என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • தெப்பக்குளம் தூய்மைப்படுத்தப்பட்டது.
    • நாச்சியார், சண்முகராஜா மற்றும் தனி யார் நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை நகரின் மத்தியில் 10 ஏக்கர் பரப்பில் தெப்பக்குளம் உள்ளது. இங்கு பிளாஸ்டிக், குப்பை கள் கொட்டப்பட்டு தண்ணீர் அசுத்தமானது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவியது.

    இந்த நிலையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தெப்பக்கு ளத்தை தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. இதனை நகர்மன்ற தலைவர் துரைஆனந்த் தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையாளர் பாண்டீ ஸ்வரி தலைமையில் ஏராளமானோர் படகில் சென்று தெப்பக்குளத்தில் கிடந்த கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்தினர்.

    இதில் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் கிருஷ்ணன் தலைமையில் வீரர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

    இதில் நகர்மன்ற உறுப்பினர் அயூப்கான், ஜெய காந்தன், காந்தி, ராமதாஸ், வீரகாளை, நாச்சியார், சண்முகராஜா மற்றும் தனி யார் நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • ஒத்தவீடு கிளை செய லாளர்கள் ராஜ், ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதி திருப்புவனம் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட மணலூர் ஊராட்சி பூத் எண். 39, 40-ன் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது. மேற்கு ஒன்றிய செயலாளர் சோனைரவி தலைமை தாங்கினார். மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைச் செயலாளர் வழக்கறிஞர் மணலூர் மணி மாறன் முன்னிலை வகித்தார்.

    மானாமதுரை முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் நாக ராஜன், வருகிற நாடாளு மன்ற தேர்தலில் வெற்றி பெறவும், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர், மகளிர் உறுப்பி னர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி அமைப்பது தொடர் பான ஆலோசனைகளை வழங்கினார்.

    கூட்டத்தில் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் அழகுமலை, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிவா, மணலூர் கிளை செயலாளர்கள் வீர மணி, அழகர், பிரபு, தயாளன், வெங்கட்ரமணி, மண லூர் ஒத்தவீடு கிளை செயலாளர்கள் ராஜ், ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • எலக்ட்ரீசியன் மாயமானார்.
    • இன்ஸ்பெக்டர் கோட்டசாமி வழக்கு ப்பதிவு செய்து வாலிபரை தேடி வருகிறார்.

    சிவகங்கை

    சிவகங்கை அருகே சின்னபெருமாள் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அருண் பாண்டியன், எலக்ட்ரீ சியன். வேலைக்கு சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. பல்வேறு இடங்களில் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதைத்தொடர்ந்து சிவகங்கை டவுன் போலீஸ் நிலையத்தில் அருண் பாண்டியனின் தந்தை அழகர் கொடுத்த புகாரி ன்பேரில் இன்ஸ்பெக்டர் கோட்டசாமி வழக்கு ப்பதிவு செய்து வாலிபரை தேடி வருகிறார்.

    • மினி மராத்தான் போட்டி நடந்தது.
    • வீரர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மாம்பட்டி கிராமத்தில் பிரியாவிடை நயனார், பொன்னாவிடை செல்வி தீர்த்தவாரி மண்டகப்படி திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு மாம்பட்டி கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்களால் மினி மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது.

    இந்த மினி மராத்தான் ஓட்டப்பந்தயம் மாம்பட்டி யில் தொடங்கி ஏரியூர் வரை சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்று வர எல்லை நிர்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது.

    போட்டியினை எஸ்.எஸ்.கோட்டை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் காளீஸ்வரி பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான பெங்களூர் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்ட னர்.

