என் மலர்tooltip icon

    சேலம்

    • கும்பாபிஷேக விழாவையொட்டி சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி தலைமையில் 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
    • கும்பாபிஷேக விழாவையொட்டி சேலம் மாநகரில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு நாளை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி கோவில் கோபுரங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது.

    கும்பாபிஷேக விழாவையொட்டி 23 யாக குண்டங்கள், 16 கலசங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து கும்பாபிஷேக விழா யாக சாலை பூஜைகள் நேற்று தொடங்கியது. இதில் சிவாச்சாரியார்கள், தமிழ் ஓதுவார்கள் 45 பேர் கலந்து கொண்டு யாக சாலை பூஜையை நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    இன்று காலை 2-ம் கால யாக சாலை பூஜை தொடங்கி நடந்தது. தொடர்ந்து ராஜகோபுரம் மற்றும் விமானங்களில் கலசம் பொருத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    மாலை 3.15 மணி முதல் 5.30 மணி வரை மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்துதல், 6 மணி முதல் 10 மணி வரை 3-ம் கால யாக பூஜை நடக்கிறது.

    நாளை (27-ந் தேதி) அதிகாலை 4.30 முதல் 7.30 மணி வரை 4-ம் கால யாக பூஜை நடக்கிறது. தொடர்ந்து 7.40 முதல் 8 மணி வரை ராஜகோபுரம், கருவறை விமானம், பரிவார சன்னதி விமானம் மற்றும் கொடி மரத்திற்கு சம காலத்தில் மகாகும்பாபிஷேகம் நடக்கிறது.

    8.30 மணி முதல் 9.30 மணி வரை மகா கணபதி, கோட்டை பெரிய மாரியம்மன், மதுரை வீரன் சாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. 10 மணிக்கு மேல் மூலவர் சுவாமிக்கு மகா அபிஷேகம், ராஜ அலங்காரம், மகா தீபாராதனை, அன்னதான பிரசாத வினியோகம், மாலை 6 மணிக்கு மேல் தங்கத்தேர் புறப்படுதலும் நடக்கிறது.

    நாளை நடைபெறும் கும்பாபிஷேக விழாவையொட்டி சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் கோவிலில் தடுப்புகள் அமைத்து சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    கும்பாபிஷேக விழாவினை காண்பதற்கு வரும் பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு கும்பாபிஷேகத்தை எளிதாக காணும் வகையில் விழாவின் நேரடி ஒளிபரப்பை பெரிய டிஜிட்டல் திரையின் மூலம் காண கன்னிகா பரமேஸ்வரி கோவில், திருவள்ளுவர் சிலை, பழைய பஸ் நிலையம், மாவட்ட கலெக்டர் அலுவலக ரவுண்டானா ஆகிய 4 இடங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    விழாவில் அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், பல்வேறு ஆதினங்கள் பங்கேற்கிறார்கள்.

    மேலும் கும்பாபிஷேக விழாவிற்கு வரும் பக்தர்கள் வசதிக்காக நாளை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன. அதனை ஏற்று நாளை (27-ந் தேதி) உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கும்பாபிஷேக விழாவையொட்டி சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி தலைமையில் 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மேலும் கோவிலில் வெடிகுண்டு நிபுணர்களும் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    கும்பாபிஷேக விழாவையொட்டி சேலம் மாநகரில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    • கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.50 அடியாக இருந்தது.
    • அணையில் இருந்து கால்வாய் மற்றும் குடிநீருக்காக வினாடிக்கு 567 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    சேலம்:

    மேட்டூர் அணை மூலம் தமிழகத்தில் 12 மாவட்டங்கள் பாசன வசதியும், பல்வேறு மாவட்டங்கள் குடிநீர் வசதியும் பெற்று வருகிறது. காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இந்த அணை மூலம் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படும் வெள்ளம் தேக்கி வைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது அணையில் 103 அடிக்கு தண்ணீர் தேங்கி நின்றது. இதற்கிடையே தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதாலும், கர்நாடகா அணைகளில் இருந்து உரிய தண்ணீர் திறக்காததாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 30 அடியாக குறைந்தது.

