என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • சிவகங்கையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு-கண்காணிப்புக்குழு கூட்டம் கார்த்தி சிதம்பரம் எம்.பி. தலைமையில் நடந்தது.
    • மத்திய-மாநில அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் நடந்தது. கார்த்தி சிதம்பரம் எம்.பி. தலைமை தாங்கினார். கலெக்டர் ஆஷா அஜித், காரைக்குடி சட்ட மன்ற உறுப்பினர் மாங்குடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இக்கூட்டத்தில் தேசிய சமூக உதவித்திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், உதய் திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஊரக குடிநீர் வழங்கல் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம், பிரதம மந்திரி கிராம சாலை கள் மேம்பாட்டு திட்டம் மற்றும் மத்திய-மாநில அரசின் பல்வேறு திட்டங் கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    மேலும் அதன் பயன்கள், நிதிநிலை, மற்றும் செலவி னங்கள் ஆகியன குறித்தும், நடைபெற்று வரும் பணி களை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஆகியன குறித்தும் மாவட்ட கலெக்டர் முன்னிலையில் துறை சார்ந்த அலுவலர்களுடன் விவாதிக்கப்பட்டது.

    இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், செயற்பொறியாளர் வெண்ணிலா, அனைத்து ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர்கள், நகராட்சி ஆணையாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை மாவட்டத்திற்கு சட்ட பேரவை உறுதிமொழிக்குழு நாளை வருகை தருகிறது.
    • அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெறும்.

    சிவகங்கை

    தமிழ்நாடு சட்ட பேரவையின் 2023-24-ம் ஆண்டிற்கான அரசு உறுதிமொழி குழுத்தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் தலைமையில், குழு உறுப்பினர்களான எம்.எல்.ஏ.க்கள் அண்ணாதுரை, அருள், கருணாநிதி, சக்கரபாணி , பழனியாண்டி , மணி , மனோகரன், மோகன் , ராமலிங்கம், வில்வநாதன், ஜெயக்குமார் ஆகியோருடன் வருகிற நாளை (22-ந்தேதி) சிவகங்கை மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் கீழ் நிறைவேற்றப்பட்டுள்ள மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து, ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

    அதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், அனைத்துத்துறை அரசு முதல்நிலை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டமும் நடைபெறும். இந்த தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.

    • அருப்புக்கோட்டையில் யோகா நிகழ்ச்சி நடந்தது.
    • மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    அருப்புக்கோட்டை

    உலக யோகா தினத்தை முன்னிட்டு அருப்புக் க்கோட்டை நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட எஸ்.பி.கே. கல்லூரியில் யோகா தினம் கொண்டா டப்பட்டது. இதில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கு மன வளக்கலை மன்றத்தி னர் யோகா பயிற்சியை செய்து காட்டினர்.

    மாணவ-மாணவிகளும் இந்த பயிற்சியில் பங்கேற்ற னர்.

    இந்த நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர். முத்து தினகரன், முதல்வர் செல்லத்தாய், துணை முதல்வர் பால் ஜாக்குலின் பெரியநாயகம் மற்றும் மனவளக்கலை மன்றத்தை சேர்ந்த தலைவர் ஜோதிமணி, முத்து முருகன், சிவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் காசிமாயன் நன்றி கூறினார்.

    • ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.
    • ம.தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் சிவன் கோவில் எதிரே ம.தி.மு.க. சார்பில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், மாநில சட்டமன்றத்தின் செயல்பாடுகளுக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முட்டுக்கட்டை போடுவதாகவும், அரசியல் சட்டத்தின் முகவுரையில் சொல்லப்பட்டுள்ள மதச்சார் பின்மைக்கு எதிராக பேசி இந்தியா மதம் சார்ந்த நாடுதான் என ஆர்.என்.ரவி கூறுவதாகவும் பா.ஜ.க. அரசியல் சார்ந்த கருத்துக்களைப் பேசி அரசியல் சட்டத்தை மதிக்காமல் அரசியல் சட்டப்படி எடுத்துக் கொண்டுள்ள பதவி பிரமாணத்தை ஆளுநர் ரவி மீறி விட்டார் எனக்கூறி ஆளுநர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி ம.தி.மு.க. நகர செயலாளர் திவான் சக்கரவர்த்தி தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியை முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ம.தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • செம்பனூர் ஊராட்சியில் புதிய கலையரங்கத்தை செந்தில்நாதன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    • புதிய கலையரங்கம் கட்டப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சிக்குட்பட்ட செம்பனூர் ஊராட்சியில் உள்ள நாச்சியப்பன் செட்டியார் என்பவர் தனக்கு சொந்தமான இடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இலவசமாக வழங்கினார். இதையடுத்த அந்த இடத்தில் 2020-21-ம் ஆண்டு ஒன்றிய பொது நிதி திட்டத்தின்படி ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ரூ 7.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய கலையரங்கம் கட்டப்பட்டது.

