என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • சிவகங்கையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • பல்வேறு துறைகளின் சார்பில் 69 பயனாளிகளுக்கு ரூ.40.84 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது.

    இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறு டிவாழ்வுத்துறை உதவித் தொகை, மாற்றுத்திறனா ளிகளுக்கான உபக ரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொது மக்களிடம் இருந்து 376 மனுக்கள் பெறப்பட்டன.

    தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இதில் மாவட்ட பிற்படு த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூக பாதுகாப்பு திட்டம், மாவட்ட தொழில் மையம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 69 பயனாளிகளுக்கு ரூ.40.84 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கினார். மேலும், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் ஜவகர்லால் நேரு பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவில நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற 5 பள்ளி மாணவிகளுக்கும், 3 கல்லூரி மாணவிகளுக்கும் பரிசுத்தொகை மற்றும் பாராட்டு

    சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் நாகராசன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் காமாட்சி, மாவட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேல், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தனலட்சுமி, மாவட்ட மாற்றுத்தி றனாளிகள் நலத்துறை அலுவலர் கதிர்வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 30-ந் தேதி நடக்கிறது.
    • சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திற னாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், அவா்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட அளவில் நடைபெற உள்ளது.

    வருகிற 30-ந் தேதி(புதன்கிழமை) காலை 10 மணியளவில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள வளா்ச்சி மன்ற கூட்ட அரங்கில் (தரைதளத்தில்) மாற்றுத்திறனா ளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

    இதில் மாற்றுத்திற னாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், UDID பதிவு செய்தல், ஆதார் அட்டை பதிவு, முதலமை ச்சாின் விரிவான மருத்துவ க்காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு, பிறதுறைகளில் செயல்படுத்தப்படும் திட்ட ங்களுக்கான கோரிக்கை மனுக்கள் பெறுதல், உதவி உபகரணங்கள் வழங்கு வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுதல், வங்கி கடனுதவி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், வேலைவாய்ப்பு பயிற்சி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் பராமரிப்பு உதவித்தொகை வழ ங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், வருவாய்துறையின் மூலம் உதவித்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், 18-வயது குறைவுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு வருவாய்துறையின் மூலம் உதவித்தொகை வழங்க நடவடிக்கை ஆகியவை மேற்கொள்ளப்படும்.

    மேற்குறிப்பிட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஒவ்வொரு பதிவிற்கும் தனித்தனியாக பாஸ்போர்்ட் அளவு புகைப்படம் -4, குடும்ப அட்டை நகல் (அல்லது) ஆதார் அட்டை நகல் (அல்லது) இருப்பிடச்சான்று ஆகிய வற்றுடன் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மானாமதுரையில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
    • கார்த்திகை சோமவார பிரதோஷ பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம். மானாமதுரை வைகைஆற்று கரையில் உள்ள ஆனந்த வல்லி-சோமநாதர் கோவிலில் கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை முன்னிட்டு சிறப்பு யாகம், சங்காபிஷேகம் நடந்தது. மாலையில் நந்தி, சோமநாதருக்கு பிரதோஷ காலத்தில் 16 வகை அபிஷேகம் செய்து சிறப்பு தீபாராதனையும், வெள்ளி ரிஷப வாகனத்தில் கோவில் பிரகாரத்தில் வலம் வரும் நிகழ்ச்சியும் நடந்தது.

