என் மலர்
சேலம்
- அரசு ஆஸ்பத்திரி பிரதான நுழைவு வாயில் முன்பு திரண்டு அங்கு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- நுழைவு வாயில் முன்பு கல்லூரி பஸ்கள் நிறுத்தப்பட்டன.
சேலம்:
சேலம் பள்ளப்பட்டி முனியப்பன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (27). இவர் சேலம் கல்லாங்குத்து பகுதியில் நேற்று இரவு ஒரு சூப் கடைக்கு தகர சீட்டு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தகர சீட்டை எடுத்தபோது மேலே சென்று கொண்டிருந்த மின் கம்பியில் தகர சீட்பட்டு மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு அங்கு இருந்தவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் ஆஸ்பத்திரியில் சோகத்தை ஏற்படுத்தியது. சம்பவம் குறித்து டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பலியான வாலிபர் தினேசுக்கு திருமணம் ஆகி சந்தியா (25) என்ற மனைவியும், 1½ வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.
மனைவி சந்தியா கையெழுத்து போட்டால் தான் தினேஷ் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும். இதற்காக தினேஷ் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தனது கணவர் உடலை வாங்க மறுத்து சந்தியா மற்றும் அவரது உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிரதான நுழைவு வாயில் முன்பு திரண்டு அங்கு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது ஆஸ்பத்திரி வளாகத்தில் இருந்து அரசு நர்சிங் கல்லூரி மற்றும் அரசு மருத்துவ கல்லூரி பஸ் ஆகியவை வெளியே செல்வதற்காக புறப்பட்டு வந்தது. அப்போது நுழைவு வாயில் வரை வந்த பஸ்கள் நுழைவு வாயில் முன்பு மக்கள் அமர்ந்து போராட்டம் செய்ததால் பஸ்கள் செல்ல முடியவில்லை. இதனால் நுழைவு வாயில் முன்பு கல்லூரி பஸ்கள் நிறுத்தப்பட்டன.
இது குறித்து தகவல் அறிந்ததும் சேலம் டவுன் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணா தலைமையிலான போலீசார் அங்கு வந்து சந்தியா மற்றும் அவரது உறவினர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அனைவரும் தர்ணா போராட்டத்தை கைவிடுமாறும், உங்களது கோரிக்கைகள் குறித்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர்.
அப்போது சந்தியா கண்ணீர் மல்க கூறுகையில், எனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. எனது கணவர் இறந்து விட்டதால் வருமானத்திற்கு வேறு வழியில்லை. எனவே இழப்பீடாக ரூ.30 லட்சம் சம்பந்தப்பட்ட ஓட்டல் உரிமையாளர் வழங்க வேண்டும். அப்போது தான் எனது கணவர் உடலை வாங்குவேன் என்றார்.
இதனால் அவரிடம் தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் ஆஸ்பத்திரி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- 30 பேர் சேலம் அரசு ஆஸ்பத்திரி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
- சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
சேலம்:
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 48 பேர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஏற்கனவே 17 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டனர். இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த கருணாபுரம் மதன் (46) என்பவர் இன்று அதிகாலை 3.30-மணிக்கு இறந்துவிட்டார்.
இதனால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து தொடர்ந்து 30 பேர் சேலம் அரசு ஆஸ்பத்திரி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் பெயர் விவரம் வருமாறு-
கள்ளக்குறிச்சி கருணாபுரம் சிவா (30), கருமாபுரம் அருண் (38), கிருஷ்ணமூர்த்தி (55), கருணாபுரம் பெரியசாமி (65), கள்ளக்குறிச்சி மாதவசேரி சந்திரசேகரன் (27), கள்ளக்குறிச்சி திருவாங்கூர் கலியன் (64), கள்ளக்குறிச்சி ஏமப்பேர் செல்வராஜ் (37), கள்ளக்குறிச்சி முத்து (55), கருணாபுரம் கணேசன் (59), கருணாபுரம் சுரேஷ் (47 ), கருணாபுரம் சரசு (52), கருணாபுரம் ரவி (44), சங்கராபுரம் மனோஜ்குமார் (21), சங்கராபுரம் நரசிம்மன் (21), சின்னசேலம் கருப்பன் (62), நாகலூர் சண்முகம், கள்ளக்குறிச்சி கோட்டைமேடு ஜான்பாஷா (52), கள்ளக்குறிச்சி அன்பு (50), கோட்டைமேடு பார்த்திபன் (27), கருணாபுரம் பாஸ்கர் (51), கள்ளக்குறிச்சி மணி வண்ணன் (48), கருணாபுரம் விஜயகுமார் (42), ரஞ்சித்குமார் (37 ), மணிவண்ணன், (60), கார்த்திக்கேயன் (36) , விளான்தாங்கல் ரோடு நசீர் (53), முடியலூர் சாமிதுரை, சங்கராபுரம் சாமுண்டி (70), மாரிமுத்து (55) ஆகிய 30 பேர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
- 70 கிராமங்களிலும் சட்டத்துக்கு புறம்பாக கள்ளசாராயம் காய்ச்சி விற்கப்படுகிறதா? என்று சோதனை நடத்தப்பட்டது.
