என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • கூட்டுறவுத்துறையின் சார்பில் நடைபெற்றுவரும் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா சிவகங்கையில் நடந்தது.
    • இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர்.

    சிவகங்கை

    கூட்டுறவுத்துறையின் சார்பில் நடைபெற்றுவரும் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா சிவ கங்கை மாவட்டத்தில் கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

    14-ந்தேதி பையூர் பிள்ளைவயல் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து தெரு கூத்து நிகழ்ச்சியும், மரம் நடும் விழாவும் நடந்தது. 15-ந்தேதி சிவகங்கை கூட்டுறவு பயிற்சி நிலைய மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள் நடந்தன.

    16-ந்தேதி பொதுமக்கள் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் பங்கேற்ற ரத்ததான முகாம் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி யில் நடந்தது. இதில் ஏராள மானோர் ரத்ததானம் செய்தனர்.

    முன்னதாக முகாமை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் இணை பதிவாளர் ஜீனு, மேலாண்மை இயக்குநர் ரவிச்சந்திரன், சிவகங்கை சரக துணைப்பதிவாளர் பாலச்சந்திரன், இணைப்பதிவாளர் நாகராஜன், துணைப்பதிவாளர் குழந்தை வேலு, மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் சர்மிளா திலகவதி, மருத்துவ கண்கா ணிப்பாளர் ராமநாதன், உதவி நிலைய மருத்துவர் முகமது ரபி, அவசர சிகிச்சை பிரிவு டாக்டர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இன்று (வியாழக்கிழமை) மன்னர் மேல்நிலைப்பள்ளி யில் ஓவிய ேபாட்டியும், இடைய மேலூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் கால்நடை மருத்துவ முகாமும் நடக்கிறது. நாளை (18-ந்தேதி) காரைக்குடியில் மருத்துவ முகாமும், 19-ந்தேதி இளையான்குடி, காரைக்குடி கூட்டுறவு நகர வங்கிகளின் உறுப்பினர்கள் சந்திப்பு முகாம் நடக்கிறது. 20-ந்தேதி திருப்பத்தூர் கூட்டுறவு நிறைவு விழா நடக்கிறது.

    • அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெற அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களது விபரங்களை தேசிய தரவுதளத்தில் பதிவேற்ற வேண்டும்.
    • பிரதமரின் விபத்து காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 2 லட்சத்திற்கான விபத்து காப்பீடு வழங்கப்படும் என்று சிவகங்ககை லெக்டர் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெடடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய அரசு அமைப்பு சாரா தொழிலாளளர்களின் விவரங்களை ஒருங்கிணைக்க உச்சநீதிமன்ற உத்தரவின்படி 'அமைப்பு சாரா தொழிலாளர்களின் தேசிய தரவு தளம் என்ற ஒரு தரவுதளத்தை உருவாக்கியுள்ளது.

    https://eshram.gov.in என்ற வலைதளத்தின் மூலம் கட்டுமானத் தொழிலாளர்கள் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், வீட்டுப்பணியாளர்கள், விவசாயத்தொழிலாளர்கள், குத்தகைதாரர்கள்,பேக்கிங் செய்வோர் உள்ளிட்ட 370 வகையான துறைகளில் வேலை பார்க்கும் இ.எஸ்.ஐ., பி.எப்., பிடித்தம் செய்யப்படாத அமைப்பு சாரா தொழிலாளர்கள் தங்களின் விவரங்களை அனைத்து பொது சேவை மையங்களிலும் மற்றும் அனைத்து இ-சேவை மையங்களிலும் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    eSHRAM Portal- லில் தொழிலாளர்கள் சுயமாகவும் பதிவு செய்து கொள்ள லாம். மாநில அரசின் பல்வேறு வகையான நலத்திட்டங்களின் கீழ் பதிவு செய்துள்ள அனைத்துத் தொழிலாளர்களும் இத்தரவுதளத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும்.

    இத்தரவுதளத்தில் தொழிலாளர்கள் தங்களைப்பதிவு செய்து கொள்ள வயது 16 முதல் 59-க்குள் இருக்க வேண்டும். மேலும் எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை. பதிவேற்றம் செய்வதற்கு ஆதார் அட்டை, ஆதாரில் இணைக்கப்பட்ட மொபைல் எண் ஓ.டி.பி. மூலம் அல்லது கைரேகை மூலம் பதிவு செய்து கொள்ளலாம். வங்கி கணக்குப் புத்தகம் போன்ற தேவையான விவரங்கள் இருக்க வேண்டும்.