    இதையடுத்து குடிநீர் தேவை மற்றும் மீன் வளத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த 10-ந்தேதி காலை 6 மணியுடன் நிறுத்தப்பட்டது. ஆனாலும் குடிநீர் தேவைக்காக தொடர்ந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாகவும், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 49.92 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 496 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. எனவே மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மாலைக்குள் 50 அடியை எட்டிவிடும். அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.50 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 531 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து கால்வாய் மற்றும் குடிநீருக்காக வினாடிக்கு 567 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதேபோல் கபினி அணைக்கு வினாடிக்கு 262 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் 300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    • சேலம் பூ மார்க்கெட்டுக்கு சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
    • ஆயுத பூஜை மற்றும் விஜய தசமியையொட்டி கடந்த 22-ந் தேதி சேலம் மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ 700 ரூபாய்க்கு விற்பனையானது.

    சேலம்:

    சேலம் பூ மார்க்கெட்டுக்கு சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த பூக்களை சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வாங்கி செல்கிறார்கள்.

    விலை உயர்வு

    ஆயுத பூஜை மற்றும் விஜய தசமியையொட்டி கடந்த 22-ந் தேதி சேலம் மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ 700 ரூபாய்க்கு விற்பனையானது. பின்னர் 23-ந் தேதி விலை குறைந்த நிலையில் நேற்று ஒரு கிலோ மல்லிகை பூ 500 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

    இன்று விலை மீண்டும் அதிகரித்து 600 ரூபாயாக உயர்ந்தது. இதேபோல நேற்று 280 ரூபாய்க்கு விற்கப்பட்ட முல்லைப்பூ இன்று 400 ரூபாய்க்கும், ஜாதி மல்லிகை பூ நேற்று 260 விற்கப்பட்ட நிலையில் இன்று 280 ஆகவும் உயர்ந்தது.

    இதே போல காக்கட்டான் 60 ரூபாயிலிருந்து 100 ரூபாயாகவும், அரளிப்பூ 120 ரூபாயிலிருந்து 160 ஆகவும் உயர்ந்தது. ஆனாலும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிக அளவில் பூக்களை வாங்கிச் சென்றனர்.

    முகூர்த்த நாள்

    வருகிற நாட்களில் முகூர்த்த நாள் மற்றும் கோவில் திருவிழாக்கள் இருப்பதாலும் இந்த பூக்கள் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியா பாரிகள் தெரிவித்தனர்.

    • மோலாண்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராபின்(23), பிரமிளா (19), நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையம் பகுதியில் உள்ள இவரும் அதே மில்லில் வேலை செய்து வருகிறார்கள்.
    • சேலம் வந்து காதலன் ராபினை ஓமலூர் அருகே பொட்டியபுரம் பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள மாட்டுக் காரனூர் மோலாண் டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராபின்(23), நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையம் பகுதியில் உள்ள தனியார் நூல் மில்லில் வேலை செய்து வருகிறார்.

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு காடச்ச நல்லூர் பகுதியை சேர்ந்தவர் பிரமிளா (19), இவரும் அதே மில்லில் வேலை செய்து வருகிறார். இதையடுத்து இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்துள்ளனர்.

    இவர்களது காதல் விவகாரம் பிரமிளாவின் பெற்றோருக்கு தெரியவர இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மேலும் வேறு ஒரு நபருடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்து உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறிய பிரமிளா சேலம் வந்து காதலன் ராபினை ஓமலூர் அருகே பொட்டியபுரம் பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து இருவரும் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு ஓமலூர் டி.எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். இது குறித்து ஓமலூர் டி.எஸ்.பி. மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஓமலூர் வழியாக சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.
    • இந்த சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் இடங்களில் விபத்தை தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் வழியாக சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. அதே போல மாநில நெடுஞ்சாலைகளும் செல்கிறது. இந்த சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் இடங்களில் விபத்தை தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    ஆய்வு

    அதன்படி ஓமலூர் பகுதியில் மோட்டார் வாகன ஆய்வாளர் கவிதா, போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜன் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சாலை விபத்து நடந்த இடங்களை ஆய்வு செய்தனர். அங்கு விபத்து ஏற்படாமல் தடுக்கும் வகையில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினர்.

    9 கோடியே 55 லட்ச ரூபாய் வருமானம்

    இதனை தொடர்ந்து அதிகாரிகள் கூறியதாவது:-

    சேலம் சரகத்தில் ஓமலூர், மேட்டூர், சேலம் கிழக்கு, மேற்கு, தெற்கு, ஆத்தூர், சங்ககிரி, தர்மபுரி என 7 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. இந்த பகுதியில் கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 60 ஆயிரத்து 462 இருசக்கர வாகனங்கள், 8 ஆயிரத்து 800 4 சக்கர வாகனங்கள், பேட்டரி வாகனங்களில் 4 ஆயிரத்து 268 இருசக்கர வாகனங்கள், 128 4 சக்கர வாகனங்கள் என போக்குவரத்து விதி மீறல்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 9 கோடியே 55 லட்ச ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