- ஏற்காடு மலை கிராமங்களில் சாராய சோதனை தொடரும்.
ஏற்காடு:
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவத்தையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் படி சேலம் மாவட்டத்திலும் போலீசார் பல்வேறு இடங்களில் சாராயம் விற்க்கப்படுகிறதா? என்று தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஊரக உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அமல அட்மின் தலைமையில் ஏற்காடு இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் ஏற்காடு மலை பகுதிகளில் உள்ள கிராமங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
ஏற்காடு வனப்பகுதிகளில் உள்ள 70 கிராமங்களிலும் சட்டத்துக்கு புறம்பாக கள்ளசாராயம் காய்ச்சி விற்கப்படுகிறதா? என்று சோதனை நடத்தப்பட்டது.
ஏற்காடு போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசார் தனித்தனி குழுவாக பிரிந்து ஒவ்வொரு கிராமங்களிலும் சந்தேகப்படும் நபர்களின் வீடுகள் மற்றும் பழைய சாராய வியாபாரிகளின் வீடுகளில் தீவிர சோதனை நடத்தினர்.

மேலும் ஆத்துஓடைகள், வனப்பகுதிகளிலும் சாராயம் காய்ச்சப்படுகிறதா? என்று போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். விடிய, விடிய போலீசார் மலை கிராமங்களில் அதிரடி சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து போலீசார் கூறும் போது, சட்டத்துக்கு புறம்பாக யாராவது சாராயம் காய்ச்சி விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மலை கிராமங்களில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை ஊர்தலைவர்கள் கண்டறிந்து ஏற்காடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டனர்.
இது குறித்து ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் கூறும் போது. ஏற்காடு மலை கிராமங்களில் சாராய சோதனை தொடரும். சட்டத்துக்கு புறம்பாக யாராவது மது மற்றும் சாராயம் காய்ச்சினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து உள்ளார்.
- அரசு ஆஸ்பத்திரி வளாகம் மற்றும் பிணவறை முன்பும் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- 10 பேரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பபட்டது.
சேலம்:
கள்ளக்குறிச்சி அருகே கருணாபுரம் பகுதியில் விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை 100-க்கும் மேற்பட்டோர் வாங்கி குடித்தனர். அதில் பலருக்கு வாந்தி, மயக்கம், கண் எரிச்சல், வயிற்று வலி ஏற்பட்டது.
இதையடுத்து 100-க்கும் மேற்பட்டோரை உறவினர்கள் அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அவர்களில் 47 பேர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்டனர்.
இதில் நேற்று முன்தினம் இரவு கள்ளக்குறிச்சி மாதவசேரியை சேர்ந்த நாராயணசாமி (65), வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்த ராமு (50), கருணாபுரத்தை சேர்ந்த சுப்ரமணி (60) ஆகியோர் இறந்தனர். நேற்று கோட்டமேட்டை சேர்ந்த ஆனந்தன் (50), துர்க்கம் ரோடு பகுதியை சேர்ந்த ரவி (60), கருணாபுரம் விஜயன் ( 59), பி. ராஜேந்திரன் (55), சேஷ சமுத்திரத்தை சேர்ந்த எஸ்.ராஜேந்திரன், மற்றொரு ஆனந்தன் (55), கோட்ட மேட்டை சேர்ந்த மனோஜ்குமார் (33), கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் (65), கருணாபுரத்தை சேர்ந்த நாகபிள்ளை (39) ஆகிய 9 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
மேலும் இன்று அதிகாலை கோட்டைமேடு பாலு (50), மற்றொரு ராஜேந்திரன் (60), மாதவன் சேரியை சேர்ந்த வீரமுத்து (33) ஆகியோர் அடுத்தடுத்து இறந்தனர். இதனால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்களில் சாவு எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுது புரண்டனர்.
