என் மலர்
ராணிப்பேட்டை
- மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் செல்போனில் தகவல்
- 3 பேர் மீது போலீசில் தாய் புகார்
நெமிலி:
நெமிலியை அடுத்த திருமால்பூர் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சம்பவத் தன்று மாலையில் வீட்டிற்கு அருகே உள்ள கடைக்கு சென்று பேனா வாங்கிக்கொண்டு வீடு திரும்பினார்.
அப்போது அதேப் பகுதியை சேர்ந்த 3 பேர் மாணவியை காரில் கடத்தி சென்றதாகவும், இரவு முழுவதும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் அடுத்தநாள் மதியம் பள்ளூரில் இறக்கிவிட்டு வீட்டிற்கு செல்லுமாறு கூறி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இதையடுத்து வீட்டுக்கு சென்ற மாணவி நடந்த சம்பவத்தை தாய் மற்றும் மாமாவிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச் சியடைந்த மாணவியின் தாய் இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் செல்போனில் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும் நேற்று நெமிலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித் தார், அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆவணி மாத அமாவாசை முன்னிட்டு நடந்தது
- பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரும்புலிப்பாக்கம் கிராமத்தில் முத்தாலம்மன் கோவிலில் ஆவணி மாத அமாவாசை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நேற்று இரவு நடைபெற்றது.
இதில் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர், இதற்கான ஏற்பாடுகளை ஊர் நாட்டாண்மை தாரர்கள் விழா குழுவினர்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
- தலைமை ஆசிரியர் தலைமையில் நடந்தது
- பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்திற்கு உட்பட்ட சயனபுரம் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்ப ள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் 70 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு தலைமை நேற்று நடைபெற்றது.
இதேபோல பின்னாவரம் அரசு மேல்நிலைப்ப ள்ளியில் 52 மாணவ, மாணவியர் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிகளில், நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விலையில்லா சைக்கிள்களை மாணவ மாணவியருக்கு வழங்கினார்.
இதில் நெமிலி ஒன்றிய குழு துணை தலைவர், தீனதயாளன், ஊராட்சி மன்ற தலை வர்கள், (சயனபுரம்) பவானி வடிவேலு, (பின்னா வரம்)
மணிவண்ணன், பள்ளியின் ஆசிரிய பெருமக்கள் மாணவச் செல்வங்கள், துணைத் தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
- கணவர் 2-வது திருமணம் செய்ததால் விபரீதம்
- தலைமறைவான மாமியாரை தேடி வருகின்றனர்
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட் டம் அரக்கோ ணத்தை அடுத்த குறிஞ்சி நகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 24).
இவரும் மேல்பாக் கம் கிராமத்தை சேர்ந்த ஸ்டீபன் (26) என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சென்னையில் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டு ஸ்டீபனின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
திருமணம் முடிந்த ஒரே மாதத்தில் ராஜேஸ்வரி தாய் வீட்டுக்கு வந்துள்ளார்.
இந்தநிலையில் ஸ்டீபனுக்கு அவரது பெற்றோர் 2-வது திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த ராஜேஸ்வரி வாழப் பிடிக்கவில்லை என்றும் கணவர் வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்வதை ஏற்க முடிய வில்லை எனவும், பெற்றோருக்கு கஷ்டத்தை கொடுத்ததாக கூறி எழுதி வைத்து விட்டு வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த தற்கொலைக்கு ராஜேஸ்வரியின் கணவர் , மாமியார், மாமனார் தான் காரணம் என ராஜே ஸ்வரியின் தாயார் மகாலட்சுமி போலீசில் புகார் அளித்தார்.
அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையைத் தொ டர்ந்து ராஜேஸ்வ ரியின் கணவர் மற்றும் மாமியார்,மாமனார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ராஜேஸ்வரியின் கணவர் ஸ்டீபன் மற்றும் மாமனார் செல்லையா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் தலைமறைவான மாமியார் குமாரியை தேடி வருகின்றனர்.
