என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • மோட்டார் சைக்கிள் திருட்டு அதிகரித்துள்ளது.
    • மோட்டார் சைக்கிள் திருடப்படுவது அடிக்கடி நடந்து வருகிறது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதி நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதற்கு கேற்றாற் போல் வாகனப் பெருக்கமும் அதிகரித்து உள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தேவ கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வீட்டின் முன்பும் மற்றும் வணிக வளாகங்கள் முன்பும் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டு வருகிறது.இது தொடர்பாக போலீஸ் நிலை யத்தில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

    தேவகோட்டையில் முக்கிய இடங்களான ஆண்டவர் செட், பேருந்து நிலையம், வங்கி, மருத்துவ மனை, வணிக வளாகங்க ளில் வருபவர்கள் தங்களது மோட்டார் சைக்கிளை வாச லில் வைத்து விட்டு செல் கின்றனர். வேலை முடித்து விட்டு வெளியே வந்து பார்க்கும்போது அவர்கள் மோட்டார் சைக்கிள் திருடப்படுவது அடிக்கடி நடந்து வருகிறது.

    இதனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் மோட்டர் சைக்கிளை வெளியிட ங்களில் நிறுத்த அச்சமடை கின்றனர். இந்த நிலையில் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிள் திருட்டு தொடர் பாக தேவகோட்டை போலீ சுக்கு புகார் வந்தது.

    இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவு களை துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், நகர் இன்ஸ்பெக்டர் சரவ ணன், சப் இன்ஸ்பெக்டர் அன்சாரி உசேன், நமச்சிவா யம் தலைமையிலான போலீ சார் ஆய்வு செய்தனர்.

    அப்போது மர்ம நபர் ஒருவர் மோட்டார் சைக் கிளை திருடிச் செல்வது கேமராவில் பதிவாகி உள்ளது. அதை வைத்து மோட்டார் சைக்கிளை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்

    • மானாமதுரை-திருப்புவனம் பகுதியில் மகாளய அமாவாசை வழிபாடு நடந்தது.
    • முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பக்தர்கள் திரண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள குறிச்சியில் பிரசித்தி பெற்ற வழிவிடு பெரிய நாச்சி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் காசியில் இருந்து பிரதிஷ்டை செய்ய பட்ட சிவலிங்கம் சன்னதிஉள்ளது. இங்கு தை, ஆடி மற்றும் புரட்டாசி அமாவாசை தினத்தில் காசியில் நடைபெறுவது போல் முன்னோர்கள் தர்பண பூஜை நடைபெறும்.

    இன்று மகாளய அமாவாசை முன்னிட்டு காலை 6 மணிக்கு சிறப்பு யாகபூஜையுடன் தர்பண பூஜை தொடங்கியது. அதைதொடர்ந்து மதுரை, மானாமதுரை, பரமக்குடி, இளையான்குடி, சிவகங்கை ஆகிய ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் முன்னோர்கள் தர்பண பூஜை செய்து காசி சிவலிங்கத்திற்கு கங்கை தீர்த்ததால் அபிஷேகம் செய்து தொட்டு வழிபாடு செய்தனர். இதேபோல திருப்புவனம் வைகை ஆற்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்கள் திதி பூஜை செய்து புஸ்பவனேஸ்வரை வழிபாடு செய்தனர். குறிச்சி காசிசிவன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு அன்னதானமும் நடைபெற்றது.

    • கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் பொதுக்கூட்டம் வருகிற 17-ந் தேதி நடக்கிறது.
    • நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியகருப்பன், ராசா எம்.பி., முன்னாள் அமைச்சர் தென்னவன் ஆகியோர் வழங்குகின்றனர்.

    காளையார்கோவில்

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டமும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி போன்றவை நடத்தப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக வருகிற 17-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணி அளவில் காளையார் கோவில் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தெப்பக்குளம் கீழ்கரையில் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 7 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி தலைமை தாங்குகிறார். முன்னாள் மத்திய அமைச்சர் ராசா எம்.பி. சிறப்புரை யாற்றுகிறார். அமைச்சர்கள் பெரியகருப்பன், முன்னாள் அமைச்சர் தென்னவன், தமிழரசி எம்.எல்.ஏ. ஆகியோர் பேசுகிறார்கள்.

    இதில் பாகமுகவர்களுக்கு செல்போன் கழக முன்னோடிகளுக்கு நிதி உதவி, தொண்டு நிறுவனங்களுக்கு அரிசி மூட்டைகள் ஆகியவை வழங்கப்படுகிறது. 7 ஆயிரம் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியகருப்பன், ராசா எம்.பி., முன்னாள் அமைச்சர் தென்னவன் ஆகியோர் வழங்குகின்றனர்.

    கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் கலந்து கொள்கி றார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    • குழந்தைகளுக்கு எதிரான பிரச்சினைகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நாளை நடக்கிறது.
    • இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சிவகங்கை

    தேசிய குழந்தை உரிமை கள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் நாளை (14-ந் தேதி) திருப்பத்தூர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகளுக்கு எதிரான பிரச்சினைகள் தொடர்பான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.

    இதில், காணாமல் போன குழந்தைகள், கடத்தி செல்லப்பட்ட குழந்தைகள், நிதி ஆதரவு (மாதம் ரூ.4000 வீதம்) குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள்> ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் தேவைப்படும் குழந்தைகள், குழந்தை திருமணம், கல்வி, மருத்துவம் மற்றும் சுகாதாரம், சட்ட உதவி, குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்கள், குழந்தை தொழிலாளார், கொத்தடிமை குழந்தைகள், பிச்சை எடுக்கும் குழந்தைகள், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகள், சட்டத்திற்கு முரண்பட்ட குழந்தைகள், போதை பொருள் பயன்பாடு ஆகியவை தொடர்பாக பொதுமக்கள், குழந்தைகள் இம்அமர்வில் கலந்து கொண்டு நேரடியாக புகார் மனுக்களை அளிக்கலாம்.

    இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • மானாமதுரை, திருப்புவனம் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
    • 16 வகையான வாசனை பொருள்களால் அபிஷேகம் நடத்தி, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    மானாமதுரை

    மானாமதுரை ஆனந்தவல்லி சமேதசோமநாதர் சுவாமிகோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, சோமநாதர் சுவாமிக்கும், நந்தி தேவ ருக்கும் 16 வகையான வாசனை பொருள்களால் அபிஷேகம் நடத்தி, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. சோமநாதர் வெள்ளி ரிஷப வாகனத்தில் சன்னதியை வலம் வந்து பிரதோஷ மூர்த்தி புறப்பாடு நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    திருப்புவனம் புஷ்பவனேசுவரர்- சவுந்திரநாயகி அம்மன் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ சிறப்பு வழிபாட்டில் சுவாமிக்கும் நந்திக்கும் அபிஷேகம் நடத்தி, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து ரிஷப வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. திருப்பாச்சேத்தி சிவன் கோவில், இளையான்குடி ஒன்றியம் குறிச்சி காசி விஸ்வநாதர் சுவாமி கோயிலிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர்.

    • பொது விநியோக குறைதீர் முகாம் நாளை நடக்கிறது.
    • இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் பொது விநியோகத்திட்டத்தில் நாளை (14-ந் தேதி) அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகலட்டை, கைப்பேசி எண் பதிவு, மாற்றம் செய்தல், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள், அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களை தெரிவிக்கலாம். தாங்கள் குடியிருக்கும் வட்டத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களில் மனுக்களை அளிக்கலாம்.

    இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • மழைநீர் சேகரிப்பு ெதாட்டி, 2 மரக்கன்றுகள் நட்டால்தான் வீடு கட்ட அனுமதி வழங்கப்படும்.
    • ஊராட்சி மன்ற தலைவரின் முயற்சிக்கு பாராட்டுகள் குவிகின்றன.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கல்லல் அருகே சொக்கநாதபுரம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றி வரு பவர் கண்ணன். இவர் பத வியேற்ற மூன்றரை வருட காலத்தில் ஊராட்சிக்குட்பட்ட முத்தனங்கோட்டை, கத்தப் பட்டு, பைக்குடிபட்டி, புத்த டிபட்டி, முத்துப்பட்டினம், ஆலகுத்தான்பட்டி, கோவில் பட்டி, சொக்கநாதபுரம் உள் ளிட்ட பல்வேறு கிராமங்க ளில் சுமார் 50 ஏக்கர் பரப்ப ளவுக்கு தரிசு நிலமாக இருந்து வந்த வறண்ட பூமியை கிராம மக்கள் மற்றும் 100 நாள் பணியாளர்கள் உதவியோடு அரசுக்கு வருவாயீட்டும் வகை யில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு மிகப்பெரிய சோலை யாக மாற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    இவர் மேற்கொண்ட இந்த முயற்சியினால் சுமார் எட்டு இடங்களில் அரசுக்கு சொந்த மான தரிசு நிலங்களில் தற்ச மயம் முந்திரி, மா, பலா, நாவல், எலுமிச்சை போன்ற பலன் தரும் பழவகை மரக்கன் றுகளையும், ரோஜா, மல் லிகை, செம்பருத்தி, அழகு ராணி, ஸ்பீக்கர் பூ, டேபிள் ரோஜா, இட்லிப்பூ, உன்னிப்பூ போன்ற பலதரப்பட்ட பூ செடிகளையும் பதியம் (நர்சரி) செய்தும் பெங்களூரு, ஐதரா பாத் போன்ற பகுதிகளிலிருந்து விலைக்கு வாங்கியும் நடவு செய்து பராமரித்து வருகிறார்.