    இதேபோல் சிருங்கேரி சங்கரமடம் சந்திரமவுலீசுவரர், நாகலிங்கம் நகர் அண்ணாமலையார், ெரெயில் நிலையம் எதிரில் உள்ள பூரணசக்கரவிநாயகர் கோவிலில் உள்ள காசிவிசுவநாதர், இடைக்காட்டூர் மணிகண்டேசுவரர், வேம்பத்தூர் கைலாசநாதர், திருப்புவனம் புஸ்பவனேசுவரர், திருப்பாசேத்தி அழகேசுவரர், மேலெநெட்டூர் சொர்ணவாரீசுவரர், குறிச்சி வழிவிடு பெரிய நாச்சிகோவிலில் உள்ள காசியில் இருந்து கொண்டு வந்து பிரதிஷ்டை செய்த காசிவிசுவநாதர் ஆகிய கோவில்களில் கார்த்திகை சோமவார பிரதோஷ பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    • திருப்பத்தூரில் ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் பேரணி நடந்தது.
    • அண்ணா சிலைக்கும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கும் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நகரில் அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் புதிய மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர பேரூர் மற்றும் சார்பு அணிக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தும் வகையில் பேரணி நடந்தது. காந்தி சிலையில் இருந்து நடை பயணமாக புறப்பட்டு அண்ணா சாலை வரை ஊர்வலம் சென்றது. அண்ணா சிலைக்கும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கும் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். இதில் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் பங்கேற்று பேசினார்.

    மாவட்டச் செயலாளர் கே.ஆர். அசோகன், தொகுதி செயலாளர் பத்மநாபன், பொதுக்குழு உறுப்பினர் செந்தில்வேல், மாவட்ட துணை செயலாளர் தமிழரசி, ஒன்றிய செயலாளர்கள் சிவசுப்பிரமணியன், எஸ்.வி. நாகராஜன், தேவேந்திரன், கணேசன், உதயகுமார், விஜயராஜ், சித்திரை செல்வம், செந்தில்குமார், கண்ணன், முத்துக்குமார், முருகேசன், சுப்பிரமணியன், பாண்டி, பேரூர் செயலாளர்கள் ஜெயராமன், கருப்பையா, ராஜு, ராமகிருஷ்ணன், திருஞானம், ஆனந்தராஜ், விஜயமணி, பவானி, சரவணன், மோகன், கணேசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திருப்பத்தூர் நகர செயலாளர் எம்.முருகேசன் செய்திருந்தார்.

    • திருப்பத்தூரில் நடந்த கூட்டுறவு வாரவிழாவில் ரூ.30.87 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • இதில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பெரியகருப்பன் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் கூட்டுறவுத்துறையின் சார்பில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடந்தது. கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார்.

    எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, மாங்குடி முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பெரிய கருப்பன் ஆகியோர் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களை வழங்கினா்.

    கூட்டுறவுத்துறை அமைச்சா் ஐ.பெரியசாமி பேசியதாவது:-

    இந்தியாவில் முதல் கூட்டுறவு சங்கம் 1904-ல் திருவள்ளுவா் மாவட்டம் திரூர் என்ற கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 213 வகையான கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இதுதவிர வீட்டு வசதித்துறை, பால்வளத்துறை, சமூக நலத்துறை மற்றும் பட்டுவளா்ச்சித்துறை போன்ற துறைகளிலும் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

    சிவகங்கை மாவட்த்தில் 2022-23 ஆண்டில் 2022 முடிய அனைத்து கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் பயிர்கடன் உள்பட மொத்தம் 1 லட்சத்து 24 ஆயிரத்து 139 பேருக்கு ரூ.955.67 கோடியில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

    கூட்டுறவுத்துறையில் பணியாற்றி வரும் அனைத்து பணியாளா்களுக்கும் பதவி உயா்வு மற்றும் ஊதிய உயா்வு வழங்கிடவும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், நகர வங்கி ஆகியவைகளில் பணியா ற்றும் அனைத்து நிலைகளை சார்ந்தோர்களுக்கும் தனி நிதியம் உருவாக்கி, அவா்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அமைச்சா் பெரியகருப்பன் பேசுகையில், கூட்டுறவே நாட்டுயா்வு என்ற அடிப்ப டையில், கூட்டுறவுத்துறை விவசாயிகள் மற்றும் பொது மக்களின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்யும் துறையாக திகழ்ந்து வருகிறது என்றார்.

