search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை வழக்கில் கணவர் கைது
    X

    காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை வழக்கில் கணவர் கைது

    • கணவர் 2-வது திருமணம் செய்ததால் விபரீதம்
    • தலைமறைவான மாமியாரை தேடி வருகின்றனர்

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட் டம் அரக்கோ ணத்தை அடுத்த குறிஞ்சி நகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 24).

    இவரும் மேல்பாக் கம் கிராமத்தை சேர்ந்த ஸ்டீபன் (26) என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சென்னையில் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டு ஸ்டீபனின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

    திருமணம் முடிந்த ஒரே மாதத்தில் ராஜேஸ்வரி தாய் வீட்டுக்கு வந்துள்ளார்.

    இந்தநிலையில் ஸ்டீபனுக்கு அவரது பெற்றோர் 2-வது திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த ராஜேஸ்வரி வாழப் பிடிக்கவில்லை என்றும் கணவர் வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்வதை ஏற்க முடிய வில்லை எனவும், பெற்றோருக்கு கஷ்டத்தை கொடுத்ததாக கூறி எழுதி வைத்து விட்டு வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த தற்கொலைக்கு ராஜேஸ்வரியின் கணவர் , மாமியார், மாமனார் தான் காரணம் என ராஜே ஸ்வரியின் தாயார் மகாலட்சுமி போலீசில் புகார் அளித்தார்.

    அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையைத் தொ டர்ந்து ராஜேஸ்வ ரியின் கணவர் மற்றும் மாமியார்,மாமனார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ராஜேஸ்வரியின் கணவர் ஸ்டீபன் மற்றும் மாமனார் செல்லையா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் தலைமறைவான மாமியார் குமாரியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×