என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் கலந்து கொண்டனர்"

    • உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்
    • பயங்கரவாத சக்திகளுக்கு எதிராக உறுதி மொழி ஏற்பு

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி நகர தலைவர் பொன்னையன் தலைமையில் கட்சியினர் மார்க்கெட் வீதியில் உள்ள காந்தி சிலை அருகே வைக்கபட்ட ராஜீவ்காந்தி திரு உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் பயங்கரவாத சக்திகளுக்கு எதிராக உறுதி மொழி ஏற்றனர்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ ராஜபாபு, நிர்வாகிகள் செல்வம், வாசுதேவன், உதயகுமார், சம்மந்தம், மாணிக்கம், குருமூர்த்தி, பிள்ளையார், ஆறுமுகம், சைதை பிரபு, காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு
    • பூமி பூஜையுடன் நடந்தது

    சோளிங்கர்:

    சோளிங்கரை அடுத்த போலிப்பாக்கம் கிராமத்தில் சிமெண்டு சாலை அமைக்க முனிரத்தினம் எம்.எல்.ஏ. தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.3 லட்சம் ஒதுக்கினார்.

    அந்த நிதியின்கீழ் சிமெண்டு சாலை அமைக்கும் தொடக்க நிகழ்ச்சி திரவுபதி அம்மன் கோவில் அருகில் பூமி பூஜையுடன் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் முன்னாள் தி.மு.க. ஒன்றிய செயலாளர் இ.செல்வம் தலைமை தாங்கினார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் எம்.கார்த்திக், நிர்வாகிகள் ஆறுமுகம், பார்த்திபன், கடிகாசலம் பாரதி, ரவி, முரளிதரன், பரந்தாமன், பாக்யராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
    • ஆன்மீக நூல்கள் வழங்கப்பட்டது

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த திருப்பாற்கடல் கிராமத்தில், இந்து மக்கள் கட்சி சார்பில், மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. வேலூர் கோட்ட தலைவர் எஸ்.கே.மோகன் தலைமை தாங்கினார்.

    மாநில துணை செயலாளர் மணிவண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பார்த்திபன் வரவேற்றார். இதில் மாநில செயலாளர் கண்ணன் கலந்து கொண்டு பேசினார்.

    இக்கூட்டத்தில் வாலாஜா ஒன்றியத்திற்கு உட்பட்ட திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் பயன்பாட்டில் உள்ள நிலத்தை மீட்டெடுத்து, பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன. இதனையடுத்து பொது மக்களுக்கு பகவத்கீதை, கருடபுராணம் உள்ளிட்ட ஆன்மீக நூல்கள் வழங்கப்பட்டது.

    ×