என் மலர்
சிவகங்கை
- சுரங்க மலைசாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- ஊர் கிராம பொதுமக்கள், இளைஞர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.மாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட இடையபட்டி கிராமத்தில் இருந்து வரும் சுரங்க மலை சுவாமி கோவிலில் வருடபிஷேக விழாவை முன்னிட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக பால், தயிர், திருமஞ்சனம் முதலிய 7 பொருட்களைக் கொண்டு பூஜைகள் நடத்தப்பட்டு அதனை தொடர்ந்து பெரிய கோன், சின்ன கோன் வகையறா பங்காளிகளால் பெரிய இடையன், சின்ன இடையன் கண்மாய்களில் இருந்து தீர்த்தங்களை தலையில் சுமந்து கோவில் முன்பாக உள்ள கோபுரத்தில் வேத மந்திரங்கள் முழங்க அபிஷேக தண்ணீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கிராம மக்கள் திரளாக கலந்து ெகாண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடு களை பெரிய கோன், சின்ன கோன் வகையறா பங்காளிகள் மற்றும் ஊர் கிராம பொதுமக்கள், இளைஞர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
- நகர்மன்ற தலைவர் தயாரிக்கும் சினிமா படபிடிப்பு நடந்தது.
- இதன் படப்பிடிப்பு சிவகங்கையை சுற்றியுள்ள வேம்பங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நடந்து வருகிறது.
சிவகங்கை
சிவகங்கை நகர்மன்ற தலைவரும், தி.மு.க. நகர செயலாளருமான துரைஆனந்த், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த தி.மு.க. முப்பெரும் விழாவில் சிறந்த நகர்மன்ற தலைவர் என்கிற விருதை பெற்றார்.
இந்த நிலையில் அவர் ஆன்லைன் சூதாட்டம் குறித்த விழித்தெழு என்கிற திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகை சிநேகாவின் கணவர் பிரசன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பருத்திவீரன் சரவணன், சுஜாதா உள்ளிட்ட நடிகர், நடிகைகள் நடிக்கும் இந்த படத்தை தமிழ்ச்செல்வன் இயக்குகிறார்.
இதன் படப்பிடிப்பு சிவகங்கையை சுற்றியுள்ள வேம்பங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நடந்து வருகிறது.
- திருப்பத்தூரில் அண்ணா சிலைக்கு தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர்.
- பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளையொட்டி தி.மு.க. சார்பில் திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஊராட்சி ஒன்றிய தலைவருமான சண்முகவடிவேல் தலைமையில், நகரச் செயலாளர் கார்த்திகேயன் முன்னிலையில் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
முன்னதாக காந்தி சிலையில் இருந்து பஸ் நிலையம், மதுரை ரோடு வழியாக, பேரணியாக வந்தனர். பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் கோகிலா ராணி நாராயணன், துணைத்தலைவர் கான்முகமது, ஒன்றிய பொருளாளர் கண்ணன், முன்னாள் சேர்மன் சாக்ளா, நகர் துணைத் தலைவர் உதய சண்முகம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தமிழ் நம்பி, தொழிலதிபர் பிளாசா சேகர், ஒன்றிய மாணவரணி சோமசுந்தரம், புதூர் கண்ணன், பேரூராட்சி கவுன்சிலர்கள் அபுதாஹிர், சரவணன், பசீர் அகமது, பழக்கடை அஜீஸ், பேச்சாளர் ஷாஜகான், வார்டு பொறுப்பாளர் ஸ்டீபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் தலைமையில் மாவட்ட செயலாளர் அசோகன் முன்னிலையில் காந்தி சிலையில் இருந்து ஊர்வலமாக நடந்து வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.
