என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெமிலி சார் பதிவாளர் அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
- கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடந்தது
- அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்ட பதிவுத்துறை சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை யொட்டி நெமிலி சார் பதிவாளர் அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
மாவட்ட பதிவாளர் வாணி தலைமை வகித்தார். சார்பதிவாளர்கள் செந்தில்ரமணன், உதயன் முன்னிலை வகித்தனர். நெமிலி பேரூராட்சி தலைவர் ரேணுகாதேவி சரவணன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பா ளர்களாக கலெக்டர் வளர்மதி, நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.
விழாவில் நெமிலி ஒன்றிய குழு துணை தலைவர் தீனதயாளன், நெமிலி பேரூர் திமுக செயலாளர் ஜனார்த்தனன், பேரூராட்சி துணைத் தலைவர் சந்திரசேகர், ஒன்றிய கவுன்சிலர் சங்கீதாக திரவன், மாவட்ட இளை ஞரணி துணை அமைப்பாளர் முரளி, நெமிலி இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி, சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிலு மற்றும் சார் பதிவாளர் அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.