- பெற்றோர் இடையே அடிக்கடி தகராறு
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் அடுத்த சீனிவாசன் பேட்டையில் அம்பேத்கர் புது தெரு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் ஹேமகுமார் (வயது 18) தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.
ஹேமகுமாருக்கும், பெற்றோர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் ஹேமகுமார் தனது அறையில் தூங்க சென்றார்.
நேற்று வேலைக்கு செல்வதற்காக ஹேமகு மாரை அவரது உறவினர் எழுப்ப சென்றபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவரை மீட்டு ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஹேமகுமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கலெக்டர் தகவல்
- ராணிப்பேட்டையில் நாளை நடக்கிறது
ராணிப்பேட்டை:
தமிழ்நாடு அரசின் சார்பில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயல்ப டுத்தப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தை நாளை 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடங்கி வைக்கிறார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகத்தால் அரசின் முறையான வழிகாட்டுதல்களை பின்பற்றி பல்வேறு கள ஆய்வுகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்ப ங்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் குடும்ப அட்டை வாரியாக ரேசன் கடை பணியாளர்கள் மூலம் பதிவு செய்யப்பட்டது.
பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு நாளை முதல் ரூ.1000 வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நாளை காலை 10 மணிஅளவில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்து, தொடக்கமாக 2ஆயிரத்து 500 பயனாளிகளுக்கு உரிமை தொகையினை வழங்க உள்ளார்.
இதில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
மேற்கண்ட தகவலை கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் தெரிவித்துள்ளார்.
- சமூக விரோதிகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரிப்பு
- பயணிகளுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
அரக்கோணம்:
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் சமூக விரோதிகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது.
பயணிகளிடம் செல்போன் உள்ளிட்ட வற்றை மர்ம நபர் பறித்து செல்கின்றனர். இது குறித்து ரெயில்வே போலீசாரிடம் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. ரெயில்வே போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரைட் வின் என்ற வாலிபர் மும்பைக்கு வேலை சம்பந்தமாக சென்று இருந்தார். பின்னர் அவர் மும்பையில் இருந்து ரெயில் மூலம் அரக்கோணத்திற்கு வந்தார்.
காட்பாடி செல்வதற்காக முதலாம் நடைமேடையில் காத்திருந்தார். அப்போது அவர் வைத்திருந்த பையில் சான்றிதழ்கள் மற்றும் உடைமைகள் உள்ளிட்ட பொருட்கள் இருந்தன.
அதனை அமரும் இடத்தில் வைத்துவிட்டு ரெயில் வருகிறதா என்று பார்த்தார். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் பையை திருடி சென்று விட்டனர்.
பை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரைட் வின் இதுகுறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் ஆன்லைனின் மூலம் புகார் அளிக்க அறிவுறுத்தினர்.
அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அவர்கள் உடமைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. மேலும் இது போன்ற பல்வேறு சிக்கலில் தவிக்கும் பயணிகளுக்கு தகுந்த பாதுகாப்பு அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி யுள்ளனர்.
- டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது
- போலீசார் விபத்து குறித்து விசாரணை
காவேரிப்பாக்கம்:
ஆந்திர மாநிலம், கடப்பா பகுதியில் இருந்து வாழைப்பழத்தார்களை ஏற்றிக்கொண்டு லோடு ஆட்டோ திண்டிவனம் நோக்கி இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த சேந்தமங்கலம் அருகே வரும்போது எதிரே வந்த பால் வேன் மீது லோடு ஆட்டோ உரசியது.
இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ நிலை தடுமாறி தலைகீழாக கவிழ்ந்தது. ஆட்டோவில் இருந்த வாழைப்பழத்தார்கள் சாலையில் விழுந்து நசுங்கியது. இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்து குறித்து நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் லோடு ஆட்டோவை அப்புறப்ப டுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
மேலும் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அமைச்சர் ஆர்.காந்தி அறிக்கை
- மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தையும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலா ளரும், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சருமான ஆர். காந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்ப தாவது:-
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா கந்தனேரியில் வருகிற 17-ந் தேதி நடைபெறும் தி.மு.க.வின் முப்பெரும் விழாவில் தமிழ்நாடு முதல் அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின், தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்ச ருமான உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்கி றார்கள்.
