்சியாக, கரை பகுதி முழுவதும் தென்னை நாரினால் செய்யப்பட்ட கயிறு வலை களை கொண்டு மூடப்ப ட்டது. இத்திட்டத்தின் மூலம் 6 மாதங்களுக்கு பின்னரும் எந்தவித மண்ணரிப்புமின்றி சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக உள்ளது.
வெற்றிகரமாக செய ல்பட்ட இத்திட்டத்தை ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளங்களில் மண்ணரிப்பை தடுப்பதற்காக சோதனை முறையில் பயன்படுத்து வதற்காக அனைத்து வட்டார வளர்ச்சி அலுவல ர்களுக்கும், செயற் பொறி யாளர்களுக்கும், பொறி யாளர்களுக்கும் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு விரிவாக பயிற்சி அளிக்க ப்பட்டது.
தென்னை நாரினால் செய்யப்பட்ட கயிறு வலை போடப்பட்டதனால் ஏற்பட்ட நன்மைகள் குறித்தும், இறுக்கமான கயிறு வலை கட்டமைப்பு மண்ணை உறுதிப்படுத்து கிறது மற்றும் மண்ணரிப்பு கட்டுப்பாட்டுக்கு பயனுள்ள தாக உள்ளது.இதனை சாலை கட்டுமானம் மற்றும் கரையோர மண்ணரிப்பு கட்டுப்பாடு ஆகியவற்றில் பயன்படுத்த ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது .
தென்னை நாரினால் செய்யப்பட்ட இந்த கயிறு வலைகள் 400 ஜி.எஸ்.எம்., 700 ஜி.எஸ்.எம்., 900 ஜி.எஸ்.எம்., என 3 வகைகளில் கிடைக்கிறது.
இப்பயிற்சியைத் தொடர்ந்து அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு குளத்தை தேர்வு செய்து சோதனை முயற்சியாக இந்த கயிறு வலைகளை பயன்ப டுத்தி அதன் செயல்பாடு களை ஆராய வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவு ரைகளை வழங்கினார்.
இந்நிகழ்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் மதுமதி, செயற்பொறியாளர் முருகன், உதவி பொறி யாளர்கள் ரவிச்சந்திரன், ராஜேஷ்வரன், ஜோதி, வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஆய்வில் ஏலக்காய் தரம் பிரிக்கும் மையங்கள் உரிய உரிமம் அனுமதி பெறாமல் செயல்பட்டு வருவது தெரிய வந்தது
- ஆய்வு பரிசோதனைக்காக ஏலக்காய் மாதிரிகளையும் எடுத்துச் சென்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடியில் சுமார் 150 க்கும் மேற்பட்ட ஏலக்காய் தரம் பிரிக்கும் மையங்கள் இயங்கி வருகின்றன. தென்னிந்தியாவிலேயே ஏலக்காய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கும் பகுதியாக போடி திகழ்ந்து வருகிறது.
சுமார் 20,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஏலக்காய் தொழிலை நம்பி உள்ளனர். போடியை சுற்றியுள்ள கேரள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் விளையும் பணப் பயிரான ஏலக்காய்க்கு உலகம் முழுவதும் ஏற்றுமதி முக்கியத்துவம் உள்ளது. முதல் தர ஏலக்காய் கிலோ ரூ.1300 வரை விற்பனையாகும் நிலையில் தற்போது இங்கு இயங்கி வரும் ஏலக்காய் தரம் பிரிப்பு மையங்களில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் ஏலக்காய் தரம் பிரிக்கும் மையங்கள் உரிய உரிமம் அனுமதி பெறாமல் செயல்பட்டு வருவது தெரிய வந்தது. மேலும் சில ஏலக்காய் தரம் பிரிக்கும் மையங்களில் உரிய முறையில் உரிமம் மற்றும் அனுமதி பெறாமலும் காய்களின் தரத்தை உயர்த்தி காட்டுவதற்காக செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தப்படுவது தெரிய வந்தது.
கண்ணாடி டம்ளரில் போடப்பட்ட ஏலக்காயில் உள்ள செயற்கை நிறமூட்டிகள் கரைந்து நிறம் மாறிக்காட்சி அளித்தது கண்டு அதிர்ச்சி அடைந்த உணவுத்துறை அதிகாரிகள் உடனடியாக செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் காய்களின் மாதிரிகளை ஆய்வுக்குகொண்டு சென்றனர்.