இதில் மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் ஆசை தம்பி, மதுரை மாவட்ட முன்னாள் அரசு வழக்கறிஞர் ஈரோடு சாமி, சிவகங்கை முன்னாள் அரசு வழக்கறிஞர் ராமநாதன், மாவட்ட பேரவை துணை செயலாளர் பாலா, காரைக்குடி திருஞானம், திருப்பத்தூர் ஒன்றிய பொறுப்பாளர் சிவா, வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் நாகராஜன், நகர பொறுப்பாளர் முருகேசன், புதூர் கு.மா.காந்தி, நெற்குப்பை நகர பொறுப்பாளர் கருப்பையா, எஸ்.புதூர் ஒன்றிய பொறு ப்பாளர்கள் செந்தில்குமார், பித்திரை செல்வன், சிங்கம்புணரி ஒன்றிய பொறுப்பாளர் விஜயராஜ், உதயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- காரைக்குடி நகராட்சி பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
- முன்னாள் நகர இளைஞரணி அமைப்பாளர் காரை சுரேசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காரைக்குடி
காரைக்குடி நகராட்சி பகுதியில் உள்ள நல்லையன் ஆசாரி பள்ளியில் காலை உணவு திட்டம் தொடக்க விழா நடந்தது. நகர் மன்றதலைவர் முத்துதுரை தலைமை தாங்கி காரைக்குடி நகராட்சி ஆரம்பப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி முன்னிலை வகித்தார்.
நகராட்சி ஆணையாளர் லட்சுமணன், பொறியாளர் கோவிந்தராஜ், நகர்மன்ற துணை தலைவர் குணசேகரன், கவுன்சிலர்கள் கார்த்திகேயன், கண்ணன், நாகராஜன், மைக்கேல், தெய்வானை, கலா, ஹேமலதா, மங்கையர்கரசி, சாந்தி, சித்திக், மனோகரன், மெய்யர், நாச்சம்மை, தனம், ராணி, ராதா, அஞ்சலிதேவி, ரத்தினம், நகர அவை தலைவர் சுப்பையா, முன்னாள் நகர இளைஞரணி அமைப்பாளர் காரை சுரேசு உள்பட பலர் கலந்து கொண்டனர். கவுன்சிலர் கனகவள்ளி நன்றி கூறினார்.
- தேவகோட்டை யூனியனில் ரூ.4.29 கோடியில் வளர்ச்சி பணிகள் நடந்தது.
- இந்த தகவலை தலைவர் பிர்லா கணேசன் தெரிவித்துள்ளார்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை யூனியன் சாதாரண கூட்டம் தலைவர் பிர்லா கணேசன் தலைமையில் நடந்தது.
துணைத் தலைவர் நடராஜன் ராஜாத்தி முன்னிலை வகித்தார். ஆனையாளர் ஸ்ரீதர் வரவேற்றார். கூட்டத்தில் தலைவர் பேசுகையில், அண்ணா திட்டம் மூலம் உடனடி வளர்ச்சி திட்ட பணிகள் தேவைப்படும் 8 ஊராட்சிகளில் ரூ.4.29 கோடியில் பணிகள் தேர்வு செய்யப்பட்டு அவை டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது.
மேலும் 2 ஊராட்சிகளில் அவசர வளர்ச்சி திட்ட பணிகள் தேர்வு செய்து வருகின்றனர். பொது நிதியிலும் வளர்ச்சி திட்ட பணிகளை செய்து வருகிறோம் என்றார்.
கவுன்சிலர் ரவி பேசுகையில், கடந்த மாதங்களில் டெண்டர் விடப்பட்ட பணிகளின் தற்போதைய நிலை என்ன? என்று கேட்டார். அதற்கு பொறியாளர் பதிலளிக்கையில், இப்போது தான் ஒவ்வொரு படிகளாக நடைபெற்று வருகிறது என்றார்.கவுன்சிலர் ஜான்சி ராணி பேசுகையில், கிளியூர்- புலியால் ரோடு சமீபத்தில் தான் போடப்பட்டது. அந்தச் சாலை மிகவும் சேதம் அடைந்துள்ளது. வெற்றிவேல் ஊராட்சிக்குட்பட்ட வாய்வுநேந்தல் பள்ளியில் கழிப்பறை கட்டிடம் சேதமடைந்து உள்ளது. மாணவர்கள் அதனை பயன்படுத்த முடியாமல் வெளியே சென்று வரும் சூழ்நிலை உள்ளது என்றார்.
இதற்கு பதில் அளித்த யூனியன் தலைவர், சம்பந்தப்பட்ட கிராமத்தில் ஆய்வு செய்து துரித நடவடிக்கை எடுத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் மாலதி நன்றி கூறினார்.
