search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "college hostel"

    • கல்லூரி விடுதிகளில் சேருவதற்கு மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
    • சிவகங்கை மாவட்ட நிர்வாகம் செய்தி மக்கள் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்து றையின் கட்டுப்பாட்டின் கீழ், 7 கல்லூரி விடுதிகள்

    (3 மாணவர்கள் விடுதிகள், 4 மாணவிகள் விடுதிகள்) செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ- மாணவிகள் சேர்ந்து பயனடையலாம்.

    இதற்கு மாணவ- மாணவிகளின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். மாணவர்களின் வீட்டிற்கும் கல்லூரிக்கும் உள்ள தூரம் 5 கி.மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும்.

    (பெற்றோரை இழந்த மாணவர்கள் மற்றும் தாய் அல்லது தந்தை வெளியூரில் பணி புரிந்து பாதுகாவலர் பொறுப்பில் இருக்கும் மாணவர்களுக்கும் மேற்படி நிபந்தனை பொருந்தாது).

    ஆதிதிராவிடர் நல விடுதிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் 85 சதவீத மும், மிகவும் பிற்படுத் தப்பட்ட வகுப்பினர் 10 சதவீதமும், பிற வகுப்பினர் 5 சதவீதமும் சேர்க்கப்படு கின்றனர்.

    மாணவ- மாணவி களுக்கு விடுதிகளில்3 வேளைகளில் தரமான உணவு வழங்கப்படுகிறது. 2023-24-ம் ஆண்டிற்கு தகுதியுடைய மாணவ- மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்களிடம் பெற்றுக் கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் பாஸ்போட் சைஸ் போட்டோ-3, வங்கிக்கணக்கு புத்தக நகல். சாதிச்சான்று, வருமான சான்று, பள்ளி மாற்று சான்று, நன்னடத்தை சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் கல்வி நிலையத்தலைவரால் அளிக்கப்படும் படிப்புச் சான்றிதழ் ஆகியவற்றுடன் 30-ந் தேதி வரை ஒப்படைத்து விட்டு https://tnadw.hms.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்யலாம்.

    இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் செய்தி மக்கள் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.

    மாதவரத்தில் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #StudentSuicide
    மாதவரம்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மகள் செண்பகவள்ளி (வயது18). இவர் மாதவரத்தில் உள்ள அரசு தோட்டக்கலை கல்லூரி விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று காலை செண்பகவள்ளி தனக்கு உடல்நிலை சரியில்லை என்று உடன் தங்கி இருக்கும் மாணவிகளிடம் தெரிவித்தார். மேலும் அவர் கல்லூரிக்கு செல்லவில்லை.

    இந்தநிலையில் கல்லூரி முடிந்து மாணவிகள் திரும்பி வந்தபோது விடுதி அறையில் செண்பகவள்ளி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது.

    இதனையடுத்து அதிர்ச்சியடைந்த மாணவிகள் அலறி கூச்சலிட்டனர். இதுபற்றி மாதவரம் பால்பண்ணை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    செண்பகவள்ளியின் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன? கல்லூரியில் ஏதேனும் பிரச்சினை உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள். அவருடன் தங்கி இருந்த மாணவிகளிடமும் விசாரணை நடக்கிறது.

    செண்பகவள்ளி சிறுவயதிலேயே தாயை இழந்தவர். தந்தை முத்து கிருஷ்ணனின் ஆசைப்படி அவர் விவசாயம் தொடர்பான படிப்பை படித்தார். படிப்பில் அவர் ஆர்வமுடன் இருந்ததாக தெரிகிறது.

    தற்கொலை செய்வதற்கு முன்பு செண்பகவள்ளி தோழிகளிடம் தனக்கு உடல்நிலை சரியில்லாததால் அறையில் ஓய்வு எடுப்பதாக கூறி இருந்தார். அவர்கள் கல்லூரி முடிந்து திரும்பி வருவதற்குள் செண்பக வள்ளி தற்கொலை செய்து விட்டார்.

    கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #StudentSuicide
    கும்பகோணம் அரசு கல்லூரி விடுதியில் தரமற்ற உணவு வழங்குவதாக கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள அரசு கலை கல்லூரியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு கல்லூரி மாணவர்கள் தங்கிய விடுதியில் இரவு சாப்பாடு வழங்கப்பட்டது. அப்போது சாப்பாட்டில் பல்லி கிடந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் திடீரென அசூர் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விடுதியில் தரமான, சுகாதாரமான உணவு வழங்க கோரி கோ‌ஷமிட்டனர்.

    இதையடுத்து கும்பகோணம் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பிறகு மறியலில் போராட்டத்தில் ஈடுபட்ட 5 மாணவர்களை மட்டும் போலீசார் அழைத்து சென்றனர். பிறகு சிறிது நேரத்தில் 5 மாணவர்களையும் விடுவித்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை கும்பகோணம் அரசு கலை கல்லூரி மாணவ- மாணவிகள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கல்லூரி வளாகத்தில் சுமார் 2 ஆயிரம் மாணவ- மாணவிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    பிறகு கல்லூரி முன்பு ரோட்டில் மாணவர்கள் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்கள் போலீசாரை விசாரணைக்கு அழைத்து சென்றதை கண்டித்தும், விடுதியில் தரமற்ற உணவு வழங்குவதை கண்டித்தும் மாணவ- மாணவிகள் கோ‌ஷமிட்டனர்.

    இதையடுத்து கும்பகோணம் போலீசார் விரைந்து வந்து போராட்டம் நடத்திய மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். #tamilnews
    அரசு முத்துரங்கம் கலைக்கல்லூரியில் ராகிங் புகாரை அடுத்து கல்லூரி விடுதியில் இருந்து 6 மாணவர்களை நீக்கி வேலூர் கலெக்டர் உத்தரவிட்டார்.
    வேலூர்:

    வேலூர் ஓட்டேரியில் அரசு முத்துரங்கம் கலைக்கல்லூரி உள்ளது. இங்கு 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் ஆதிதிராவிடர் சமுகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கல்லூரி அருகிலேயே தங்கும் விடுதி உள்ளது.

    விடுதியில் தங்கி 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் அஜித், சுரேஷ், கிரண், விக்னேஷ், படையப்பா, மணிகண்டன், தங்கி முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களை கேலி கிண்டல் செய்து துன்புறுத்தி வந்துள்ளனர்.

    இது குறித்து கல்லூரி நிர்வாகத்திற்கு முதலாம்ஆண்டு மாணவர்கள் புகார் தெரிவித்தனர். விசாரணையில் மாணவர்கள் ராகிங் செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து 3-ம் ஆண்டு மாணவர்கள் 6 பேரையும் கல்லூரி நிர்வாகம் விடுதியில் இருந்து 12 நாட்கள் தற்காலிக நீக்கம் செய்தது. இடை நீக்கம் செய்யபட்ட 6 மாணவர்கள் மீண்டும் விடுதிக்கு திரும்பும் போது முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் அவர்களுக்கும் மோதல் சூழ்நிலை உருவாகியுள்ளதாக விடுதி அதிகாரிகள் செய்த விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து மற்ற மாணவர்களின் நலன் கருதி 6 மாணவர்களை விடுதியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.இதைத்தொடர்ந்து 6 மாணவர்களையும் விடுதியில் இருந்து நிரந்தமாக நீக்கம் செய்து கலெக்டர் ராமன் உத்தரவிட்டார். #tamilnews
    ×