இதில் 10 பேரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பபட்டது. அவர்களது உடல்கள் சொந்த ஊரில் இறுதி சடங்கு செய்யப்பட்டது. மற்றவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதனால் அரசு ஆஸ்பத்திரி தீவிர சிகிச்சை பிரிவு முன்பும், பிணவறை முன்பும் உறவினர்கள் அதிக அளவில் திரண்டுள்ளனர்.
மேலும் கண்ணபுரம் சிவா (30), கருமாபுரம் அருண் (38), கிருஷ்ணமூர்த்தி (55), கருணாபுரம் பெரியசாமி (65), கள்ளக்குறிச்சி மாதவசேரி சந்திரசேகரன் (27), கள்ளக்குறிச்சி திருவாங்கூர் கலியன் (64), கள்ளக்குறிச்சி ஏமப்பேர் செல்வராஜ் (37), கள்ளக்குறிச்சி முத்து (55), கருணாபுரம் கணேசன் (59), கருணாபுரம் சுரேஷ் (47 ), கருணாபுரம் சரசு (52), சங்கராபுரம் நரசிம்மன் (21), சின்னசேலம் கருப்பன் (62), கள்ளக்குறிச்சி கோட்டை மேடு ஜான்பாஷா (52), கள்ளக்குறிச்சி அன்பு (50), பார்த்திபன் (27), கருணாபுரம் மதன் (46), கருணாபுரம் பாஸ்கர் (51), கள்ளக்குறிச்சி மணிவண்ணன் (48), கருணாபுரம் விஜயகுமார் (42), ரஞ்சித்குமார் (37 ), மணிகண்டன் (60), கார்த்திக்கேயன் (36) உள்பட 32 பேர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 47 பேரில் 15 பேர் உயிரிழந்து விட்டனர். மீதமுள்ள 32 பேருக்கு டாக்டர்கள் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதனால் உறவினர்கள் கலக்கத்தில் உள்ளனர். இதையொட்டி அரசு ஆஸ்பத்திரி வளாகம் மற்றும் பிணவறை முன்பும் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- 50 லிட்டர் பாக்கெட் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆத்தூர்:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷசாராயம் குடித்த வர்களின் சாவு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சேலம் மாவட்ட எல்லைகளில் தீவிர கள்ளச்சாராய வேட்டை நடத்த சேலம் சரக டி.ஐ.ஜி. உமா மற்றும் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் அருகே உள்ள சேலம் மாவட்ட எல்லையான தலை வாசல், ஆத்தூர், மணிவிழுந்தான், கல்வராயன்மலை கிராமங்களில் போலீசார் தீவிரமாக கள்ளச்சாராய சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் எல்லையில் உள்ள சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட ராமசேஷபுரம், சிறுவாச்சூர், மணிவிழுந்தான் ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக தலைவாசல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உடனடியாக போலீசார் அந்த பகுதிகளுக்கு சென்று சோதனை நடத்தினர். இதில் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த சிறுவாச்சூர் பகுதியை சேர்ந்த பால்ராஜ் (வயது 25), ராமசாமி (58) மற்றும் காமக்காபாளையம் பகுதியை சேர்ந்த பெரியம்மாள் (60), வடகுமறை பகுதியை சேர்ந்த சிவகாமி (60) ஆகிய 2 பெண்கள் உள்பட 4 பேர் பிடிபட்டனர். இதையடுத்து அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 50 லிட்டர் பாக்கெட் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
மேலும் அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கள்ளச்சாராய விற்பனையில் தொடர்பு உடைய மற்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
- சேலம்-ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கேட்டிங் பயிற்சியில் மாணவர்கள் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
- தேசிய நெடுஞ்சாலையில் மாணவர்களுக்கு ஆபத்தை உணராமல் ஸ்கேட்டிங் பயிற்சி அளித்தவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மட்டுமின்றி சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர்.
சேலம்:
சேலம் சீலநாயக்கன்பட்டியில் இருந்து ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. 4 வழிச்சாலையாக உள்ள இந்த சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படும்.