    மேலும் இவரின் இத்தகைய விடாமுயற்சியை கண்டு மாவட்ட கலெக்டரும், திட்ட இயக்குனரும் நேரில் சென்று பார்வையிட்டு பாராட்டிய தோடு தொடர்ந்து இவரின் முயற்சிக்கு ஆக்கமும் ஊக்க மும் அளித்து வருகின்றனர்.

    இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் கூறுகையில், நான் மன்ற தலைவராக பொறுப்பேற்கும் போது இக்கிராமத்தைச் சுற்றி யுள்ள தரிசு நிலங்களில் புளிய மரக்கன்றுகள் மட்டும் நடவு செய்யப்பட்டு முறை யான பராமரிப்பு இல்லாத நிலையில் காணப்பட்டது. எனக்கு சிறுவயதில் இருந்து விவசாயத்தின் மீது அதீத நாட்டம் உண்டு. இதனால் எனது கிராமத்தை வறண்ட பகுதியில் இருந்து மீட்டெடுக்க வேண்டிய எண்ணம் உருவா னது.

    இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்கை யில் அவர்கள் மாவட்டத்தி லேயே என்னையும் என் கிராமத்தையும் மட்டும் தேர்வு செய்து வேளாண் பயிற்சி பெறுவதற்காக அண்டை மாநிலமான பெங்களூருக்கு இது குறித்த பயிற்சி பெற என்னை அனுப்பி வைத்தனர். அங்கு வறண்ட பூமியில் விவ சாயம் மேற்கொள்வது குறித் தும், நீர் மேலாண்மை குறித் தும் எனக்கு பயிற்சி அளிக்கப் பட்டது.

    இதற்கு ஊக்கம் அளித்தால் வருங்காலத்தில் சிவகங்கை மாவட்டமானது ஒரு செழிப்பு மிக்க விவசாய மண்டலமாக மாறுவதில் எந்த ஒரு ஆச்சரி யமும் இல்லை என்றார்.

    மேலும் என்னுடைய ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாக வீடு கட்டுபவர்கள் கட்டாயமாக மழை நீர் சேகரிப்பு தொட்டியும், இரண்டு மரக்கன்றுகளை யும் நட்டால் மட்டுமே மன்ற நிர்வாகத்தில் இருந்து அதற் கான அனுமதி வழங்கி வருகி றோம். தொடர்ந்து அரசுக்கு முன் வைக்கும் கோரிக்கையாக வருடம் முழுவதும் விவசாய மேற்கொள்ளவும், மரக்கன்று களை நட்டு பராமரிக்கவும் தங்களது கிராமத்திற்கு ஆரம்ப காலத்தில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் வந்த வரத்து கால்வாயை மீண்டும் தூர்வாரி தருமாறு கிராம மக்க ளின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.

    • வட்டார திட்ட நிறைவு விழா நடந்தது.
    • செந்தில்நாதன் கலந்து கொண்டனர்.

    நெற்குப்பை

    திருப்பத்தூர் வட்டாரத்தில் கடந்த 3-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை லட்சிய திட்ட இலக்கு வட்டார திட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை, கல்வித்துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்தொகை, வேளாண்துறை, மகளிர்திட்டம் ஆகிய துறைகளின் கீழ் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதற்கான நிறைவு நாள் விழா திருப்பத்தூரில் நடந்தது. ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சண்முகவடிவேல் தலைமை வகித்தார்.

    ஊராட்சிகளின் உதவி இயக்குனர்குமார் முன்னிலை வகித்தார். வடடார வளர்ச்சி அலுவலர் அருட்பிரகாசம் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக திட்ட இயக்குனர் சிவராமன் கலந்துகொண்டு சிறப்பாக பணி புரிந்த நபர்களுக்கு பரிசுகள் வழங்கினார். திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பர்னபாஸ் அந்தோனி, வட்டாரக்கல்வி அலுவலர் குமார், மகளிர் உரிமைத்துறை தாரணி, வேளாண்துறை சார்பாக செந்தில்நாதன் கலந்து கொண்டனர்.