    மேலும் சேலம் சரகத்தில் ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நடந்த விபத்துகளில் 631 பேர் உயிரிழந்ததுடன் 4 ஆயிரத்து 118 பேர் காயமடைந்துள்ளனர். எனவே பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து வாகனங்களை இயக்குங்கள். விபத்துக்களை தவிர்த்திடுங்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தும்பல் துணை மின் நிலையத்தில் நாளை (26-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிது.
    • காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    சேலம்:

    தும்பல் துணை மின் நிலையத்தில் நாளை (26-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மாமாஞ்சி, ஈச்சங்காடு, தொட்டித்துறை, கருமந்துறை, மணியார்பாளையம், மணியார்குண்டம், தேக்கம்பட்டுபுதூர், பகுடுப்பட்டு, சூலாங்குறிச்சி, கரியக்கோவில், மன்னூர், குன்னூர், அடியனூர், பழப்பண்ணை, பாப்பநாயக்கன்பட்டி, தும்பல், இடையப்பட்டி, நெய்யமலை,பனைமடல், குமாரப்பாளையம் மற்றும் இதர சிற்றூர்கள் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை மின் செயற்பொறியாளர் முல்லை தெரிவித்துள்ளார்.

    • சங்ககிரிைய நோட்டமிட்டு மர்ம நபர்கள் சமீபகாலமாக தொடர் திருட்டில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • ஜெராக்ஸ் எடுப்பதற்காக பணத்தை மோட்டார் சைக்கிளில் வைத்து விட்டு கடைக்கு சென்றார். அதற்குள் மர்ம நபர் மோட்டார்சைக்கிளில் இருந்த பணத்தை எடுத்து சென்று விட்டார்.

    சங்ககிரி:

    தமிழ்நாட்டை பொறுத்தவரை நாமக்கல், சேலம், தருமபுரி, ஈரோடு, கரூர் போன்ற மாவட்டங்களில் லாரி கட்டுமானத் தொழில் பெரிதளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் ஏராளமான லாரி பாடி கட்டும் பட்டறைகள் இயங்கி வருகின்றன.

    அதுபோல் நாமக்கல், ஈரோடு மாவட்டங்களை இணைக்கும் எல்லை பகுதியான சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட சங்ககிரியில் லாரி பாடி பில்டிங் தொழில் பிரதான தொழிலாக உள்ளது. டாரஸ், எல்.பி.ஜி டேங்கர், டிரெய்லர், ரிக் வாகனங்கள், மணல் லாரிகள் என பல்வேறு சரக்குப் போக்குவரத்து வாகனங்க ளுக்கு பாடி கட்டுவதற்கு வருகின்றனர். இதேபோல் லாரிக்கு பெயிண்டிங் பூசும் தொழில், ஒர்க் ஷாப் அதிக அளவில் உள்ளன.

    இந்த தொழிலை நம்பி இங்கு பல்லாயிரக்கணக்கான தொழிலாளிகளும், அவர்களின் குடும்பத்தினரும் உள்ளனர்.

    நோட்டம்

    இந்த நிலையில் சங்ககிரிைய நோட்டமிட்டு மர்ம நபர்கள் சமீபகாலமாக தொடர் திருட்டில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்ககிரியில் உள்ள ஒரு வங்கியில் பயிர்கடன் செலுத்த சென்ற விவசாயி ஜெராக்ஸ் எடுப்பதற்காக பணத்தை மோட்டார் சைக்கிளில் வைத்து விட்டு கடைக்கு சென்றார். அதற்குள் மர்ம நபர் மோட்டார்சைக்கிளில் இருந்த பணத்தை எடுத்து சென்று விட்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில் மோட்டார் சைக்கிள் திருட்டு நடந்துள்ளது.

    மோட்டார்சைக்கிள் திருட்டு

    சங்ககிரி அருகே உள்ள வைகுந்தத்தில் பிரபல தனியார் ஓட்டல் உள்ளது. அங்கு பணிபுரியும் ஒருவர் தனது மோட்டார்சைக்கிளை ஓட்டல் வெளியே நிறுத்தி விட்டு பணி முடிந்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அங்குள்ள சி.சி.டி.வி. காட்சியை பார்த்தபோது டிப்டாப் உடை அணிந்த 25 முதல் 32 வயதுக்குள் இருக்கும் மர்ம நபர் வாகனத்தை திருடி செல்லும் காட்சி பதிவாகி உள்ளது.