    ராஜபாளையத்தை சேர்ந்த மாரி பிரசாத் முதல் பரிசையும், ரெங்கராஜ் 2-வது பரிசையும், 3-வது பரிசை பெங்களூரு சுரேசும் பெற்றனர். மினி மராத்தான் போட்டியில் பங்கேற்று முதல் 10 இடங் களை பிடித்தவர்களுக்கு பரிசு தொகை, வெற்றி கோப்பை, பாராட்டு சான்றி தழ், பதக்கங்கள் வழங்கி கவுரவப்படுத்தினர். அடுத்து வந்த 10 பேருக்கு ஊக்கத் தொகையாக பரிசு தொகை, சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது. இந்த போட்டியில் மதுரையைச் சேர்ந்த கண்ணன் என்ற 70 வயது முதியவர் கலந்து கொண்டு எல்கையை அடைந்தார். அதோடு பெரம்பலூரை சேர்ந்த ஒரு கையை இழந்த மாற்றுத்திறனாளி கலைச்செல்வன் மற்றும் தனது மகள் ஓடியபோது உற்சாகப்படுத்திய தாய் என பலருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.

    முன்னதாக கிராமத்து சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டி களில் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    • புதிய மின்னணு குடும்ப அட்டை நேரில் வழங்கப்படுகிறது என்று கலெக்டர் கூறினார்.
    • மேற்படி சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டம் பொது விநியோக திட்டத்தில் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் விண்ணப்பிக்கும் விண்ணப்பதா ரர்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் வட்ட வழங்கல் அலுவலர்கள் மூலமாக நேரில் வழங்கப்படுகிறது.

    மேலும் நகல் குடும்ப அட்டைகள் கேட்டு ரூ.45 செலுத்தி இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு அஞ்சல்துறை வாயிலாக அவர்களது முகவரிக்கு நகல் அட்டைகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. மேற்படி சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருமேனி கருப்பர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • செயலாளர் நாகப்பன், பொருளாளர் கருப்பையா ஆகியோர் செய்திருந்தனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள சிராவயல்புதூர் கிராமத்தில் உள்ள திருமேனி கருப்பர் மின்னஞ்செட்டி காளியாத்தாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக மூன்று நாட்கள் 4 கால பூஜைகள் நடந்தது. இதில் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், கோபூஜை, லட்சுமி பூஜை போன்ற பல்வேறு பூஜைகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து பூர்ணாகுதி மற்றும் தீப ஆராதனை நடந்தது. பின்னர் நமசிவாய சிவாச்சாரியார் குழுவினர் தலைமையில் யாகசாலையில் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடாகி விமானத்தில் ஏறி சென்று கும்பத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை மேலச்சுவபுரி, தேனிப்பட்டி, கீழசேவல்பட்டி, ஓ.சிறுவயல், நாச்சியாபுரம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த வைரவன் கோவில் பிள்ளையார்பட்டி வகுப்பு நகரத்தார்கள் மற்றும் விழா குழு நிர்வாகிகள் தலைவர் நாகப்பன், செயலாளர் நாகப்பன், பொருளாளர் கருப்பையா ஆகியோர் செய்திருந்தனர்.

    • சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்டும் இடத்தை ப.சிதம்பரம் ஆய்வு செய்தார்.
    • காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் உடனிருந்தனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை களில் தேவகோட்டை, காரைக்குடி, சிவகங்கை போன்ற மருத்துவமனை களில் மட்டுமே டயாலிசிஸ் பிரிவு சிகிச்சைக்கான தனி பிரிவு உள்ளது.

    ஆனால் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்கள் டயாலிசிஸ் சிகிச்சை முறை செய்து கொள்ள வேண்டிய நோயாளிகள் மதுரை, சிவகங்கை போன்ற நகரங்க ளுக்கு செல்ல வேண்டிய நிலையில் இருந்தனர்.

    எனவே சிங்கம்புணரி பகுதியில் உள்ள டயாலிசிஸ் தேவைப்படும் நோயாளி களுக்காக சிங்கம்புணரி அரசு பொது மருத்துவ மனையில் டயாலிசிஸ் பிரிவு சிகிச்சை கொண்டுவர அரசுக்கு பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டது.