    இதனை சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் பிரவீனா, கல்லல் ஒன்றிய குழு தலைவர் சொர்ணம் அசோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து செம்பனூர் அரசு பள்ளியில்12, 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பரிசுத்தொகை வழங்கி பாராட்டினார்.

    • காரைக்குடி தபால் நிலையத்தில் தங்க சேமிப்பு பத்திரம் விற்பனை தொடங்கியது.
    • பணத்திற்கு முழு உத்தர வாதம் வழங்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    காரைக்குடி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்திய அஞ்சல்துறை சார்பில் அனைத்து அஞ்சலக அலுவலகங்க ளிலும் தங்க சேமிப்பு பத்திரம் விற்பனை செய்யப் பட்டு வருகிறது. இதேபோல் காரைக்குடி அஞ்சலகம் அலுவலகத்தில் நேற்று முதல் தொடங்கி வருகிற 23-ந்தேதி வரை 5 நாட்கள் தங்க சேமிப்பு பத்திரம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே கடந்த 2022-ம் ஆண்டு இந்த தங்க பத்திரத்தின் விலை ஜூன் மாதத்தில் ரூ.5091-ம், ஆகஸ்டு மாதத்தில் ரூ.5197-ம், டிசம்பர் மாதத்தில் ரூ.5409-ம், இந்தாண்டு மார்ச் மாதம் ரூ.5611-ம் விற்பனை செய்யப்பட்டுள் ளது.

    இந்த தங்க பத்திரத்தின் சிறப்பு அம்சங்களாக ஒரு கிராம், ரூ.5926-ம், இதற்கு வட்டி விகிதம் 2.5 சதவீதமும், குறைந்தது 1 கிராம் முதல் 4 ஆயிரம் கிராம் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இதன் முதிர்வு காலமாக 8 ஆண்டுகளாகவும், முன் முதிர்வு காலமாக 5 வருடங்களுக்கு பின்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் திட்டமாக உள்ளதால் பணத்திற்கு முழு உத்தர வாதம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த தங்க சேமிப்பு பத்திரத்தை பெறுவதற்கு வாக்காளர் அடையாள அட்டை, பான் அட்டை, ஆதார் எண் ஆகியவை அடையாள சான்றாக ஏற்கப்படும். மேலும் வங்கி கணக்கு எண் மற்றும் ஐ.எப்.எஸ்.சி. கோடு நேரில் கொண்டு வரவேண்டும். இதுதவிர வாரிசு நியம னத்திற்கு வாரிசுதாரர்களின் வயது, வங்கி கணக்கு எண், அடையாள சான்று ஆகியவை வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரசு தொடக்கப்பள்ளியில் பார்வைத்திறன் குறையுடையோருக்கான மாணவர் சேர்க்கை நடப்பதாக சிவகங்கை கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • தகுதியுடைய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    சிவகங்கை

    சிவகங்கையில் பார்வைத் திறன் குறையுடை யோருக்கான அரசு தொடக்கப்பள்ளியில் 2023-24-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 5 முதல் 15 வயது வரை உள்ள பார்வையற்ற, குறைபார்வையுடைய மாணவ-மாணவிகள் சேர்ந்து படிக்கலாம். விடுதி சார்ந்த இப்பள்ளியில் உணவு, உடை இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.

    இந்த பள்ளியில் சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்க ளால் பிரெய்லி முறையில் கல்வியுடன் உடற்கல்வி மற்றம் கணினி பயிற்சியும் கற்பிக்கப்படுகிறது. விடுதியில் பார்வையற்ற மாணவர்களை கனிவுடன் கவனிக்க விடுதி பணியா ளர்கள் உள்ளனர். இப்பள்ளியில் சேர தகுதியுடைய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    மேலும், விபரங்களுக்கு இளையான்குடி சாலை அம்பேத்கர் சிலை அருகில் உள்ள பார்வைத்திறன் குறையுடை யோருக்கான அரசு தொடக்கப் பள்ளியை தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.

    • அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
    • மாணவ-மாணவிகளுக்கு கேடயம் பரிசு வழங்கப்பட்டது.

