search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு-கண்காணிப்புக்குழு கூட்டம்
    X

    சிவகங்கையில் நடந்த கண்காணிப்புக்குழு கூட்டத்தில் கலெக்டர் ஆஷா அஜீத், கார்த்தி சிதம்பரம் எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு-கண்காணிப்புக்குழு கூட்டம்

    • சிவகங்கையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு-கண்காணிப்புக்குழு கூட்டம் கார்த்தி சிதம்பரம் எம்.பி. தலைமையில் நடந்தது.
    • மத்திய-மாநில அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் நடந்தது. கார்த்தி சிதம்பரம் எம்.பி. தலைமை தாங்கினார். கலெக்டர் ஆஷா அஜித், காரைக்குடி சட்ட மன்ற உறுப்பினர் மாங்குடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இக்கூட்டத்தில் தேசிய சமூக உதவித்திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், உதய் திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஊரக குடிநீர் வழங்கல் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம், பிரதம மந்திரி கிராம சாலை கள் மேம்பாட்டு திட்டம் மற்றும் மத்திய-மாநில அரசின் பல்வேறு திட்டங் கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    மேலும் அதன் பயன்கள், நிதிநிலை, மற்றும் செலவி னங்கள் ஆகியன குறித்தும், நடைபெற்று வரும் பணி களை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஆகியன குறித்தும் மாவட்ட கலெக்டர் முன்னிலையில் துறை சார்ந்த அலுவலர்களுடன் விவாதிக்கப்பட்டது.

    இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், செயற்பொறியாளர் வெண்ணிலா, அனைத்து ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர்கள், நகராட்சி ஆணையாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×