என் மலர்
சேலம்
- சேலம் குகை நல்லாயி தெரு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (55), இவர் சலூன் கடை நடத்தி வந்தார்.
- உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். பல ஆஸ்பத்திரிகளில் பார்த்தும் குணமாக வில்லை.
சேலம்:
சேலம் குகை நல்லாயி தெரு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (55), இவர் சலூன் கடை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். பல ஆஸ்பத்திரிகளில் பார்த்தும் குணமாக வில்லை. இதனால் மனம் உடைந்த வெங்கடேசன்நேற்றிரவு வீட்டில் தூக்கு போட்டு தொங்கினார்.
இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனை பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர்.
இது குறித்து செவ்வாய்ப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஆயுத பூஜை நாளை மறுநாள் திங்கட் கிழமையும், செவ்வாய்க்கிழமை விஜய தசமியும் வருகிறது.
- இதனால் பண்டிகையை கொண்டாட வெளியூர்களில் தங்கி பணி புரியும் தொழிலாளர்கள் நேற்று மாலை முதல் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்கிறார்கள்.
சேலம்:
ஆயுத பூஜை நாளை மறுநாள் திங்கட் கிழமையும், செவ்வாய்க்கிழமை விஜய தசமியும் வருகிறது. அதற்கு முந்தைய நாட்களான சனிக் கிழமையான இன்று மற்றும் ஞாயிற்றுக்கிழமையான நாளையும் விடுமுறை நாட்கள் என்பதால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
அலை மோதிய கூட்டம்
இதனால் பண்டிகையை கொண்டாட வெளியூர்களில் தங்கி பணி புரியும் தொழிலாளர்கள் நேற்று மாலை முதல் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்கிறார்கள். இதனால் பஸ்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் அதிக அளவில் பொது மக்கள் கூட்டம் இருந்தது.
குறிப்பாக சேலத்தில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, நெல்லை, திருச்சி, தஞ்சை, நாகை, கடலூர், புதுச்சேரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஊர்களுக்கு செல்லும் பயணிகள் பஸ் நிலையத்தில் அதிக அளவில் குவிந்து இருந்தனர்.
இதே போல சென்னை, கோவை, பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக சென்ற பஸ்களிலும் கூட்டம் அலை மோதியது. இதையொட்டி சேலம் கோட்டத்தில் இருந்து 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனாலும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் முண்டியடித்த படி பயணிகள் ஏறி சென்றனர்.
போக்குவரத்து நெரிசல்
அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதாலும், தனியார் ஆம்னி பஸ்களும் வெளியூர்களுக்கு அதிக அளவில் இயக்கப்பட்டதாலும் புதிய பஸ் நிலையத்தை சுற்றி அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
இதே போல தென் மாவட்டங்களுக்கும், கோவையில் இருந்து சென்னைக்கும் அதிக அளவில் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழி யர்களின் வாகனங்கள் சென்றதால் ஏ.வி.ஆர். ரவுண்டானா, திருவாக்க வுண்டனூர், கந்தம்பட்டி, கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதிகளிலும் நேற்று மாலை முதல் அதிக அளவில் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. இதனால் வாகனங்கள் ஊர்ந்த படியே சென்றன.
ரெயில்கள்
இேத போல சேலம் வழியாக தென் மாவட்டங்கள் மற்றும் கோவைக்கு சென்ற ரெயில்களில் அதிக அளவில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது . முன்பதிவில்லாத பெட்டிகளில் முண்டியடித்த படி பயணிகள் ஏறி சென்றனர். இன்றும் அனைத்து ரெயில்களிலும் அதே நிலை நீடித்தது.
- பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களின் கலை திறனை மேம்படுத்தும் வகையில் மாணவ, மாணவி களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், நடனம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் தாரமங்கலம் வட்டார அளவில் செங்குந்தர் அரசு உதவி பெறும் பள்ளியில் நடைபெற்றது.
- 6- ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகள் 500- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தாரமங்கலம்:
தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களின் கலை திறனை மேம்படுத்தும் வகையில் மாணவ, மாணவி களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், நடனம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் தாரமங்கலம் வட்டார அளவில் செங்குந்தர் அரசு உதவி பெறும் பள்ளியில் நடைபெற்றது.