    மற்றொரு சம்பவம்

    அதேபோல் சங்ககிரி எபினேசர் காலனியில் ஒரு லாரி நிறுத்தப்பட்டு இருந்தது. அதில் செல்போனை மறந்து டிரைவர் வைத்து விட்டு சென்றார். இந்த செல்போனை மர்ம நபர் எடுத்து செல்லும் காட்சியும் சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகி உள்ளது.

    இது குறித்து சங்ககிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே மர்ம நபர்கள் மோட்டார்சைக்கிள், செல்போன் திருடும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தொடர் திருட்டால் பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

    • சேலத்தின் காவல் தெய்வமாக விளங்கி வரும் கோட்டை மாரியம்மன் கோவில் திருப்பணிகள் முடிவு பெற்று நாளை மறுநாள் (27-ந்தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது.
    • கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 2-ந் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டது.

    சேலம்:

    சேலத்தின் காவல் ெதய்வமாக விளங்கி வரும் கோட்டை மாரியம்மன் கோவில் திருப்பணிகள் முடிவு பெற்று நாளை மறுநாள் (27-ந்தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது.

    முகூர்த்தக்கால்

    கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 2-ந் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டது. தொடர்ந்து முளைப்பாலிகை இடுதல், புதிய கொடி மரம் பிரதிஷ்டை ஆகியவை நடந்தது. பின்னர் ராஜ கோபுரம் மற்றும் மணிமண்டப விமான கலசங்களுக்கு பாலாலயம் நடைபெற்றது.

    நேற்று கணபதி வழிபாடு, புண்யாக வாசனம், பஞ்சகவ்யம், மகாகணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் ஆகியவை நடந்தது. பின்னர் சுகவனேஸ்வரர் கோவிலில் இருந்த யானை மற்றும் பக்தர்கள் புனித தீர்த்த குடங்கள் மற்றும் முளைப்பாலிகையை ஊர்வலமாக கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு வந்தனர்.

    யாக சாலை பூஜைகள்

    கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் பிரமாண்ட யாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 23 யாக குண்டம் மற்றும் 16 கலசங்கள் வைக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை கணபதி வழிபாடு, சங்கல்பம், புண்யாகவாசனம், அக்னி சங்கரண வழிபாடு, தீபாராதனை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

    கண் திறப்பு

    தொடர்ந்து மாலை சுதை விக்கிரகங்களுக்கு கண் திறப்பு வழிபாடு நடக்கிறது. பின்னர் மாலை 6 மணிக்கு மேல் கணபதி வழிபாடு, புண்யாகவாசனம், பூதசுத்தி, கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், வேள்வி சாலை பிரவேசம், துவார பூஜை மண்டபார்ச்சனை நடக்கிறது. தொடர்ந்து முதற்கால வேள்வி வழிபாடு நடக்கிறது. பின்னர் இரவு 10 மணிக்கு முதற்கால பூர்ணாஹுதி, சதுர்வேத பாராயணம், தமிழ்முறை ஓதுதல்,மகா தீபாராதனை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது.

    2-ம் கால யாக வேள்வி

    நாளை (26-ந்தேதி) காலை 8 மணிக்கு மேல் கணபதி வழிபாடு, புண்யாகவாசனம் மற்றும் 2-ம் கால யாக வேள்வி வழிபாடு நடக்கிறது. தொடர்ந்து காலை 11 மணிக்கு மேல் ராஜகோபுரம், கருவறை விமானம் மற்றும் பரிவார சன்னதி விமானங்களில் கோபுர கலசங்கள் பொருத்தப்படுகிறது.

    தொடர்ந்து மதியம் 1 மணிக்கு மேல் 2-ம் கால திரவியாஹுதி மற்றும் சதுர்வேத பாராயணம், தமிழ் முறை ஓதுதல் மகா தீபாராதணை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. பின்னர் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பஞ்சலோக தகடு வைத்து அஷ்டபந்தனம் சாத்தப்படுகிறது. மாலை 6 மணிக்கு மேல் 3-ம் கால வேள்வி வழிபாடு நடக்கிறது. இரவு 10 மணிக்கு மேல் நாடி சந்தானம், கண் திறப்பு வழிபாடு, தமிழ் திருமுறை ஓதுதல், மகா தீபாராதணை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது.