சுமார் 3 டன் ஏலக்காய் நிறமூட்டப்பட்டதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட கடைகளிலேயே தனியாக ஒரு அறையில் வைத்து பூட்டி சாவியை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். இந்நிலையில் இன்று 2வது நாளாக போடியில் உள்ள பல்வேறு ஏலக்காய் தரம் பிரிக்கும் மையம் மற்றும் ஏற்றுமதி கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சுமார் 5 கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில் போடி அரண்மனை பின்புறம் உள்ள கோட்டை கருப்பசாமி கோவில் அருகில் உள்ள ஏலக்காய் தரம் பிரிக்கும் மையம், சுப்புராஜ் நகர் 4வது தெருவில் உள்ள தரம் பிரிக்கும் மையம் மற்றும் போடி கஸ்பா அருகில் உள்ள ஏலக்காய் தரம் பிரிக்கும் மையமாகிய 3 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் முதல் தர ஏலக்காயில் செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் சுமார் 1.5 டன் எடையுள்ள ஏலக்காய் மூட்டைகள் கைப்பற்றப்பட்டு அவரவர்கள் தரம் பிரிக்கும்மையத்திலேயே ஒரு அறையில் பூட்டி வைத்து சென்றனர்.
ஆய்வு பரிசோதனைக்காக ஏலக்காய் மாதிரிகளையும் எடுத்துச் சென்றனர். இந்த ஏலக்காய் மாதிரிகள் ஆய்விற்கு அனுப்பப்பட்டு விரைவில் முடிவுகள் தெரிந்த பின்னரே கைப்பற்றப்பட்ட ஏலக்காய் மாதிரிகளில் செயற்கை நிறமூட்டிகள் பயன் படுத்தப்பட்டுள்ளதா? என தெரிய வரும். அவ்வாறு செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தப்பட்டு இருந்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தேனி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ராகவன் தலைமையில் இன்று காலை முதல் தொடர்ந்து பல்வேறு கடைகளில் ஆய்வு நடைபெற்று வருகிறது.
- அமாவாசை உள்ளிட்ட நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர்.
- கோடை விடுமுறை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் சுருளி அருவியில் குளிக்க ஏராளமானோர் திரண்டனர்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே சுருளிபட்டி பகுதியில் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
மேலும் அமாவாசை உள்ளிட்ட நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். சபரிமலை சீசனின்போது அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இங்கு புனிதநீராடி செல்கின்றனர். கடந்த மாதம் சுற்றுலா வந்த சென்னை மாணவி மரக்கிளை முறிந்து விழுந்ததில் பலியானார். இதனை தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பின்னர் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. கடந்த 27ம் தேதி கேரள வனப்பகுதியில் இருந்து தமிழகத்திற்குள் அரிசிகொம்பன் யானை புகுந்தது. கம்பம் நகரில் அட்டகாசம் செய்து பின்னர் சுருளிபட்டி பகுதியில் முகாமிட்டது.
இதனால் சுற்றுலா பயணிகள், விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள் அங்கு செல்ல வனத்துறையினர் தடைவிதித்தனர். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட அரிசிக்கொம்பன் யானை கன்னியாகுமரி மாவட்டம் முத்துக்குழி வனப்பகுதியில் விடப்பட்டது. தற்போது யானை அச்சம் முழுவதும் விலகியுள்ளதால் சுருளி அருவி மற்றும் மேகமலைக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக கம்பம் கிழக்கு வனச்சரகர் பிச்சைமணி தெரிவித்துள்ளார். கோடை விடுமுறை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் சுருளி அருவியில் குளிக்க ஏராளமானோர் திரண்டனர்.
- சென்னையில் இருந்து போடி வரை வாரத்தில் மூன்று நாட்கள் ரெயில் போக்குவரத்து தொடங்கப்படும் என்றும் ரெயில்வே துறையால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
- போடி மற்றும் தேனி மாவட்ட மக்கள் மற்றும் வியாபாரிகள் மாணவ-மாணவியர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இடையே எதிர்பார்ப்பு அதிகரித்தது.
மேலசொக்கநாதபுரம்:
தேனியில் முதன் முதலாக 1909ஆம் ஆண்டு ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. 1942 ஆம் ஆண்டு வரை இயங்கி வந்த ரெயில் சேவை 2வது உலகப்போர் காரணமாக ரெயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக தண்டவாளங்கள் அகற்றப்பட்டது.
