search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. முப்பெரும் விழாவில் திரளானோர் பங்கேற்க வேண்டும்
    X

    தி.மு.க. முப்பெரும் விழாவில் திரளானோர் பங்கேற்க வேண்டும்

    • அமைச்சர் ஆர்.காந்தி அறிக்கை
    • மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தையும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்‌ தொடங்கி வைக்கிறார்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலா ளரும், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சருமான ஆர். காந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில் கூறியிருப்ப தாவது:-

    வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா கந்தனேரியில் வருகிற 17-ந் தேதி நடைபெறும் தி.மு.க.வின் முப்பெரும் விழாவில் தமிழ்நாடு முதல் அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின், தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்ச ருமான உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்கி றார்கள்.

    எனவே மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், செயற்குழு, பொதுக்குழு, உறுப்பி னர்கள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை பிரதிநிதிகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

    அதே போன்று நாளை 15-ந் தேதி அண்ணா பிறந்த நாளன்று முதல் அமைச்சரின் முக்கிய திட்டமான கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தையும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் தி.மு.க நிர்வாகிகள் அண்ணாவின் சிலை, திருவுருவப்படங்க ளுக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்க வேண்டும்.

    திமுக தோன்றிய செப்டம்பர் 17-ந் தேதி பவள விழாவை கொண்டாடும் விதமாக கட்சி கொடி ஏற்றி அண்ணா, பெரியார் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டுகிறேன்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×