search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cinematography"

    • பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
    • அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பரபரப்பு

    அரக்கோணம்:

    அரக்கோணம் ரெயில் நிலையத்தில் கிரிகெட் விளையாட்டை மையமாகக் கொண்ட புதிய படத்தின் சினிமா படபிடிப்பு சூட்டிங் நடை பெற்று வருகிறது.

    இதனால் இன்று அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பகுதியில் வரும் பயணிகளை வேறு வழியாக ரெயில் நிலையத்திற்குள் போலீசார் அனுப்பி வருகின்றனர்.

    இந்த படப்பிடிப்பில் சினிமா மூத்த நடிகர்கள் பாக்கியராஜ் மற்றும் பாண்டியராஜன் மகன்கள் நடிப்பதாகவும் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இந்த படப்பிடிப்பு தொடர்ந்து 2 நாட்கள் நடைபெற உள்ளதாக படப்பிடிப்பை ேசர்ந்தவர்கள் தெரிவித்தனர் .

    இதனால் அரக்கோணம் ரெயில் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.

    • நகர்மன்ற தலைவர் தயாரிக்கும் சினிமா படபிடிப்பு நடந்தது.
    • இதன் படப்பிடிப்பு சிவகங்கையை சுற்றியுள்ள வேம்பங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நடந்து வருகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை நகர்மன்ற தலைவரும், தி.மு.க. நகர செயலாளருமான துரைஆனந்த், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த தி.மு.க. முப்பெரும் விழாவில் சிறந்த நகர்மன்ற தலைவர் என்கிற விருதை பெற்றார்.

    இந்த நிலையில் அவர் ஆன்லைன் சூதாட்டம் குறித்த விழித்தெழு என்கிற திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகை சிநேகாவின் கணவர் பிரசன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பருத்திவீரன் சரவணன், சுஜாதா உள்ளிட்ட நடிகர், நடிகைகள் நடிக்கும் இந்த படத்தை தமிழ்ச்செல்வன் இயக்குகிறார்.

    இதன் படப்பிடிப்பு சிவகங்கையை சுற்றியுள்ள வேம்பங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நடந்து வருகிறது. 

    ×