    அதன்அடிப்படையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் மாநிலங்க ளவை எம்.பி.யுமான ப.சிதம்பரம் பொது நிதியின் கீழ் ரூ.80 லட்சம் செலவில் சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனை வளாகத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகை யில் டயாலிசிஸ் சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதற்கான இடம் தேர்வு செய்ய ஆய்வு மேற்கொள்ள மாநிலங்கள் அவை உறுப்பினர் ப.சிதம்பரம் தலைமையில் அரசு மருத்துவமனையில் ஆய்வு பணி நடைபெற்றது.

    முன்னதாக சிங்கம்புணரி அரசு பொது மருத்துவ மனையின் தலைமை மருத்துவர் அய்யன்ராஜ் வரவேற்றார். மருத்துவ மனை வளாகத்தை ஆய்வு செய்த ப.சிதம்பரம் டயாலிசிஸ் சிகிச்சைக்கான புதிய கட்டிடம் கட்டப்படும் இடம் குறித்து தலைமை மருத்துவர் மற்றும் அதிகாரி களுடன் ஆலோசனை செய்தார்.

    ஆய்வின்போது முன்னாள் எம்.எல்.ஏ. ராம அருணகிரி, பேரூராட்சி கவுன்சிலரும் சிங்கம்புணரி நகர காங்கிரஸ் தலைவரு மான தாயுமானவன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயராமன் மற்றும் காங்கி ரஸ் கட்சி பிரமுகர்கள் உடனிருந்தனர்.

    • கிடா வெட்டு திருவிழா நடைபெற்றது.
    • கவுன்சிலர் மஞ்சரி லட்சுமணன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வெளியாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கருஞ்சி வலையபட்டி கிராமத்தில் கரந்தமலை கருப்பர், வீரமாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலின் வருடாபிஷேக விழாவை முன்னிட்டு கிடா வெட்டு திருவிழா திருவிழா நடந்தது. முன்னதாக 2-ந் ேததி மது எடுப்பு விழா நடந்தது.

    தொடர்ந்து மறுநாள் அருகருகே அமைந்துள்ள கருப்பருக்கும், வீரமாகாளிக்கும் பூ அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடந்தது. பின்னர் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து வாளுக்கு வேலி வகையறா சார்பில் நேர்த்திக்கடனாக 9 கிடாய்கள் வெட்டப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற கறி விருந்து உபச்சார விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் பங்கேற்றனர்.

    இப்பகுதியில் பிறந்து திருமணம் முடித்துச் சென்ற பெண்கள் இங்கு வந்து சேவல், கோழிகளை பலியிட்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். முடிவில் ஏலம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை வாளுக்கு வேலி வகையறா பங்காளிகள், மாவட்ட கவுன்சிலர் மஞ்சரி லட்சுமணன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். 

    • ஒடிசா ரெயில் விபத்து சம்பவம் ரெயில்வே துறையின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடந்துள்ளது.
    • உடனடியாக ரெயில்வே துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சந்திப்புக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திரியும் மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம், மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    பின்னர் கார்த்தி சிதம்பரம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒடிசா ரெயில் விபத்து சம்பவம் ரெயில்வே துறையின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடந்துள்ளது. ரெயில்வேயில் புதிய நியமனங்கள் செய்யப்படாமல் ஊழியர்கள் பற்றாக்குறையால் டெக்னிக்கல், பைலட் பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகளிலும் ஊழியர்கள் பணி செய்யும் நேரம் அதிகரித்துள்ளது.

    எனவே உடனடியாக ரெயில்வே துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் புல்லட் ரெயில் விட நினைக்கும் மத்திய அரசு முதலில் ரெயில்வே துறையில் ரெயில்களின் வேகம் அதிகரிப்புக்கு தகுந்தவாறு கட்டுமானங்களையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி இந்திய ரெயில்வேயின் தரத்தை உயர்த்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • அரசின் பயனுள்ள திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
    • கலெக்டர் ஆஷா அஜீத் வலியுறுத்தினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை சார்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் ஆஷா அஜீத் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது விவசாயி களுக்கு அரசின் திட்டத்தின் மூலம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். ஆய்வின்போது அவர் பேசியதாவது:-

