என் மலர்
சேலம்
- நேற்று மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7,325 கன அடியாக இருந்தது.
- கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர்:
கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் உபரி தண்ணீர் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை ஆகியவற்றை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இருக்கிறது. அதன்படி நேற்று மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7,325 கன அடியாக இருந்தது.
இன்று நீர்வரத்து மேலும் குறைந்து வினாடிக்கு 6,712 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. நீர்மட்டம் 107.50 அடியாகவும், நீர் இருப்பு 74.90 டி.எம்.சி.யாகவும் உள்ளது. தமிழக காவிரி டெல்டா பசானத்துக்கு மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 12,000 கன அடியும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- நீர்வரத்து கணிசமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108.22 அடியை தொட்டது.
- அணையில் தற்போது 75.90 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
சேலம்:
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வினாடிக்கு 20 ஆயிரத்து 255 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை 14 ஆயிரத்து 273 கனஅடியாக குறைந்தது.
நீர்வரத்து கணிசமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108.22 அடியை தொட்டது. தொடர்ந்து அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 2500 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 600 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 75.90 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- மேட்டூர் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.
- அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 2500 கனஅடியாக குறைக்கப்பட்டது.
சேலம்:
தமிழக, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.
நேற்று அணைக்கு வினாடிக்கு 30 ஆயிரத்து 475 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 20 ஆயிரத்து 255 கனஅடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் 107.54 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 2500 கனஅடியாக குறைக்கப்பட்டது. இதே போல் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக 20 அடிக்கு குறையாமல் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
- வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆடுகளை போட்டி போட்டு வாங்கிச்சென்றனர்.
- சந்தைக்கு கொண்டுவரப்பட்ட ஆடுகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் நங்கவள்ளி வாரசந்தையில் இன்று ஞாயிற்றுகிழமையை முன்னிட்டு ஆடு விற்பனை அமோகமாக நடைபெற்றது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சந்தையில் இன்று காலை 6 மணிக்கு மேச்சேரி, மேட்டூர், நங்கவள்ளி, தாரமங்கலம், ஓமலூர், காடையாம்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. அதுபோல் நாட்டு இன கோழிகள் அதிக எண்ணிக்கையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.14 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. 10 கிலோ ஆட்டு கிடாய் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.
தீபாவளி பண்டிகைக்காக ஆடுகளை வாங்க ஏராளமானோர் குவிந்ததால் ஆடுகள் விலை 3 ஆயிரம் ரூபாய் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்து விற்பனையானது. வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆடுகளை போட்டி போட்டு வாங்கிச்சென்றனர். இன்று ஒரே நாளில் ஆடுகள், கோழிகள், மாடுகள் வியாபாரம் ரூ.2 கோடிக்கு மேல் நடைபெற்றதாக சந்தை பராமரிப்பாளர்கள் தெரிவித்தனர்.
சந்தைக்கு கொண்டுவரப்பட்ட ஆடுகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் ஆடு வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. ஆடு வளர்ப்பு என்றாலே பெரும்பான்மையானோருக்கு நினைவுக்கு வருவது வெள்ளாடுகள்தான். ஆனால், வெள்ளாடுகளுக்கு நிகராக செம்மறியாடுகள் வளர்ப்புக்கு மிகவும் ஏற்றவையாக உள்ளது. இதனால் பெரும்பாலோனார் மேச்சேரி செம்மறியாடுகளை தேர்வு செய்கிறார்கள். இதனால் செம்மறி ஆடுகள் விற்பனை இன்று அமோகமாக இருந்தது என்றனர்.
- அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைவாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
- மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம்:
தமிழக, கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. நேற்று காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 33,148 கன அடியாக இருந்தது. இன்று காலையில் நீர்வரத்து சற்று குறைந்து வினாடிக்கு 30,475 கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 2,500 கன அடியும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவை விட, அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைவாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
இன்று காலை 8 மணி அளவில் மேட்டூர் அணை நீர்மட்டம் 106.48 அடியாக உயர்ந்து உள்ளது. நீர் இருப்பு 73.49 டி.எம்.சி.யாக உள்ளது. மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சி வாரியாக மக்களை சந்தித்து மனுக்களை பெற்று வருகிறோம்.
- எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியிலேயே தற்போது 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் குவிந்துள்ளன.
சேலம்:
சேலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சட்டமன்றத் தேர்தலின் போது பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்து இதுவரை 90 சதவீத மனுக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சி வாரியாக மக்களை சந்தித்து மனுக்களை பெற்று வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் அமைச்சராகவும், முதலமைச்சராகவும் இருந்த எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியிலேயே தற்போது 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் குவிந்துள்ளன.