- அண்ணா பிறந்தநாள் விழாவையொட்டி காரைக்குடியில் அனைத்து கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
- தொடர்ந்து பல்வேறு அமைப்பினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காரைக்குடி
பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு காரைக்குடியில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அ.தி.மு.க சார்பில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணித்தனர். நகர செயலாளர் மெய்யப்பன், முன்னாள் எம்.எல்.ஏ கற்பகம், சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன், நகர்மன்ற உறுப்பினர்கள் குருபாலு, பிரகாஷ், அமுதா, நகர இளைஞரணி செயலாளர் இயல் தாகூர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஓ.பன்னீர் செல்வம் அணியினர் மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் மாலை அணிவித்தனர்.மாவட்ட பேரவை பாலா, நிர்வாகிகள் திருஞானம், வழக்கறிஞர்கள் ராமனாதன், ஆசைத்தம்பி, தேவகோட்டை ரவிக்குமார், வட்டச் செயலாளர் மகேஷ் உள்பட பலர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.
தி.மு.க சார்பில் நகர செயலாளர் குணசேகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார், பொருளாளர் துரைராஜ், நகர்மன்ற கவுன்சிலர்கள் அன்னை மைக்கேல், சொ.கண்ணன், கலா, தெய்வானை இளமாறன், ஹரிதாஸ், கார்த்திகேயன் வட்டச் செயலாளர்கள் விஜயகுமார், ரமேஷ், முகமது கனி, லட்சுமி ராஜ்கணேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
திராவிடர் கழகத்தினர் திராவிட மணி தலைமையில் மரியாதை செலுத்தினர்.தலைமை கழக பேச்சாளர் என்னாரெசு பிராட்லா உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பல்வேறு அமைப்பினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- சிங்கம்புணரி அருகே தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் ெபரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
- அதற்கு ஒரு மாணவி எழுந்து முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் முசுண்டப்பட்டி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தின் ெதாடக்கவிழா நடந்தது.
இதில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு கிச்சடி, கேசரி பரிமாறி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து அமைச்சர் பெரியகருப்பன்,கலெக்டர் மதுசூதன்ரெட்டி, அரசு முதன்மை செயலர் அமுதா ஆகியோர் மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டதுடன் மாணவர்களுடன் உரையாடினர்.
அரசு முதன்மை செயலர் அமுதா, உணவு எப்படி இருந்தது என்று கேட்டார். அதற்கு ஒரு மாணவி எழுந்து முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். மாணவி பிரதீஷா பேசுகையில், காலை உணவை சாப்பிட்டால் தான் நன்றாக படிக்க முடியும். நான் மருத்துவராகி உடம்பு
சரி இல்லாதவர்களை சரிசெய்வேன் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் சிவராமன், மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் வானதி, எஸ்.புதூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஊராட்சி மன்ற தலைவர் அடைக்கலசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- தேவகோட்டை அருகே வாகனம் மோதி 2 மாடுகள்- 1 கன்று பலியாயின.
- இந்த விபத்து குறித்து வேலாயுதபட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள திருமணவயல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் விவசாயிகள் நிறைந்த பகுதியாகும். இந்த கிராமத்தில் உள்ள பெண்கள் பசுமாடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த கோபால் மனைவி லட்சுமி, சோனைமுத்து மனைவி சுப்புலட்சுமி, சந்திரசேகர் மனைவி பாக்கியம் ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் நேற்று இரவு மேய்ச்சலுக்கு சென்று வீட்டிற்கு திரும்பிச் சென்றன.
அப்போது சிவகங்கை-தேவகோட்டை சாலையில் திருமணவயல் பஸ் நிறுத்தம் அருகில் 3 பசுமாடுகள், 1 கன்று மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த 2 பசுமாடுகள், 1 கன்று ஆகியவை சம்பவ இடத்திலேயே பலியானது.
இதில் காயமடைந்த ஒரு பசுமாடு சாலையில் கிடந்தது. இதனைக்கண்ட கிராம மக்கள் மாட்டின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த பெரியகாரை கால்நடை மருத்துவர் கலா விரைந்து சென்று பொதுமக்கள் துணையுடன் காயமடைந்த மாட்டிற்கு சிகிச்சை அளித்தார்.