பின்னர் 1954 ஆம் ஆண்டு மீட்டர் கேஜ் பாதையாக மாற்றப்பட்டு கடந்த 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை பயணிகள் மற்றும் பொருள்கள் ஏற்றிச்செல்லும் பயணிகள் ரெயில் போக்குவரத்து நடைபெற்று வந்தது.
போடி மற்றும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மற்றும் எல்லைப் பகுதிகளில் விளையும் ஏலக்காய், இலவம்பஞ்சு, மிளகு, காப்பி, மாங்காய் போன்றவைகள் போடியில் இருந்து மதுரை வரை ரெயிலில் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மீட்டர்கேஜ் இருப்பு பாதை ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு அகல ரெயில் இருப்புப் பாதைக்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு ரெயில் போக்குவரத்து மீண்டும் நிறுத்தப்பட்டது.
சுமார் ரூ.474 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மதுரையில் இருந்து போடி வரை அகல ரெயில் பாதை பணிகள் முற்றிலும் நிறைவு பெற்று பல்வேறு கட்ட ஆய்வுப் பணிகள், மற்றும் ரெயில் என்ஜின், பயணியர் பெட்டியுடன் ரெயில் இன்ஜின் சோதனை ஓட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு போக்குவரத்து தொடங்குவதற்கான அனுமதியும் அதிகாரிகளால் வழங்கப்பட்டது.
தற்போது மதுரையில் இருந்து தேனி வரை வந்து செல்லும் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்து போடி வரை நீட்டிக்கப்படுவதற்கு பலமுறை திட்டமிடப்பட்டு எதிர்பாராத சூழல் காரணமாக ரெயில் போக்குவரத்து தொடங்கும் திட்டம் தள்ளி வைக்கப்பட்டது.
மேலும் சென்னையில் இருந்து போடி வரை வாரத்தில் மூன்று நாட்கள் ரெயில் போக்குவரத்து தொடங்கப்படும் என்றும் ரெயில்வே துறையால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதனால் போடி மற்றும் தேனி மாவட்ட மக்கள் மற்றும் வியாபாரிகள் மாணவ-மாணவியர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இடையே எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இந்நிலையில் தற்போது வருகின்ற 15-ந் தேதி முதல் மதுரையில் இருந்து போடி வரையிலும், போடி-மதுரை வரையிலும் முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் தினசரி ரெயில்கள் இயக்கப்படுவதற்கான தொடக்க விழா நடைபெறும் என்று தென்னக ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டது.
15-ந் தேதி இரவு இந்த சேவையை போடி ரெயில் நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் முருகன் தொடங்கி வைக்கிறார். 16-ந் தேதி வெள்ளிக்கிழமை முதல் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து போடி வரை திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய 3 நாட்களும், போடி இருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் வரை செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமை ஆகிய 3 தினங்களில் மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம், காட்பாடி வழியாக வந்து செல்லும் சிறப்பு பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து ரெயில்கள் இயக்கப்படும் என்று தென்னக ரெயில்வே துறை அறிவித்து உள்ளது.
மத்திய இணை அமைச்சர் முருகன் போடியில் இந்த ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைக்க உள்ளார். 12 ஆண்டுகளுக்குப் பின்பு போடிக்கு மதுரை மற்றும் சென்னையில் இருந்து ரயில் போக்குவரத்து தொடங்குவதால் பொதுமக்கள், வர்த்தகர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் ரெயில் போக்குவரத்து சென்னை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் போடியில் இருந்து ஏற்றுமதியாகும் ஏலக்காய், மாம்பழம், காப்பி, மிளகு, இலவம்பஞ்சு, போன்றவைகளின் ஏற்றுமதி அதிகரித்து ஏற்றுமதி செலவு குறையும் என்றும் சென்னையில் இருந்து வந்து செல்லும் ரெயில்கள் கரூர் சேலம் ஈரோடு வழியாக வருவதால் ஆடை வகைகள் மஞ்சள் மற்றும் உற்பத்தி பொருள்கள் இறக்குமதி அதிகரித்து இறக்குமதி செலவு குறையும் என்று தெரிவித்துள்ளனர்.
- கம்பம் வனத்துறை அலுவலகத்தில் இருந்து தினந்தோறும் யானைகளுக்கான உணவு வழங்கும் பணி நடைபெற்றது.
