என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A village council meeting should be held"

    • ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்
    • கலெக்டர் உத்தரவு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகிற 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று 288 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என கலெக்டர் உத்தவிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது -

    ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள 288 கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தன்று கிராமசபைக் கூட்டங்கள் நடத்த வேண்டும்.

    கிராம சபைக்கூட்டங்களில், கிராம ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம், ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி அரசுக் குடியிருப்புத் திட்டம்,

    அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்),ஜல் ஜீவன் இயக்கம்,வறுமை குறைப்புத் திட்டம், மாற்றுத்திறனாளி களுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

    மேற்படி கிராம சபைக்கூட்டங்களில் தாசில்தார்கள் பார்வையாளர்களாக கலந்து கொள்ள வேண்டும். மேலும் கிராம சபைக்கூட்டங்கள் நடைபெறுவதை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×