இந்த போட்டியில் 6- ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகள் 500- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் கலந்து முதல் 3 இடங்களில் வெற்றி பெறும் மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெறுவர். மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெறுவோர் மாநில போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.
- கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில் இன்று நீர்வரத்து குறைந்தது.
- அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
சேலம்:
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்தது.
மேலும் கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும் அங்குள்ள அணைகளில் இருந்து தமிழகத்துக்கு உரிய தண்ணீர் திறக்காததாலும் அணையின் நீர்மட்டம் கடந்த 10-ந்தேதி 30 அடியாக குறைந்தது. இதனால் பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.
இதற்கிடையே தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைத்தும் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில் இன்று நீர்வரத்து குறைந்தது. நேற்று அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 714 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று வினாடிக்கு 5 ஆயிரத்து 132 கனஅடியாக குறைந்தது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 47.33 அடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
- ஆயுத பூஜையை முன்னிட்டு சேலம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு வழித்தடங்களில் இன்று 20-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
- பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான பயணம் செய்யுமாறு சேலம் அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சேலம்:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டம் மூலம் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு வழித்தடங்களில் 1900 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
முக்கிய பண்டிகை மற்றும் வார விடுமுறை நாட்களில் முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி வார இறுதி நாட்கள் மற்றும் வருகிற 23-ந்தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு சேலம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு வழித்தடங்களில் இன்று 20-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
சேலம் புதிய பஸ் நிலையம், பெங்களூர், சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் பஸ் நிலையங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
அதன்படி சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி, மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூருவுக்கும், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கும், நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும், திருச்சியில் இருந்து ஓசூருக்கும், பெங்களூரில் இருந்து சேலம், திருவண்ணாமலைக்கும், திருவண்ணாமலை, ஈரோட்டில் இருந்து பெங்களூருக்கும், ஓசூரில் இருந்து சேலம், புதுச்சேரி, கடலூருக்கும், சேலத்தில் இருந்து சிதம்பரம், காஞ்சிபுரத்திற்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு பஸ்கள் இயக்கம் இன்று காலை முதல் தொடங்கியுள்ளது.
எனவே பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான பயணம் செய்யுமாறு சேலம் அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
- நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் பதவிக்கு கிச்சிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் நியமிக்கப்பட்டார்.
- நகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி மற்றும் துணை கமிஷனர்கள் மதிவாணன், கவுதம் கோயல், நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் சரவணன் ஆகியோரிடம் வாழ்த்து பெற்றார்.
சேலம்:
சேலம் மாநகர நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் ஆக இருந்த கற்பகம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாறுதல் செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து காலியாக இருந்த நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் பதவிக்கு கிச்சிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் நியமிக்கப்பட்டார்.அவர் இன்று காலை பொறுப்பேற்றுக்கொண்டு மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி மற்றும் துணை கமிஷனர்கள் மதிவாணன், கவுதம் கோயல், நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் சரவணன் ஆகியோரிடம் வாழ்த்து பெற்றார்.
- பயணிகள் நிற்கும் இடங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் சுகாதார வளாகங்கள் இல்லாததால் பொது மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.
- சேலம் அரசு ஆஸ்பத்திரி, சுந்தர் லாட்ஜ் பகுதி ஆகிய இடங்களில் ஆண்களுக்கு 1, பெண்களுக்கு 1 என தலா 2 ரெடி மேடு சுகாதார வளாகங்கள் சிமெண்ட் மேடை அமைத்து பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து அஸ்தம்பட்டி ரவுண்டானா, 4 ரோடு, 5 ரோடு உள்பட 11 இடங்களிலும் ரெடிமேட் சுகாதார வளாகங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளன.
சேலம்:
சேலம் மாநகரில் பயணிகள் நிற்கும் இடங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் சுகாதார வளாகங்கள் இல்லாததால் பொது மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். ேமலும் பொது இடங்களில் அசுத்தம் செய்து வந்தனர். இதனால் பல பகுதிகளில் சுகாதார கேடு ஏற்பட்டது .