எனவே மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், செயற்குழு, பொதுக்குழு, உறுப்பி னர்கள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை பிரதிநிதிகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
அதே போன்று நாளை 15-ந் தேதி அண்ணா பிறந்த நாளன்று முதல் அமைச்சரின் முக்கிய திட்டமான கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தையும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தி.மு.க நிர்வாகிகள் அண்ணாவின் சிலை, திருவுருவப்படங்க ளுக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்க வேண்டும்.
திமுக தோன்றிய செப்டம்பர் 17-ந் தேதி பவள விழாவை கொண்டாடும் விதமாக கட்சி கொடி ஏற்றி அண்ணா, பெரியார் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டுகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
- தீபனின் பெற்றோர் அவருக்கு 2-வது திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
- அரக்கோணம் இன்ஸ்பெக்டர் பாரதி மறியலில் ஈடுபட்டவர்களிடம் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த குறிஞ்சி நகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 24). இவரும் தீபன் (27) என்பவரும் காதலித்து வந்தனர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு சென்னையில் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.
தீபனின் பெற்றோர் ராஜேஸ்வரிடம் வரதட்சணை கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபித்துக்கொண்டு தனது தாயார் வீட்டுக்கு ராஜேஸ்வரி ஒரு மாதத்திற்கு முன்பு சென்று விட்டார்.
இந்த நிலையில் தீபனின் பெற்றோர் அவருக்கு 2-வது திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
பின்னர் தீபனுக்கு திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த ராஜேஸ்வரி அதிர்ச்சி அடைந்தார். மேலும் தனது டைரியில் கணவர் தீபன் 2-வது திருமணம் செய்து கொண்டத்தால் மன உளைச்சலில் உள்ளேன் என்று எழுதி வைத்துவிட்டு வீட்டின் அறையில் நேற்று காலை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதில் ஆத்திரமடைந்த ராஜேஸ்வரியின் உறவினர்கள் இன்று அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையம் அருகே திரண்டனர்.
அரக்கோணம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் ராஜேஸ்வரி சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த அரக்கோணம் இன்ஸ்பெக்டர் பாரதி மறியலில் ஈடுபட்டவர்களிடம் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
இதனால் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தீபனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அரக்கோணம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடந்தது
- அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்ட பதிவுத்துறை சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை யொட்டி நெமிலி சார் பதிவாளர் அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
மாவட்ட பதிவாளர் வாணி தலைமை வகித்தார். சார்பதிவாளர்கள் செந்தில்ரமணன், உதயன் முன்னிலை வகித்தனர். நெமிலி பேரூராட்சி தலைவர் ரேணுகாதேவி சரவணன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பா ளர்களாக கலெக்டர் வளர்மதி, நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.
விழாவில் நெமிலி ஒன்றிய குழு துணை தலைவர் தீனதயாளன், நெமிலி பேரூர் திமுக செயலாளர் ஜனார்த்தனன், பேரூராட்சி துணைத் தலைவர் சந்திரசேகர், ஒன்றிய கவுன்சிலர் சங்கீதாக திரவன், மாவட்ட இளை ஞரணி துணை அமைப்பாளர் முரளி, நெமிலி இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி, சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிலு மற்றும் சார் பதிவாளர் அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
- அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
- பலர் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
அரக்கோணத்தில் ரூ.6 கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் புதிய மார்க்கெட்' கட்டும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.
இதில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
மாவட்ட கலெக்டர் வளர்மதி அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா, தாசில்தார் சண்மு கசுந்தரம், நகர மன்றத் தலைவர் லட்சுமி பாரி, துணைத்த லைவர் கலாவதி அன்பு லாரன்ஸ், நகராட்சி ஆணையர் ரகுராமன் மற்றும் தி.மு.க. நகர செயலாளர் வி.எல்.ஜோதி, நகர மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.






