search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மைல் கல் மீது பைக் மோதி எலக்ட்ரீசியன் சாவு
    X

    மைல் கல் மீது பைக் மோதி எலக்ட்ரீசியன் சாவு

    • படுகாயம் அடைந்த சுதாகரை அங்கிருந்தவர்கள் மீட்டனர்
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

    ஆற்காடு:

    வேலூர் முள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோகுல் நாத் (வயது 18). இவர் ஆற்காடு அருகே உள்ள தாஜ் புரா பகுதியில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்துள்ளார். இவரது நண்பர் வேலூர் கஸ்பா பகுதியைச் சேர்ந்த சுதாகர்.

    இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு ஆற்காட்டில் இருந்து வேலூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.

    ஆற்காடு அருகே உள்ள கரடிமலை பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறி சாலையின் ஓரம் இருந்தமைல் கல் மீது மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட கோகுல்நாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த சுதாகரை அங்கிருந்தவர்கள் மீட்டு 'வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் திமிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×