ஆதரவற்ற ஒரு வயது ஆண் குழந்தை மீட்பு

திருவண்ணாமலை இல்லத்தில் ஒப்படைப்பு கலெக்டர் தகவல்
ஆதரவற்ற ஒரு வயது ஆண் குழந்தை மீட்பு
Published on

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டையில் சந்தை மைதானத்தின் அருகே உள்ள முதியோர் ஆதரவற்றோர் இல்லத்தில் கடந்த 2-ந் தேதி ஆதரவற்ற நிலையில் 1 வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை மீட்கப்பட்டது.

அந்த குழந்தை ராணிப்பேட்டை குழந்தைகள் நலக்குழுமத்தின் மூலம் திருவண்ணாமலை, அடி அண்ணாமலை கிராமத்தில் உள்ள தத்து நிறுவனத்திடம் தற்காலிக பராமரிப்பிற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த குழந்தையை உரிமம் கோரும் பெற்றோர்கள் உரிய ஆதாரங்களுடன் அறிவிப்பு வழங்கப்பட்ட 15 நாட்களுக்குள் ராணிப்பேட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், நன்னடத்தை அலுவலர், குழந்தைகள் நலக்குழுமம் ராணிப்பேட்டை என்ற முகவரியில் அணுகுமாறு தெரிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com