    விழாவில் 3 ஆயிரத்து 586 பயனாளிகளுக்கு ரூ.30கோடியே 86 லட்சத்து 74 ஆயிரத்து 953 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

    இதில் கூட்டுறவு சங்க ங்களின் இணைப்பதிவாளா் ஜினு, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநா் ரவிச்சந்திரன், பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தலைவா் சேங்கைமாறன், வேளாண்மைத்துறை இணை இயக்குநா் தனபால், மாவட்ட வழங்கல் அலுவலா் ரத்தினவேல், திருப்பத்தூர்பேரூராட்சி தலைவா் கோகிலாராணி, திருப்பத்தூர்ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவா் சண்முகவடிவேலு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மண்பாண்ட பொருள்கள் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது.
    • இங்கு தயார் செய்யபடும் மண்பாண்டபொருள்கள் மாலத்தீவு, அந்தமானுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மண்பாண்ட பொருள்கள் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. இங்கு தயார் செய்யபடும் மண்பாண்டபொருள்கள் மாலத்தீவு, அந்தமானுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

    இங்கு ஜனவரி முதல் டிசம்பர் வரை மானா மதுரை மண்பாண்ட கூட்டுறவு சங்கம் மற்றும் குலாலர் தெரு, உடைகுளம் பகுதியில் வீடுகள் தோறும் மண்பாண்ட பொருள்களை ஆண்டு முழுவதும் தயார் செய்து வருகின்றனர்.

    அகிக அளவில் கோடை காலத்தில் மண்கூஜா, பானை, திருவிழா காலங்க ளில் அக்கினி சட்டிகள், தீபவிளக்குகள், சுவாமி சிலைகள் செய்யும் பணி நடைபெறும். தற்போது கார்த்திகை தீபதிரு விழாவிற்காக வீடுகள் தோறும் வித, விதமான கார்த்திகை தீப விளக்குகளை தயார் செய்யும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


    கலைநயம் மிக்க கார்த்திகை தீப விளக்குகள்.

    இந்த ஆண்டில் புதிய அறிமுகமாக கற்பக விநாயகர், முருகன், சரசுவதி, அம்மன், பெருமாள் உருவங்களுடன் தீப விளக்குகளை செய்து வர்ணம் தீட்டி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். இதுதவிர சரவிளக்குகள், சிறிய, பெரிய அளவிலான கிளியான்சட்டிகள், குபேர விளக்கு, தேங்காய் விளக்கு, சிவலிங்கம் விளக்கு, மண் குத்து விளக்கு எனதயார் செய்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மானாமதுரை மண் விளக்குகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பல ஊர்களில் இருந்து வியா பாரிகள் இங்கு வந்து உற்பத்தி விலைக்கு மண்பாண்ட பொருட்களை வாங்கி வாகனங்களில் எடுத்து செல்கின்றனர்.

    மானாமதுரையில் தயாராகும் மண்பாண்ட பொருட்கள் உறுதி மிக்கது என்பதால் சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த செல்வந்தர்கள் காரில் குடும்பத்தினோரோடு வந்து மண்பாண்ட பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    ஏராளமான இசை கலைஞர்கள் இங்கு மண்ணில் தயார் செய்யப்படும் கடம் இசை கருவியை வாங்கி செல்கின்றனர். தொடர்மழையால் சிலநாட்கள் மண்பாண்ட பொருட்கள் தயார் செய்ய முடியாத நிலைஇருந்தது.

    தற்போது மழைகுறைந்து வெயில் அடிப்பதால் கார்த்திகை தீப விளக்குகள் செய்யும் பணியில் மானாமதுரை மண்பாண்ட தொழிலாளர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

    • சிவகங்கை அருகே உள்ள தனியார் பள்ளியில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டி நடந்தது.

