search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Case against 2 persons"

    • கல்லூரியில் சேர்த்து விட்டதற்காக மணிகண்டனிடம் கமிசன் தொகையாக ரூ.3,500-யை கேட்டு ஜெயசூர்யா தொந்தரவு செய்து வந்துள்ளார்.
    • சாலையில் சென்று கொண்டிருந்தபோது வழிமறித்த ஜெயசூர்யா மற்றும் அவரது நண்பர் பிரேம் ஆகியோர் வழிமறித்து தாக்கியுள்ளனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள கோணகப்பாடி கிராமம். அத்திக்கட்டானூர் பகுதியை சேர்ந்தவர் சிவப்பிரகாஷ் (19) இவருடைய நண்பர் மணிகண்டன் (19)என்பவரை நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்க்க அத்திகட்டானூர் பகுதியைச் சேர்ந்த ஜெயசூர்யா என்பவர் உதவி செய்ததாக கூறப்படுகிறது.

    கல்லூரியில் சேர்த்து விட்டதற்காக மணிகண்டனிடம் கமிசன் தொகையாக ரூ.3,500-யை கேட்டு ஜெயசூர்யா தொந்தரவு செய்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் கமிஷன் தொகையை கொடுக்காமல் காலதாமதம் படுத்தி வந்த மணிகண்டனை நேற்று அத்திக்கட்டானூர் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது வழிமறித்த ஜெயசூர்யா மற்றும் அவரது நண்பர் பிரேம் ஆகியோர் வழிமறித்து தாக்கியுள்ளனர்.

    அப்போது சிவப்பிரகாஷ் என்பவர் மணிகண்டனுக்கு ஆதரவாக பேசியபோது அவரையும் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.

    இதில் காயம் அடைந்த சிவப்பிரகாஷ் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தாரமங்கலம் போலீசார் ஜெயசூர்யா,பிரேம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • இரும்பு கம்பியை கொண்டு கடையில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கினர்.
    • இந்த காட்சி அங்குள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகியிருந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேச்சேரி கந்தநாயக்கர் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 28). இவர் எறகுண்டப்பட்டியில் பேக்கரி கடை நடத்தி வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு இவரது கடைக்கு குடிபோைதயில் 2 பேர் வந்து முருகனிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இரும்பு கம்பியை கொண்டு கடையில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கினர். இந்த காட்சி அங்குள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகியிருந்தது.

    இது குறித்து முருகன், மேச்சேரி போலீஸ் நிலையத்தில் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீ சார் விசாரணை நடத்தி,

    மேச்சேரி திமிரி கோட்டைைய சேர்ந்த ராஜா மகன் மணி, தெத்திகிரிபட்டியை சேர்ந்த செல்வம் மகன் அருள்குமார் ஆகிய இருவர் மீதும் கொலை முயற்சி உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் மணி, வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியை தழுவியவர் என்பது போலீசாரின் விசாரணை தெரியவந்தது.

    • தியாகதுருகம் அருகே கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    • அதே பகுதியைச் சேர்ந்த மணிவேல் (35)மற்றும் இவரது தாய் சின்னப்பிள்ளை (55).

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே எஸ்.ஒகையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் உத்தண்டராமன் (வயது 65) இவர் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர். சம்பவத்தன்று இவரது வீட்டின் முன்புறம் உள்ள சிமெண்ட் சாலையில் பைப் லைன் அமைப்பதற்காக கிராம ஊராட்சி சார்பில் பள்ளம் தோன்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த மணிவேல் (35)மற்றும் இவரது தாய் சின்னப்பி ள்ளை (55)ஆகியோர் உத்தண்டராமன் தான் பள்ளம் தோண்டி யதாக தவறாக நினைத்துக் கொண்டு, அவரைத் திட்டி அவரது வீட்டின் சுற்றுச்சுவர் மற்றும் படியை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து உத்தண்டராமன் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் மணிவேல், சின்னப்பிள்ளை ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×