அவர் தனது தொகுதிக்கு கூட எதுவும் செய்யவில்லை. தற்போது தேர்தல் ஜூரம் வந்துவிட்டதால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உளறிக் கொண்டிருக்கிறார். அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து முதலமைச்சர் வழியில் மக்கள் பணிகளில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த ஒரு வாரமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
- அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
சேலம்:
கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை தீவிரமாக பெய்து வருவதால் அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இதே போல் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 31 ஆயிரத்து 575 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று 33 ஆயிரத்து 148 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டமும் 104.76 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 7500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் அது 2500 கனஅடியாக குறைக்கப்பட்டது.
மேலும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு தொடர்ந்து 600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தற்போது அணையில் 71.14 டி.எம்.சி..தண்ணீர் இருப்பு உள்ளது.
- பல லட்சம் மதிப்பிலான உதிரி பாகங்கள் எரிந்து சேதமானதாக போலீசார் தெரிவித்தனர்.
- போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்:
சேலம் மூலப்பிள்ளையார் கோவில் வண்டிக்கார தெரு பகுதியில் ஒரு குக்கர் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தை ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தேக்ராஜ் (50) என்பவர் நடத்தி வருகிறார். நேற்றிரவு வழக்கம் போல நிறுவனத்தில் பணி முடிந்த பின் ஊழியர்கள் மற்றும் மேலாளர் மாதேஸ் ஆகியோர் நிறுவனத்தை பூட்டி விட்டி வீட்டிற்கு சென்றனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் அந்த நிறுவனத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்த அந்த பகுதியினர் மேலாளர் மாதேசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து வந்த அவர் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கும், அன்னதானப்பட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.
உடனே தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். இதற்கிடையே மளமளவென பரவிய தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதியே புகை மூட்டமாக காட்சி அளித்ததால் தீயணைப்பு வீரர்கள் அருகில் செல்ல முடியாமல் தவித்தனர் .
தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் தூரத்தில் நின்று தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அக்கம் பக்கம் பரவாமல் தடுத்து தீ அணைக்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் அந்த நிறுவனத்தில் இருந்த குக்கர் தயாரிக்கும் பல லட்சம் மதிப்பிலான உதிரி பாகங்கள் எரிந்து சேதமானதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அந்த நிறுவனம் பாதி அளவு எரிந்து உருக்குலைந்து காட்சி அளித்தது.
மின் கசிவால் இந்த தீ விபத்து நடைபெற்றதாக போலீசார் கூறினர். மேலும் வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இந்தாண்டு பெய்த கோடை மழையில் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து ஜூலை மாத இறுதியில் 25.75 அடியை எட்டியது.
- வசிஷ்ட நதி ஆற்றுப்படுகை கிராம மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை கிராமத்தில் வசிஷ்டநதியின் குறுக்கே, 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 263.86 ஏக்கர் பரப்பளவில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது.
இந்த அணையால், குறிச்சி, நீர்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, சின்னம நாயக்கன்பாளையம், சந்திரபிள்ளைவலசு உள்ளிட்ட கிராமங்களில், 5,011 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. பேளூர், குறிச்சி, கொட்டவாடி, அத்தனூர்பட்டி ஏரிகளும், 20-க்கும் மேற்பட்ட ஆற்றுப்படுகை கிராமங்களும், நிலத்தடி நீர் ஆதாரமும், பாசன வசதியும் பெறுகின்றன.
இந்தாண்டு பெய்த கோடை மழையில் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து ஜூலை மாத இறுதியில் 25.75 அடியை எட்டியது. அணையில் 35.06 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியது. இதனையடுத்து ஆகஸ்ட் மாதத்தில் பெய்த பருவமழையால் ஆகஸ்டு 31-ந் தேதி அணையின் நீர்மட்டம் 45 அடியாக உயர்ந்தது. அணையில் 98 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியது.
தொடர்ந்து அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான சித்தேரி, குதிமடுவு, பெரியகுட்டி மடுவு, சந்தமலை, அருநூற்றுமலை பகுதியில் இந்த மாதம் பெய்த பருவ மழையால், அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 60 அடியாக உயர்ந்து, 197 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியது.
இந்நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று மாலை 4:30 மணி முதல் இரவு 8.30 மணி வரை தொடர்ந்து 4 மணி நேரம் கன மழை பெய்தது. நேற்று ஒரே நாளில் 15 சென்டிமீட்டர் மழை கொட்டித் தீர்த்தத்தால், அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 5 அடி உயர்ந்து அணையில் இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 65 அடியை எட்டியது.
