என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • குடும்ப தகராறில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சந்தபேட்டை பகுதி யைச் சேர்ந்தவர் சின்னதுரை, லாரி டிரைவர். இவரது மனைவி சத்தியா (வயது 33). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை சத்தியா வீட்டிலிருந்த விஷத்தை குடித்துள்ளார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சத்தியா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கலெக்டர் வளர்மதி திடீர் ஆய்வு
    • ரூ.1 கோடியே 92 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் நடைபெறுகிறது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் பேரூராட்சியில் அம்ருத் 2.0 திட்டத்தில் ரூ.80லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் குளம் வெட்டப்படும் பணி, 13-வது வார்டில் அமைந்துள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் குப்பைகளை உலர்த்திட உலர் களம் அமைக்கும் பணி, ரூ.7லட்சத்து 35ஆயிரம் மதிப்பில் தரம் பிரிக்கப்பட்ட பொருட்களை வைக்கும் குடோன் அமைக்கும் பணி, தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.69லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் அல்லிகுளம் சாலை அமைக்கும் பணி, நரசிங்கபுரம் பகுதியில் இராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.15 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை பணி என மொத்தம் ரூ.1 கோடியே 92 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் வளர்மதி நேற்று பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். மேலும் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

    இதை தொடர்ந்து அம்மூர் பேரூராட்சி பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் ஆய்வு செய்து பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    அரிசி சரியில்லாததை பார்த்து இதனை மாற்றி பெற்றுக் கொள்ளவும் உத்தரவிட்டார்.

    ஆய்வின் போது பேரூராட்சிகள் உதவி இயக்குனர்(பொறுப்பு) அம்சா, செயல் அலுவலர் கோபிநாத், வட்ட வழங்கல் அலுவலர் பாஸ்கரன் உள்ளிட்டோர் இருந்தனர்.

    • ரோந்து பணியில் சிக்கினர்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை, சிப்காட் அடுத்த நாமக்குளம் மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன் (22).

    இவர் கடந்த 7-ந் தேதி தனது பைக் தனது சித்தப்பா வீட்டிற்கு அருகில் நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் மீண்டும் வந்து பார்த்தபோது பைக் காணவில்லை.

    இது தொடர்பாக பத்மநாபன் சிப்காட் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பைக் திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று சிப்காட் போலீசார் சீக்கராஜபுரம் செக்போஸ்ட் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த சோளிங்கர் அருகே உள்ள புலிவலம் கிராமத்தைச் சேர்ந்த சிம்பு ( எ)குல்லா (20), சரத் (எ)தூள் (21), கவியரசன் (19)ஆகியோரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அப்போது பத்மநாபனின் பைக்கை திருடி வந்திருப்பது தெரிய வந்தது.

    இதை தொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்து பைக்கை பறிமுதல் செய்தனர்.

    • கல்லூரி மாணவர்கள் அடித்து உதைத்தனர்
    • ரெயில் நிலையத்தில் போலீசார் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது

    அரக்கோணம்:

    சென்னையில் இருந்து அரக்கோணத்திற்கு நேற்று மின்சார ரெயில் சென்று கொண்டிருந்தது.

    பெண்களிடம் சில்மிஷம்

    அரக்கோணம் அருகே ரெயில் வந்து கொண்டிருந்தபோது, போதையில் இருந்த வாலிபர் ஒருவர் பெண்களிடம் சில்மிஷம் செய்தார். பெண்கள் அவரை எச்சரித்தனர்.

    இருப்பினும் போதை வாலிபர் பெண்களின் மீது கை வைத்தும், உரசியபடி தொடர்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனை தாங்க முடியாத பெண்கள் அருவெறுப்போடு முகம் சுளித்தனர்.