இந்நிலையில், நேற்று காலை சீலநாயக்கன்பட்டியில் இருந்து ஆத்தூர் சாலையில் 5 கிலோ மீட்டர் தூரம் 15-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டனர். தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தை உணராமல் ஸ்கேட்டிங் பயிற்சியில் மாணவர்கள் ஈடுபட்டது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது, சாலையோரம் ஸ்கேட்டிங் பயிற்சியில் மாணவ, மாணவிகள் ஈடுபட்டாலும் அவ்வழியாக கனரக வாகனங்கள், பஸ்கள் என அடுத்தடுத்து வாகனங்கள் சென்றன. வாகன போக்குவரத்து இல்லாத இடத்தை தேர்வு செய்து இதுபோன்ற ஸ்கேட்டிங் பயிற்சி அளிக்காமல் சேலம்-ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் மாணவர்களுக்கு ஆபத்தை உணராமல் ஸ்கேட்டிங் பயிற்சி அளித்தவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மட்டுமின்றி சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர்.
இதனிடையே, ஆபத்தை உணராமல் சேலம்-ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கேட்டிங் பயிற்சியில் மாணவர்கள் செல்லும் வீடியோ வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தை உணராமல் ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பாக கன்னங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி உரிமையாளர் பிரபாகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தற்போது அணைக்கு போதிய நீர்வரத்து இல்லாததாலும், மழை இல்லாததாலும் அணையின் நீர்மட்டம் குறைந்து நீர்த்தேக்க பகுதிகள் வறண்டு காணப்படுகிறது.
- குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
மேட்டூர்:
மேட்டூர் அணை மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை ஆகிய 12 மாவட்டங்களில் 16.5 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் இந்த மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் மேட்டூர் அணை திகழ்கிறது. அணையில் இருந்து பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்பட்டு வருகிறது. அதன்படி இங்கிருந்து வேலூர், சென்னை வரை குடிநீர் வழங்கப்படுகிறது.
தற்போது அணைக்கு போதிய நீர்வரத்து இல்லாததாலும், மழை இல்லாததாலும் அணையின் நீர்மட்டம் குறைந்து நீர்த்தேக்க பகுதிகள் வறண்டு காணப்படுகிறது. இன்று காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 114 கன அடியிலிருந்து 103 கன அடியாக குறைந்துள்ளது. குடிநீர் தேவைக்காக அனணயிலிருந்து வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளதால் காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 42.39 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 13.35 டி.எம்.சி.யாக உள்ளது.
- வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் திரண்டனர்.
- ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வர தொடங்கினர்.
ஏற்காடு:
தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாப் தலங்களில் ஒன்றாக சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு திகழ்கிறது.
இங்கு தமிழகம் மட்டுமின்றி பக்கத்து மாநிலங்களான கேரளா, கர்நாடகம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை தினங்களில் அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.
அதேபோல் நேற்று முதல் நாளை திங்கட்கிழமை வரை 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் சனிக்கிழமை தினமான நேற்று மதியம் முதல் ஏற்காட்டிற்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வர தொடங்கினர்.
இதனால் சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்ல கூடிய ஏற்காடு அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, ரோஜா தோட்டம் மற்றும் தாவரவியல் பூங்கா போன்ற இடங்கள் சுற்றுலாப் பயணிகள் குவிந்து காணப்பட்டனர். விடுமுறை இன்று ஞாயிற்றுக்கிழமை வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் திரண்டனர். குடும்பத்துடன் அண்ணா பூங்காவில் உள்ள ஊஞ்சல், சறுக்கு உள்ளிட்டவை விளையாடி மகிழ்ந்தனர்.
லேடீஸ் சீட், ஜென்ஸ், சில்ரன்ஸ் சீட் ஆகிய பாறைகள் இயற்கையாகவே காட்ச்சித்தளங்களாக அமைந்துள்ளது. இங்கிருந்து சேலம் நகரத்தின் அழகை கண்டு களித்தனர்.
ஏற்காட்டின் கிழக்கு முனையில்அமைந்துள்ள பகோடா காட்சி முனை பிரமிட் பாய்ன்ட் என அழைக்கப்படுகிறது. இங்கு ராமர் கோவில் ஒன்றுள்ளது. அதுபோல் ராஜ ராஜேஸ்வரி கோவில், சேர்வ ராயன் கோவிலை சுற்றுலாப் பயணிகள் வழிபட்டனர்.
ஏற்காடு பட்டு பண்ணையில் மெல்பெரி செடிகள் பெருவாரியாக வளர்க்கப்படுகிறது. இங்கு ரோஜா நாற்றுக்கள் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றை சுற்றுலாப் பயணிகள் வீட்டுக்கு கொண்டு செல்ல வாங்கு வதை காண முடிந்தது.