    தமிழக அரசு விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவி களை வழங்கி வருகிறது. வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் மானியத்துடன் கூடிய வேளாண் இடு பொருட்கள் மற்றும் உயிர் உரங்கள், நிலத்தின் தன்மை கேற்றவாறு பயிரிடுவதற்கு உரிய வழிகாட்டுதல்கள், சோலார் மின்வசதி, ஆழ் துளை கிணறு ஏற்படுத்துதல் மற்றும் காய்கறி, பழ விதைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை அரசின் பல்வேறு திட்டங்க ளின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு, அவர்களின் நலன் காக்கப்பட்டு வரு கிறது.

    அதனடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை, தோட்டக் கலைத்துறை மற்றும் வேளாண் பொறியியல்துறை ஆகியவைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் எண்ணற்ற திட்டங்களை மாவட்டத்தின் கடைகோடி பகுதிகளில் வசிக்கும் விவசாய பெருங்குடி மக்க ளுக்கும் கிடைக்கப்பெற செய்யும் வகையில் துறை ரீதியாக சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு செயல்படுத்தப்பட்டு வரும் திட்ட செயல்பாடுகள் குறித்தும், அதன் பயன்கள் குறித்தும் உரிய களஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகி றது. அதனை, விவசாயிகள் முழுமையாக அறிந்து கொண்டு அத்திட்டங்களின் மூலம் பயன்பெற்று தங்களது வாழ்வாதா ரத்தினை மேம்படுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குநர் தனபாலன், வேளாண்மை துணை இயக்குநர் (மாநிலத்திட்டம்) பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • சங்கராபுரம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
    • தாசில்தார் தலைமையில் சமாதானக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை ஒன்றியத்திற் குட்பட்ட சங்கராபுரம் ஊராட்சி மிகப்பெரிய ஊராட்சியாகும். இங்கு நடந்த தலைவர் பதவி தேர்தலில் இருவருக்கு வெற்றி சான்றிதழ் வழங்கப் பட்டு நீதிமன்ற தீர்ப்பின்படி ஊராட்சி தலைவியாக தேவி மாங்குடி பொறுப் பேற்றார்.

    இந்தநிலையில் மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றப்படவில்லை என அவ்வப்போது தர்ணா, ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. நேற்றும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

    இதில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாண்டியராஜன், பா.ஜனதா உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. சோழன் பழனிச்சாமி, செயலாளர் துரைப்பாண்டி, முன்னாள் ஊராட்சி துணை தலைவர் அ.தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் ஸ்ரீதர் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து துணை தலைவர் பாண்டியராஜன் கூறுகையில், ஒரு சிலருக்கு வரி ரசீது வழங்குவதில் பாரபட்சம் நிலவுகிறது.மக்களின் அடிப்படை வசதி கள் உடனடியாக நிறை வேற்றப்பட வேண்டும் என்றார்.

    தேவி மாங்குடி (தலைவர்) கூறுகையில், மக்களின் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படுகின்றன.துணைத்தலைவர் மற்றும் ஒருசில உறுப்பினர்கள் ஒத்துழைப்பு தருவதில்லை என்றார்.

    ஆர்ப்பாட்டம் நடத்திய வர்களிடம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பொன்னுச்சாமி, துணை தாசில்தார் சிவராமன், காவல் ஆய்வாளர் ரவீந்தி ரன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி தாசில்தார் தலைமையில் சமாதானக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இரு தரப்பிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • சின்னடைக்கி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் அருகே செ.மணப்பட்டியில் 200 ஆண்டுகள் பழமையான பிடாரி கருப்ப சுவாமி, சின்னடைக்கி அம்மன் கோவில் உள்ளது. இங்கு கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த சில நாட்களாக யாகசாை பூஜைகள் நடந்தன. தொடர்ந்து விக்னேஷ்வர பூஜை, பஞ்ச கவ்விய பூஜை, மகா கணபதி ஹோமம், உள்ளிட்ட பூஜைகள் நடந்தது.

    நேற்று கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×