என் மலர்tooltip icon

    சேலம்

    • கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது.
    • தற்போது அணையில் 91.78 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    சேலம்:

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 118.94 அடியாக உயர்ந்து காணப்பட்டது. அணைக்கு நேற்று 6268 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று 4266 கனஅடியாக குறைந்தது.

    அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 1000 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது.

    தற்போது அணையில் 91.78 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
    • வீடியோவை பார்த்த பலரும் எம்.எல்.ஏ. அருளுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் முத்துநாயக்கன்பட்டி பகுதியில் பூட்டப்பட்ட கோவில் ஒன்றை திறப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தைக்கு பெண்கள் அதிகமானோர் கூடியிருந்தனர். அவர்களைப் பார்த்து, சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி பாமக எம்.எல்.ஏ அருள், "ஆம்பள எவனுமே இல்லையா?" என அநாகரிகமாகப் பேசி இருக்கிறார்.

    அவர் தொடர்ந்து அநாகரிகமாக பேசுவதை கேட்டு பெண்கள் கையெடுத்து கும்பிடுகின்றனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோவை பார்த்த பலரும் எம்.எல்.ஏ. அருளுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

    • கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • தற்போது அணையில் 91.14 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    சேலம்:

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 118.53 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 7148 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 7368 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது.

    அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 1000 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    தற்போது அணையில் 91.14 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • அணையில் இருந்து பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கனஅடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடியும் திறக்கப்பட்டு வருகிறது.
    • தற்போது அணையில் 90.64 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    சேலம்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மேலும் மழையின் தீவிரத்தை பொறுத்து அவ்வப்போது நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.

    மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 148 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 118.21 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கனஅடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடியும் திறக்கப்பட்டு வருகிறது.

    தற்போது அணையில் 90.64 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு நீர்வரத்து இதே அளவில் இருந்தால் இன்னும் ஒரு வாரத்தில் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
    • அணையில் தற்போது 89.24 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.

    சேலம்:

    தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அணைக்கு நேற்று வினாடிக்கு 4727 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 6384 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது.

    இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 117.31 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 1000 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடியும் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 89.24 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.

    • ஆத்தூர் அருகே உள்ள கரியகோவில், கருமந்துறை உள்பட பல பகுதிகளில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருகிறது.
    • வாழப்பாடி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர், சங்ககிரி, எடப்பாடி, வீரபாண்டி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.

    சேலம்:

    வங்கக்கடலில் மீண்டும் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் நேற்று காலை முதலே மேகமூட்டமாக காட்சி அளித்தது. பின்னர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரவில் தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் ஏற்காட்டில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. மழையை தொடர்ந்து ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது.

    ஏற்காட்டில் பெய்யும் மழையால் ஏற்காடு மலைப்பாதையில் மீண்டும் மண் சரிவு ஏற்படுமோ? என்ற அச்சம் அங்கு வசிக்கும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ஏற்காட்டில் நேற்றிரவு முதல் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளதால் அந்த கிராம மக்கள் கடும் அவதி அடைந்தனர். ஏற்காடு செங்காடு கிராமத்தில் மின்கம்பத்தில் செல்லும் மின் கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்தன. இதனால் அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    ஆத்தூர் அருகே உள்ள கரியகோவில், கருமந்துறை உள்பட பல பகுதிகளில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருகிறது. ஏற்கனவே கரியகோவில் அணை நிரம்பிய நிலையில் தற்போது இந்த மழையால் 2-வது முறையாக அணை நிரம்பி உள்ளது. இதனால் அணையில் இருந்து 190 கன அடி உபரி நீர் வசிஷ்ட நதியில் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் மழை அதிகரிக்கும் பட்சத்தில் கூடுதல் தண்ணீர் திறந்து விட வாய்ப்புள்ளதால் வசிஷ்ட நதியின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சேலம் மாநகரில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் தொடங்கிய மழை தொடர்ந்து சாரல் மழையாக நீடிக்கிறது . இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதே போல வாழப்பாடி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர், சங்ககிரி, எடப்பாடி, வீரபாண்டி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. மழையால் கல்லூரிகள் அலுவலகங்களுக்கு சென்றவர்கள் கடும் அவதி அடைந்தனர்.

    மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவிட்டார். வழக்கமாக சில தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் காலை 6.30 மணி முதல் வீட்டில் இருந்து புறப்பட்டு செல்வார்கள். தாமதமாக விடுமுறை அறிவித்ததால் இதுபற்றி தெரியாமல் பள்ளிக்கு சென்ற பெரும்பாலான மாணவ-மாணவிகள் மீண்டும் மழையில் நனைந்தபடியே வீடுகளுக்கு திரும்பினர். சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளிலும் இதே நிலை காணப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் இதே போல கல்லூரிகள் மற்றும் அலுவலக வேலைகளுக்கு சென்றவர்கள் குடை பிடித்த பிடியும், ஸ்வெட்டர்கள் அணிந்த படியும் சென்றதை காண முடிந்தது.

    நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம், குமாரபாளையம், நாமக்கல், ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் பள்ளி மாணவ, மாணவிகள் கடும் அவதி அடைந்தனர்.

    • தொடர்ந்து அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 727 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
    • அணையில் தற்போது 88.82 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    சேலம்:

    தமிழக, கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மழையின் தீவிரத்தை பொறுத்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.

    இந்த நிலையில் அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே பாசனத்துக்கு திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 727 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 88.82 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • திடீரென லாரியின் உள்பகுதியில் இருந்து தீப்புகை வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • இரவு நேரத்தில் பஞ்சு லோடு ஏற்றி சென்ற லாரியில் திடீரென தீப்புகை ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    சங்ககிரி:

    ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் லாரி டிரைவர் செல்வம் (40). இவர் கண்டெய்னர் லாரியில் சத்தியமங்கலத்தில் இருந்து ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள பஞ்சு லோடு ஏற்றிக்கொண்டு ஐதராபாத் நோக்கி சென்றார். இரவு 7 மணி அளவில் பவானி - சேலம் செல்லும் நெடுஞ்சாலையில் சங்ககிரி வி.என். பாளையம் என்ற இடத்தில் டிரைவர் செல்வம் லாரியை நிறுத்தி விட்டு கீழே இறங்கி லாரியின் சக்கரங்களில் காற்று சரியாக உள்ளதா? என சரிபார்த்துக் கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென லாரியின் உள்பகுதியில் இருந்து தீப்புகை வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சங்ககிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். நிலைய அதிகாரி ரமேஷ் குமார் தலைமையிலான மீட்பு படையினர் விரைந்து வந்து லாரியின் பின் கதவுகளை திறந்து தண்ணீர் பாய்ச்சி தீ பரவாமல் தடுத்தனர். மேலும் லாரியில் இருந்த பஞ்சு லோடுகளை கீழே இறக்கி தீப்பிடித்த பேல்களை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    லாரியில் தீப்புகை ஏற்பட்ட இடத்தின் அருகே தனியார் பெட்ரோல் பங்க் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சங்ககிரி போலீசார் வாகன ங்களை மாற்றுப்பாதையில் திருப்பி அனுப்பி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் லாரியில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு நேரத்தில் பஞ்சு லோடு ஏற்றி சென்ற லாரியில் திடீரென தீப்புகை ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • மேட்டூர் அணையில் தற்போது 88.19 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    சேலம்:

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 116.63 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 5 ஆயிரத்து 793 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று 6 ஆயிரத்து 140 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது.

    அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 1000 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே தண்ணீர்திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணையில் தற்போது 88.19 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • ஆந்திர ஐயப்ப பக்தர்கள்ரயிலில் கற்பூரம் ஏற்றி வழிபட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • ரெயிலில் கற்பூரம் கொண்டு சென்றால் 3 ஆண்டுகள் சிறை, அபராதம் விதிக்கப்படும்.

    திருப்பதியில் இருந்து கொல்லம் சென்ற ரெயிலில் ஆபத்தை உணராமல் ஆந்திர ஐயப்ப பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்ட வீடியோ இணையத்தில் வைரலானது.

    திருப்பதியில் இருந்து கொல்லம் சென்ற ரெயில் சேலம் வழியாக சென்ற போது தடையை மீறி கற்பூரம் ஏற்றி ஐயப்ப பக்தர்கள் வழிபாடு செய்தனர். இணையத்தில் வெளியான வீடியோவை வைத்து போலீசார் அவர்கள் மீது மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    ஐயப்ப பக்தர்கள் தரிசனம் முடித்து திரும்பிய பின்னர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    ரெயிலில் கற்பூரம் கொண்டு சென்றால் 3 ஆண்டுகள் சிறை, அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே ஏற்கனவே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • உடல் அழுகிய நிலையில் காணப்படுவதால் அங்கேயே பிரேத பரிசோதனை நடத்திட போலீசார் முடிவு செய்துள்ளனர்.
    • ஆற்றுக்குள் செல்போன் டவரை பிடித்துக் கொண்டு தத்தளித்தபடி உயிருக்கு போராடிய ராமுவை உயிருடன் மீட்டனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பேளூர் கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் ராமு(27). இவரது மனைவி மோகனாம்பாள் (19). இவர் 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். காதல் திருமணம் செய்து கொண்ட இருவருக்கும் இடையே கடந்த 1-ந் தேதி இரவு தகராறு ஏற்பட்டது.

    இதில் மனமடைந்த மோகனாம்பாள், பேளூர் அருகே வேட்டைக்காரனூர் பாலத்தில் இருந்து வசிஷ்டநதியில் குதித்தார். இவரை தொடர்ந்து அவரது கணவர் ராமுவும் வஷிஷ்டநதியில் குதித்தார். இதுகுறித்து தகவலறிந்த அந்த பகுதி மக்கள் நள்ளிரவு நேரத்தில் ஆற்றுக்குள் செல்போன் டவரை பிடித்துக் கொண்டு தத்தளித்தபடி உயிருக்கு போராடிய ராமுவை உயிருடன் மீட்டனர்.

    ஆற்றில் குதித்த கர்ப்பிணிப் பெண் மோகனாம்பாள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது குறித்து வாழப்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் புதன்கிழமை மாலை வரை தொடர்ந்து 4 நாட்கள் தேடியும், ஆற்றில் வெள்ளம் குறையாததால் மோகனாம்பாளை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் தேடும் பணியை தீயணைப்பு துறையினர் நிறுத்திக் கொண்டனர்.

    இன்று அதிகாலை வசிஷ்டநதியில் தண்ணீர் வரத்து குறைந்த நிலையில், பேளூர் அடுத்த ராமநாதபுரத்தில் வசிஷ்ட நதியின் கரையில் ஒரு பெண்ணின் உடல் அழுகிய நிலையில் கிடப்பதை கண்ட இப்பகுதி மக்கள், வாழப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது கரை ஒதுங்கிக் கிடந்த பெண் மோகனாம்பாள் என்பது தெரியவந்தது.

    இதனையடுத்து அவரது தாயார் மற்றும் உறவினர்களை வரவழைத்து உறுதிப்படுத்திய போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன், மோகனாம்பாளின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். உடல் அழுகிய நிலையில் காணப்படுவதால் அங்கேயே பிரேத பரிசோதனை நடத்திட போலீசார் முடிவு செய்துள்ளனர். 7 நாட்களுக்கு முன் வசிஷ்ட நதியில் குதித்த கர்ப்பிணிப் பெண் இன்று அதிகாலை பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் உறவினர்களி டையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.78அடியாக இருந்தது.
    • அணையில் 86.89 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.

    சேலம்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.78அடியாக இருந்தது.

    அணைக்கு வினாடிக்கு நேற்று 14 ஆயிரத்து 404 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 9 ஆயிரத்து 601 கனஅடியாக குறைந்து காணப்பட்டது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 1000 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 300 அடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    அணையில் 86.89 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.

    ×