என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    சனாதான ஒழிப்பு மாநாட்டில் இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும், இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபுவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தி ராணிப்பேட்டை மாவட்ட பா.ஜ.க. தலைவர் விஜயன் தலைமையில் இந்து சமய அறிநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகை இட முயன்றதாக பா.ஜ.க.வினர் 120 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல திருப்பத்தூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ரயில்வே ஸ்டேஷன் ரோடு அருகே நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சி.வாசுதேவன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் வக்கீல் வி.அன்பழகன் முன்னிலை வைத்தார். அனைவரையும் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.தீபா வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் நகரத் தலைவர் சண்முகம், பொதுச் செயலாளர்கள் கவியரசு, தண்டபாணி, மாவட்ட துணைத் தலைவர் ஈஸ்வர், நகர செயலாளர் குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து பாஜகவினர் தர்மராஜா கோவிலில் உள்ள இந்து அறநிலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட சென்ற பெண்கள் உள்ளிட்ட 250 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஒச்சேரி அடுத்த ஆயர்பாடி கிராமத்தை சேர்ந்த விஜயன் (வயது 53). இவரின் மகள் பவித்ரா (25) என்பவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி சிறுகரும்பூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று முன்தின இரவு ஆயர்பாடி கிராமத்தை ேசர்ந்த மணிகண்டன்(32) என்பவர் பவித்ராவுக்கு போனில் குறுந்தகவல் அனுப்பியதாக கூறப்படுகிறது.

    இதனால் இருதரப்புக்கும் ஏற்பட்ட தகராறில் மணிகண்டன் தாக்கப்பட்டு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

    இதுகுறித்து இருதரப்பினர் அளித்த புகாரின் பேரில் சத்தியமூர்த்தி, விஜயன், ராஜேஷ் ஆகிய 3 பேரையும் அவளூர் போலீசார் கைது செய்தனர்.

    • கொசு மருந்து அடிக்கவேண்டும்
    • குடிநீர் வசதி, கழிவு நீரோடை பராமரிப்பு, உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் லதா நரசிம்மன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன், துணைத்தலைவர் தீபிகா முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இக்கூட்டத்தில் அனைத்து வார்டுகளிலும் டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க கொசு மருந்து அடிக்கவேண்டும். பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத பேரூராட்சியாக மாற்றவேண்டும். குடிநீர் வசதி, கழிவு நீரோடை பராமரிப்பு, உள்ளிட்டவை குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது.

    இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களும் கலந்துகொண்டனர்.

    • அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்பு
    • தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் ஏ.கே.சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளரும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி வருகிற செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் அன்று மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கிறார்.

    அதன்படி அன்று ராணிப்பேட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2ஆயிரத்து 500 பேருக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்பட உள்ளது. இதில் உள்ளாட்சி பிரதிநிகள் கலந்து கொள்ள வேண்டும்.

    வருகிற 17-ந்தேதி கந்தனேரியில் நடைபெறும் நடைபெறும் முப்பெரும் விழாவில் நிர்வாகிகள்,உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் ஆர்.காந்தி பேசினார். கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவ ட்டத்தில் அண்ணாவின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது.

    வேலூர் மாவட்டம், பள்ளி கொண்டா அருகே கந்தனேரியில் தி.மு.க. தலைவர், தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. இளைஞர் அணி செயலாளர்,இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் முப்பெரும் விழாவில் ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் திரளாக கலந்து கொள்வது.

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ராணி ப்பேட்டை மாவட்டத்தில் விழா நடைபெறாத பகுதிகளிலும் சிறப்பாக நடத்திட வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயந்தி, தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய , நகர,பேரூர் செயலாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • போலீசார் விசாரணை
    • தோகை முழுவதும் பிடுங்கப்பட்டிருந்தது

    அரக்கோணம்:

    அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இன்று காலை சென்னை-அரக்கோணம் முதலாவது நடைமேடை நுழைவாயிலில் ஆண் மயில் இறந்த நிலையில் கிடந்தது.

    இதனை கண்ட பயணிகள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதன் அடிப்படையில் போலீசார் மயிலை கைப்பற்றி சோதனை செய்தனர். அப்போது மயிலின் தலையில் அடிபட்டிருந்தது. ேமலும் மயிலின் தோகை முழுவதும் பிடுங்கப்பட்டிருந்தது.

    மயிலை ரெயிலில் கடத்தி வந்த அந்த நபர் மயிலின் தோகை முற்றிலும் எடுத்துக்கொண்டு ரெயிலில் வரும் போது போலீசாருக்கு பயந்து தூக்கி வீசி எரிந்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.

    இறந்த மயிலை ராணிப்பேட்டை மாவட்ட வனத்துறையிடம் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அரக்கோணம் ெரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சாகச பயணம் கூடாது
    • கலெக்டர் அறிவுரை

    ராணிப்பேட்டை:

    தமிழம் முழுவதும் கடந்த ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை சாலை விபத்துகள் தொடர்பாக ஆய்வு செய்ததில், 7,303 மரணங்கள் நிகழ்ந்துள்ளது.

