என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 103 கன அடியாக குறைந்தது
    X

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 103 கன அடியாக குறைந்தது

    • தற்போது அணைக்கு போதிய நீர்வரத்து இல்லாததாலும், மழை இல்லாததாலும் அணையின் நீர்மட்டம் குறைந்து நீர்த்தேக்க பகுதிகள் வறண்டு காணப்படுகிறது.
    • குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணை மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை ஆகிய 12 மாவட்டங்களில் 16.5 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் இந்த மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் மேட்டூர் அணை திகழ்கிறது. அணையில் இருந்து பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்பட்டு வருகிறது. அதன்படி இங்கிருந்து வேலூர், சென்னை வரை குடிநீர் வழங்கப்படுகிறது.

    தற்போது அணைக்கு போதிய நீர்வரத்து இல்லாததாலும், மழை இல்லாததாலும் அணையின் நீர்மட்டம் குறைந்து நீர்த்தேக்க பகுதிகள் வறண்டு காணப்படுகிறது. இன்று காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 114 கன அடியிலிருந்து 103 கன அடியாக குறைந்துள்ளது. குடிநீர் தேவைக்காக அனணயிலிருந்து வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளதால் காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 42.39 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 13.35 டி.எம்.சி.யாக உள்ளது.

    Next Story
    ×