என் மலர்
உள்ளூர் செய்திகள்

எஸ்.பி. அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்
- சிவகங்கை எஸ்.பி. அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடந்தது.
- ராமநாதபுரம் சரக துணைத்தலைவர் துரை தலைமை தாங்கினார்.
சிவகங்கை
சிவகங்கை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் ராமநாதபுரம் சரக காவல்துறை துணைதலைவர் துரை தலைமையில் நடைபெற்றது.
இம்முகாமில் புதிதாக கொடுக்கப்பட்ட 32 மனுக்களுக்கும், மேலும் முதலமைச்சரின் தனிப்பிரிவு, முதல்வரின் முகவரி, மாவட்ட ஆட்சித் தலைவரின் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பெறப்பட்ட மனுக்கள் என நிலுவையில் இருந்த 7 மனுக்கள் என மொத்தம் 39 மனுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
Next Story






