அதிகரிக்கும் மோட்டார் சைக்கிள் திருட்டு

மோட்டார் சைக்கிள் திருட்டு அதிகரித்துள்ளது. மோட்டார் சைக்கிள் திருடப்படுவது அடிக்கடி நடந்து வருகிறது.
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி.
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி.
Published on

தேவகோட்டை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதி நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதற்கு கேற்றாற் போல் வாகனப் பெருக்கமும் அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தேவ கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வீட்டின் முன்பும் மற்றும் வணிக வளாகங்கள் முன்பும் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டு வருகிறது.இது தொடர்பாக போலீஸ் நிலை யத்தில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

தேவகோட்டையில் முக்கிய இடங்களான ஆண்டவர் செட், பேருந்து நிலையம், வங்கி, மருத்துவ மனை, வணிக வளாகங்க ளில் வருபவர்கள் தங்களது மோட்டார் சைக்கிளை வாச லில் வைத்து விட்டு செல் கின்றனர். வேலை முடித்து விட்டு வெளியே வந்து பார்க்கும்போது அவர்கள் மோட்டார் சைக்கிள் திருடப்படுவது அடிக்கடி நடந்து வருகிறது.

இதனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் மோட்டர் சைக்கிளை வெளியிட ங்களில் நிறுத்த அச்சமடை கின்றனர். இந்த நிலையில் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிள் திருட்டு தொடர் பாக தேவகோட்டை போலீ சுக்கு புகார் வந்தது.

இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவு களை துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், நகர் இன்ஸ்பெக்டர் சரவ ணன், சப் இன்ஸ்பெக்டர் அன்சாரி உசேன், நமச்சிவா யம் தலைமையிலான போலீ சார் ஆய்வு செய்தனர்.

அப்போது மர்ம நபர் ஒருவர் மோட்டார் சைக் கிளை திருடிச் செல்வது கேமராவில் பதிவாகி உள்ளது. அதை வைத்து மோட்டார் சைக்கிளை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com