    இதனை பார்த்த கல்லூரி மாணவர்கள், போதை வாலிபரை தட்டி கேட்டனர். அப்போது மாணவர்களுக்கும், போதை வாலிபருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர்கள், போதை வாலிபரை அடித்து உதைத்தனர். அரக்கோணம் ரெயில் நிலையம் வந்தடைந்ததும் கல்லூரி மாணவர்கள், போதை வாலிபரை அரக்கோணம் ரெயில்வே போலீசாரிடம் நிலையத்திற்கு ஒப்படைக்க பிடித்து வந்தனர்.

    ரெயில் நிலையத்தில் போலீசார் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் போதை வாலிபருடன், கல்லூரி மாணவர்கள் காத்திருந்தனர். ஆனால் போலீசார் யாரும் வரவில்லை. இதனால் அங்கு மேலும் பதட்டம் அதிகரித்தது.

    இதனையடுத்து கல்லூரி மாணவர்கள் போதை வாலிபரை எச்சரிக்கை செய்து அரக்கோணத்திலேயே விட்டு விட்டு ரெயிலில் ஏறி சென்றனர்.

    இது போன்ற சம்பவங்கள் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் அடிக்கடி நடப்பது வாடிக்கையாகிவிட்டது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த அரக்கோணம் ரெயில் நிலையத்தில், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சரிவர ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை. அடிதடி, திருட்டு போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், ரோந்து பணியில் இல்லாமல் ரெயில்வே போலீசார் அலட்சியமாக செயல்படுகின்றனர்.

    அங்கு நடக்கும் அசம்பாவிதங்களையும் அவர்கள் கண்டு கொள்வதில்லை என்று குற்றச்சாட்டுகளை பயணிகள் முன்வைக்கின்றனர். ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சரிவர பணி செய்யாமல், பிளாட்பாரத்தில் உள்ள இருக்கைகளில் ஆங்காங்கே அமர்ந்து செல்போன் பேசுவது, வீடியோ பார்ப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு மெத்தன போக்கை கடைபிடித்து வருகின்றனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு அரக்கோணம் ரெயில் நிலையத்தில் வாலிபர் ஒருவர் ஓட ஓட விரட்டி கொலை செய்த சம்பவம் நிகழ்ந்தது. இருப்பினும் போலீசார் மெத்தனமாக செயல்படுவது பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    v

    • ஆடி கிருத்திகை விழாவை யொட்டி இன்று ஒரு நாள் விடுமுறை
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆடி கிருத்திகை விழாவை யொட்டி மாவட்டத்தில் உள்ள ரத்தினகிரி பாலமுருகன் திருக்கோவில் மற்றும் திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி முருகன் கோவில் மற்றும் இதர பகுதியில் உள்ள முருகன் கோவில்களுக்கு பக்தர்கள், பொதுமக்கள் அதிகளவில் காவடி எடுத்து பஸ்களில் சென்று வருவார்கள்.

    இதனால் பஸ்களை பயன்படுத்தி பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் மாணவ மாணவிகளுக்கு சிரமம் ஏற்படும். எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

    இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகிற 12-ந்தேதி (சனிக்கிழமை) அன்று அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும் என மாவட்ட கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

    • புகார்கள் குறித்த பதிவேடுகளை பார்வையிட்டார்
    • கைததிகள் அறை, ஆயுதங்கள் வைப்பறை அதிகாரிகளிடம் விரவங்களை கேட்டறிந்தார்

    ராணிப்பேட்டை:

    வாலாஜா போலீஸ் நிலையத்தில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் குறித்த பதிவேடுகள், இணைய வழியாக பதிவு செய்யப்பட்டுள்ள புகார்கள் குறித்த பதிவேடுகளையும் கைதிகள் அறை, காவலர்கள் ஓய்வெடுக்கும் அறை, ஆயுதங்கள் வைப்பறை, வரவேற்பாளர் அறை உள்ளிட்டவைகளை பார்வையிட்டு போலீஸ் அதிகாரிகளிடம் விவரங்கள் கேட்டறிந்தார்.