- 3 யானைகளுக்கும் தினமும் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள் கடந்த மாதம் 27-ந்தேதி புகுந்த அரிசி கொம்பனை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டும் முடியாததால் ஊட்டி முதுமலை வனப்பகுதியில் இருந்து உதயன், சுயம்பு, அரிசி ராஜா ஆகிய 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. இந்த யானைகள் கடந்த 1 வாரமாக கம்பம் வனச்சரக அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
நேற்று அதிகாலை அரிசி கொம்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தியதும் அதனை லாரியில் ஏற்ற கும்கிகள் பயன்படுத்தப்பட்டன. தற்போது அரிசி கொம்பன் யானை பிடிபட்டதால் 3 கும்கிகளை சொந்த ஊருக்கு அனுப்ப வனத்துறையினர் தயாராகி வருகின்றனர்.
உதயன் என்ற கும்கி நேற்று இரவு முதுமலை வனக்காப்பகத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இன்று அரிசி ராஜா மற்றும் சுயம்பு ஆகிய 2 கும்கிகள் தெப்பக்காடு செல்கின்றன.
இதுகுறித்து வனத்துறையினர் தெரிவிக்கையில், அரிசி கொம்பனை பிடிக்க வனத்துறையினர், மருத்துவக்குழுவினர் தீவிர முயற்சி எடுத்து வந்த நிலையில் அதனை அனுப்ப கும்கிகள் பெரிதும் உதவியாக இருந்தன.
இந்த 3 யானைகளுக்கும் தினமும் காலையில் சீமைப்புல் உணவாக வழங்கப்படும். அதன் பின் கேப்பை, அரிசி கலந்த மாவு, கவளமாக வழங்கப்படும். அதன் பின் கரும்பு, வாழைப்பழம், பலாப்பழம் போன்றவை வழங்கப்படும்.
மாலையில் சத்துமாவு கொண்ட கவளம் வழங்கப்பட்டது. கம்பம் வனத்துறை அலுவலகத்தில் இருந்து தினந்தோறும் யானைகளுக்கான உணவு வழங்கும் பணி நடைபெற்றது. 3 யானைகளுக்கும் தினமும் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. அரிசி கொம்பன் ஆபரேசன் நிறைவடைந்ததால் ஏற்கனவே ஒரு கும்கி சென்று விட்ட நிலையில் மற்ற 2 கும்கிகளும் இன்று செல்ல உள்ளன என்றனர்.
இதனிடையே அரிசி கொம்பன் யானை சேதப்படுத்திய விளைநிலங்களின் மதிப்பு குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகள் குழு நியமிக்கப்பட உள்ளது. முன்னாள் எம்.பி. தங்கதமிழ்செல்வனுக்கு சொந்தமான வாழைத்தோட்டம், சண்முகா நதி அணையை ஒட்டியுள்ள தனியாருக்கு சொந்தமான வாழைத் தோட்டம், கரும்பு உள்ளிட்ட பயிர்களை அரிசி கொம்பன் சேதப்படுத்தியது. கடந்த 1 வாரமாக வனத்துறை அறிவுறுத்தலின்படி வேலைக்கு செல்லாமல் இருந்த தோட்டத்தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு வரத் தொடங்கியுள்ளனர். அவர்கள் சேதமடைந்த பயிர்களை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவினர் இன்று அல்லது நாளை சேத மதிப்பீட்டை ஆய்வு செய்து அதன் அறிக்கையை மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நாடு முழுவதும் 7 கோடி டன் கொள்ளளவில் சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட உள்ளன. இதற்காக ரூ.1 லட்சம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
- முதல் கட்டமாக நாடு முழுவதும் 10 மாவட்டங்களில் இத்திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது.
மேலசொக்கநாதபுரம்:
இந்திய உணவுக்கழகம் விவசாயிகளிடமிருந்து உணவு தானியங்களை கொள்முதல் செய்கிறது. தமிழகத்தில் நுகர்பொருள் வாணிப கழகம் நெல்கொள்முதல் செய்கிறது. பல்வேறு இடங்களில் போதிய கிடங்கு வசதி இல்லாததால் தானியங்கள் திறந்த வெளியில் வைக்கப்படுகின்றன.
இதனால் மழையில் நனைந்து வீணாகி வருவதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. நாடு முழுவதும் 33 கோடி டன் உணவு தானியங்களை உற்பத்தி செய்து வரும் நிலையில் அதனை சேமித்து வைக்க போதிய கிடங்கு வசதி இல்லை.