    மானாமதுரை

    மானாமதுரையில் திருவள்ளுவர் இளைஞர் சுய உதவிக்குழுவின் 21-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தலைவர் லட்சுமணன் வரவேற்றார். திருவள்ளுவர் இளைஞர் சுய உதவிக்குழுத்தலைவர் தேவதாஸ் தலைமை வகித்தார். செர்டு சமூக சேவை நிறுவனத்தின் இயக்குநர் பாண்டி மாணவ-மாணவிகளுக்கு கேடயம் உள்ளிட்ட பரிசுகளை வழங்கினார்.

    இதில் சுய உதவிக்குழு செயலர் நாகலிங்கம், ஓய்வுபெற்ற முது நிலை கணக்கு அலுவலர் செல்வராஜ், நகர்மன்ற உறுப்பினர் நதியா செல்வம், சிவகங்கை தொல் நடைக்குழு ஆசிரியர் பயிற்றுநர் காளிராஜா, ஓய்வு பெற்ற ஆசிரியர் மாரியப்பன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். சுய உதவிக்குழுவின் உறுப்பினர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர். முன்னதாக உதவி செயலர் அடைக்கலம் வரவேற்றார்.

    • தேவகோட்டை வாரச்சந்தை கடைகளில் எடை மோசடி செய்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
    • வியாபாரிகள் சந்தைக்கு வருகின்றனர்.

    தேவகோட்டை

    தேவகோட்டை நகரில் கண்டதேவி சாலையில் வாரச்சந்தை ஞாயிற்றுக் கிழமை செயல்பட்டு வரு கிறது. சிவகங்கை, ராமநாத புரம், மதுரை, தேனி, புதுக்கோட்டை, திருச்சி மற்றும் பல்வேறு மாவட்டங் களில் இருந்து வியாபாரிகள் பல வகை காய்கறிகளை விற்பனை செய்ய சந்தைக்கு வருகின்றனர்.

    சுமார் 200-க்கும் மேற்பட்ட கடைகளை கொண்ட இந்த வார சந்தை யில் தேவகோட்டை சுற்றி யுள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் காய்கறி பழம் மீன் மற்றும் அத்தியாவசிய பொருட் களை வாங்கி செல்கின்றனர்.

    இந்த வார சந்தையில் வாங்கும் பொருட்கள் எடை மிகுந்த குறைந்த அளவில் உள்ளது. அதனை அதிக விலை கொடுத்து வாங்கிச் செல்ல வேண்டிய அவல ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ வாங்கும் பொருட்கள் 800 கிராம் முதல் 900 கிராம் வரை மட்டுமே உள்ளது என பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.

    கடைக்காரர்கள் முத்திரையிடாத எடைக் கற்களை பயன்படுத்துவதால் எடை குறைப்பு அதிகமாக நடந்து வருகிறது. இதனால் பொருட்கள் வாங்கும் பொதுமக்கள் மறைமுகமாக ஏமாற்றப்படுகின்றனர். எனவே தொழிலாளர் துறை அதிகாரிகள் உடனடியாக இப்பகுதி கடைகளில் உள்ள எடைக் கற்களை ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கலெக்டர் ஆஷா ஆஜித் தலைமை தாங்கி கண்மாய்களை செயல்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
    • அரசு அலுவலர்கள் கிராம மக்கள் ஏராள மானோர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் நாலு கோட்டை ஊராட்சி யில் அமைந்துள்ள 7 சங்கிலி தொடர் கண்மாய்களை சின்ஜென்டா நிறுவனத்தின் நிதி உதவியுடன் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தொண்டு நிறுவனத்தின் செயலாக்கத்தின் கீழ் ரூ.56 லட்சம் மதிப்பில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டது. இதில் மடை சீரமைப்பு, கழுங்குகள் சீரமைப்பு, வரத்து வாய்க்கால் மற்றும் பாசன வாய்க்கால் தூர் வாருதல், கண்மாய் நீர் பிடிப்பு பகுதி தூர்வாருதல் மேலும் அனைத்து கண்மாய் கரையிலும் 1000 மரக்கன்று கள் நடுதல் போன்ற பணிகளை கடந்த ஆண்டு அப்போதைய கலெக்டர் மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்தார்.