    ஆய்வின்போது சப்-இன்ஸ்பெக்டர்கள் மகாராஜா, சீனிவாசன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

    • குடும்ப தகராறு
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    திருச்சி மாவட்டம், டால்மியாபுரத்தை சேர்ந்தவர் தன்ராஜ் (வயது 53) இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக வந்து ராணிப்பேட்டை அடுத்த நரசிங்கபுரத்தில் சர்ச் அருகில் உள்ள குடியிருப்பில் தங்கி வசித்து வந்தார்.

    தன்ராஜ் சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக வேலை செய்தார். நேற்று முன்தினம் தன்ராஜ் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த அவர் வீட்டை விட்டு வெளியேறி அக்ராவரம் அருகே மூடப்பட்டிருந்த தொழிற்சாலைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதை பார்த்த அப்பகுதியினர் சிப்காட் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் தன்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டிரைவர் சிறு காயத்துடன் உயிர் தப்பினார்
    • போக்குவரத்து பாதிக்கப்பட்டது

    காவேரிப்பாக்கம்:

    சித்தூரில் இருந்து மோட்டார் உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு ஸ்ரீ பெரம்பத்தூருக்கு இன்று காலை தனியார் கம்பெனி கன்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது.

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலையில் வரும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தடுப்பு சுவர் மீது மோதி கவிழ்ந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஹைவே பெட்ரோல் ஊழியர்கள் வந்தனர். பின்னர் 2 கிரேன் வரவழைக்கப்பட்டு சாலையில் கவிழ்ந்து கிடந்த கன்டெய்னரை அப்புறப்படுத்தினர்.

    இதில் டிரைவர் சிறு காயத்துடன் உயிர் தப்பினார். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்
    • கலெக்டர் உத்தரவு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகிற 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று 288 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என கலெக்டர் உத்தவிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது -

    ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள 288 கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தன்று கிராமசபைக் கூட்டங்கள் நடத்த வேண்டும்.

    கிராம சபைக்கூட்டங்களில், கிராம ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம், ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி அரசுக் குடியிருப்புத் திட்டம்,

    அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்),ஜல் ஜீவன் இயக்கம்,வறுமை குறைப்புத் திட்டம், மாற்றுத்திறனாளி களுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

    மேற்படி கிராம சபைக்கூட்டங்களில் தாசில்தார்கள் பார்வையாளர்களாக கலந்து கொள்ள வேண்டும். மேலும் கிராம சபைக்கூட்டங்கள் நடைபெறுவதை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • சாமிகளை டிராக்டர் வாகனத்தில் கொக்கி போட்டு ஊர்வலமாக இழுத்து வந்தனர்
    • பக்தர்கள் அந்தரத்தில் பறந்த நிலையில் அம்மனுக்கு மாலை அணிவித்தனர்

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம்,கலவை அருகே உள்ள மாம்பாக்கம் கிராமத்தில் சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த எட்டியம்மன் கோவில் உள்ளது.

    இங்கு ஆடிமாதத்தை முன்னிட்டு எட்டியம்மனுக்கு திருவிழா நடைபெற்றது.முன்னதாக காலையில் ஊர் பொதுமக்கள் அனைவரும் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.

    அதனை தொடர்ந்து தங்களது நிலத்தில் விளைந்த தானியங்களை கொண்டு அம்மனுக்கு பொங்கல் வைத்தும்,பழங்களை படையலிட்டும் கால்நடைகள் நோய் நோடியின்றி வாழவும், விவசாயம் செழிக்கவும், உலக நன்மைக்காகவும், தொற்று நோய்கள் வராமல் தடுக்கவும் எட்டியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

    பின்னர் மாலை போட்டு விரதம் இருந்த பக்தர்கள் பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட எட்டியம்மன், ரேணுகாம்பாள் ஆகிய சாமிகளை டிராக்டர் வாகனத்தில் கொக்கி போட்டு ஊர்வலமாக இழுத்து வந்தனர்.

    அப்போது பூங்கரகம், தீ சட்டி, அலகு குத்தி கொண்டு மேளதாளம் முழங்க ஊர்வலமாக சென்றனர்.

