என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் சினிமா படப்பிடிப்பு நடந்த காட்சி.
சினிமா பட பிடிப்பால் மாற்று வழியில் பயணிகள் அனுமதி
- பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
- அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பரபரப்பு
அரக்கோணம்:
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் கிரிகெட் விளையாட்டை மையமாகக் கொண்ட புதிய படத்தின் சினிமா படபிடிப்பு சூட்டிங் நடை பெற்று வருகிறது.
இதனால் இன்று அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பகுதியில் வரும் பயணிகளை வேறு வழியாக ரெயில் நிலையத்திற்குள் போலீசார் அனுப்பி வருகின்றனர்.
இந்த படப்பிடிப்பில் சினிமா மூத்த நடிகர்கள் பாக்கியராஜ் மற்றும் பாண்டியராஜன் மகன்கள் நடிப்பதாகவும் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இந்த படப்பிடிப்பு தொடர்ந்து 2 நாட்கள் நடைபெற உள்ளதாக படப்பிடிப்பை ேசர்ந்தவர்கள் தெரிவித்தனர் .
இதனால் அரக்கோணம் ரெயில் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.
Next Story






