என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bottles of liquor"

    • கண்மாய்க்குள் நிரம்பி கிடக்கும் மதுபாட்டில்களால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    • டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால் விரைவில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகாவில் உள்ளது பணிக்கனேந்தல் கிராமம். இங்குள்ள கண்மாயின் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு வருபவர்கள் மது குடித்து விட்டு பாட்டில் களை கண்மாய்க்குள் வீசி செல்கின்றனர். பாட்டில் களை வீசி எறியும் போது அவை உடைந்து கண்மாய் முழுவதும் கண்ணாடி துகள்கள் சிதறிக் கிடக்கின் றன. இதனால் கண்மாய் அழியும் நிலை உள்ளது.

    கண்மாயில் நிரம்பிக் கிடக்கும் பாட்டில் துகள் களை அகற்றவும், டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யவும் வலியுறுத்தி பணிக்கனேந்தல் கிராம மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது.

    இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வீரபாண்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆண்டி, அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்செல்வி, மகேஸ்வரி, அருணா, பிச்சை, ராமச்சந்தி ரன் ஆகியோர் கூறியதா வது:-

    பனிக்கனேந்தல் கிராமம் வானம் பார்த்த பூமியாக உள்ளதால் மழை பெய்து கண்மாய் நிரம்பினால்தான் விவசாயம் செய்யும் நிலை உள்ளது.இங்குள்ள மூன்றாம்குளம், இரண்டாம் குளம் ஆகிய கண்மாய் பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் உள்ளது.

    இந்த கடைகளுக்கு வரும் மது பிரியர்கள் கண்மாய் கரையிலேயே அமர்ந்து குடித்து விட்டு மது போதையில் பாட்டில்களை கண்மாய்க்குள் வீசி எறிந்து செல்கின்றனர். இதனால் கண்மாய் முழுவதும் கண்ணாடி துகள்கள் சிதறி கிடக்கின்றன.

    டாஸ்மாக் கடைகள் இருப்பதால் அந்த பகுதியில் பள்ளி மாணவிகளும் செல்ல முடியாத நிலை உள்ளது. சமூக விரோத செயல்களும் அடிக்கடி நடக்கின்றன. இதனால் இந்த கிராமத்திற்கு தனியாக வர பொதுமக்கள் அஞ்சு கின்றனர். பகலிலேயே இந்த பகுதியில் நடமாட முடியாத அளவுக்கு போதை ஆசாமிகள் சுற்றி திரிகின்ற னர். பனிக்கனேந்தல் கிராமத்தில் மூன்றாம்குளம், இரண்டாம் குளம், சன்னதி யேந்தல், பனிக்கனேந்தல் ஆகிய 4 கண்மாய்கள் உள்ளது. மது பிரியர்களின் அட்டகா சத்தால் கண்மாய் கள் பாழாகி விவசாயம் அழியும் நிலை ஏற்பட்டு உள்ளதுடன் பொது மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழலும் உள்ளது.

    டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால் விரைவில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.  

    • புதுச்சேரி மாநிலத்தில் இருந்துவரும் வாகனங்களில் மது பாட்டில் கள் கடத்தப்படுகிறதா? என்று சோதனை செய்து வருகின்றனர்.
    • வழக்குகள் பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் ஆல்பேட்டை யில் சோதனை சாவடி யில் தினந்தோறும் போலீ சார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்ற னர். குறிப்பாக புதுச்சேரி மாநிலத்தில் இருந்துவரும் வாகனங்களில் மது பாட்டில் கள் கடத்தப்படுகிறதா? என்று சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் வருகிற 12-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று நள்ளிரவு ஆல்பேட்டை சோதனை சாவடியில் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த சில வாகனங்களில் மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், மது பாட்டில்களை அழித்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதில் மது போதையில் வாகனம் ஓட்டியது, ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டி யது உள்ளிட்ட வழக்கு கள் பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப் பட்டது.

    • மது குடிக்கும் பயணிகளால் காலி பாட்டில்கள் ஏரியில் வீசப்பட்டு வந்தன.
    • சுற்றுச்சூழல் மாசுபடும் நிலை உருவானது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானல் நகருக்கு அடையாளமாக விளங்கி வருவது நட்சத்திர ஏரியாகும். 3 மீட்டர் ஆழம் கொண்ட இந்த ஏரி கடந்த 1863ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது.

    கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏரியில் சுற்றிப்பார்ப்பதற்காக படகு சவாரியும் செய்யப்பட்டுள்ளது. 76 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியை ஒட்டி 5 மீட்டர் நீளமுள்ள சாலை அமைக்கப்பட்டு அதில் நடை பயிற்சியும் மேற்கொண்டு வருகின்றனர்.

    ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அவர்களின் சொந்த பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட இந்த ஏரி சுதந்திரத்துக்கு பிறகு ஏரியின் உரிமை 1950ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை மீன் வளத்துறைக்கு வழங்கப்பட்டது.

    பின்னர் கொடைக்கானல் நகராட்சி வசம் ஏரி ஒப்படைக்கப்பட்டது. கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் விரும்பி படகு சவாரி செய்யும் இடமாக இருப்பதால் அனைத்து நாட்களிலும் இங்கு கூட்டம் அதிகரித்து காணப்படும். சீசன் காலங்களில் இங்கு படகு போட்டியும் நடத்தப்பட்டு வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

    சுற்றுலா தலமான கொடைக்கானலில் மது குடிக்கும் பயணிகளால் காலி பாட்டில்கள் வீசப்பட்டு வந்தன. இதனால் வன விலங்குகள் பாதிக்கப்படுவதோடு சுற்றுச்சூழல் மாசுபடும் நிலை உருவானது. இதனை கருத்தில் கொண்டு கொடைக்கானலில் காலி மதுபாட்டில்களை சம்மந்தப்பட்ட டாஸ்மாக் கடையிலேயே திருப்பி கொடுத்து ரூ.10 பெற்றுக் கொள்ளும் நடைமுறையும் நீதிமன்ற உத்தரவுப்படி நடைமுறைபடுத்தப்பட்டு உள்ளது.

    இதனால் மூலம் உள்ளூர் குடிமகன்கள் காலி மது பாட்டிலை திரும்ப கொடுத்து பணத்தை பெற்று வருகின்றனர். ஆனால் ஏரியை சுற்றி மது அருந்தும் குடிமகன்கள் பாட்டில்களை ஏரியில் வீசிச் செல்வது தொடர்கதையாக உள்ளது.

    மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளும் ஏரியில் சேர்வதால் மாசடைந்து வந்தது. தினந்தோறும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் சாலையோரம் கிடக்கும் மது பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டாலும் ஏரியை தூய்மையாக வைத்திருக்கும் முயற்சியாக நகராட்சி சார்பில் 50 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்கள் மூலம் கடந்த 2 மாதங்களில் 6 டன் அளவுக்கு காலி மது பாட்டில்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் ஏரியை சுற்றி அமர்ந்து மது குடிக்கும் குடிமகன்கள் பாட்டிலை ஏரியில் வீசிச் சென்று விடுகின்றனர். மேலும் காருக்குள் அமர்ந்து மது குடிக்கும் குடிமகன்களும் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

    அது போன்ற நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த போதிலும் முழுமையாக தடுக்க முடிவதில்லை. இது குறித்து நகராட்சி ஆணையர் சத்தியநாதன் தெரிவிக்கையில், காலி மது பாட்டிலை அகற்றுவது சவாலான பிரச்சனையாக உள்ளது.

    கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் விடுதி அறைகளில் வைத்து மது குடிப்பதோடு தாங்கள் சுற்றிப்பார்க்கும் இடங்களிலும் அதனை ரகசியமாக எடுத்து வந்து குடிக்கின்றனர்.

    நகராட்சி சார்பில் 50 பேர் நியமிக்கப்பட்டு ஏரியில் இருந்து கடந்த மாதங்களில் மட்டும் 6 டன் மது பாட்டில்கள் அகற்றப்பட்டுள்ளன. இன்னும் காலி மதுபாட்டில்கள் ஏரியில் கிடக்கும் என்று நம்புகிறோம். அவற்றை அகற்றும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறோம் என்றார். 

    ×