    மேலும் இத்தரவுகளை பதிவேற்றம் செய்த பிறகு பயனாளிகளுக்கு UAN என்ற 12-இலக்க எண் கொண்ட அடையாள அட்டை வழங்கப்படும்.

    அமைப்புசாரா தொழிலாளர்கள் வேலை காரணங்களுக்காகவோ அல்லது வேறு ஏதும் பிற காரணங்களுக்காகவோ புலம்பெயர நேர்ந்தாலும், அரசிடமிருந்து பெற வேண்டிய சலுகைகளைப் பெற இந்த அடையாள அட்டை உதவியாக இருக்கும். இந்த தரவுதளத்தில் தன்னை இணைத்துக் கொள்ளும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பிரதமரின் விபத்து காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 2 லட்சத்திற்கான விபத்து காப்பீடு வழங்கப்படும்.

    எனவே உச்சநீதிமன்ற உத்தரவின்படி இந்திய அரசால் உருவாக்கப்படும் அமைப்புசாரா தொழலாளர்களுக்கான இத்தேசிய தரவுதளத்தில் அனைவரும் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பெண்கள் தங்களது உரிமைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்று சிவகங்கை நீதிபதி பேசினார்.
    • காரைக்குடி உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரியில் பெண்களுக்கான அரசியல் அமைப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் காரைக்குடி உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரியில் பெண்களுக்கான அரசியல் அமைப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான பரமேஸ்வரி தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசிய தாவது:-

    அரசியல் அமைப்பு சட்டத்தின் ஷரத்துக்களில் பெண்கள் பாதுகாப்புக்கும், உரிமைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

    பெண்கள் அவற்றினை தெரிந்து கொண்டு சமுதாயத்தில் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தங்க ளது உரிமைகளை தெரிந்து கொண்டு வாழ வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் கல்லூரி முதல்வர் ஹேம மாலினி, துணை முதல்வர் விசாலாட்சி, கவிதா, உதவி பேராசிரியர் வீரமணி, வக்கீல் மணிமேகலை ஆகியோர் பேசினர். இதில் 700-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.

    • காரைக்குடியில் சிலம்பாயி ஹோமியோபதி மருத்துவமனை திறப்பு விழா நடந்தது.
    • நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி மருத்துவமனையை திறந்து வைத்து பேசினார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருணா நகரில் புதிதாக கட்டப்பட்ட சிலம்பாயி ஹோமியோபதி மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது.

    நாம் தமிழர் கட்சியின் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி செயலாளர் கரு.சாயல்ராம் வரவேற்றார்.நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி மருத்துவமனையை திறந்து வைத்து பேசினார்.

    மாநில ஒருங்கிணைப்பா ளர்கள் வெற்றிக்குமரன், கோட்டைக்குமார், ஹீமா யூன் கபீர், சாட்டை துரை முருகன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். இதில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அமுதா நம்பி, தென்சென்னை மாவட்ட செயலாளர் புகழேந்தி, மாநில கொள்கை பரப்புச் செயலாளர்கள் செயசீலன், ராவணன் சுரேஷ், திருச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் வழக்கறிஞர் திருச்சி பிரபு, மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன், மாநில மருத்துவ பாசறை ஒருங்கி ணைப்பாளர் மருத்துவர் பிரபாகரன், சிவகங்கை வடக்கு மாவட்ட தலைவர் ராமசெயம் உள்பட மாநில, மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், இளஞ்சியமங்களம் கிராம மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மருத்துவர் சாரா ராமு நன்றி கூறினார்.

    • குழந்தைகள் தின விழாவில் பல் மருத்துவ முகாம் நடக்கிறது.
    • இதில் பள்ளி மேம்பாட்டு குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    காரைக்குடி

    காரைக்குடி நாகநாதபுரம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு மருத்துவ முகாம் நடந்தது.

    வட்டார வளமைய மேற்பார்வையாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் அமுதா, 30-வது வார்டு கவுன்சிலர் அமுதா சுந்தரேசன் முன்னிலை வகித்தனர். சாந்தி பல் மருத்துவமனை மருத்துவர்கள் நவீனா இளங்கோ, டவுமி ஆகியோர் பள்ளி குழந்தைகளுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். குழந்தைகளுக்கு டூத்பிரஸ், பேஸ்ட், உண்டியல் வழங்கப்பட்டது.

    இதில் பள்ளி மேம்பாட்டு குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியை பிரேமா நன்றி கூறினார்.