    சிவகங்கை

    சிவகங்கை அருகே உள்ள சுந்தரநடப்பு தனியார் பள்ளியில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டி நடந்தது. இதில் 234 மாணவ-மாணவிகள் பங்கேற்று விளையாடினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி மாணவ-மாணவிகளுக்கு பதக்கங்களை அணிவித்தார். முன்னதாக மாணவர்களுடன் கலெக்டரும் செஸ் விளையாடி உற்சாகப்படுத்தினார். இதில் முதல்வர் இக்னேஷியல்தாஸ், செயலாளர் கண்ணன், பிரகாஷ், மணிமாறன் மற்றும் மாவட்ட செஸ் வீரர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    • திருப்பத்தூர் அரசு பள்ளியில் புத்தகப்பை இல்லா தினம் கடைபிடிக்கப்பட்டது.
    • தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பாசிரியர்களின் சொந்த நிதியிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உணவு வழங்கினர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் உள்ள புதுப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் புத்தக பை இல்லா நாள் கொண்டாடப்பட்டது. மாணவ-மாணவிகளுக்கு பாடத்திட்டங்கள் குறித்த அச்சம் மற்றும் அதனால் ஏற்படும் மன அழுத்தம் முதலியவற்றை போக்கும் வகையில் புத்தகப்பை இல்லா நாளாக கடைபிடிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் மாணவ-மாணவிகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்ற புத்தகங்களை எளிமையோடு புரிந்து கொள்ளும் வகையில் செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சிலம்பாட்டம், குங்பூ போன்ற பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பாசிரியர்களின் சொந்த நிதியிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. 

    • சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சிறார் நிதி-குழந்தைகள் உரிமைகள் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • கேந்திர வித்யாலயா பள்ளி மாணவ-மாணவிகள் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சிவகங்கை கேந்திர வித்யாலயா பள்ளியில் சிறார் நிதி மற்றும் குழந்தைகள் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் சார்பு நீதிபதி பரமேசுவரி தலைமையில் நடந்தது.

    முகாமில் அவர் பேசியதாவது:-

    மாணவர்கள் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். இன்றைய மாணவர்கள் தன்னைவிட வேறு ஆள் இல்லை என்பது போன்ற தவறான புரிதல் மூலம் தங்களை வீணாக்கி கொள்வதுடன், பெற்றோர்களுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தி விடுகிறார்கள்.

    மாணவர் சமுதாயம் சீரழிந்து வருவதை தடுக்கும் வகையில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பல்வேறு விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறது. மாணவர்கள் சிறந்த முறையில், ஒழுக்கத்துடன் நல்ல முறையில் கல்வி கற்று சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைந்து, சமுதாயத்தில் ஒவ்வொருவரும் தனித்தன்மையில் சேவை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முகாமில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்த், யோகா மருத்துவர் தங்கம், உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணக்குமார், பள்ளி முதல்வர் ஜான் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கேந்திர வித்யாலயா பள்ளி மாணவ-மாணவிகள் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தில் பயனாளிகள் தேர்வு செய்யும் முகாம் வருகிற 24,25-ந் தேதிகளில் நடக்கிறது.
    • மாத வருமானம் ரூ.25 ஆயரத்துக்கு மிகாமலும் உள்ளது என சான்றளிக்க வேண்டும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரி யம் மதுரை கோட்டத்தின் மூலம் "அனைவருக்கும் வீடு" திட்டத்தின் கீழ் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம் சிவகங்கை தாலுகா, பையூர்பிள்ளை வயல் திட்டப்பகுதி கட்டி முடிக்கப்பட்டுள்ள 608 அடுக்கு மாடி குடியிருப்புகள் பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

    இந்த திட்டத்தில் கட்டப்படும் குடியிருப்புகளுக்கு சிவகங்கை நகராட்சி எல்கைக்குட்பட்ட அரசுக்கு சொந்தமான நீர்நிலை வகைப்பாடு கொண்ட ஆட்சேபகரமான நீர்நிலைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான இதர புறம்போக்கு நிலங்களில் குடியிருந்து வரும் ஆக்கிரமிப்பாளர்கள் பட்டியல் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பரிந்துரைக்கப்பட்டு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் ஒப்புதல் பெறப்பட்ட பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்வதில் முன்னுரிமை அளிக்கப்படும்.

    மேலும், நகர்புற வீடற்ற பொருளாதாரத்தில் நலி வடைந்த பிரிவினர்களுக்கு முன்னுரிமை அளித்து குடி யிருப்புகள் ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தில் ஒரு குடியிருப்புக்கான செலவுத் தொகையில் மத்திய மற்றும் மாநில அரசின் மானியத்தொகை போக மீதமுள்ள பயனாளிகளின் பங்குத்தொகையை பயனாளிகள் செலுத்த வேண்டும். ''அனைவருக்கும் வீடு" திட்ட விதிகளின்படி மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு மேற்கண்ட திட்டப்பகுதி களில் கட்டப்படுகின்ற அடுக்குமாடி குடியிருப்புகள் தேவைப்படுவோர் இந்தியாவில் எனது பெயரிலோ, எனது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ வேறு எங்கும் வீடுகள் இல்லை எனவும், மாத வருமானம் ரூ.25 ஆயரத்துக்கு மிகாமலும் உள்ளது என சான்றளிக்க வேண்டும்.