    • காய்கறி, உணவுக்கழிவு மூலம் பயோ கியாஸ் தயாரிக்கப்பட்டது.
    • இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு குறையும் என்று கூறினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் அரசு பள்ளியில் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கும் வகையில் காய்கறி, உணவுக்கழிவு மூலம் எரிவாயு தயாரிக்கும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு விரைவில் தொடங்கபட இருக்கிறது.

    மறவமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி யில்300-க்கும் மேற்பட்ட மாண வர்கள் பயின்று வருகின்றனர். அவர்களுக்கு விறகு அடுப்பில் சத்துணவு சமைத்து வழங்கப்படுகிறது. இதன்மூலம் உண்டாகும் புகையால் சமையலர்கள் பாதிக்கப்படு கின்றனர்.

    இதனை போக்க ஊராட்சி சார்பில் தூய்மை பாரதம் திட்டத்தில் பள்ளி வளாகத்தில் ரூ.15 லட்சத்தில் காய்கறி, உணவுக்கழிவு களில் இருந்து தயாரிக்கும் பயோ கேஸ் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதில் இருந்து கிடைக்கும் எரிவாயு மூலம் சத்துணவு சமைக்கப் பட உள்ளது. நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 200 முதல் 250 கிலோ காய்கறி, உணவுக் கழிவு மூலம் 3 மணி நேரத்துக்குரிய எரிவாயு கிடைக்கும். இதை பயன்படுத்தி பள்ளிகளில் சத்துணவு சமைக்கலாம்.

    இதுகுறித்து ஊராட்சித் தலைவர் அன்பழகன் கூறுகையில், சத்துணவு சமைக்கும் போது கிடைக்கும் காய்கறி கழிவுகள், மாணவர்கள் சாப்பிட்ட பின்னர் கிடைக் கும் உணவுக்கழிவுகள், இதுதவிர சந்தைகளில், குப்பைகள் சேகரிக்கும் போது கிடைக்கும் காய்கறி, உணவு கழிவுகள் போன்றவை பயன்ப டுத்தி எரிவாயு தயாரிக்கப்பட உள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு குறையும் என்று கூறினார்.

    • கண்மாய்க்குள் நிரம்பி கிடக்கும் மதுபாட்டில்களால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    • டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால் விரைவில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகாவில் உள்ளது பணிக்கனேந்தல் கிராமம். இங்குள்ள கண்மாயின் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு வருபவர்கள் மது குடித்து விட்டு பாட்டில் களை கண்மாய்க்குள் வீசி செல்கின்றனர். பாட்டில் களை வீசி எறியும் போது அவை உடைந்து கண்மாய் முழுவதும் கண்ணாடி துகள்கள் சிதறிக் கிடக்கின் றன. இதனால் கண்மாய் அழியும் நிலை உள்ளது.

    கண்மாயில் நிரம்பிக் கிடக்கும் பாட்டில் துகள் களை அகற்றவும், டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யவும் வலியுறுத்தி பணிக்கனேந்தல் கிராம மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது.

    இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வீரபாண்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆண்டி, அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்செல்வி, மகேஸ்வரி, அருணா, பிச்சை, ராமச்சந்தி ரன் ஆகியோர் கூறியதா வது:-

    பனிக்கனேந்தல் கிராமம் வானம் பார்த்த பூமியாக உள்ளதால் மழை பெய்து கண்மாய் நிரம்பினால்தான் விவசாயம் செய்யும் நிலை உள்ளது.இங்குள்ள மூன்றாம்குளம், இரண்டாம் குளம் ஆகிய கண்மாய் பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் உள்ளது.

    இந்த கடைகளுக்கு வரும் மது பிரியர்கள் கண்மாய் கரையிலேயே அமர்ந்து குடித்து விட்டு மது போதையில் பாட்டில்களை கண்மாய்க்குள் வீசி எறிந்து செல்கின்றனர். இதனால் கண்மாய் முழுவதும் கண்ணாடி துகள்கள் சிதறி கிடக்கின்றன.