    • அரசு போக்குவரத்து பணிமனையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • திருச்சியில் இருந்து மானாமதுரை வழியாக கமுதி மற்றும் பரமக்குடிக்கு பஸ் இருந்தது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வளர்ந்து வரும் நகரமாகும். இங்கிருந்து 24 மணிநேரமும் வெளி மாவட்டங்களுக்கு செல்ல போக்குவரத்து வசதி உள்ளது. ஆனால் மாவட்ட தலைநகராக உள்ள சிவகங்கையில் இருந்து இரவு 10 மணிக்குமேல் போக்குவரத்து வசதி கிடையாது.

    ஆனாலும் மானா மதுரையில் இருந்து மதுரை மற்றும் ராமேசுவரத்திற்கு எளிதில் சென்று வர போக்குவரத்து வசதி உள்ளது. காரைக்குடி, திருப்பத்தூருக்கு சென்றால் அங்கிருந்து ஊர் திரும்புவதற்கு போதிய பஸ் வசதிகள் இல்லை. இதனால் பயணிகள் கடும் அவதியடைகின்றனர்.

    20 ஆண்டுகளுக்கு முன்பு மானாமதுரை சிப்காட் பகுதியில் அமைக்கப்பட்ட போக்குவரத்து பணிமனையை செயல்படுத்தி மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் மானாமதுரை பகுதியில் இருந்து இரவு- பகல் நேரங்களில் மதுரை, திருச்சி, சிவகங்கை, காரைக்குடி பகுதிகளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வாய்ப்புள்ளது.

    தற்போது மானாமது ரைக்கும் மற்றும் வெளியூர் செல்ல சிவகங்கை பணிமனையில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது. தற்போதுள்ள பணிமனையில் சிமெண்டு தளம், டீசல் பணிமனை, பஸ்கள் பழுது நீக்கும் இடம் டிரைவர்கள், நடத்துநர்கள் தங்க வசதி ஏதும் கிடையாது. பெயரளவில் தினமும் 2 பஸ்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது.

    பல ஆண்டுகளுக்கு முன்பு பரமக்குடியில் இருந்து தஞ்சாவூர், சிதம்பரம் செல்ல மானாமதுரை வழியாக பஸ் இருந்தது. இப்போது கிடையாது. திருச்சியில் இருந்து மானாமதுரை வழியாக கமுதி மற்றும் பரமக்குடிக்கு பஸ் இருந்தது. ஆனால் இப்போது கிடையாது.

    மானாமதுரையில் இருந்து மதுரை செல்ல நேரடியாக பஸ் வசதி கிடையாது. செயல்படாமல் உள்ள பணிமனையை செயல்ப டுத்தி இந்த மேற்கண்ட வழித்தடங்களில் பஸ்களை இயக்க வேண்டும்.மானாமதுரை-மதுரை இடையே நேரடியாக பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் தீவிரமாக செயல்பட வேண்டும் என ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் தெரிவித்தனர்.
    • மழைக்கால பிரச்சினை தொடர்பாக அலுவலகத்தில் இது சம்பந்தமான அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. தலைவர் சண்முகவடிவேல் தலைமை தாங்கினார். துணை தலைவர் மீனாள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயகுமார், தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தலைவர் பேசுகையில், திருப்பத்தூர் ஊராட்சியில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் கண்மாய் மற்றும் நீர்நிலைகளில் உடைப்பு ஏற்படாத வண்ணம் மணல் மூடைகளை அடுக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மழைக்கால பிரச்சினை தொடர்பாக அலுவலகத்தில் இது சம்பந்தமான அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

    தொடர்ந்து கூட்டத்தில் சாலை வசதி, மின் கம்பத்தை சரி செய்ய வேண்டும், பிராமணபட்டி அங்கன்வாடி மையத்திற்கு மின்இணைப்பு வழங்க வேண்டும், ரணசிங்கபுரம் மின்நகர் பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும், கீழநிலை, நெடுமரம், வடக்கு இளையாத்தங்குடி பள்ளிகளை மேம்படுத்த வேண்டும், ஆ. தெக்கூர் அங்கன்வாடி மையத்தில் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை உறுப்பினர்கள் ராமசாமி, சகாதேவன், சுமதி, கலைமகள்ராஜீ, கலைமாமணி, பழனியப்பன் ஆகியோர் வலியுறுத்தினர். இதற்கு அரசு பொறியாளர் பதிலளித்தார்.

    வேளாண் அலுவலர் தனலட்சுமி பயிர் காப்பீடு குறித்து எடுத்துரைத்தார். முன்னதாக மேலாளர் செழியன் வரவேற்றார். மண்டல வட்டார வளர்ச்சி துணை அலுவலர் இளையராஜா நன்றி கூறினார்.

    • மழையால் சேதமடைந்த பகுதிகளில் உடனடியாக சீரமைப்பு பணிகளை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
    • சிறு பாலத்தை பெரிய பாலமாக கட்டுவதற்கான திட்ட மதிப்பீட்டினை தயார் செய்யுமாறு உத்தரவிட்டார்.

