என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா
    X

    பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் போது எடுத்த படம்.

    பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா

    • தலைமை ஆசிரியர் தலைமையில் நடந்தது
    • பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்திற்கு உட்பட்ட சயனபுரம் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்ப ள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் 70 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு தலைமை நேற்று நடைபெற்றது.

    இதேபோல பின்னாவரம் அரசு மேல்நிலைப்ப ள்ளியில் 52 மாணவ, மாணவியர் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிகளில், நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விலையில்லா சைக்கிள்களை மாணவ மாணவியருக்கு வழங்கினார்.

    இதில் நெமிலி ஒன்றிய குழு துணை தலைவர், தீனதயாளன், ஊராட்சி மன்ற தலை வர்கள், (சயனபுரம்) பவானி வடிவேலு, (பின்னா வரம்)

    மணிவண்ணன், பள்ளியின் ஆசிரிய பெருமக்கள் மாணவச் செல்வங்கள், துணைத் தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×