என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

எடப்பாடி பழனிசாமி விழாவில் பங்கேற்ற அரசு பள்ளி ஆசிரியருக்கு நோட்டீஸ்
- விழாவில் பங்கேற்ற அரசு பள்ளி ஆசிரியர் தம்பயா தலைமை உரையாற்றினார்.
- தமிழக அரசு ஊழியர் ஒழுங்கு நடவடிக்கை விதிகள்படி தம்பயாவிடம் உரிய விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
சேலத்தில் நேற்று காவிரி- சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்திய அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் பங்கேற்ற அரசு பள்ளி ஆசிரியர் தம்பயா தலைமை உரையாற்றினார்.
இந்நிலையில், விழாவில் பங்கேற் தம்பயாவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
முறையாக பள்ளிக்கு செல்லாமல், அதிமுக பணிகளில் ஈடுபட்டு வந்ததால் தொடக்க பள்ளி கல்வித்துறை ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், தமிழக அரசு ஊழியர் ஒழுங்கு நடவடிக்கை விதிகள்படி தம்பயாவிடம் உரிய விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தம்பயா கொடுக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொடக்க கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
Next Story