இதனால் தானியங்கள் வீணாகி வருகின்றன. இதனை தடுக்க மத்திய கூட்டுறவு அமைச்சகம் சார்பில் நாடு முழுவதும் 7 கோடி டன் கொள்ளளவில் சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட உள்ளன. இதற்காக ரூ.1 லட்சம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
வேளாண் அமைச்சகம் மற்றும் உணவு, பொது வினியோக அமைச்சகம் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து கூட்டுறவு அமைச்சகம் சார்பில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
முதல் கட்டமாக நாடு முழுவதும் 10 மாவட்டங்களில் இத்திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது. அதில் ஒன்றாக தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டி தொடக்க கூட்டுறவு கடன் சங்கம் வாயிலாக 1000 டன் கொள்ளளவில் சேமிப்பு கிடங்கு கட்டப்பட உள்ளது.
இதற்காக 4 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு 1 ஏக்கரில் கிடங்கு கட்டுவதற்கான வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் துணை நிறுவனமான நாப்கான் ஆய்வு செய்துள்ளது. விரிவான அறிக்கை தயாரிக்கும் பணி முடிவடைந்ததும் ரூ.2 கோடி செலவில் சாலைப் போக்குவரத்து உள்பட அனைத்து வசதிகளுடன் கூடிய கிடங்கு கட்டப்படும். இங்கு போடி மற்றும் சில்லமரத்துப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் உணவு தானியங்கள் இருப்பு வைக்கப்படும்.
ஒவ்வொரு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் வாயிலாக கிடங்கு அமைக்கப்படுவதால் நாடு முழுவதும் பரவலாக சேமிப்பு வசதிகள் கிடைக்கும். விவசாயிகள் விளைவிக்கும் தானியங்கள் உள்ளூரிலேயே உடனுக்குடன் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்படும். தானியங்கள் வீணாவது தடுக்கப்படுவதுடன் விவசாயிகளுக்கு போக்கு வரத்து செலவு குறையும்.
மேலும் விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- திடக்கழிவு மேலாண்மையில் சிறப்பாக செயல்படுத்திய ஆண்டி பட்டி பேரூராட்சிக்கும் பசுமை முதன்மையாளர் விருதுகளை வழங்கி கலெக்டர் வழங்கினார்.
- நெகிழிப் பயன்பாட்டினைத் தவிர்த்து, பசுமை முதன்மையாளர் விருதிற்கு விண்ணப்பிக்குமாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
தேனி:
ஒவ்ெவாரு ஆண்டும் ஜூன் 5-ம் நாள் உலக சுற்றுச்சூழல் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இதனை முன்னிட்டு சுற்றுச்சூழலை பாது காப்பதன் அவசியத்தை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த வருடம் சுற்றுப்புறங்களை தூய்மையாகவும், திடக்கழிவு மேலாண்மையில் சிறப்பாக செயல்படுத்திய ஆண்டி பட்டி பேரூராட்சிக்கும், பசுமை போர்வை அதிகரிக்க அதிகளவில் களப்பணி ஆற்றிய சோலைக்குள் கூடல் என்ற தனியார் தொண்டு நிறுவனத்திற்கும் பசுமை முதன்மையாளர் விருதுகளை வழங்கி மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக ரூ.1 லட்சத்துக்கான காசோலையினையும் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.
இது குறித்து பேசிய அவர், நமது அன்றாட வாழ்வில் முடிந்தவரையில் ஒருமுறைப் பயன்படுத்தித் தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும், அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். இனிவரும் காலங்களில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் நெகிழிப் பயன்பாட்டினைத் தவிர்த்து, பசுமை முதன்மை யாளர் விருதிற்கு விண்ண ப்பிக்குமாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
முன்னதாக உலக சுற்றுச்சூழல் தின உறுதி மொழியினை கலெக்டர் தலைமையில் அனைத்துறை அலுவலர்களும் ஏற்று க்கொண்டனர்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்ட வருவாய் அலுவலர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை தொடங்கி வைத்து பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மாற்று பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு விளம்பர எல்.இ.டி.திரையினை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் மேனகா மில்ஸ் நிறுவனத்தின் சார்பில் தப்புக்குண்டு பகுதியில் 515 மரக்கன்றுகள் நடப்பட்டது.
- நான் வெயிலில் சென்று மீன் விற்க வேண்டாம் என்று கருதி எனது மகன் எனக்கு கார் வாங்கி கொடுத்துள்ளார்.
