தாரமங்கலம் அருகே கல்லூரி மாணவரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

கல்லூரியில் சேர்த்து விட்டதற்காக மணிகண்டனிடம் கமிசன் தொகையாக ரூ.3,500-யை கேட்டு ஜெயசூர்யா தொந்தரவு செய்து வந்துள்ளார். சாலையில் சென்று கொண்டிருந்தபோது வழிமறித்த ஜெயசூர்யா மற்றும் அவரது நண்பர் பிரேம் ஆகியோர் வழிமறித்து தாக்கியுள்ளனர்.
தாரமங்கலம் அருகே கல்லூரி மாணவரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
Published on

தாரமங்கலம்:

தாரமங்கலம் அருகிலுள்ள கோணகப்பாடி கிராமம். அத்திக்கட்டானூர் பகுதியை சேர்ந்தவர் சிவப்பிரகாஷ் (19) இவருடைய நண்பர் மணிகண்டன் (19)என்பவரை நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்க்க அத்திகட்டானூர் பகுதியைச் சேர்ந்த ஜெயசூர்யா என்பவர் உதவி செய்ததாக கூறப்படுகிறது.

கல்லூரியில் சேர்த்து விட்டதற்காக மணிகண்டனிடம் கமிசன் தொகையாக ரூ.3,500-யை கேட்டு ஜெயசூர்யா தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கமிஷன் தொகையை கொடுக்காமல் காலதாமதம் படுத்தி வந்த மணிகண்டனை நேற்று அத்திக்கட்டானூர் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது வழிமறித்த ஜெயசூர்யா மற்றும் அவரது நண்பர் பிரேம் ஆகியோர் வழிமறித்து தாக்கியுள்ளனர்.

அப்போது சிவப்பிரகாஷ் என்பவர் மணிகண்டனுக்கு ஆதரவாக பேசியபோது அவரையும் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.

இதில் காயம் அடைந்த சிவப்பிரகாஷ் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தாரமங்கலம் போலீசார் ஜெயசூர்யா,பிரேம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com