    சிவகங்கை

    தமிழகத்தில் தற்போது பருவமழையின் காரணமாக, ஆறுகள், ஏரிகள், குளம், குட்டைகள் ஆகியவைகளில் நீர்வரத்து அதிகமாக காணப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கண்மாய்கள், ஊரணிகள் ஆகியவைகளில் அதிகளவில் நீர்வரத்து காணப்படுகிறது.

    மழைகாலங்களில் பெறப்படும் நீரை முறையாக சேமிப்பதற்கு ஏதுவாக, வரத்து வாய்கால்கள் சீரமைக்கப்பட்டு, தடை யின்றி கண்மாய்கள் மற்றும் ஊரணிகளுக்கு நீர் செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கரைகள் பலப்படுத்தப்பட்டு, மதகுகளிலும் மராமத்துப் பணிகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளது.

    குறிப்பாக, பேரிடா் காலங்களில் எதிர்பா ராதவிதமாக ஏற்படும் விளைவுகளை எதிர்கொ ள்வதற்கு ஏதுவாக, மீட்புப்பணிகளுக்கான தன்னார்வலா்கள் மற்றும் மணல் மூட்டைகள், ஜே.சி.பி. எந்திரங்கள் தயார்நிலையில் உள்ளன.

    தற்போது பெய்து வரும் மழையால் திருப்பத்தூர் உட்கோ ட்டத்தைச் சோ்ந்த செவ்வூர் - கண்டவராயன்பட்டி சாலையில் உள்ள சிறு பாலம் சேதமடைந்து உள்ளது. இதை அமைச்சர் பெரியகருப்பன், கலெக்டர் மதுசூதன்ரெட்டியுடன் பார்வையிட்டு சேதமடைந்த சிறு பாலத்தை பெரிய பாலமாக கட்டுவதற்கான திட்ட மதிப்பீட்டினை தயார் செய்யுமாறு உத்தரவிட்டார்.

    உடனடியாக சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும், ஊரக வளா்ச்சித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத்தொடா்ந்து, திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், அ.வேலங்குடி ஊராட்சியிலுள்ள கருப்பா் கோவில் பகுதியிலுள்ள ஊரணி மழையின் காரணமாக, நிரம்பி, ஊரணியின் சுற்று ச்சுவா் இடிந்து பழுது ஏற்பட்டுள்ளது.

    அதனையும் தற்காலிமாக, மணல் மூட்டைகளை கொண்டு சீரமைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொண்டு, சுற்றுச்சுவா் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்வதற்கும் அலுவலா்களுக்கு அமைச்சா் பெரியகருப்பன் அறிவுறுத்தினார்.

    • தேவகோட்டையில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ்குமார் தலைமையில் போலீசாா தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் காவல்துறையினர் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் நபர்களை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். தேவகோட்டை நகரில் இளைஞர்களிடையே கஞ்சா புழக்கத்தில் உள்ளது.

    இதனை தடுக்க துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ்குமார் தலைமையில் போலீசாா தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அழகருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவர் மற்றும் போலீசார் வாகன சோதனையை ஈடுபட்டனர்.

    அப்போது பழைய சருகணி ரோடு இம்ரான் நகரை சேர்ந்த சலீம் மகன் முகமது இஸ்மாயில் (வயது 20), பழைய சருகணி ரோடு சேக் அப்துல்லா மகன் முகமது யூசுப் (23) ஆகிய இருவரும் அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்தனர். அவர்களை பிடித்து சோதனை செய்தபோது, அவர்களிடமிருந்து 1 கிலோ 800 கிராம் கஞ்சா இருந்தது.

    இதையடுத்து அவர்களிடம் இருந்த கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் எங்கிருந்து கஞ்சா வாங்கி கடத்தி வந்தார்கள்? என்று இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

    • பள்ளி, கல்லூரி மாணவர்கள் திருக்குறள் முற்றோதலில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்,
    • இந்த தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உலகப் பொதுமறையாம் திருக்குறளில் உள்ள கருத்துக்களை மாணவ- மாணவிகள் அறிந்து கொண்டு கல்வி அறிவுடன் நல்ல ஒழுக்கம் மிக்கவர்களாக விளங்கச் செய்யும் வகையில் 1,330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் திறன்பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றிதழும் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தின்கீழ் 2022-23-ம் ஆண்டிற்கு மாணவ மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. திருக்குறம் முற்றோதலில் பங்கேற்கும் மாணவ மாணவிகள் 1,330 குறட்பாக்களையும் ஒப்புவிக்கும் திறன்பெற்றவர்களாக இருக்க வேண்டும். திருக்குறளில் உள்ள இயல் எண், அதிகாரம், குறள் எண், குறளின் பொருள், திருக்குறளின் அடைமொழி, சிறப்புகள், சிறப்புப் பெயர்கள், உரை எழுதியோர் போன்றவற்றை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாக கொள்ளப்பெறும்.