கிளியூர் நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல் போட்டனர். ஏற்காடு ஏரியில் படகு சவாரி செய்ய ஆர்வத்துடன் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று வெகு நேரம் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். தொடர்ந்து மாலை வேளையில் படகு சவாரி நிறுத்தப்பட்ட நிலையிலும் அதிக படியான சுற்றுலாப் பயணிகள் படகு இல்லம் வந்து படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
- கர்நாடகாவை சேர்ந்தவருக்கு ஜல் சக்தி துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டிற்கு அண்டை மாநிலங்களில் இருந்து வரும் நீராதாரங்களை தடுக்கும் விதமாக தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகிறது.
சேலம்:
கர்நாடகாவில் இருந்து உபரி நீரை பெற்று தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினர் பூம்புகார் முதல் மேட்டூர் அணை வரை பேரணியாக சென்றனர்.
நேற்றிரவு சேலம் வந்த தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான குழுவினருக்கு விவசாயிகள் வரவேற்பு அளித்தனர்.
அப்போது பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், தமிழ்நாட்டிற்கு அண்டை மாநிலங்களில் இருந்து வரும் நீராதாரங்களை தடுக்கும் விதமாக தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகிறது. இதனை தடுக்க தமிழக முதல்வர் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநிலங்களுக்கு இடையே பேசி நீராதார பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்திருக்க வேண்டும், ஆனால் அதனை வைத்து மோடி அரசியல் செய்கிறார். தற்போது கர்நாடகாவை சேர்ந்தவருக்கு ஜல் சக்தி துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மோடி விவசாயிகளை புறக்கணித்து செயல்பட்டதால் தமிழ்நாடு, உத்திரபிரதேசம், பஞ்சாப் உள்பட பல இடங்களில் அவருக்கு எதிராக வாக்களித்துள்ளனர். ஆட்சி அமைக்கும் தகுதியை அவருக்கு மக்கள் வழங்கவில்லை என்றார். தொடர்ந்து மேட்டூருக்கு அவர்கள் புறப்பட்டு சென்றனர். இன்று அதிகாலை 1 மணியளவில் மேட்டூரை சென்றடைந்தனர்.
இதற்கிடையே அனுமதி இல்லாமல் பேரணியாக சென்றதாக சேலம் சூரமங்கலம் போலீசார் பி.ஆர்.பாண்டியன் உள்பட 70 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- முட்டை கொள்முதல் விலை அதிகரித்து வருவதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி.
- கறிக்கோழி விலையில் எந்த மாற்றமும் செய்யப்பட வில்லை.
சேலம்:
நாமக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை ஆகிய பகுதிகளில் 1000-த்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 6 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினசரி 5 கோடிக்கும் அதிகமாக முட்டை உற்பத்தி நடைபெறுகிறது.
இந்த முட்டைகள் தமிழக அரசு சத்துணவு திட்டத்திற்கும், தமிழகத்தின் பிற மாவட்டடங்கள் மற்றும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மகாராஷ்டிரா உள்பட பல மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு தினசரி பண்ணைகளில் ரெக்க விற்பனைக்கு முட்டை விலையை அறிவித்து வருகிறது. அதனை பண்ணயைாளர்கள் கடை பிடித்து விற்பனை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி 460 காசுகளாக இருந்த முட்டை விலை படிப்படியாக உயர்ந்து நேற்றுகாலை 540 காசுகளாக இருந்தது . இதற்கிடையே நேற்று நாமக்கலில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது. அதில் முட்டை உற்பத்தி மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர்.
இதையடுத்து 540 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலையை 5 காசுகள் உயர்த்தி 545 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. முட்டை கொள்முதல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு , சென்னை 600 காசுகள் , ஐதராபாத் 520, விஜயவாடா 520, பர்வாலா 463, மும்பை 575, மைசூரு 545, பெங்களூரு 585, கொல்கத்தா 540, டெல்லி 500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வுக்கான காரணம் குறித்து கோழிப்பண்ணை யாளர்கள் கூறியதாவது-
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்பட பல மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் குளிர்ந்த சீேதாஷ்ன நிலை நிலவி வருகிறது.
இதனால் முட்டையின் தேவை அதிகரித்துள்ளதால் கர்நாடகா , மகாராஷ்டிரா உள்பட பல மாநிலங்களில் முட்டையின் விலை உயர்ந்துள்ளது. இதனால் நாமக்கல் மண்டலத்திலும் முட்டையின் விலை அதிகரித்துள்ளது. இனி வரும் நாட்களில் முட்டை விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
நாமக்கல்லில் நேற்று முட்டை கோழி பண்ணை யாளர்கள், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது . இதில் ஒரு கிலோ 92 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை கோழி விலையை 5 ரூபாய் உயர்த்தி 97 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது.
