search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.6½ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
    X

    மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் ஆஷா அஜீத் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    ரூ.6½ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

    • மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ரூ.6½ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆஷா அஜீத் வழங்கினார்.
    • பொது மக்களிடம் இருந்து 345 மனுக்கள் பெறப்பட்டன.

    சிவகங்கை

    சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் தலைமையில் நடந்தது. இதில் இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்தி றனா ளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொது மக்களிடம் இருந்து 345 மனுக்கள் பெறப்பட்டன.

    அந்த மனுக்களில் தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் ஆஷா அஜீத் அறிவு றுத்தினார். தொடர்ந்து 14 பயனாளி களுக்கு ரூ6.50லட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிக ளையும், அதன் பயன்களையும் கலெக்டர் வழங்கினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொறுப்பு) ரத்தின வேல், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் (பொறுப்பு) சாந்தி, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் கோட்டீஸ்வரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×