என் மலர்
ராணிப்பேட்டை
- எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார்
- போலீசார் விசாரணை
கலவை:
வேலூர் முள்ளிப்பாளையம் திடீர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் இளமதி மகன் கோகுல்நாத் (வயது 17).
வேலூர் கஸ்பாவை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சுதாகர் (18). எலக்ட்ரீஷியன் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் ஆற்காடு அருகே கட்டப்பட்டு வரும் திருமண மண்டபத்தில் நேற்று எலக்ட்ரீசியன் வேலை செய்துள்ளனர்.
பின்னர் வேலை முடிந்து மாலை 3 மணியளவில் ஆற்காட்டில் இருந்து கண்ணமங்கலம் சாலை வழியாக வேலூர் நோக்கிச் சென்றனர். பைக்கை கோகுல்நாத் ஓட்டியுள்ளார். ஆற்காடு- கண்ணமங்கலம் சாலையில் திமிரி அடுத்த கரடிமலை வளைவில் சென்றபோது பைக் நிலைதடுமாறி கீழே விழுந்தது.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த கோகுல்நாத் சம்பவ இடத்திலேயே பலியானார். சுதாகர் படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திமிரி இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத், முதன்மை காவலர் சிலம்பரசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்த சுதாகரை மீட்டு ஆற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கோகுல்நாத்தின் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
- பின்னோக்கி வந்து வாலிபர் மீது ஏறியது
காவேரிப்பாக்கம்:
காவேரிப்பாக்கம் அடுத்த பாணாவரம் பகுதியில் சென்னை- பெங்களூர் அதிவிரைவு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணிகளில் வட மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான கூலி தொழிலாளிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று வழக்கம் போல் விரைவு சாலை அமைக்கும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இதில் ரோடு ரோலர் மெக்கானிக்காக பணியாற்றி வந்த மத்தியபிரதேச மாநிலம், மொரனா மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித் (வயது 34). ரோடு ரோலர்களுக்கு ஆயில் கிரீஸ் அடிக்கும் பணிகளை மேற்கொண்டார்.
அப்போது எதிர்பாராத விதமாக ரோடு ரோலர் ஒன்று பின்னோக்கி வந்து ரஞ்சித் மீது ஏறியது.
இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு ராணிப்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்நிலையில் அங்கு அவர் சிகிக்சை பலனின்றி நேற்று மாலை இறந்தார். இதுகுறித்து பாணாவரம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் விரைந்தனர்
- 4 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்
அரக்கோணம்:
சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்தவர் பிராங்கிளின் (வயது 25). இவரது பெரியம்மா வீடு அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே உள்ள ஏ.வி.எம். சர்ச் பகுதியில் உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பிராங்கிளின் அவரது பெரியம்மா வீட்டுக்கு வந்திருந்தார். அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பழைய 8-வது பிளாட்பாரம் உள்ளது.
செங்கல்பட்டு வழியாக செல்லும் ரெயில்கள் நிற்கும் இந்த பிளாட்பாரம் தற்போது பயன்படுத்தப்படாமல் உள்ளது.
இந்த பிளாட்பாரத்தின் அருகே நேற்று இரவு பிராங்கிளின் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் பிராங்கிளினை திடீரென சரமாரியாக வெட்டினர். அவர்களிடம் இருந்து தப்பி ஓடினார்.
கும்பல் ஓட ஓட விரட்டி கத்தியால் சரமாரியாக வெட்டினர். உடலில் பலத்த காயம் ஏற்பட்டதால் பிராங்கிளின் சரிந்து விழுந்தார். ஆஸ்பத்தரியில் சேர்க்கபட்ட அவர் இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு கிரண் சுருதி, அரக்கோணம் ஏ.எஸ்.பி. அசோக் கிரீஸ் யாதவ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும், குற்றவாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் பாரதி, விநாயகமூர்த்தி, பார்த்தசாரதி, சப்-இன்ஸ் பெக்டர் நாராயணசாமி ஆகியோர் தலைமையில் 4 தனிப்படை அமைத்து எஸ்.பி. உத்தரவிட்டார்.
