search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Completion Ceremony"

    • வட்டார திட்ட நிறைவு விழா நடந்தது.
    • செந்தில்நாதன் கலந்து கொண்டனர்.

    நெற்குப்பை

    திருப்பத்தூர் வட்டாரத்தில் கடந்த 3-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை லட்சிய திட்ட இலக்கு வட்டார திட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை, கல்வித்துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்தொகை, வேளாண்துறை, மகளிர்திட்டம் ஆகிய துறைகளின் கீழ் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதற்கான நிறைவு நாள் விழா திருப்பத்தூரில் நடந்தது. ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சண்முகவடிவேல் தலைமை வகித்தார்.

    ஊராட்சிகளின் உதவி இயக்குனர்குமார் முன்னிலை வகித்தார். வடடார வளர்ச்சி அலுவலர் அருட்பிரகாசம் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக திட்ட இயக்குனர் சிவராமன் கலந்துகொண்டு சிறப்பாக பணி புரிந்த நபர்களுக்கு பரிசுகள் வழங்கினார். திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பர்னபாஸ் அந்தோனி, வட்டாரக்கல்வி அலுவலர் குமார், மகளிர் உரிமைத்துறை தாரணி, வேளாண்துறை சார்பாக செந்தில்நாதன் கலந்து கொண்டனர்.

    ×