அணையில் 237 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியுள்ளது. அணைக்கு தொடர்ந்து வினாடிக்கு 284 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் இன்று மாலைக்குள் ஆனைமடுவு அணை முழு கொள்ளளவையும் எட்டி நிரம்பும் என்பதால் அணை ஆயக்கட்டு பாசன விவசாயிகளும், வசிஷ்ட நதி ஆற்றுப்படுகை கிராம மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதே போல ஏத்தாப்பூர், கரியகோவில், வீரகனூர், நத்தக்கரை மற்றும் சேலம் மாநகர் உள்பட பல பகுதிகளிலும் நேற்று கன மழை கொட்டியது. இந்த மழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆனைமடுவில் 153 மி.மீ. மழை கொட்டியது. சேலம் மாநகர் 16.6, ஏற்காடு 1.8, வாழப்பாடி 3.9, ஆத்தூர் 6.2, கெங்கவல்லி 14, ஏத்தாப்பூர் 22, கரியகோவில் 16, வீரகனூர் 29, நத்தக்கரை 11, மேட்டூர் 0.6 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 276.1 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
- கூட்டணி கட்சி தலைவர்களே தி.மு.க. அரசை விமர்சிக்க தொடங்கி உள்ளனர்.
- குடும்ப உறுப்பினர்கள் தான் திமுகவில் ஆட்சி அதிகாரத்திற்குள் வர முடியும்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
* கூட்டணி பலம் இல்லை, பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தவில்லை என்றாலும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூடுதல் வாக்குகள் பெற்றுள்ளது.
* கடந்த பாராளுமன்ற தேர்தலை விட இந்தாண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக ஒரு சதவீத கூடுதல் வாக்குகள் பெற்றுள்ளது.
* அதிமுகவின் வாக்கு வங்கி குறைந்துள்ளதாக முதலமைச்சர் எந்த அடிப்படையில் பேசினார்.
* பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் வாக்கு வங்கி 7 சதவீதம் குறைந்துள்ளது.
* தமிழ்நாட்டில் அதிமுகவின் செல்வாக்கு குறையவில்லை, திமுகவின் செல்வாக்கு தான் குறைந்துள்ளது.
* கூட்டணியை நம்பித்தான் திமுக அரசு உள்ளது. ஆனால் அதிமுக யாரை நம்பியும் இல்லை.
* ஊடகமும், பத்திரிகையும், கூட்டணியும் தான் திமுகவை தாங்கி பிடித்து கொண்டிருக்கின்றன.
* கூட்டணியை நம்பி மட்டும் திமுக தேர்தலை சந்திக்கின்றது. தாங்கள் செய்த சாதனைகளை நம்பி திமுக தேர்தலில் நிற்கவில்லை.
* கூட்டணி பலத்தால் தான் வெற்றி பெற்றதாக முதலமைச்சரே பேசி உள்ளார்.
* கூட்டணி கட்சி தலைவர்களே தி.மு.க. அரசை விமர்சிக்க தொடங்கி உள்ளனர்.
* கூட்டணியினரே விமர்ச்சிக்கிறார்கள் என்றால் அந்த கூட்டணியில் விரிசல் என்று தானே அர்த்தம்.
* 41 மாத திமுக ஆட்சியில் எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை.
* திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து காணப்படுகிறது.
* இந்தியாவிலேயே ஊழல் செய்வதில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது.
* திமுக என்பது கட்சி அல்ல அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. குடும்ப உறுப்பினர்கள் தான் திமுகவில் ஆட்சி அதிகாரத்திற்குள் வர முடியும்.
* திமுகவில் மன்னராட்சியை போன்று இளவரசர்களுக்கு முடி சூட்டப்படும்.
* அதிமுக இருக்கும்வரை உதயநிதிக்கு முடிசூட்ட வேண்டும் என்ற கனவு பலிக்காது.
* ஸ்டாலினுடன் மிசாவில் கைதானவர்களுக்கு ஏன் துணை முதலமைச்சர் பதவி கிடைக்கவில்லை? குடும்ப உறுப்பினர் என்பதால் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி.
* அடிப்படை கட்டமைப்பு கொண்ட கட்சி என்றால் அ.தி.மு.க. தான்
* 2021 சட்டமன்ற தேர்தலை விட கூடுதலாக வாக்குகளை பெற உழைக்க வேண்டும்.
* ஜோசியம் பலிக்கும், 2026-ல் அதிமுக ஆட்சிக்கு வரும் என்றார்.
இதனிடையே, எடப்பாடிக்கு ஆளுமை இல்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக, ஆளுமை இருந்ததால் தான் 4 ஆண்டுகள் அதிமுக ஆட்சி சிறப்பாக இருந்தது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
- முதல்வரின் பகல் கனவு என்றும் பலிக்காது.
- தமிழ்நாட்டில் திமுகவின் செல்வாக்கு சரிந்துள்ளது.
சேலம் மாவட்டம் வனவாசியில் அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் பகல் கனவு காண்கிறார்.
* முதல்வரின் பகல் கனவு என்றும் பலிக்காது.
* கடந்த தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கி 30 சதவீதம் மட்டுமே சரிந்தது. பல தொகுதிகளில் திமுகவின் செல்வாக்கு சரிந்துள்ளது.
* தமிழ்நாட்டில் திமுகவின் செல்வாக்கு சரிந்துள்ளது. அதிமுகவின் செல்வாக்கு உயர்ந்துள்ளது என்று கூறினார்.
- முதலாவது மாநில மாநாடு நடத்தும் தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகள்.
- யார் போராட்டம் நடத்தினாலும் முறையாக நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
சேலம்:
சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கேள்வி: தி.மு.க. அமைச்சர் மீது 400 கோடி ரூபாய் ஊழல் புகார் வெளியாகி இருப்பது குறித்து?
பதில்: முழுமையாக இந்த விபரம் பற்றி தெரியவில்லை. எந்த அமைச்சர்? எந்த துறை? என்ன மாதிரி ஊழல் என தெரிந்தால் தான் அது பற்றி சொல்ல முடியும்.
தி.மு.க. ஆட்சியில் ஒரு துறையில் மட்டுமல்ல பெருபான்மையான துறைகளில் அமைச்சர்கள் மிகப்பெரிய ஊழல் செய்கின்றனர். 2026-ல் அ.தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு எந்த எந்த துறைகளில் எல்லாம் ஊழல் நடந்திருக்கிறது என கண்டுபிடித்து வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படும்.
கே: சென்னையில் வெள்ளம் நிவாரணம் குறித்த வெள்ளை அறிக்கை கேட்டு இருப்பது பற்றி?
ப: ஏற்கனவே இது பற்றி நான் சொல்லிவிட்டேன். வெள்ள நிவாரணம் குறித்து நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் என்ன என்ன நடவடிக்கை எடுத்தோம் என்பது குறித்து தெளிவாக அறிக்கை வெளியிட்டோம். சென்னையில் வெள்ள நீர் வேகமாக வடிந்தது. வேகமாக வெளியேற்றப்பட்டது. ஆனால் தி.மு.க. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசாங்கம் கொஞ்சம் மழைக்கே தாக்குபிடிக்கவில்லை.
கே: தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரை முதலமைச்சராக்க வேண்டும் என எழுந்துள்ள கோரிக்கை குறித்து?
ப: தி.மு.க. கூட்டணி இன்றைக்கு வலிமையாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். இப்போது கம்யூனிஸ்ட்டு கட்சி என்னவாயிற்று? கூட்டணியில் புகைச்சல் ஆரம்பித்து விட்டது. அதுபோல் காங்கிரசில் இருக்கிற திருச்சி வேலுசாமி, தி.மு.க.வினர் போற்றுதலுக்குரிய பெருந்தலைவர் காமராஜர் பற்றி பேசும்போது இப்படியே தொடர்ந்தால் நாங்களும் பேசுவோம் என எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார். இதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தி.மு.க.விடம் கோரிக்கை வைத்து எச்சரிக்கை மணி அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த கூட்டணி இருக்குமா? இல்லையா? என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சட்டமன்றத் தேர்தலுக்காக சிறப்பான கூட்டணி அ.தி.மு.க. அமைக்கும். பெரும்பான்மை இடத்தில் வெற்றி பெறுவோம். நடிகர் விஜய் திரை உலகில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். மக்களுக்கு விஜய்யும் பொதுசேவை செய்ய வேண்டும் என்று விரும்புகிறார் அதன் விருப்பத்தில் கட்சி தொடங்கியுள்ளார். முதலாவது மாநில மாநாடு நடத்தும் தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகள்.
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 36ஆயிரம் போராட்டங்கள் நடைபெற்றது. யார் போராட்டம் நடத்தினாலும் முறையாக நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. எதிர்க்கட்சி மட்டுமில்லாமல் மற்ற கட்சிகளுக்கும் அனுமதி கொடுப்பதில்லை.
ஒவ்வொரு அரசியல் கட்சியும் கனவு கண்டு கொண்டிருக்கிறது எல்லா அரசியல் கட்சிகளும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று தான் அனைவரின் விருப்பம். யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது மக்களுடைய கையில் தான் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