    திருக்குறள் முற்றோதலில் பங்கேற்கும் மாணவ- மாணவிகள் சிவகங்கை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள திறனறிகுழுவின் முன்னி லையில் நேராய்வுக்கு உட்படுத்தப்பட்டு குறள் பரிசுக்குரியோர் பட்டியல் சென்னை, தமிழ் வளர்ச்சி இயக்குநருக்கு சிவகங்கை மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநரால் பரிந்துரைக்கப்படும்.

    ஏற்கனவே முற்றோதலில் பங்கேற்று பரிசு பெற்றவர்கள் மீண்டு்ம் கலந்து கொள்ள இயலாது. திருக்குறள் முற்றோ தலுக்கான விண்ணப்பங்களை சிவகங்கை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalar chithurai.com என்ற இணையதளத்திலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    கூடுதல் விவரங்களுக்கு 04575-241487 (99522 80798) என்ற தொலைபேசி எண்ணி்ல் தொடர்பு கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பெற்ற விண்ணப்பங்களை மாணவ மாணவியர் வருகிற 25-ந் தேதிக்குள் கீழ்க்காணும் முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.

    முகவரி: மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகம், 2-ம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சிவகங்கை 630 561.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மானாமதுரை அருகே உள்ள தெ.புதுக்கோட்டை எம்.கே.என். நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா நடந்தது.
    • மாணவர்கள் பல்வேறு வேடங்களில் நடித்து தேசப்பற்றை வெளிப்படுத்தினர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள தெ.புதுக்கோட்டை எம்.கே.என். நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா நடந்தது. தலைமை ஆசிரியர் சிவகுருநாதன் தலைமை தாங்கினார். மாணவர்கள் பல்வேறு வேடங்களில் நடித்து தேசப்பற்றை வெளிப்படுத்தினர். இதில் ஆசிரியர்கள்- மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு வகுப்பிலும் போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைத்து மாணவர்களுக்கும் மதியம் சிறப்பு விருந்தாக சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.

    • நெற்குப்பையில் பெரியகண்மாய் நிரம்பியதால் கிராம மக்கள் வழிபாடு செய்தனர்.
    • தேங்காய், பழம், வெற்றிலை வைத்து பூஜை செய்தனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் கனமழையின் காரணமாக 3 கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பெரியகண்மாய் முழுகொள்ளவை எட்டியது.

    இந்த கண்மாயில் இருந்து சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பெரியகண்மாய் முழுகொள்ளவை எட்டியவுடன் பாரம்பரிய முறைப்படி நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள கிராமத்தினர் ஒன்றுகூடி சிறிய மண் பானையில் கருப்பு-வெள்ளை பொட்டு வைத்து, பொட்டுகலயத்தை கீழத்தெருவில் உள்ள கோவிலில் வழிபாடு செய்தனர்.

    அதனைத்தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக சென்று பெரியகண்மாய் மடைபகுதி கரையில் பாரம்பரிய முறைப்படி ஊர்முக்கியஸ்தர்கள், கிராமமக்கள் ஒன்றுகூடி தேங்காய், பழம், வெற்றிலை வைத்து பூஜை செய்தனர். பின்னர் ஆழமான இடத்தில் குச்சியின் நுனிப்பகுதியில் வைக்கோல் வைத்து கட்டப்பட்டு அதன்மேல் பெரியகண்மாய் முழுகொள்ளவை எட்டியதற்கு அடையாளமாக பெண்கள் குலவையிட, வாண வேடிக்கையுடன் பொட்டுகலையம் வைக்கப்பட்டது.

    பெரியகண்மாய் முழுகொள்ளவை எட்டி யவுடன் பாரம்ப ரிய முறைப்படி பொட்டுக்கலை யம் வைத்து வழிபாடு செய்வது இந்த ஆண்டு நல்லமழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது கிராமமக்களின் ஐதீகமாகும்.

    பெரிய கண்மாய் முழுகொள்ளவை எட்டும்போதல்லாம் திருவிழா போல் கொண்டாடி மகிழ்கிந்து வருகின்றனர். இந்த விழாவில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சங்கர், உதவி பொறியாளர் ஆனந்த், உதவியாளர் முரளி, மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

    ×