இதையடுத்து, தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த பகுதி, ரெயில் நிலையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட் சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் பல்வேறு முக்கிய தடையங்கள் கிடைத்து ள்ளது. குற்றவாளிகள் அங்க அடையாளங்கள் மற்றும் அவர்கள் வந்த பாதையின் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.
பிராங்கிளினுக்கும் சென்னையை சேர்ந்த சில பேருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக அவர் தனது பெரியம்மா வீட்டில் தங்கி இருந்தார்.
இதனை நோட்டமிட்ட சென்னை கும்பல் திட்டமிட்டு கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பிராங்கிளின் எதிரிகள் குறித்த விவரங்களை சேகரிக்க தனிப்படை போலீசார் சென்னை விரைந்துள்ளனர்.
குற்றவாளிகளை நெருங்கி விட்டதாகவும், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.
- விசைத்தறியால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக புகார்
- தேசிய கைத்தறி தினத்தையொட்டி நடந்தது
கலவை:
ராணிப்பேட்டை மாவட்டம்,கலவை அடுத்த வாழைப்பந்தல் கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர்.
இவர்கள் கைத்தறிக்காக ஒதுக்கப்பட்ட 11 ரகங்களை விசைத்தறியில் நெய்வதால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே விசைத்தறியில் நெய்வதை தடைசெய்யவேண்டும், கைத்தறிச்சட்டம் 1985-ஐ அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தேசிய கைத்தறி தினத்தையொட்டி, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெசவாளர்கள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- திருவண்ணாமலை இல்லத்தில் ஒப்படைப்பு
- கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் சந்தை மைதானத்தின் அருகே உள்ள முதியோர் ஆதரவற்றோர் இல்லத்தில் கடந்த 2-ந் தேதி ஆதரவற்ற நிலையில் 1 வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை மீட்கப்பட்டது.
அந்த குழந்தை ராணிப்பேட்டை குழந்தைகள் நலக்குழுமத்தின் மூலம் திருவண்ணாமலை, அடி அண்ணாமலை கிராமத்தில் உள்ள தத்து நிறுவனத்திடம் தற்காலிக பராமரிப்பிற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த குழந்தையை உரிமம் கோரும் பெற்றோர்கள் உரிய ஆதாரங்களுடன் அறிவிப்பு வழங்கப்பட்ட 15 நாட்களுக்குள் ராணிப்பேட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், நன்னடத்தை அலுவலர், குழந்தைகள் நலக்குழுமம் ராணிப்பேட்டை என்ற முகவரியில் அணுகுமாறு தெரிவிக்கப்படுகிறது.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- படுகாயம் அடைந்த சுதாகரை அங்கிருந்தவர்கள் மீட்டனர்
- போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை
ஆற்காடு:
வேலூர் முள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோகுல் நாத் (வயது 18). இவர் ஆற்காடு அருகே உள்ள தாஜ் புரா பகுதியில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்துள்ளார். இவரது நண்பர் வேலூர் கஸ்பா பகுதியைச் சேர்ந்த சுதாகர்.
இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு ஆற்காட்டில் இருந்து வேலூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.
ஆற்காடு அருகே உள்ள கரடிமலை பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறி சாலையின் ஓரம் இருந்தமைல் கல் மீது மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட கோகுல்நாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த சுதாகரை அங்கிருந்தவர்கள் மீட்டு 'வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் திமிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் ரோந்து பணியில் சிக்கினார்
- 200 பாட்டில்கள் பறிமுதல்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சிறுணமல்லி பகுதியில் நெமிலி சப்இன்ஸ்பெக்டர் லோகேஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது புத்தேரி கிராமத்தில் சந்தேகப்படும்படி நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
அவர் சிறுணமல்லி கிராமத்தை சேர்ந்த முனுசாமி என்பவரின் மகன் அருண் (வயது 23) என்பதும், அனுமதி இன்றி மது பாட்டில்கள் விற்றதும் தெரிய வந்தது.
போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 200 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- 3 முறை முழு கொள்ளளவைவும், 4 முறை 75 சதவீத கொள்ள ளவையும் எட்டியுள்ளது.
