search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
    X

    சிவகங்கையில் நடந்த அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம்.

    அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

    • சிவகங்கையில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. , முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நாகராஜன், குணசேகரன், நகர செயலாளர்கள் ராஜா, மெய்யப்பன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கர், ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், செல்வமணி, சேவியர்தாஸ், அருள் ஸ்டீபன், கோபி, சிவ சிவ ஸ்ரீதர், சிவாஜி, சோனைரவி, ஜெகதீஸ்வரன் பாரதிராஜன், பாசறை மாவட்ட செயலாளர் பிரபு மாவட்ட மகளிரணி வெண்ணிலாசசிகுமார் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேசுகையில், தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலா ஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும். டாஸ்மாக் கடைகளில் அதிக விலை கேட்டால் அ.தி.மு.க.வினர் தட்டிக்கேட்க வேண்டும் என்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்ட ர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×