இதனை கவனித்த சேலம் மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் மக்கள் கூடும் இடங்களில் ரெடிேமடு சுகாதார வளாகங்களை அமைக்க உத்தரவிட்டார். அதன்படி சேலம் அரசு ஆஸ்பத்திரி, சுந்தர் லாட்ஜ் பகுதி ஆகிய இடங்களில் ஆண்களுக்கு 1, பெண்களுக்கு 1 என தலா 2 ரெடி மேடு சுகாதார வளாகங்கள் சிமெண்ட் மேடை அமைத்து பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து அஸ்தம்பட்டி ரவுண்டானா, 4 ரோடு, 5 ரோடு உள்பட 11 இடங்களிலும் ரெடிமேட் சுகாதார வளாகங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளன.
இதற்கு தேவையான தண்ணீரை அருகில் உள்ள அரசு அலுவலகங்கள் அல்லது மாநகராட்சி அலுவலகங்களில் இருந்து எடுத்து பயன்படுத்தும் வகையில் பைப் லைன் அமைக்கவும் நடவ டிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாநகரத்தில் சுகாதாரம் பாதுகாக்கப்படும் என்பதால் பொது மக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.Salem District News, சேலம், மாநகராட்சி, 11, சுகாதாரம், வளாகங்கள், Salem, Corporation, 11, Health, Complexes,
- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பதிவு பெற்ற தொழிற்சாலைகளும் 2024-ஆம் ஆண்டிற்கான தொழிற்சாலை உரிமத்தினை ஆன்லைன் மூலம் வரும் 31ந்தேதிக்குள் புதுப்பிக்க விண்ணப்பிக்க வேண்டும்.
- அனைத்து பதிவு பெற்ற தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் தங்களது தொழிற்சாலை உரிமத்தை புதுப்பிக்க http://dish.tn.gov.in என்ற இணையதள முகவரியில் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
சேலம்:
ஓசூர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் என்.சபீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பதிவு பெற்ற தொழிற்சாலைகளும் 2024-ஆம் ஆண்டிற்கான தொழிற்சாலை உரிமத்தினை ஆன்லைன் மூலம் வரும் 31ந்தேதிக்குள் புதுப்பிக்க விண்ணப்பிக்க வேண்டும்.
தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பதிவு பெற்ற தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் தங்களது தொழிற்சாலை உரிமத்தை புதுப்பிக்க http://dish.tn.gov.in என்ற இணையதள முகவரியில் கட்டணத்தை செலுத்த வேண்டும். விண்ணப்பம் பதிவேற்றம் செய்யப்பட்ட உடனேயே தங்கள் தொழிற்சாலை உரிமம் புதுப்பிக்கப்பட்டு ஆன்லைன் முறையிலேயே பெற்றுக் கொள்ளலாம். இதற்காக அலுவலகம் வர வேண்டிய அவசியம் இல்லை. உரிய காலத்தில் உரிம கட்டணம் செலுத்தி உரிமம் பெற்றுக் கொள்ளு மாறு இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- தாரமங்கலம் வெள்ளாளர் தெரு பகுதியை சேர்ந்தவர் முருகன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி தேவி
- அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தேவி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது பற்றி பெத்தநாயக்கன் பாளையத்தில் உள்ள தேவியின் தாய் சரோஜா தாரமங்கலம் போலீசில் புகார் அளித்தார்.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் வெள்ளாளர் தெரு பகுதியை சேர்ந்தவர் முருகன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி தேவி (25). இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.