    இப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததையொட்டி அதன் அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது. கலெக்டர் ஆஷா ஆஜித் தலைமை தாங்கி கண்மாய்களை செயல்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

    இந்த விழாவில் மாவட்ட திட்ட இயக்குநர் சிவராமன் நாலுகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மணிகண் டன், சின்ஜென்டா நிறு வன இயக்குனர் வைத்தியநாதன், தமிழ்நாடு வர்த்தக மேலாளர் ஜெயமோகன், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் முதன்மை இயக்குனர்-மேலாளர் கொண்டராதாகிருஷ்ணா, துணைத்தலைவர் கண்ணன், துணைப்பொதுமேலாளர் ஏழுமலை, திட்டமேலாளர் கார்த்திக், சமூக ஒருங்கி ணைப்பாளர் பாலமுருகன் மற்றும் அரசு அலுவலகர்கள் கிராம மக்கள் ஏராள மானோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் கண்மாய் கரைகளில் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.

    • மோட்டார் சைக்கிள்-வேன் மோதியதில் டீ கடைக்காரர் படுகாயமடைந்தார்.
    • நத்தம் மதுக்கரையை சேர்ந்த டிரைவர் உதயகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.புதூரை அடுத்துள்ள கணபதிபட்டியை சேர்ந்தவர் மச்சக்காளை மகன் பாண்டியன்(வயது19). இவர் நாகமங்கலத்தில் டீக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று மதியம் கடையில் இருந்து வீட்டிற்கு சாப்பிட மோட்டார் சைக்கிளில் சென்றார். நாகமங்கலம் நாடகமேடை அருகே சென்றபோது அங்குள்ள வளைவில் வேகமாக வந்த வேனும், மோட்டார் சைக்கிலும் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் படுகாயமடைந்த பாண்டியன் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக புழுதிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வேனை ஓட்டி வந்த நத்தம் மதுக்கரையை சேர்ந்த டிரைவர் உதயகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மார்க்கெட் ஏலம் எடுக்கும் தகராறில் மதுரை வாலிபரை கொன்ற கும்பலை தேடி வருகின்றனர்.
    • தேர்தல் பிரச்சினை தொடர்பாக அறிவழகன் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

    காரைக்குடி

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மையிட்டான்பட்டியை சேர்ந்தவர் ஞானசேகர். இவரது மகன் அறிவழகன் என்ற வினித் (வயது 29). இவர் மீது சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    குற்ற வழக்குகள் தொடர்பாக அறிவழகன் காரைக்குடி தெற்கு போலீஸ் நிலையத்தில் நிபந்தனை ஜாமீனில் தினமும் கையெ ழுத்திட்டு வந்தார். இதற்காக அவர் தனது ஆதரவாளர்களுடன் காரைக்குடி புதிய பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள விடுதியில் தங்கியிருந்தார்.

    நேற்று போலீஸ் நிலையத் திற்கு கையெழுத்திடச்சென்ற அறிவழகனை காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், அரிவாளால் சரிமாரியாக வெட்டி கொலை செய்தது. பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்த கொலை சம்பவத்தால் காரைக்குடியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட னர். கொலை நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளின் அடிப்படையில் கொலை யாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மார்க்கெட் ஏலம் பிரச்சினை, உள்ளாட்சி தேர்தல் பிரச்சினை தொடர்பாக அறிவழகன் கொலை செய்யப்பட்டு ள்ளது தெரியவந்துள்ளது.

    இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

    மதுரை மாவட்டம் மையிட்டான்பட்டியில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாகவும், விருதுநகர் நகராட்சி மார்க்கெட் ஏலம் எடுப்பது தொடர்பாகவும் அறிவழகனின் குடும்பத்தினருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இந்த வருடம் விருதுநகர் நகராட்சி மார்க்கெட்டை ஏலம் எடுக்க அறிவழகன் குடும்பத்தினர் தீவிர முயற்சி எடுத்தனர்.

    இதையறிந்த எதிர்தரப்பி னர் மார்க்கெட்டை ஏலம் எடுத்தால் உங்கள் குடும்பத் தில் கொலை விழும் என நேரடியாகவும், மறைமுகமாக வும் மிரட்டி வந்துள்ளனர். ஆனால் அதனை பொருட்ப டுத்தாமல் அறிவழகன் தரப்பி னர் மார்க்கெட் ஏலம் எடுக்க முயற்சி மேற்கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த எதிர் தரப்பினர் அறிவழகனை ஓட, ஓட விரட்டி கொலை செய்துள்ளனர்.

    இது தொடர்பாக மையிட் டான் பகுதியை சேர்ந்த ஆதி நாராயணன், மேக்ஸ் என்ற கருப்பையா, தனுஷ், குமார வேல், மனோஜ் உள்பட 10 பேரை போலீசார் தேடி வரு கின்றனர். அவர்களை பிடிக்க காரைக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    அவர்கள் மதுரை, சிவகங்கை பகுதிகளில் கொலையாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×