search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை தடுப்பு சுவரில் மோதி வாலிபர் பலி
    X

    சாலை தடுப்பு சுவரில் மோதி வாலிபர் பலி

    • 2 பேர் படுகாயம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ராணிப்பேட்டை:

    வாலாஜா அடுத்த வி.சி.மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 20) ஏ.சி.மெக்கானிகாக வேலை பார்த்து வந்தார். அதே கிராமத்தை சேர்ந்த இவரது நண்பர் மாணிக்கம்(21) வெல்டராக வேலைசெய்து வருகிறர்.

    இந்த நிலையில் இரவு 2 பேரும் வாலாஜா அடுத்த டோல்கேட் பகுதிக்கு சென்று விட்டு மீண்டும். பைக்கில் வாலாஜா நோக்கி வந்தனர்.

    இதில் யுவராஜ் ைபக்கை ஓட்டி வந்துள்ளார். அப்போது புலித்தாங்கல் பகுதி அருகே வந்த போது எதிர்பாராத விதமாக பைக் சாலை தடுப்பில் மோதியது.

    இதில் தூக்கி எறியப்பட்ட இருவரும் படுகாய மடைந்தனர். உடனடியாக அருகிலிருந்தவர்கள் இருவரையும் மீட்டு வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் தலையில் பலத்த காயமடைந்த யுவராஜை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பின்னால் அமர்ந்து வந்ததில் பலத்த காயம் அடைந்த மாணிக்கம் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

    Next Story
    ×