    எட்டியம்மனுக்கு மாலை போட்ட பக்தர்கள் அந்தரத்தில் பறந்த நிலையில் மாலை அணிவித்து நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

    திருவிழாவில் மாம்பாக்கத்தை சுற்றியுள்ள ஆரூர், பொன்னமங்கலம், சஞ்சீவிபுரம், சொரையூர், மேல்பதுப்பாக்கம், பென்னகர், அக்கூர், குப்படிசாத்தம் என பல்வேறு கிராமங்களில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • ரெயில் நிலையத்தில் போலீசார் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
    • போலீசார் மெத்தனமாக செயல்படுவது பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    அரக்கோணம்:

    சென்னையில் இருந்து அரக்கோணத்திற்கு நேற்று மின்சார ரெயில் சென்று கொண்டிருந்தது.

    அரக்கோணம் அருகே ரெயில் வந்து கொண்டிருந்தபோது, போதையில் இருந்த வாலிபர் ஒருவர் பெண்களிடம் சில்மிஷம் செய்தார். பெண்கள் அவரை எச்சரித்தனர்.

    இருப்பினும் போதை வாலிபர் பெண்களின் மீது கை வைத்தும், உரசியபடி தொடர்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனை தாங்க முடியாத பெண்கள் அருவெறுப்போடு முகம் சுளித்தனர்.

    இதனை பார்த்த கல்லூரி மாணவர்கள், போதை வாலிபரை தட்டி கேட்டனர். அப்போது மாணவர்களுக்கும், போதை வாலிபருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர்கள், போதை வாலிபரை அடித்து உதைத்தனர். அரக்கோணம் ரெயில் நிலையம் வந்தடைந்ததும் கல்லூரி மாணவர்கள், போதை வாலிபரை அரக்கோணம் ரெயில்வே போலீசாரிடம் நிலையத்திற்கு ஒப்படைக்க பிடித்து வந்தனர்.

    ரெயில் நிலையத்தில் போலீசார் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் போதை வாலிபருடன், கல்லூரி மாணவர்கள் காத்திருந்தனர். ஆனால் போலீசார் யாரும் வரவில்லை. இதனால் அங்கு மேலும் பதட்டம் அதிகரித்தது.

    இதனையடுத்து கல்லூரி மாணவர்கள் போதை வாலிபரை எச்சரிக்கை செய்து அரக்கோணத்திலேயே விட்டு விட்டு ரெயிலில் ஏறி சென்றனர்.

    இது போன்ற சம்பவங்கள் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் அடிக்கடி நடப்பது வாடிக்கையாகிவிட்டது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த அரக்கோணம் ரெயில் நிலையத்தில், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சரிவர ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை. அடிதடி, திருட்டு போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், ரோந்து பணியில் இல்லாமல் ரெயில்வே போலீசார் அலட்சியமாக செயல்படுகின்றனர்.

    அங்கு நடக்கும் அசம்பாவிதங்களையும் அவர்கள் கண்டு கொள்வதில்லை என்று குற்றச்சாட்டுகளை பயணிகள் முன்வைக்கின்றனர். ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சரிவர பணி செய்யாமல், பிளாட்பாரத்தில் உள்ள இருக்கைகளில் ஆங்காங்கே அமர்ந்து செல்போன் பேசுவது, வீடியோ பார்ப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு மெத்தன போக்கை கடைபிடித்து வருகின்றனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு அரக்கோணம் ரெயில் நிலையத்தில் வாலிபர் ஒருவர் ஓட ஓட விரட்டி கொலை செய்த சம்பவம் நிகழ்ந்தது. இருப்பினும் போலீசார் மெத்தனமாக செயல்படுவது பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    • ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
    • விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வருகிற 12-ந்தேதி சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் ஆடிக்கிருத்திகை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.

    அந்த வகையில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரியில் உள்ள முருகன் கோவிலுக்கு அதிகளவில் மக்கள் செல்வார்கள் என்பதால், அம்மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வருகிற 12-ந்தேதி சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×