பல்லடத்தில் நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் 138 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கறிக்கோழி விலையில் எந்த மாற்றமும் செய்யப்பட வில்லை.
- சூறைக்காற்றுடன் கன மழையாக கொட்டியது.
- மழையை தொடர்ந்து ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்காக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகிளில் நேற்றும் மழை பெய்தது. குறிப்பாக ஏற்காடு, டேனீஸ்பேட்டை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது.
ஏற்காட்டில் நேற்று மதியம் 2.30 மணிக்கு தொடங்கிய மழை 3.30 மணி வரை சூறைக்காற்றுடன் கன மழையாக கொட்டியது. ஏற்காடு ஒண்டிக்கடை பஸ் நிலையம், டவுன், செங்காடு, மஞ்சகுட்டை, வாழவந்தி, கொம்பக்காடு, நாகலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த கன மழை கொட்டியது.
மழையுடன் பலத்த காற்றும் வீசியதால் மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. கன மழை காரணமாக ஏற்காடு மலைப்பாதை சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் ஏற்காடு மலைப்பாதையில் உள்ள அருவிகளில் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டியது. இதில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் குளித்து மகிழ்ந்தனர். மழையை தொடர்ந்து ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது.
இதே போல டேனீஸ்பேட்டை, மேட்டூர், சங்ககிரி, ஆத்தூர், ஆனைமடுவு, வாழப்பாடி ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது . சேலம் மாநகரில் நேற்று 3 மணியளவில் தொடங்கிய மழை லேசான தூறலுடன் நின்று போனது. இதனால் சேலம் மாநகர மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
மாவட்டத்தில் அதிக பட்சமாக ஏற்காட்டில் 17 மி.மீ.மழை பெய்துள்ளது. சேலம் 0.6, வாழப்பாடி 3, ஆனைமடுவு 1, ஆத்தூர் 1, தம்மம்பட்டி 9, சங்ககிரி 2.3, மேட்டூர் 3.2, டேனீஸ்பேட்டை 14 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 51.1 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
- நடப்பாண்டில் 89 ஆயிரத்து 51 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
- ஏராளமான மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
சேலம்:
சேலம் வின்சென்டில் இயங்கி வரும் அரசு கலை கல்லூரியில் சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இந்த கல்லூரியில் 20 இளநிலை பாடப்பிரிவுகள் உள்ளன. இளநிலை படிப்புக்கு 1400 இடங்கள் உள்ளன. இதற்காக நடப்பாண்டில் 89 ஆயிரத்து 51 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இங்கு சிறப்பு பிரிவுக்கான கலந்தாய்வு கடந்த 29-ந் தேதி நடைபெற்றது.
இந்தநிலையில் பொதுப்பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று கல்லூரியில் தொடங்கியது. கல்லூரி முதல்வர் செண்பக லெட்சுமி கலந்தாய்வை தொடங்கி வைத்தார்.
இதில் இளங்கலை கணிதம், புள்ளியில், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புவியியல், நிலவியல், கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கான கலந்தாய்வு இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
அப்போது கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.சி.ஏ., பி.ஏ. தமிழ், பி.காம், பி.காம். சி.ஏ, பி.காம். கூட்டுறவு, நிலவியல் உள்பட பல்வேறு பாடப் பிரிவுகளை மாணவ-மாணவிகள் விரும்பி தேர்வு செய்தனர். இதனால் அந்த பாடங்களுக்கு கடும் போட்டி ஏற்பட்டது. தொடர்ந்து நாளை ( 11-ந் தேதி) பி.காம், பிகாம் சி.ஏ., கூட்டுறவு, பி.பி.ஏ., பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், அரசியல் அறிவியில் மற்றும் பொது நிர்வாகம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடக்கிறது.
இந்த கலந்தாய்வில் பங்கேற்றவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெறப்பட்ட செல்போன்குறுஞ்செய்தி, இ.மெயில் விவரம் ஆகியவற்றுடன் 10,11, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் , சாதி சான்று, மாற்று சான்று, ஆதார் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவை கொண்டு வர அறிவுறுத்தப்பட்டிருந்தது. வருகிற 15-ந் தேதி வரை இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது.