    கும்பாபிஷேகம்

    நாளை மறுநாள் (27-ந் தேதி) அதிகாலை 4.30 மணிக்கு 4-ம் கால யாக வேள்வி வழிபாடு நடக்கிறது. பின்னர் காலை 7.35 மணிக்கு வேள்வி சாலையில் இருந்து தீர்த்தக்கலச குடங்கள் புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் 7.40 மணிக்கு மேல் 8 மணிக்குள் பெரிய மாரியம்மன் ராஜகோபுரம், கருவறை விமான கோபுரம், பரிவார சன்னதி விமான கோபுரங்கள் மற்றும் கொடி மரத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 8.30 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் மூல மூர்த்தி பெரிய மாரியம்மன், மகா கணபதி, மதுரைவீரன் சாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு மேல் மகா அபிஷேகம், ராஜ அலங்காரம், தசதரிசனம், தசதானம், மகா தீபாராதணை நடைபெறுகிறது. காலை 10.30 மணிமுதல் அன்னதானம் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு தங்கரதம் புறப்படுகிறது.

    மின்னொளியில் ஜொலிக்கிறது

    கும்பாபிஷேக விழாவையொட்டி கோவில் கோபுரங்கள் மற்றும் சேலம் நகரமே மின்னொளியில் ஜொலிக்கிறது. குடும்பம், குடும்பமாக கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்து வருகிறார்கள். கும்பாபிஷேக விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • குஞ்சு மாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு சாமிக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தது.
    • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள குஞ்சு மாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு சாமிக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று நவராத்திரி நிறைவு விழாவையொட்டி அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளையும் சில்லறை நாணயங்களையும் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

    • ஜலகண்டாபுரம் பேரூராட்சி அருகே உள்ள பொது நூலகத்தில் 4,470 உறுப்பினர்கள் உள்ளனர்.
    • இங்கு நூலகவாசிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் என தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் படிக்க வருகின்றனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த ஜலகண்டாபுரம் பேரூராட்சி அருகே உள்ள பொது நூலகத்தில் 4,470 உறுப்பினர்கள் உள்ளனர். இங்கு நூலகவாசிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் என தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் படிக்க வருகின்றனர்.

    1995-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த நூலக கட்டிடத்தின் மேற்கூரையில் உள்ள சிமெண்ட் பூச்சு ஆங்காங்கே பெயர்ந்து விழுந்து சேதம் அடைந்து பராமரிப்பின்றி காணப்ப டுகிறது.

    இதுகுறித்து நூலகத்திற்கு வருபவர்கள் கூறுகையில், இந்த கட்டிடம் மிகவும் பழமை வாய்ந்த கட்டிடம் ஆகும்.

    இதனால் மேற்கூரை இடிந்து விழுவதால் மாணவ, மாணவிகள் அச்சம் அடைந்து படிக்க வருவதில்லை. மேலும் பொதுமக்கள் சார்பில் பல முறை அரசு அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர்.

    மேலும் நூலகத்தை புதிய கட்டிடத்திற்கு மாற்றிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    • கருங்கல்பட்டியை சேர்ந்த 56-வது வார்டு தி.மு.க. செயலாளர் முருகேசன் செவ்வாய்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    சேலம்:

    தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றி சமூக வலைதளத்தில் குமரேசன் என்பவர் அவதூறு செய்தி பரப்பி உள்ளனர். இதை பார்த்த தி.மு.க.வினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையடுத்து கருங்கல்பட்டியை சேர்ந்த 56-வது வார்டு தி.மு.க. செயலாளர் முருகேசன் செவ்வாய்பேட்டை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் யார் என்று விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில் அவர் சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்த குமரேசன் (49) என்பது தெரிய வந்தது. இவர் டவுண் பகுதியில் வாகன உதிரி பாகம் விற்பனை கடை வைத்துள்ளார். மேலும் இவர் நாம் தமிழர் கட்சியில் தெற்கு தொகுதி முன்னாள் துணை தலைவராக இருந்து உள்ளார். இதையடுத்து அவரை போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாம் தமிழர் கட்சி மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த 10-ந்தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 30 அடியாக இருந்த நிலையில் இன்று காலை 49.38 அடியாக அதிகரித்துள்ளது.
    • அணையில் இருந்து தொடர்ந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வந்தது. இதன் காரணமாக கடந்த 10-ந்தேதி காலை 6 மணியுடன் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டமும் கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது.

    கடந்த 10-ந்தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 30 அடியாக இருந்த நிலையில் இன்று காலை 49.38 அடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2 வாரத்தில் மட்டும் அணையின் நீர்மட்டம் சுமார் 19 அடி உயர்ந்து உள்ளது.

    நேற்று வினாடிக்கு 4 ஆயிரத்து 138 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று 4 ஆயிரத்து 334 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அணையில் இருந்து தொடர்ந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ×