search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "courtesy of DMK"

    • திருப்பத்தூரில் அண்ணா சிலைக்கு தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர்.
    • பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளையொட்டி தி.மு.க. சார்பில் திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஊராட்சி ஒன்றிய தலைவருமான சண்முகவடிவேல் தலைமையில், நகரச் செயலாளர் கார்த்திகேயன் முன்னிலையில் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

    முன்னதாக காந்தி சிலையில் இருந்து பஸ் நிலையம், மதுரை ரோடு வழியாக, பேரணியாக வந்தனர். பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் கோகிலா ராணி நாராயணன், துணைத்தலைவர் கான்முகமது, ஒன்றிய பொருளாளர் கண்ணன், முன்னாள் சேர்மன் சாக்ளா, நகர் துணைத் தலைவர் உதய சண்முகம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தமிழ் நம்பி, தொழிலதிபர் பிளாசா சேகர், ஒன்றிய மாணவரணி சோமசுந்தரம், புதூர் கண்ணன், பேரூராட்சி கவுன்சிலர்கள் அபுதாஹிர், சரவணன், பசீர் அகமது, பழக்கடை அஜீஸ், பேச்சாளர் ஷாஜகான், வார்டு பொறுப்பாளர் ஸ்டீபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் தலைமையில் மாவட்ட செயலாளர் அசோகன் முன்னிலையில் காந்தி சிலையில் இருந்து ஊர்வலமாக நடந்து வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    இதில் மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் ஆசை தம்பி, மதுரை மாவட்ட முன்னாள் அரசு வழக்கறிஞர் ஈரோடு சாமி, சிவகங்கை முன்னாள் அரசு வழக்கறிஞர் ராமநாதன், மாவட்ட பேரவை துணை செயலாளர் பாலா, காரைக்குடி திருஞானம், திருப்பத்தூர் ஒன்றிய பொறுப்பாளர் சிவா, வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் நாகராஜன், நகர பொறுப்பாளர் முருகேசன், புதூர் கு.மா.காந்தி, நெற்குப்பை நகர பொறுப்பாளர் கருப்பையா, எஸ்.புதூர் ஒன்றிய பொறு ப்பாளர்கள் செந்தில்குமார், பித்திரை செல்வன், சிங்கம்புணரி ஒன்றிய பொறுப்பாளர் விஜயராஜ், உதயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×