- சுற்றுலா மாளிகை சிதலமடைந்து தற்போது சமூக விரோதிகள் கூடாரமாக மாறி உள்ளது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் ஏரியானது, தமிழகத்திலேயே 3-வது பெரிய ஏரியாக உள்ளது. இந்த ஏரி 650 ஆண்டுகளுக்கு முன் பல்லவ மன்னன் 3-ம் நந்திவர்மனால் விவசாயிகள் நலன் கருதி உருவாக்கப்பட்டது.
இது சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காவேரிப்பாக்கத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.
பார்ப்பதற்கு அழகாக காட்சியளிக்கும் இந்த ஏரி 3968 ஏக்கர் பரப்பளவும்,1474 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. ஏரியின் உயரம் 30.65 அடி, கரையில் நீளம் 9 கிலோமீட்டர் ஆகும். தற்போது இந்த ஏரி பொதுப்பணித்துறையின் பராமரிப்பில் உள்ளது.
இந்த ஏரியின் மூலம் நேரடியாக 6200 ஏக்கர் நிலங்களும், அதன் உபரி நீரின் மூலமாக 41 ஏரிகள் நிரம்பி,10 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.
கடந்த 10 ஆண்டுகளில் 3 முறை முழு கொள்ளளவைவும், 4 முறை 75 சதவீத கொள்ள ளவையும் எட்டியுள்ளது.
மேலும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் முதலமைச்சராக இருந்த காலகட்டங்களில் அடிக்கடி காவேரிப்பாக்கம் ஏரிக்கு வந்து அங்கிருந்த கலை நுட்பத்துடன் கட்டப்பட்ட சுற்றுலா மாளிகையில் தங்கி ஓய்வெடுத்து செல்வது வழக்கமாக இருந்தது.
கலை நுட்பத்துடன் கம்பீரமாக காட்சி அளித்த அந்த சுற்றுலா மாளிகை சிதலமடைந்து தற்போது சமூக விரோதிகள் கூடாரமாக மாறி உள்ளது.
கடல் போல் காட்சி அளித்து கொண்டிருக்கும் இந்த காவேரிப்பாக்கம் ஏரியின் அழகை மேலும் அழகு படுத்தும் விதமாக ஏரியை சுற்றி பூங்கா, படகு இல்லம் போன்றவை அமைக்க வேண்டும்.
மேலும் சிதலமடைந்திருக்கும் சுற்றுலா மாளிகையை மறு சீரமைத்து சிறந்த சுற்றுலா தலமாக மாற்றட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதன் மூலம் 10 கிலோமீட்டர் சுற்றளவிலுள்ள திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், சோளிங்கர் யோகநரசிம்ம பெருமாள் கோவில், வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடம், ஓச்சேரி சித்தஞ்சி சிவகாளி சித்தர் பீடம் மற்றும் ரத்னகிரி பால முருகன் கோவில், வேலூர் ஜலகண்டேசுவரர் கோவில், ஸ்ரீபுரம் பொற்கோவில் ஆகியவற்றை காணவரும் சுற்றுலா பயணிகளுக்கு, காவேரிப்பாக்கம் ஏரி ஒரு சிறந்த சுற்றுலா தலமாக இருப்பதுடன் அங்குள்ள பொதுமக்களின் வாழ்வாதாரமும் மேம்படும்.
எனவே காவேரிப்பாக்கம் ஏரியை சீரமைத்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு சிறந்த சுற்றுலா தலமாக அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
- நண்பரைப் பார்த்துவிட்டு வீடு திரும்பியபோது பரிதாபம்
- தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்
ஆற்காடு:
ஆற்காடு குட்டைக்கரை தெருவை சேர்ந்தவர் முனுசாமி மகன் சதீஷ்(வயது37). இவர் அப்பகுதியில் உள்ள பைக் விற்பனை கடையில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு ராணிப்பேட்டையில் உள்ள தனது நண்பரை பார்ப்பதற்காக பைக்கில் சென்றுள்ளார்.
பின்னர் நண்பரைப் பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவர் ஆற்காடு பழைய மேம்பாலம் அருகே வந்தபோது சென்னையிலிருந்து-வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி சதீஷின் பைக்கின் மீது மோதியது.
