search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sapling Scheme"

    • மரக்கன்றுகள் நடும் திட்டத்தை நகராட்சி தலைவர் ெதாடங்கி வைத்தார்.
    • இந்த கன்றுகள் நகராட்சி பணியாளர்களால் நன்கு பராமரிக்கப்பட்டு வளர்க்கப்படும் என்றார்.

    மானாமதுரை

    மானாமதுரையில் தமிழக அரசின் தூய்மை இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன. நகராட்சி அலுவலகம் அருகே வைகை ஆற்றங்கரையோரம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மானாமதுரை நகர் மன்றத் தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் பாலசுந்தரம் மற்றும் பலர் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர். நிகழ்ச்சியில் பேரூராட்சி பணியாளர்கள், நகர் மன்ற உறுப்பினர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இது குறித்து நகர் மன்றத் தலைவர் மாரியப்பன் கென்னடி கூறுகையில், தமிழக அரசு செயல்படுத்தி வரும் நகரங்களில் தூய்மை இயக்கத்தின் சார்பில் மானாமதுரை நகராட்சியில் பல இடங்களில் நிழல் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. இக்கன்றுகள் நகராட்சி பணியாளர்களால் நன்கு பராமரிக்கப்பட்டு வளர்க்கப்படும் என்றார்.

    • புதுவையில் வன வார விழாவை ஒருமாதம் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளளது.
    • அரசின் வனத்துறை மற்ற அரசு துறைகள், அரசு சாரா நிறுவனங்கள், மாணவர்களோடு இணைந்து மரம் நடு விழாவை கொண்டாட உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் வன வார விழாவை ஒருமாதம் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளளது.

    புதுவை அரசின் வனத்துறை மற்ற அரசு துறைகள், அரசு சாரா நிறுவனங்கள், மாணவர்களோடு இணைந்து மரம் நடு விழாவை கொண்டாட உள்ளது.

    புதுவை முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது. இந்த ஒரு மாதத்தில் 50 ஆயிரம் தேக்கு மரக்கன்றுகள், பிற மரக்கன்றுகள் 10 ஆயிரம் வழங்குதல், மரங்களை சுத்தப்படுத்துதல், பனைவிதை நடுதல்,சைக்கிள் விழிப்புணர்வு, மாணவர்களுக்கு போட்டிகள், கருத்தரங்கு, வன பாதுகாப்பு ப யிற்சி என பல நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் தொடக்க விழா திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரர் கோவில் வளாகத்தில் நடந்தது. அமைச்சர் தேனீஜெயக்குமார் தலைமை தாங்கி விவசாயிகளுக்கு தேக்கு மரக்கன்றுகளை வழங்கி நவகிரகங்களுக்கு உரிய மரங்களை நட்டார். துறை செயலர் ரவிபிரகாசம், வன அதிகாரிகள் சத்தியமூர்த்தி, வஞ்சுள வள்ளி ஆகியோர் பங்கேற்றனர்.

    ×