இந்த விபத்து குறித்து வேலாயுதபட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாடுகள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர். மேலும் அச்சாலையில் உள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டேராடூனில் உள்ள ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்.
- இந்த தகவலை சிவகங்கை கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்தி க்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
டேராடுனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் ஜூலை-2023 பருவத்தில் மாணவர்கள் (சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்) சேருவதற்காக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3-ந் தேதி அன்று தேர்வு நடைபெறுகிறது.
சேர்க்கைக்கு 8-ம் வகுப்பு (சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்), 7-ம் வகுப்பு படிப்பவர் அல்லது 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் (1.7.2023 தேதியின்படி) கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். 11½ வயது முதல் 13 வயது வரை (1.7.2023 தேதியின்படி) (அவர்கள் 2.7.2010-க்கு முன்னதாகவும் 1.1.2012-க்குப் பிறகும் பிறந்திருக்கக்கூடாது). தேர்வு நடைபெறும் நாள்: 3.12.2022 முற்பகல் மற்றும் பிற்பகல் ஆகும்.
தேர்விற்கான திட்ட ப்படி, ஆங்கிலம் (125 மதிப்பெண்கள்) - 2 மணி நேரம், கணிதம் (200 மதிப்பெண்கள்) - 1.30 மணி நேரம், பொது அறிவு (75 மதிப்பெண்கள்) - 1 மணி நேரம் (கணிதம் மற்றும் பொது அறிவுத்தாள் ஆகியவை ஆங்கிலம் அல்லது இந்தியில் விடையளிக்கப்பட வேண்டும்.
விண்ணப்பம் பெற வேண்டிய முகவரி கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி, கர்ஹிகான்ட், டேராடுன், உத்தரகாண்ட் 248 003 என்ற முகவரிக்கு, விரைவு அஞ்சல் வாயிலாகவும், கேட்பு காசோலைக்குரிய கிளை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, டெல்பவன், டேராடுன் (வங்கி குறியீடு 01576)-ம் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்ப கட்டணம் காசோலை மூலம் அல்லது இணையவழியாக
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் (இரட்டையாக) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய சாலை, பூங்கா நகர், சென்னை-600 003 என்ற முகவரிக்கு 15.10.2022 அன்று மாலை 5.45 மணிக்குள் கிடைக்கப் பெற வேண்டும்.
விண்ணப்பப் படிவம், தகவல் தொகு ப்பேடு ஆகியவை சென்னை யிலுள்ள இந்த தேர்வாணைய அலுவலகத்தில் இருந்து விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட மட்டாது. ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியின் விண்ணப்பப்படிவங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ள ப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ரூ.31 லட்சம் செலவில் ஊரணியை தூர்வாரி பராமரிக்க பூமிபூஜை நடந்தது.
- 20ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஊரணி பராமரிக்கப்படாமல் குப்பை கொட்டும் இடமாக இருந்து வந்தது.
சிவகங்கை
சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட சவக்கட்டு ஊரணி 20ஆண்டுகளுக்கு மேலாக பராமரிக்கப்படாமல் குப்பை கொட்டும் இடமாக இருந்து வந்தது. அதனை தூர்வாரி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து சவக்கட்டு ஊரணி தூர்வாரபட்டு நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ரூ.31 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைக்கும் பணி, கம்பி வேலி அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.
நகர் மன்ற தலைவர் துரைஆனந்த் தலைமை தாங்கினார். இதில் நகர் மன்ற பொறியாளர், கவுன்சிலர்கள் அன்புமணி, சண்முக ராஜன், விஜயகுமார், அயூப்கான், ராமதாஸ், ஆறு சரவணன், கீதாகார்த்திகேயன், மதியழகன், வழக்கறிஞர் ராஜஅமுதன், ஒப்பந்ததாரர் மதி, தொழில்நுட்ப பிரிவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
- அவர்கள் தங்களது கடந்த கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் கடந்த 1993 முதல் 1996 வரை தாவரவியல் துறையில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.தாவரவியல் துறை தலைவர் முனைவர் கோமளவள்ளி தலைமை தாங்கினார். உதவி பேராசிரியர்கள் பழனிச்சாமி மற்றும் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். 25 ஆண்டுகளுக்கு பின்னர் மாணவ-மாணவிகள் தங்கள் குடும்பத்துடன் சந்தித்து மகிழ்ந்தனர். குவைத், சிங்கப்பூர், கத்தார், துபாய் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் பல்வேறு ஊர்களில் இருந்தும் வந்த மாணவர்கள் தங்கள் கல்லூரி காலத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களையும், தங்கள் பேராசிரியர்களைப் பற்றியும், பசுமை நிறைந்த நினைவுகளையும் ெதரிவித்தனர்.