இதில் சதீஷ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆற்காடு டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
- பிளாட்பாரத்தின் அருகே நேற்று இரவு பிராங்கிளின் நடந்து சென்றார்.
- அரக்கோணம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அரக்கோணம்:
சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்தவர் பிராங்கிளின் (வயது 25). இவரது பெரியம்மா வீடு அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே உள்ள ஏ.வி.எம். சர்ச் பகுதியில் உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பிராங்கிளின் அவரது பெரியம்மா வீட்டுக்கு வந்திருந்தார்.
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பழைய 8-வது பிளாட்பாரம் உள்ளது. செங்கல்பட்டு வழியாக செல்லும் ரெயில்கள் நிற்கும் இந்த பிளாட்பாரம் தற்போது பயன்படுத்தப்படாமல் உள்ளது.
இந்த பிளாட்பாரத்தின் அருகே நேற்று இரவு பிராங்கிளின் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் பிராங்கிளினை திடீரென சரமாரியாக வெட்டினர்.
அவர்களிடம் இருந்து தப்பி ஓடினார். கும்பல் ஓட ஓட விரட்டி கத்தியால் சரமாரியாக வெட்டினர். உடலில் பலத்த காயம் ஏற்பட்டதால் பிராங்கிளின் சரிந்து விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சடைந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து சிதறி ஓடினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் படுகாயம் அடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சை பெற்று வந்த நிலையில் பிராங்கிளின் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
பிராங்கிளின் அரக்கோணம் ஏ.வி.எம். சர்ச் பகுதியில் வசித்து வரும் தன்னுடைய பெரியம்மா வீட்டுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வந்தார்.
தற்போது பெரியம்மா வீட்டிலேயே தங்கி வேலை செய்து வந்தார். இவருக்கும் சென்னையை சேர்ந்த சில பேருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக அவர் தனது பெரியம்மா வீட்டில் தங்கி இருந்தார்.
இதனை நோட்டமிட்ட சென்னை கும்பல் திட்டமிட்டு கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம் என்றனர்.
- ரூ.99 லட்சத்தில் நிதி ஒதுக்கீடு
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
சோளிங்கர்:
சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட காமராஜர் நகர், கொண் டபாளையம், அண்ணாநகர், எசையனூர், மோட்டூர் உள் ளிட்ட 18 தெருக்களுக்கு நகர்ப்புற சாலை மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் ரூ.99 லட்சம் மதிப்பில் சிமெண்டு சாலை அமைக் கும் பணிக்கான பூமிபூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு 21-வது வார்டு உறுப்பினர் ராதா வெங்கடேசன் தலைமை தாங்கி னார். நகராட்சிபொறியாளர் ஆசீர்வாதம், நகராட்சிபொதுப் பணி மேற்பார்வையாளர் ஆனந்தன், நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் சரத்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக நகராட்சி தலைவர் தமிழ்ச் செல்வி, துணைத் தலைவர் பழனி, தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் சிவானந்தம், தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன் ஆகியோர் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து சிமெண்டு சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தனர்.
இதில் நகராட்சி கவுன்சிலர் அருண்ஆதி, அன்பரசு, மோகனா சண்முகம், பணி ஆய்வாளர் மனோஜ்குமார், நகர செயலாளர் கோபி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு
- பூமி பூஜையுடன் நடந்தது
சோளிங்கர்:
சோளிங்கரை அடுத்த போலிப்பாக்கம் கிராமத்தில் சிமெண்டு சாலை அமைக்க முனிரத்தினம் எம்.எல்.ஏ. தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.3 லட்சம் ஒதுக்கினார்.
அந்த நிதியின்கீழ் சிமெண்டு சாலை அமைக்கும் தொடக்க நிகழ்ச்சி திரவுபதி அம்மன் கோவில் அருகில் பூமி பூஜையுடன் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் முன்னாள் தி.மு.க. ஒன்றிய செயலாளர் இ.செல்வம் தலைமை தாங்கினார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் எம்.கார்த்திக், நிர்வாகிகள் ஆறுமுகம், பார்த்திபன், கடிகாசலம் பாரதி, ரவி, முரளிதரன், பரந்தாமன், பாக்யராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