குடிப்பழக்கம் உள்ள முருகன் வீட்டில் தேவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு தேவி வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதை பார்த்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தேவி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது பற்றி பெத்தநாயக்கன் பாளையத்தில் உள்ள தேவியின் தாய் சரோஜா (50) தாரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தேவிக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகளே ஆவதால் மேட்டூர் ஆர்.டி.ஓ. தணிகாசலம் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.Salem District News, இளம்பெண், தற்கொலை, ஆர்.டி.ஓ., விசாரணை, Young girl, suicide, RDO, Investigation
- பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த நாடு முழுவதும் 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
- 8 மற்றும் 10-ம் வகுப்புகளில் 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற அனைத்து மாணவர்களும் தேசிய கல்வி உதவித்தொகை
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
இதர பிற்படுத்தப் பட்டோர், பொருளா தாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த நாடு முழுவதும் 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 9-ம் வகுப்பு, 11 -ம் வகுப்பு பயின்றுவரும் 3,093 மாணவர்களுக்கு இக்கல்வி உதவித் தொகை வழங்கப் படும் எனவும் அதில் குறிப்பி டப்பட்டிருந்தது. இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் பயனாளிகள், தேசியத் தேர்வு முகமையால் 29.09.2023 அன்று நடத்தப்பட விருந்த யசஸ்வி நுழைவுத் தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர் என தெரிவிக்கப்ப ட்டிருந்த நிலையில் தற்போது எழுத்து தேர்வானது காலப்பற்றாமை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், 8 மற்றும் 10-ம் வகுப்புகளில் 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற அனைத்து மாணவர்களும் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்க தகுதியான வர்கள் எனவும், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்ப டையிலேயே இந்த ஆண்டிற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு இக்கல்வி உதவித் தொகை யானது வழங்கப்படும் எனவும் மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்கள் அறிந்திட https://scholarships.gov.in மற்றும் ஒன்றிய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தினை (http://socialjustice.gov.in) தொடர்ந்து நோக்கி கல்வி உதவித்தொகை பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- சேலம் மாவட்டம் சங்ககிரி உட்கோட்ட காவல்துறை சார்பில் பெண் குழந்தைகளின் தற்காப்பு மற்றும் விழிப்புணர்வு பயிற்சி
- பெண் குழந்தைகள் பள்ளி இடை நிற்றலை தவிர்த்தல், குழந்தை திருமணம், பாலியல் துன்புறுத்தல், தகவல் தொழில்நுட்பம், தற்காப்பு கலை
சங்ககிரி:
சேலம் மாவட்டம் சங்ககிரி உட்கோட்ட காவல்துறை சார்பில் பெண் குழந்தைகளின் தற்காப்பு மற்றும் விழிப்புணர்வு பயிற்சியானது சங்ககிரி ஆர்.எஸ். அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் வளர்மதி தலைமை வகித்தார்.
இதில் சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சைமன்ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பெண் குழந்தைகள் பள்ளி இடை நிற்றலை தவிர்த்தல், குழந்தை திருமணம், பாலியல் துன்புறுத்தல், தகவல் தொழில்நுட்பம், தற்காப்பு கலை ஆகியவற்றை குறித்து எடுத்துக்கூறி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு சிலம்பு போட்டி நடந்தது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் பரிசுகள் வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் விஜய் ஆனந்தன் மற்றும் ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
- பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், 4 கிராம தொகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
- ஏ.குமாரபாளையம் கிராமத்தில் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை குறித்து பயிற்சி நடைபெற்றது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், 4 கிராம தொகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏ.குமாரபாளையம் கிராமத்தில் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை குறித்து பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில், குமாரபாளையம் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். பூச்சிக் கட்டுப்பாடு, கம்போஸ்ட் உரமிடல் , பசுந்தாள் உரம், இயற்கை முறையில் மண்புழு உரமிட்டு மண் வளத்தை பெருக்குதல், உயிர் உரங்கள், உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணிகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. ஜீவாமிர்தம், அமிர்த கரைசல்,பஞ்சகாவ்யம், மண்புழு உரம் உற்பத்தி குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.
பெத்த நாயக்கன் பாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வேல்முருகன், வேளாண்மை அலுவலர் தாமரைச்செல்வன், உதவி வேளாண்மை அலுவலர் செல்லமுத்து, தொகுப்பு ஒருங்கிணைப்பாளர் உமா மகேஸ்வரி, முன்னோடி இயற்கை விவசாயி தும்பல் சுரேஷ் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.