துறை தலைவர் மற்றும் அதே துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் பழனிச்சாமி வாழ்த்துரை வழங்கினார். பின்னர் அனைவரும் வள்ளல் அழகப்பர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். பின்னர் வரும் காலங்களில் தாவரவியல் துறைக்கு தேவையான பல்வேறு உதவிகளை செய்து தருவதாக உறுதி அளித்தனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் சார்பில் ஒருங்கிணைப்பாளர்கள் வீரபாண்டியன், ஐங்கரன் ஆகியோர் செய்திருந்தனர்.
- சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகளை விருந்தினரைபோல பார்த்துக்கொள்வதாக டீன் தெரிவித்தார்.
- 100 படுக்கைகளும், மருத்துவமனை வளாகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அமருவதற்கான இருக்கை களும் ஏற்படுத்தி உள்ளேன்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்தவர் அப்துல் வாஹித். இவர் இதே பகுதியில் 4 சக்கர வாகனத்தை நாள் வாடகை ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று இவர் சிவகங்கைக்கு திருமண நிகழ்விற்காக சென்றபோது எதிர்பாராத விதமாக மூச்சுத் திணறலும், நெஞ்சுவலியும் ஏற்பட்டது. உடனடியாக அவரை சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் துரிதமாக பரிசோதித்து 2 மணி நேரத்தில் இயல்பு நிலைக்கு மாற்றினர்.
இது குறித்து மருத்துவமனை டீன் ரேவதிபாலன் கூறுகையில், இங்கு வரும் எந்த ஒரு நோயாளியையும் இவர் உள்நோயாளி, இவர் புறநோயாளி என்ற பாகுபாடின்றி வீட்டிற்கு வரும் விருந்தினரைபோல நன்றாக கவனித்துக் கொள்கிறோம். நான் 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மருத்துவமனைக்கு பணிமாறுதலாகி வரும்போது முகப்பு தோற்றம், வளாக பகுதிகளில் நோயாளிகளுடன் வரும் நபர்கள் அமருவதற்கு இருக்கை இல்லாத நிலையும், நோயாளிகளின் படுக்கைகள் பற்றாக்குறையாகவும் இருந்தது.
தற்போது அமைச்சர், கலெக்டர் உதவியுடன் புதிதாக 100 படுக்கைகளும், மருத்துவமனை வளாகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அமருவதற்கான இருக்கை களும் ஏற்படுத்தி உள்ளேன்.
கொரோனா தொற்று காலங்களில் மிகவும் குறைந்த நோய் தொற்று உள்ள மாவட்டமாக சிவகங்கை இருந்தது. இதற்கு காரணமாக என்னுடன் பாடுபட்ட மருத்துவர்கள், செவிலிய ர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். இவர்களுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியை தந்துள்ளது என்றார்.
சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கும் அப்துல் வாஹித் கூறுகையில், என்னை போன்ற அடித்தட்டு மக்கள் நோய் நொடி காலங்களில் ஏற்படும் இக்கட்டான சூழ்நிலையில் பணத்தை வீண்விரயம் செய்யாமல் மற்ற மாநிலங்களை காட்டிலும் மக்கள் நலனில் அக்கறை காட்டி தமிழக அரசு வழங்கும் அனைத்து மருத்துவ சலுகைகளையும் பெற்று பயன்பெற வேண்டும் என்றார்.
கடந்த காலங்களில் தூத்துக்குடி, விருதுநகர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் டீன் ரேவதி பாலன் மருத்துவராகவும், டீனாகவும் பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