    டாஸ்மாக் கடைகள் இருப்பதால் அந்த பகுதியில் பள்ளி மாணவிகளும் செல்ல முடியாத நிலை உள்ளது. சமூக விரோத செயல்களும் அடிக்கடி நடக்கின்றன. இதனால் இந்த கிராமத்திற்கு தனியாக வர பொதுமக்கள் அஞ்சு கின்றனர். பகலிலேயே இந்த பகுதியில் நடமாட முடியாத அளவுக்கு போதை ஆசாமிகள் சுற்றி திரிகின்ற னர். பனிக்கனேந்தல் கிராமத்தில் மூன்றாம்குளம், இரண்டாம் குளம், சன்னதி யேந்தல், பனிக்கனேந்தல் ஆகிய 4 கண்மாய்கள் உள்ளது. மது பிரியர்களின் அட்டகா சத்தால் கண்மாய் கள் பாழாகி விவசாயம் அழியும் நிலை ஏற்பட்டு உள்ளதுடன் பொது மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழலும் உள்ளது.

    டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால் விரைவில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.  

    • அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு சுற்றுலா பயணம் சென்றனர்.
    • கலெக்டர் தொடங்கி வைத்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் உலக சுற்றுலா நாள் விழாவை முன்னிட்டு சுற்றுலாத்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்கள் ஒருநாள் விழிப்புணர்வு சுற்றுலா பயணம் மேற்கொண்டனர். இதனை கலெக்டர் ஆஷா அஜித் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசிய தாவது:-

    முதலமைச்சர் , பள்ளி மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருவது மட்டுமின்றி, அவர்களின் உடல் நலம் மற்றும் மனநலம் ஆகிய வைகளை சீராக வைத்துக் கொள்வ தற்கெனவும், பல்வேறு சிறப்பு நடவடிக் கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி யுள்ளார். அந்தவகையில் சிவகங்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்பு ணர்வு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு சுற்றுலாவில், சிவகங்கை அருங்காட்சி யகம், கீழடி அருங்காட்சி யகம், அகரம், கொந்தகை அகழ்வாராய்ச்சி மையம், இது தவிர திருமலை மற்றும் இடைக்காட்டூர் தேவாலயம் ஆகிய இடங்களுக்கு மாணவ, மாணவியர்கள் அழைத்துச் செல்லப்படு கின்றனர். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பயனுள்ள வகையில் இந்த ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா மிகவும் சிறப்பாக அமைகின்ற வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர், அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் பக்கிரிசாமி உள்பட பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பூவந்தி மின்வாரிய அலுவலகம் பாழடைந்து கிடக்கிறது.
    • மின்வாரிய அலுவலகத்தை மாற்றி புதிய கட்டிடத்தில் இயங்க செய்ய வேண்டும்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா உள்ளது பூவந்தி. இங்குள்ள மின்வாரிய அலுவலகத்தின் சுவர்களில் சிமெண்ட் பூச்சு கள் உடைந்து பாழடைந்து காணப்படுகிறது. இந்த அலுவலகத்தில் மின் இணைப்பும் சரியில்லாமல் உள்ளது.

    இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் அய்யம் பாண்டி கூறியதாவது:-

    பூவந்தி மின்வாரிய அலுவலகம் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கி கிடக்கிறது. இதை சரி செய்ய வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளேன்.

    பூவந்தியில் உள்ள மின்வாரிய அலுவலகம் இப்பகுதியில் உள்ள சுமார் 5 ஆயிரத்து 500 இணைப்பு களுக்கு சேவையாற்றி வரு கிறது. இந்த நிலையில் மின்வாரிய அலுவலகம் பழுதடைந்து பாழடைந்து கிடக்கிறது. இந்த அலுவலகத்தில் உள்ள மின்விளக்குகள் எரிவது இல்லை. இதனால் அலுவலகம் இருளில் மூழ்கி கிடக்கிறது. இங்கு மின்வாரிய ஊழியர்கள் பற்றாக்குறையும் உள்ளது.வயர்மேன் 5 பேர், உதவி யாளர் 5 பேர், போர்மேன் 1, கமர்சியல் அசிஸ்டென்ட் ஒருவர், ஐ.ஏ. என ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன.

    இதன் காரணமாக முழுமையாக சேவையாற்ற முடியாமால் இங்குள்ள ஊழியர்கள் திணறி வருகின்றனர். இதனால் அடிக்கடி ஏற்படும் மின் தடையால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மின்தடை ஏற்படும்போது ஆட்கள் பற்றாக்குறை காரணமாக பாதிப்பை உடனடியாக சரி செய்ய முடியவில்லை என ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். சாரல் மழைக்கே மின்சாரம் துண்டிக்கப்படு கிறது. இந்த பிரச்சினைகளை உடனடியாக சரி செய்து மின்வாரிய அலுவலகத்தை மாற்றி புதிய கட்டிடத்தில் இயங்க செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×