    பயனடைய விரும்பும் பயனாளிகள் குடும்ப தலைவர் மற்றும் குடும்ப தலைவி ஆகிய இருவருடைய ஆதார், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், பையூர்பி ள்ளைவயல் அடுக்குமாடி குடியிருப்பு திட்டப்பகுதி, சிவகங்கை என்ற முகவரியில் வருகிற 24, 25-ந்தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் பயனாளிகள் ரூ.5 ஆயிரம் மதிப்பிற்கான கேட்பு காசோலையினை The Executive Engineer TNUu;DB PIU - I Madurai) என்ற பெயரில் எடுத்து (மனுதார், பயனாளியின் ஆதார் நகல் (கணவன் மற்றும் மனைவி), வண்ணப்புகைப்படம் - 2, குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல்) ஆகியவற்றை மனுவுடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

    இந்த தொகையானது பயனாளியின் பங்களிப்பு தொகையில் வரவு வைக்கப்பட்டு மீத தொகையினை குடியிருப்பு ஒதுக்கீடு செய்யும்போது பயனாளிகள் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தேசிய காப்பீடு திட்டத்தின் கீழ் விவசாயிகள் கால்நடைகளை காப்பீடு செய்யலாம்.
    • இந்த தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்ட வேளாண் குடிமக்களின் கால்நடை செல்வங்களை பாதுகாக்க 2022-23-ம் ஆண்டிற்கான தேசிய கால்நடை காப்பீடு திட்டத்தின் கீழ் தங்கள் கால்நடைகளை காப்பீடு செய்து பயன்பெறலாம்.

    1100 அலகுகள் குறியீடாக பெறப்பட்டுள்ள இந்த மாவட்டத்தில் விருப்பம் உள்ள கால்நடை வளர்க்கும் விவசாயிகள் கால்நடைகளை அரசு மானியத்துடன் கூடிய காப்பீடு செய்ய அருகிலுள்ள அரசு கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்து வரை அணுகி தங்கள் கால்நடைகளை காப்பீடு செய்து கொள்ளலாம்.

    அரசு மானியமாக வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு காப்பீடு சந்தாத்தொகையில் 70 சதவீதம் மானியமும் பொதுப் பிரிவினர்களுக்கு 50 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது.

    காப்பீடு செய்யப்படும் கால்நடைகளுக்கு காது வில்லைகள் பொருத்த ப்படும். காப்பீடு செய்யப்பட்ட கால்நடைகள் இறக்க நேரிட்டால், கால்நடை உதவி மருத்துவரால் காதுவில்லைக்குரிய இறந்த கால்நடையை பரிசோதனை செய்து அதற்கான பிரேத பரிசோதனை சான்றிதழுடன் காப்பீடு நிறுவனத்தில் இருந்து காப்பீடு தொகை பெற்றுக் கொள்ளலாம்.

    இந்த திட்டம் தொடர்பான தகவல்களை சிவகங்கை, காரைக்குடி கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர்களின் கைப்பேசி எண்கள்: 94450 32581, 94450 32556 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இளையான்குடியில் அரசு அலுவலர்களுக்கான மருத்துவ முகாமை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • மாவட்ட மருத்துவ அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அரசு அலுவலர்கள், அவர்களது குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி முகமை மற்றும் ஊராட்சித் துறை சார்பில் அரசு அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர் குடும்பத்திற்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

    மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. சுபமதியரசன், ஒன்றிய செயலாளர் தமிழ்மாறன், மாவட்ட மருத்துவ அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அரசு அலுவலர்கள், அவர்களது குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

    ×