    இதில் தேசிய நெடுஞ்சாலைகளில் 2,330, மாநில நெடுஞ்சாலைகளில்2,567, மாவட்ட சாலைகளில் 1,153, மற்றும் கிராமச் சாலைகளில் 1,253 சாலை விபத்து மரணங்கள் ஏற்பட்டுள்ளன.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் சாலை விபத்துகள் மூலம் 110 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. இதில், குறிப்பாக மாநில நெடுஞ்சாலையில் 96 மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் 14 சாலை விபத்து மரணங்கள் ஏற்பட்டுள்ளன.

    இதுகுறித்து கலெக்டர் வளர்மதி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் இந்த புள்ளி விவரங்கள் நமக்கு உணர்த்துவது என்னவென்றால், பைக் சாலை விபத்து மரணங்களே அதிகம் என்பதுதான்.

    எனவே, பைக்கில் செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்திருத்தல் வேண்டும். பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு அதிவேகம் கொண்ட பைக்குகளை வாங்கித் தருவதை கைவிடுதல் வேண்டும்.

    18 வயது நிரம்பாத, லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவதைத் தவிர்த்திட வேண்டும்.

    பைக்கில் இருவர் மட்டுமே பயணம் செய்ய வேண் டும். அந்த இருவரும் ஹெல்மெட் அணிதல் வேண்டும். இவற்றைத் தவறாது கடைப்பிடித்தால், பைக் விபத்துகளில் உயிரிழப்பைக் கண்டிப்பாக தவிர்க்க முடியும்.

    அதேபோல் கார்களில் பயணிப்போர் 'சீட் பெல்ட்' கண்டிப்பாக அணிந்துவாகனம் ஓட்ட வேண்டும், வாகனங்களின் டயர்களில் காற்றழுத்தம் சரியாக உள்ளதா, எரிபொருள் இருப்பு, பிரேக், ஒலிப்பான் ஆகியவை சரியாக இயங்குகிறதா என்பதைச் சரிபார்த்த பின் னரே வாகனத்தை ஓட்ட வேண்டும்.

    பார்வை குறைவான வளைவுகளில் முந்திச் செல்ல முயலுதல் மற்றும் அதிவேக பயணம், சாகசப் பயணங்கள் கூடாது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்க ளும் சாலை விதிகளைக் கண் டிப்பாக கடைப்பிடித்து சாலை விபத்து மரணங்கள் இல்லா மாவட்டமாக மாற்றுவதற்கான அனைத்து ஒத்துழைப்பையும் நல்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் அருகே குருவராஜப்பேட்டை மங்கலங்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் 2022-23-ம் கல்வியாண்டில் அரசுப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

    விழாவிற்கு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக செயலாளர் குப்புசாமி தலைமை தாங்கி பேசினார்.

    ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, ஒய்வு பெற்ற டிஐஜி பாண்டியன், ஒய்வு பெற்ற கல்லூரி முதல்வர் பால் வண்ணன், ராணிப்பேட்டை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பிரேமலதா, வேலூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் தயாளன் ஆகியோர் கலந்து கொண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மற்றும் நீட் தேர்வில் வெற்றி பெற்றவ்களை பாராட்டி சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினர்.

    மேலும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரிய, ஆசிரியைகளையும் பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.

    • பால் ஊற்றுவதற்காக சாலை ஓரம் சென்று கொண்டிருந்தனர்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    செங்கம்:

    செங்கம் அடுத்த ரோடுகரியமங்கலம் சேர்ந்தவர்கள் பரிதா (வயது 37), சின்னபாப்பா(55), ஜெயமணி (38). இவர்கள் அதே பகுதியில் உள்ள பகுதியில் இன்று காலை பால் ஊற்றுவதற்காக சாலை ஓரம் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக பால் ஊற்ற வந்த 3 பேர் மீது மோதியது. இதில் அவர்கள் பலத்த காயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக பரிதா மற்றும் ஜெயமணி ஆகியோர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து செங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 30 ஆண்டுகளாக சிகிச்சை அளித்தற்காக இந்தியாவின் சிறந்த குடிமகன் விருது வழங்கப்பட்டது
    • காசோலையினை கலெக்டரிடம் வழங்கினார்

    கலவை:

    கலவை சுற்றுப்பகுதிகளில் உள்ள ஏராளமான மக்கள் மருத்துவ சிகிச்சை பெற அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்.

    இங்கு வரும் மக்களின் நலனுக்காக ஓய்வு பெற்ற அரசு மருத்துவரும் மற்றும் கிராமப்புறங்களில் பொதுமக்களுக்கு 30 ஆண்டுகளாக சிகிச்சை அளித்தற்காக இந்தியாவின் சிறந்த குடிமகன் விருது பெற்ற மனிதநேய மருத்துவருமான செங்கோட்டையன் கலவை அரசு மருத்துவமனைக்கு ரூ.74 ஆயிரம் மதிப்புள்ள ரத்த பரிசோதனை கருவி (செமி ஆட்டோ அனலைசர்) வாங்குவதற்கான காசோலையினை கலெக்டர் வளர்மதியிடம் வழங்கினார்.

