search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாகனம் மோதி 2 மாடுகள்- 1 கன்று பலி
    X

    விபத்தில் காயமடைந்த பசுமாடு ரோட்டில் கிடப்பதை படத்தில் காணலாம். 

    வாகனம் மோதி 2 மாடுகள்- 1 கன்று பலி

    • தேவகோட்டை அருகே வாகனம் மோதி 2 மாடுகள்- 1 கன்று பலியாயின.
    • இந்த விபத்து குறித்து வேலாயுதபட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள திருமணவயல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் விவசாயிகள் நிறைந்த பகுதியாகும். இந்த கிராமத்தில் உள்ள பெண்கள் பசுமாடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த கோபால் மனைவி லட்சுமி, சோனைமுத்து மனைவி சுப்புலட்சுமி, சந்திரசேகர் மனைவி பாக்கியம் ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் நேற்று இரவு மேய்ச்சலுக்கு சென்று வீட்டிற்கு திரும்பிச் சென்றன.

    அப்போது சிவகங்கை-தேவகோட்டை சாலையில் திருமணவயல் பஸ் நிறுத்தம் அருகில் 3 பசுமாடுகள், 1 கன்று மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த 2 பசுமாடுகள், 1 கன்று ஆகியவை சம்பவ இடத்திலேயே பலியானது.

    இதில் காயமடைந்த ஒரு பசுமாடு சாலையில் கிடந்தது. இதனைக்கண்ட கிராம மக்கள் மாட்டின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த பெரியகாரை கால்நடை மருத்துவர் கலா விரைந்து சென்று பொதுமக்கள் துணையுடன் காயமடைந்த மாட்டிற்கு சிகிச்சை அளித்தார்.

    இந்த விபத்து குறித்து வேலாயுதபட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாடுகள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர். மேலும் அச்சாலையில் உள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×