- வேலை பார்ப்பதற்காக மகன் கார் வாங்கி கொடுத்திருக்கும் சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே உள்ள அச்சுந்தன்வயல் பகுதியை சேர்ந்தவர் சிவானந்தம்(வயது60). இவரது மனைவி காளியம்மாள்(55). இவர்களுக்கு சுரேஷ் கண்ணன் என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர்.
சிவானந்தமும், அவரது மனைவியும் ஊரணி மற்றும் கண்மாயில் மீன் பிடித்து விற்பனை செய்து தங்களது பிள்ளைகளை படிக்க வைத்தனர். வறுமை காரணமாக தங்குவதற்கு கூட இடமில்லாமல் தவித்த சிவானந்தம், தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் கீழக்கரையில் ஒருவரது விவசாய நிலத்தில் தங்கியிருந்தார்.
தங்களது கஷ்டத்தை பற்றி கவலைப்படாமல் பிள்ளைகளை நன்கு படிக்க வைத்தனர். இதனால் சிவானந்தத்தின் மகன் சுரேஷ் கண்ணன் மரைன் என்ஜினீயரிங் படித்து முடித்தார். அவர் தற்போது வளைகுடா பகுதியில் உள்ள கப்பல் நிறுவனத்தில் மாதம் ரூ.2 லட்சம் ஊதியத்தில் என்ஜினீயராக பணி புரிந்து வருகிறார்.
அதன்மூலம் தனது சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைத்த சுரேஷ் கண்ணன், வீடு இல்லாமல் தவித்த பெற்றோருக்கு புதிதாக வீடும் கட்டி கொடுத்துள்ளார். மேலும் தனது தாய்-தந்தையை வேலைக்கு செல்ல வேண்டாம் எனவும் கூறியிருக்கிறார். ஆனால் உழைத்து சாப்பிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த சிவானந்தம் மற்றும் அவரது மனைவி தொடர்ந்து மீன் விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.
வயதான காலத்திலும் உழைக்கும் தங்களின் தாய்-தந்தையின் கஷ்டத்தை குறைக்கும் வகையிலும், அவர்கள் எளிதாக மீன் விற்பனை செய்வதற்காகவும் ரூ.25 லட்சம் மதிப்புள்ள காரை சுரேஷ் கண்ணன் வாங்கி கொடுத்துள்ளார். அந்த காரிலேயே தற்போது சிவானந்தம் மீன்களை எடுத்து சென்று வியாபாரம் செய்து வருகிறார்.
மீன் விற்பனை எங்களது குடும்ப தொழில். எனக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் மீன் விற்க செல்லாமல், வீட்டிலேயே இருக்குமாறு எனது மகன் கூறினார். ஆனால் கடைசி வரை தொழிலை விடாமல் உழைக்க வேண்டும் என்பதே எனது எண்ணமாகும்.
நான் வெயிலில் சென்று மீன் விற்க வேண்டாம் என்று கருதி எனது மகன் எனக்கு கார் வாங்கி கொடுத்துள்ளார். அந்த காரிலேயே மீன்களை ஏற்றி கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
வறுமை நிலையிலும் கடினமாக உழைத்து படிக்க வைத்து ஆளாக்கிய தாய்-தந்தையின் வலியை உணர்ந்து, அவர்கள் எளிதாக சென்று வேலை பார்ப்பதற்காக மகன் சொகுசு கார் வாங்கி கொடுத்திருக்கும் சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
- மனைவி கோபித்துக் கொண்டு மதுரையில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டதால் அவர் விஷம் குடித்து மயங்கியவரை தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து தேனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே அல்லிநகரத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது33). இவர் அபிராமி (30) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கார்த்திகேயன் தேனி மாவட்ட கோர்ட்டில் சுகாதார தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
கடன் வாங்கி மது குடித்ததால் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டது. மேலும் சம்பள பணத்தை வீட்டில் கொடுக்காததால் அபிராமி கோபித்துக் கொண்டு மதுரையில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் கார்த்திகேயன் விஷம் குடித்து மயங்கினார். அவரை அக்கம் பக்கத்தினர் தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திகேயன் உயிரிழந்தார். இது குறித்து தேனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கூடலூர் எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்தவர் சமயன் (26). இவர் வேலைக்கு செல்லாமல் ஆதரவின்றி சுற்றி திரிந்து ள்ளார். இந்த நிலையில் காஞ்சிமரத்துறை- வேளங்காடு வனத்துறை சாலையில் உள்ள தோட்ட த்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குமுளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