    அப்போது, மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் விஜயா முரளி , சமூக ஆர்வலர் புருஷோத்தமன் ஆகியோர் உடன் இருந்தனர். 

    • அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்
    • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

    ராணிப்பேட்டை:

    வாலாஜா நகரில் மிகப் பழமையான சுந்தர விநாயகர் கோவில் உள்ளது.

    இங்கு மூலவர் விநாயகர் மற்றும் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சாமி, விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர், பர்வதவர்தினி சமேத ராமநாதார், மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு தனி சன்னதிகள் உள்ளது.

    இதற்கிடையே இந்த கோவிலுக்கு சிறிய அளவிலான தேர்செய்திட தீர்மானிக்கப்பட்டது இதற்காக பக்தர்கள், தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகள் அடங்கிய திருப்பணிகுழு அமைக்கப்பட்டது.

    நன்கொடையாளர்கள் உதவியுடன் தேர்செய்யும் பணியில் ஈடுப்பட்டனர். இந்தப் பணியை மதுரை மணிகண்ட ராஜா தலைமை யிலான ஸ்தபதிகள் ஈடுபட்டனர்.

    ரூ.25 லட்சம் மதிப்பில் 18 அடி உயரத்தில் 3 டன் எடையில் வெக்கை தேக்கு மரத்தினால் தேர் செய்யப்பட்டு இதற்கான வெள்ளோட்டம் இன்று காலை நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர். காந்தி கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது கூடியிருந்த பக்தர்கள் அரோகரா என கோஷமிட்டனர். தொடர்ந்து 4 மாடவீதி களிலும்தேர் பவனி வந்தது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் லட்சுமணன், வாலாஜா ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சேஷா வெங்கட், கோவில் அறங்காவலர் குழு தலைவர் கோபி, திருப்பணி குழு தலைவர் வேலு உள்பட கோவில் நிர்வா கிகள், நகரமன்ற உறுப்பி னர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • 250-கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது
    • ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது

    வாலாஜா:

    வாலாஜாவில் வட்டார சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் நேற்று நடந்த மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதி மகாசக்தி தலைமை தாங்கினார்.

    வட்டார சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் வக்கில்ஸ்ரீதரன் மற்றும் பல்வேறு வக்கீல்கள் இந்த வழக்குகளை விசாரணை நடத்தினர் .

    அப்போது நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள், குடும்ப நல, செக் மோசடி வங்கி கடன் நிலுவை உள்பட பல்வேறு அபராத மற்றும் தொழிலாளா் நல வழக்குகள் மற்றும் கிரிமினல் பண மோசடி வாகன விபத்து, நில எடுப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

    இதில் 250-கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு முடித்து வைக்கப்பட்டது.

    நீதிமன்றங்க ளில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து அவா்களது வக்கீல்கள் மூலம் மக்கள் நீதிமன்றத்துக்கு வழக்குகளை அனுப்பி வைத்தனர். அதில் சில வழக்குகள் சமரசம் பேசி தீா்வு காணப்பட்டது.

    மக்கள் நீதிமன்றத்தில் சமரசம் பேசி முடிக்கப்படும் வழக்குகளுக்கு மேல் முறையீடு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக வாலாஜா ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உச்சநீதி மன்ற, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் உத்தரவுப்படி சமரசத் தீர்வு மையத்தையும் நீதிபதி மகா சக்தி திறந்து வைத்தார். இதில் வக்கீல் சங்க தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர் .

    தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 245 குற்ற வழக்குகள் முடிவு செய்யப்பட்டு அதில் ரூ.1லட்சத்து 25 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது.

    மேலும் 21 வழக்குகளில் கடன் தொகை ரூ.3 லட்சத்து 22ஆயிரத்து 200 வசூல் செய்து முடிவு காணப்பட்டது.

    இதில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள காசோலை வழக்குகள் இன்று சமரசம் செய்து வழக்குகள் முடிக்கப்பட்டது.

    • ராணிப்பேட்டையில் நாளை நடக்கிறது
    • அமைச்சர் ஆர். காந்தி அழைப்பு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும் , கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    ராணிப்பேட்டை பாரதிநகரில் உள்ள மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் நாளை 10-ந்்தேதி மாலை 3 மணிக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் ஏ.கே. சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெறுகிறது.

    கூட்டத்தில் தி.மு.க.முப்பெரும் விழா, பவள விழா குறித்தும்,வாக்காளர் பட்டியல் , வாக்குச்சாவடி சரிபார்த்தல் மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. எனவே கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் ,தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி நிர்வாகிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் தவறாது பங்கேற்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ×